Jump to content

கடற்புலிகளின் தொழில்நுட்ப வளர்ச்சியும் சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவின் உருவாக்கமும் ஒரு பார்வை...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+


1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமருக்குப் பின் பல படையணிகள் மற்றும் துறைசார் அணிகள் உருவாக்கப்பட்டன .அதில் ஒன்று தான் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக மாற்றம் பெற்றது.கடற்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் (1991) பிற்பகுதியில் கிளாலிக் கடல்நீரேரியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நீருந்துவிசைப்படகு மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிடப்பட்டது .

அக்காலப்பகுதியில்தான் கடற்புலிகள் வளர்ந்துகொண்டிருந்தநேரம்.அந்த நேரத்தில் கடற்புலிகளிடம் ஆயுதபலமோ ஆட்பலமோ படகுகளின் பலமோ போதியளவு இருக்கவில்லை. இருந்தாலும் பிருந்தன்மாஸ்ரின் ராடர்மூலமான வேவுத்தகவல்களின் அடிப்படையில் மேஐர் மூர்த்திமாஸ்ரரின் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கடற்கண்ணிவெடிகளைப் பயண்படுத்தி ஒருதாக்குதல் முயற்சி எடுக்கப்பட்டது.இம்முயற்சியில் கடற்புலிகளின் கடற்தாக்குதற் தளபதி லெப்.கேணல் சாள்ஸ் அவர்களும் தளபதி லெப் கேணல் கங்கைஅமரன் அவர்களும் மேஐர் வசந்தன் அவர்கள் உள்ளிட்டவர்கள் கண்ணிவெடிகளைக் படகுகள் மூலம் எடுத்துச் சென்று பிருந்தன்மாஸ்ரரின் ராடர்மூலக்கண்காணிப்பில் வைத்தனர்.1991ம் ஆண்டு கடைசிப்பகுதியில் அக்கடற்கண்ணிவெடிகளில் சிக்கி நீருந்துவிசைப்படகு வெடித்து சிதறிமூழ்கியது .ஆனால் மூழ்கிய அப்படகிலிருந்து ஆயுதங்கள் மற்றும் பொருட்களை எவ்வாறு எடுப்பது.தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையின் இந்தியாவில் ஆறாம் பயிற்சிமுகாமில் பயிற்சி எடுத்தவர்களில் ஒருதொகுதியினர் கடற்பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டனர். இன்னும் சிலபோராளிகள் நீரடிநீச்சல் பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் தளபதி கங்கைஅமரன் அவர்கள்.இவரும் நீரடிநீச்சல் பயிற்சி எடுத்தபடியால் மூழ்கிய நீருந்துவிசைப்படகிலிருந்த ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களும் சகபோராளிகளின் துணையுடன் மீட்கப்பட்டு கடற்புலிகளின் அடுத்தகட்டவளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. இத் தாக்குதலில் தான் முதன்முதலாக சீனா தயாரிப்பான இலகுவாக பயண்படுத்த மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய பதினெட்டுக்கிலோக்கிராம் நிறையுடைய ஐம்பது கலிபர்( 50 cal ரக) துப்பாக்கிகள் உட்பட பெருமளவான புதிய கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகளி்ல் மூர்த்திமாஸ்ரருக்கு உதவியாக கப்டன் மைக்கல் அவர்களும் பிருந்தன்மாஸ்ராருக்கு உதவியாக மேஐர் தீபன் அவர்கள் உள்ளிட்ட போராளிகளின் பங்கும் மிகவும் அளப்பரியது.

இந்த நேரத்தில் தான் தலைவர் அவர்களால் நீரடிநீச்சல் பிரிவின் முக்கியத்துவம் பற்றி துணைத் தளபதி பிருந்தன்மாஸ்ரர் தளபதி கங்கைஅமரன் அவர்களுடனும் சிறப்புத்தளபதி சூசை அவர்களுக்கும் எடுத்துரைத்த தலைவர் அவர்கள் தளபதி கங்கைஅமரன் அவர்களை மேலதிகமாக நீரடிநீச்சல் பிரிவை உருவாக்கும்படி கூறினார்.அதற்கமைவாக தளபதி கங்கைஅமரன் அவர்களுடன் இந்தியாவில் நீரடிநீச்சல் பயிற்சி பெற்று 30.10.1986 அன்று காரைநகர் கடற்படைத்தளத்தில் தரித்து நின்ற கடற்படைகலங்கள்மீதான நீரடித் தாக்குதல் முயற்சியின்போது வீரச்சாவடைந்த சுலோஐன் அவர்கள் நினைவாக சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவு உருவாக்கப்பட்டது.

சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவானது இரண்டாம் கட்டஈழப்போரில் பெரும் பங்காற்றியது மட்டுமல்லாமல் சுலோஐன் நீரடிநீச்சல்பிரிவில் செயற்பட்ட மகளீரனி 16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுக கடற்பரப்பில் கடற்படைக்கலங்களை மூழ்கடித்து வீரச்சாவடைந்த கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணியின் நினைவாக மகளீரனி அங்கையற்கண்ணி நீரடிச்நீச்சல்பிரிவாக மாற்றம்பெற்றது.


மூன்றாம் கட்ட ஈழப்போரின் முதலாவது தாக்குதலைச் செய்ததும் இப்படையணியே.


இந்தவகையில் இவர்களைப் போல அளவிலும் ஆற்றலிலும் , இராணுவ வளங்கள் குறைவாகவே உள்ள நிலையிலும் கூட , கடற்புலிகளின் சிறப்பு பிரிவான ” சிலோஜன் நீரடி நீச்சல் படையணியும் ” – ” அங்க்கையற்க்கண்ணி நீரடி நீச்சல் படையணியும் ” தமது எதிரிக் கடற்படையான சிறீலங்காக் கடற்படைக்கு முகம் கொடுத்து , இன்று வெற்றிவாகை சூடியுள்ளன. சிறீலங்காக் கடற்படையிலும் சூழியோடிகள் பிரிவொன்று நிறுவப்பட்டு , இந்தியாவில் உள்ள கொச்சின் , வெந்துருகி ஆகிய இடங்களில் பயிற்சி பெற்ற , 75 பேருக்குக் குறையாத ஆள்தொகையைக் கொண்டுள்ளபோதும் , கடற்புலிகளின் விசேட பிரிவுகளிடமிருந்து தப்புதல் என்பது அதிர்ஷ்டத்துக்குரிய ஒன்றாகும்.
தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றின் சுவடுகளோடு "ராஜ் ஈழம்"


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

 

--> Source: FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, balakumar2 said:


1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமருக்குப் பின் பல படையணிகள் மற்றும் துறைசார் அணிகள் உருவாக்கப்பட்டன .அதில் ஒன்று தான் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக மாற்றம் பெற்றது.கடற்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் (1991) பிற்பகுதியில் கிளாலிக் கடல்நீரேரியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நீருந்துவிசைப்படகு மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிடப்பட்டது .

அக்காலப்பகுதியில்தான் கடற்புலிகள் வளர்ந்துகொண்டிருந்தநேரம்.அந்த நேரத்தில் கடற்புலிகளிடம் ஆயுதபலமோ ஆட்பலமோ படகுகளின் பலமோ போதியளவு இருக்கவில்லை. இருந்தாலும் பிருந்தன்மாஸ்ரின் ராடர்மூலமான வேவுத்தகவல்களின் அடிப்படையில் மேஐர் மூர்த்திமாஸ்ரரின் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கடற்கண்ணிவெடிகளைப் பயண்படுத்தி ஒருதாக்குதல் முயற்சி எடுக்கப்பட்டது.இம்முயற்சியில் கடற்புலிகளின் கடற்தாக்குதற் தளபதி லெப்.கேணல் சாள்ஸ் அவர்களும் தளபதி லெப் கேணல் கங்கைஅமரன் அவர்களும் மேஐர் வசந்தன் அவர்கள் உள்ளிட்டவர்கள் கண்ணிவெடிகளைக் படகுகள் மூலம் எடுத்துச் சென்று பிருந்தன்மாஸ்ரரின் ராடர்மூலக்கண்காணிப்பில் வைத்தனர்.1991ம் ஆண்டு கடைசிப்பகுதியில் அக்கடற்கண்ணிவெடிகளில் சிக்கி நீருந்துவிசைப்படகு வெடித்து சிதறிமூழ்கியது .ஆனால் மூழ்கிய அப்படகிலிருந்து ஆயுதங்கள் மற்றும் பொருட்களை எவ்வாறு எடுப்பது.தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையின் இந்தியாவில் ஆறாம் பயிற்சிமுகாமில் பயிற்சி எடுத்தவர்களில் ஒருதொகுதியினர் கடற்பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டனர். இன்னும் சிலபோராளிகள் நீரடிநீச்சல் பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் தளபதி கங்கைஅமரன் அவர்கள்.இவரும் நீரடிநீச்சல் பயிற்சி எடுத்தபடியால் மூழ்கிய நீருந்துவிசைப்படகிலிருந்த ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களும் சகபோராளிகளின் துணையுடன் மீட்கப்பட்டு கடற்புலிகளின் அடுத்தகட்டவளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. இத் தாக்குதலில் தான் முதன்முதலாக சீனா தயாரிப்பான இலகுவாக பயண்படுத்த மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய பதினெட்டுக்கிலோக்கிராம் நிறையுடைய ஐம்பது கலிபர்( 50 cal ரக) துப்பாக்கிகள் உட்பட பெருமளவான புதிய கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கைகளி்ல் மூர்த்திமாஸ்ரருக்கு உதவியாக கப்டன் மைக்கல் அவர்களும் பிருந்தன்மாஸ்ராருக்கு உதவியாக மேஐர் தீபன் அவர்கள் உள்ளிட்ட போராளிகளின் பங்கும் மிகவும் அளப்பரியது.

