Jump to content

ஏங்க ஓட்டு மெஷினையே உத்து பார்க்குறீங்க..?- கிராமத்து வாக்குச்சாவடி சுவாரஸ்யங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"ஏங்க ஓட்டு மெஷினையே உத்து பார்க்குறீங்க..?"- கிராமத்து வாக்குச்சாவடி சுவாரஸ்யங்கள் #MyVikatan

Election 2021

Election 2021

இவர்களின் முகங்கள் வேறு வேறாயினும் அனைவரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். ஓட்டே போடாமல் விடுமுறையை டிவி பார்த்து கழிப்பவருக்கு மத்தியில் தேர்தல் திருவிழாவில் பங்கெடுத்த உத்தமர்கள்... இவர்கள் வணங்கப்பட வேண்டியர்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உரிமையுள்ள ஒவ்வொரு வாக்கும் அதிகாரமாக மாறுவதே ஜனநாயகம் என்பார் அம்பேத்கர். 1919ம் ஆண்டு இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் இந்தியர்களும் பங்கேற்கும் வகையில் சட்டமியற்றப்பட்டு சொத்துள்ளவர்களுக்கு மட்டும் வாக்குரிமை கொடுத்தது ஆங்கில அரசு.

சுதந்திரத்திற்கு பின் வந்த தேர்தலில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது அரசு. இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த வாக்குரிமையில் எப்போதும் நகரத்தினரை விட கிராமத்தினர் அதிகம் ஓட்டளித்தனர். அப்படி ஓட்டளிக்க வரும்போது கிராமத்து வாக்குச்சாவடிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழும். பள்ளி ஆசிரியரான நானும் எலக்‌ஷன் பணியில் ஈடுபட்டிருந்தேன். என் அனுபவத்தில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்...

Election 2021
 
Election 2021

ஓட்டுப்பதிவிற்கு முந்தையநாள்

ஒட்டுப்பதிவிற்கு முந்தைய நாள் ஊருக்குள் புதிதாக வந்த பத்து பேர் பள்ளிக்கூடத்தை பற்றி விசாரிக்கும் போதே தெரிந்து கொள்கிறார்கள்... இவர்கள் வாத்திகளாகத்தான் இருப்பார்கள் என்று!

ஆடத்தெரியாதவர்கள் அனிருத் மியூசிக்கிற்கு ஆடுவது மாதிரி, முந்தைய நாள் வாக்குப்பதிவு இயந்திரம் லாரியில் வந்த உடனேயே மதராசபட்டினத்தில 'குண்டு போடுறானு' கத்திக் கொண்டு ஓடுவது மாதிரி, ஒரு சிறுவன் ஊருக்குள் ஓடிப்போய், "பொட்டி வந்திருச்சு பொட்டி வந்திருச்சு’’ என்று சொல்லி ஓடினான்.

சிறிது நேரத்தில் சினிமாவில் வருவது போல் ஐந்தாறு பேர் வந்து "கடை இங்கதான இருக்கு’’ என்று கவுண்டமணி மாதிரி விசிட் செய்துவிட்டு போனார்கள்... கையில் துப்பாக்கியுடன் ராணுவ உடை அணிந்து வந்த வீரர்களை அதிசயமாய் பார்த்து.. "இதுல குண்டு இருக்கா, இந்த துப்பாக்கி எத்தனை ரூபாய் இருக்கும்’’ என்று அவர்களிடமே வெள்ளந்தியாய் கேட்க... அவர்கள் தமிழ்த் தெரியாமல் வெகுளியாய்ச் சிரித்தனர்.

ஓட்டுப்பதிவு நாளில் காலை ஐந்து மணிக்கே தயாராகி, செய்ய வேண்டிய பணிகளை முடித்து ஏழு மணிக்கு ரெடியானோம். காலை முதல் மாலைவரை பல்வேறு சுவாரஸ்யமான அனுபவங்கள்.

 

வாக்குச்சாவடியில்...

* க்ளைமாக்ஸில் வெடிகுண்டை வெடிக்கவைக்க வில்லன் சிவப்பு ஒயரை கனெக்ட் செய்வது மாதிரி எல்லா ஒயரையும் இணைத்து ஓட்டுப் போட ஆரம்பித்தால்தான் ஒரு திருப்தி வருகிறது!

* வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் பான்ட்ஸ் பவுடரில் மேக்கப் போட்டுக்கொண்டு, டரிக்கி துண்டு போட்டுக்கொண்டு ஒரு கடமைதவறாத இந்தியன் தாத்தா ஏழு மணிக்கே வந்து வாசலில் நின்றார். முதல் ஓட்டை இட்ட பெருமிதத்துடன் சென்றார்.

