Jump to content

மட்டு- ஈரளக்குளம் பகுதியில் பௌத்த பீடம் அமைக்க திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு- ஈரளக்குளம் பகுதியில் பௌத்த பீடம் அமைக்க திட்டம்

 
Capture-4.jpg
 167 Views

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் என்னும் பகுதியில் பௌத்தபீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியானது நூறு வீதம் தமிழர்கள் வாழும் பகுதியாக காணப்படும் நிலையில், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பௌத்தபீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயற்கை வனப்பும் வயல் நிலங்களும் நிரம்பிய ஈரளக்குளம் பகுதியானது தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் பகுதியாகும். இப்பகுதியில் கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் என்ற போர்வையில் பல இடங்களில் பௌத்த அடையாளங்களை தேடி அலைந்து திரியும் நிலையில் ஈரளக்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள பௌத்தபீடம் தொடர்பில் தமிழ் மக்களினால் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரளக்குளம் பகுதியில் வயல்வெளி அதிகளவில் காணப்படுவதுடன், குளங்கள் மற்றும் காடுகள் சார்ந்த பகுதிகளும் காணப்படுகின்றன. இங்கு பௌத்த தேரர்களுக்கான பயிற்சி நிலையமும் பௌத்தபீடமும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம் நடாத்தப்பட்டதுடன் சில தினங்களில் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தமிழ் உணர்வாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தினை இலக்கு வைத்து மேய்ச்சல் தரை அபகரிப்பு என்னும் திட்டத்தின் கீழ் சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது பௌத்தபீடத்தினையும் அமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாக இருந்துவருவதாகவும் தமிழ் உணர்வாளர் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

 

https://www.ilakku.org/?p=47120

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.