இந்த நேரத்தில் தான் தலைவர் அவர்களால் நீரடிநீச்சல் பிரிவின் முக்கியத்துவம் பற்றி துணைத் தளபதி பிருந்தன்மாஸ்ரர் தளபதி கங்கைஅமரன் அவர்களுடனும் சிறப்புத்தளபதி சூசை அவர்களுக்கும் எடுத்துரைத்த தலைவர் அவர்கள் தளபதி கங்கைஅமரன் அவர்களை மேலதிகமாக நீரடிநீச்சல் பிரிவை உருவாக்கும்படி கூறினார்.அதற்கமைவாக தளபதி கங்கைஅமரன் அவர்களுடன் இந்தியாவில் நீரடிநீச்சல் பயிற்சி பெற்று 30.10.1986 அன்று காரைநகர் கடற்படைத்தளத்தில் தரித்து நின்ற கடற்படைகலங்கள்மீதான நீரடித் தாக்குதல் முயற்சியின்போது வீரச்சாவடைந்த சுலோஐன் அவர்கள் நினைவாக சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவு உருவாக்கப்பட்டது.

சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவானது இரண்டாம் கட்டஈழப்போரில் பெரும் பங்காற்றியது மட்டுமல்லாமல் சுலோஐன் நீரடிநீச்சல்பிரிவில் செயற்பட்ட மகளீரனி 16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுக கடற்பரப்பில் கடற்படைக்கலங்களை மூழ்கடித்து வீரச்சாவடைந்த கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணியின் நினைவாக மகளீரனி அங்கையற்கண்ணி நீரடிச்நீச்சல்பிரிவாக மாற்றம்பெற்றது.


மூன்றாம் கட்ட ஈழப்போரின் முதலாவது தாக்குதலைச் செய்ததும் இப்படையணியே.


இந்தவகையில் இவர்களைப் போல அளவிலும் ஆற்றலிலும் , இராணுவ வளங்கள் குறைவாகவே உள்ள நிலையிலும் கூட , கடற்புலிகளின் சிறப்பு பிரிவான ” சிலோஜன் நீரடி நீச்சல் படையணியும் ” – ” அங்க்கையற்க்கண்ணி நீரடி நீச்சல் படையணியும் ” தமது எதிரிக் கடற்படையான சிறீலங்காக் கடற்படைக்கு முகம் கொடுத்து , இன்று வெற்றிவாகை சூடியுள்ளன. சிறீலங்காக் கடற்படையிலும் சூழியோடிகள் பிரிவொன்று நிறுவப்பட்டு , இந்தியாவில் உள்ள கொச்சின் , வெந்துருகி ஆகிய இடங்களில் பயிற்சி பெற்ற , 75 பேருக்குக் குறையாத ஆள்தொகையைக் கொண்டுள்ளபோதும் , கடற்புலிகளின் விசேட பிரிவுகளிடமிருந்து தப்புதல் என்பது அதிர்ஷ்டத்துக்குரிய ஒன்றாகும்.
தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றின் சுவடுகளோடு "ராஜ் ஈழம்"


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

 

--> Source: FB

அன்புடன் உங்களை வரவேற்கிறேன், வருக... வருக ...வருக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, MullaiNilavan said:

அன்புடன் உங்களை வரவேற்கிறேன், வருக... வருக ...வருக....

வணக்கம் அண்ணே!.... தங்கள் கனிவான வரவேற்பிற்கு நன்றி../\

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.