* சுவரில் ஓட்டு இயந்திரம் குறித்த படங்கள் இருந்தாலும், சிலர் நுழைந்தவுடன்... ஏதோ வித்தியாசமான மிருகத்தைப் பார்க்கிற மாதிரி... ஓட்டு மெஷினை வெறிக்க வெறிக்க பார்த்து விட்டு மெய்மறந்து நின்றார்கள்.

* தருமி நாகேஷ் போன்று ஆர்வக்கோளாறில் ஒருவர் எடுத்த உடனே மிஷின் பக்கம் போவார். அப்புறம் மூன்றாம் அலுவலரிடம் வருவார், அப்புறம் இரண்டாம் அலுவலரிடம் வருவார். கடைசியாக ஒன்றாம் எண் அலுவலரிடம் வருவார்.

Election 2021
 
Election 2021

* வயசான பாட்டிகள் ஏழுகடல், ஏழுமலை, தாண்டி கிளியின் உடலுக்குள் உயிர் இருப்பது மாதிரி மஞ்சள் பை அதற்குள் சுருக்குப்பை, அதற்குள் வெத்தலைப் பை, அதற்குள் பாலிதின் கவர். அதில்தான் நாம் எதிர்பார்த்த அடையாள அட்டை இருக்கும்.

* சிலர் பூத் சிலிப்பை அருகில் வந்து காண்பிக்காமல், பத்தாயிரம் வாலா பட்டாசை ஊதுபத்தியில் பத்த வைப்பது போல் எட்ட நின்றே நீட்டுவார்கள்.

* ஏஜென்ட்டிடம் போய் 'இதுக்கு ஈயம் பூசிக்குடு' என்று கேட்பது மாதிரி 'இந்த பூத்து எங்க இருக்குன்னு பார்த்துச் சொல்லு' என்று சிலர் கேட்பார்கள்.

* ஓட்டு மிஷின் உள்ளே கம்பார்ட்மென்ட்க்கு உள்ளே போய் கொத்தமல்லிபோட்டு ஆவி பிடிப்பது மாதிரி குனிந்து குனிந்து நிமிருவார்கள். பாஸ் எந்த வேட்பாளர்னு ஒரு முடிவுக்கு வாங்க!

* சிலர் ஓட்டுமெஷின் இருக்குமிடம் போய் நின்று எல்லாரையும் பாத்து சிரிப்பார்கள். ஏதோ ஒரு பட்டனை கிளிக் செய்ததும், ஸ்டார்ட் மியூசிக் டிவி ப்ரோகிராமில் ரூமுக்குள் போய் அஞ்சு லட்சம் ரூபாய் பட்டனை அழுத்திய சந்தோசம் அவர்கள் முகத்தில் தெரியும்.

* மிஷின் பக்கத்தில் போய் நின்று கொண்டு ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவதை போல குனிந்தவர்கள் வெளியே வர ரொம்ப நேரம் ஆகும். ஐயா என்று கூப்பிட்டால்தான் அட்டென்டன்ஸ் போடுவார்கள்.

* எந்த பூத் என்று தெரியாமல் வேறு பூத் வரிசையில் மணிக்கணக்கில் நின்று கனத்த நெஞ்சுடன் திரும்பிப் போனார் ஒருவர்.

* "ரேசன் கார்டில் பேர் இருக்கு. ஏன் ஓட்டுப் போட அனுமதிக்க மாட்டீங்களா?" என்று உரிமைப் பிரச்னை எழுப்பினார் ஒருவர்.

 

* தொகுதி... கூட்டணிக்கு ஒதுக்கியது கூட தெரியாமல் "இதுல எங்க சின்னம் இல்லயே.. எல்லாரும் என்னை ஏமாத்துறீங்களா?" என்று ஒரு வயதான பெண் கூக்குரல் எழுப்பினார்.

* ஆரம்பத்திலிருந்தே கடுகடு என்றுருந்தவர், "நானெல்லாம் பரம்பரை பரம்பரையா ஓட்டுப்போடறவ’’ என்று நெஞ்சை நிமிர்த்தி... கடைசிவரை முகத்தை முறைத்தப்படி வைத்துகொண்டு பூத்தை விட்டு வெளியே போனார்.

* பதினொரு ஆவணத்தையும் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு 'சிலர் எங்ககிட்டயும் சீப்பு இருக்கு நானும் சீவுவேன்' எக்ஸ்பிரஷனை முகத்தில் கூட்டினார்கள்.

* கைரேகை வைக்கும் சிலர்... ஓங்கி அழுத்தினா ஒன்றரை டன் வெயிட் என்பது மாதிரி அதிக இங்க் உள்ள பேடில் அழுத்தி புக் முழுக்க இங்க் கரை செய்தார்கள்.

Election 2021
 
Election 2021

* மை வச்ச உடனே தலையில தேய்த்துக்கொள்வதால் கேமரா முன் காட்ட மை இருக்காது. எனவே, திரும்ப ரிட்டர்ன் வந்து மை வைப்பார்கள்.

* சிலர் ஓட்டு போட்டால் அங்கயே நின்று அந்த ஓட்டெல்லாம் எங்க போகுது என்று 'கத்தி' பட விஜய் மாதிரி டேபிளுக்கு கீழ பார்ப்பார்கள்.

* மிஷினில் மேலிருந்து கீழ்வரை வேட்பாளர்கள் பெயரை படித்துவிட்டு என்னவோ பத்துமார்க் கேள்வி போல பத்து முறை யோசிப்பார்கள்.

* பலரும் மிஷினில் ஓட்டுப் போடத்தெரியாமல் தண்ணியில் விழுந்தவனை தூக்கி வந்து வயித்தை அமுக்கி தண்ணி எடுப்பது மாதிரி சிவப்பு கலர் லைட்டையே தம்கட்டி அழுத்துவார்கள். வெளியிலிருந்து நீலக்கலர் பட்டன் என்று சொன்னதும்தான் ஓட்டுப்போடுவார்கள்.

* முதல் முறை ஓட்டுப்போடும் இளைஞர்களை ஈஸியாக கண்டுபிடித்துவிடலாம். சூயிங்கம் மெல்வார்கள். கையெழுதுப்போடச் சொன்னால் 'எங்க' என்று வெறப்பாக கேட்டுவிட்டு பத்து வருடமாக ஓட்டுப்போட்டது மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுப்பார்கள்.

* சில பெரியவர்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோருக்கும் வாஞ்சையோடு வணக்கம் வைப்பார்கள். அந்த அன்பிலேயே நெகிழ்ந்து போகலாம்.

இவர்களின் முகங்கள் வேறு வேறாயினும் அனைவரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். எந்த ஒரு சமூக ஊடகத்திலும் இல்லாதவர்கள். தினம் ஒரு ஹேஷ்டேக் போட்டு நாடு முழுக்க ட்ரென்ட் செய்யாதவர்கள். யாரும் சரியில்லை என நினைத்து விரக்தியுடன் வீட்டில் முடங்கி இருக்காதவர்கள். மெத்த படித்தவர்கள் இவர்களிடம்தான் படிப்பினையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஓட்டே போடாமல் விடுமுறையை டிவி பார்த்து கழிப்பவருக்கு மத்தியில் தேர்தல் திருவிழாவில் பங்கெடுத்த உத்தமர்கள்... இவர்கள் வணங்கப்பட வேண்டியர்கள்!

உயருபவன் தன்னிலிருந்தே உயர்கிறான்

தாழ்பவன் தன்னிலிருந்தே தாழ்கிறான்

என்பது ஒரு ஜென் வரி. இது ஜனநாயக கடமையான தேர்தலில் நேர்மையாக ஓட்டளிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

அடுத்த தேர்தலில் இன்னும் ஓட்டு சதவிகிதத்தை அதிகரிக்கச் செய்வோம். வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட!

- மணிகண்டபிரபு

 

 

https://www.vikatan.com/government-and-politics/election/tn-election-2021-village-election-scenario-some-interesting-happenings

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎1 person and ‎text that says '‎שדاם Polimer News @polimernews EVM இயந்திரம் என நினைத்து தொழிலாளியை தாக்கி துளையிடும் கருவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து முற்றுகையிட்ட சேலம் திமுக கூட்டணி கட்சியினர்! @arivalayam #Elections2021| #EVM #salem K *ஒட்டுப்பொட்டி Wاl! AMTE_MEMET உ.பி எங்களை யாராலும் ஏமாத்த முடியாது!‎'‎‎

 

Bosch Professional Schlagbohrmaschine GSB 20-2 (850 Watt, Leerlaufdrehzahl  3.000 min-1, mit Zubehörset, in L-Case): Amazon.de: Baumarkt

தி.மு.க. வினர் சேலத்தில்...  தொழிலாளி ஒருவர் கொண்டு போன Bohr maschine´ ஐ,
வாக்கு இயந்திரம் என... பறித்துக் கொண்டு போய், காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.  🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.