Jump to content

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!


Recommended Posts

 

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!

 

வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் ராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவத்தை கொண்ட கணவனை யுத்தத்தின் போது இழந்த ஒரு குடும்பத்தினருக்கு ஒரு வீட்டினை இராணுவத்தினரால் அமைத்து கொடுத்திருக்கின்றோம்.

அவர் தனது கணவனை இழந்த பின்னரும் தனது விடா முயற்சியின் காரணமாக சுய தொழிலினை வாழ்வாதாரமாக மேற்கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் இந்த வீடானது இன்றைய தினம் கட்டி முடிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இலங்கை இராணுவத்தினரால் வீடு மட்டுமல்லாது வீட்டுக்குத் தேவையான குளிர்சாதனைப்பெட்டி உட்பட்ட அனைத்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த குடும்பத்தில் ஒரு மாணவியும் உள்ளார் அவருக்கான கல்விக்கான நிதி உதவி மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்திருக்கின்றோம். அத்தோடு மேலதிகமான அந்த மாணவிக்கு உரிய கல்வி செயற்பாடுகளுக்கு உதவ தயாராகவுள்ளோம்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின் போது கொல்லப்பட்ட ஒருவருக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம். யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

இலங்கையின் முப்படையினரும் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுக்கிறார்கள் என யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு காசுகளை அனுப்பி, இங்கு காசு வருகிறவர்கள் அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிரான பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த இராணுவம் கொடுமையானது. ராணுவம் இங்கே தேவையற்றது என. ஆனால் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக் கொடுத்ததையிட்டு இலங்கை ராணுவத்தினர் ஆகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன். எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்தார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்! (adaderana.lk)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வெளிநாட்டுடன் தொடர்புடைய சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர் – யாழில் இராணுவத்தளபதி!

வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிராக பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இராணுவம் கொடுமையான இராணுவம். இங்கே தேவையற்றது என பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக்கொடுத்ததையிட்டு இலங்கை இராணுவத்தினராகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன்.

எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Saventhra-Silwa-3.jpg

Saventhra-Silwa-2.jpg

https://athavannews.com/2021/1209405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

 

வெளிநாட்டுடன் தொடர்புடைய சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர் – யாழில் இராணுவத்தளபதி!

வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிராக பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இராணுவம் கொடுமையான இராணுவம். இங்கே தேவையற்றது என பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக்கொடுத்ததையிட்டு இலங்கை இராணுவத்தினராகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன்.

எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Saventhra-Silwa-3.jpg

Saventhra-Silwa-2.jpg

https://athavannews.com/2021/1209405

ஓமடாப்பா, உங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கிற காசிலை இதை செய்து போட்டு கனக்க கதைக்கிறியள். வெளிநாட்டுக்காசு வாறது இப்ப கண்ணுக்கை குத்துது போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

ஓமடாப்பா, உங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கிற காசிலை இதை செய்து போட்டு கனக்க கதைக்கிறியள். வெளிநாட்டுக்காசு வாறது இப்ப கண்ணுக்கை குத்துது போலை

அவங்களுக்கு அது கண்ணுக்குள் குத்தினாலும்  700 வீடுகளுக்கு மேல் அமைத்து கொடுத்துள்ளதாக இங்கு செய்திகள் பிரசுரமாகிறது . ஆனால் வெளிநாட்டு காசு வெளிநாட்டில் உள்ள அவங்கவங்க சொந்தங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் உன்மை இல்லாதவர்களுக்கு சில அமைப்புகளினூடாக வீடு அதுவும் அரைபகுதியுடன் நின்று போகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவங்களுக்கு அது கண்ணுக்குள் குத்தினாலும்  700 வீடுகளுக்கு மேல் அமைத்து கொடுத்துள்ளதாக இங்கு செய்திகள் பிரசுரமாகிறது . ஆனால் வெளிநாட்டு காசு வெளிநாட்டில் உள்ள அவங்கவங்க சொந்தங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் உன்மை இல்லாதவர்களுக்கு சில அமைப்புகளினூடாக வீடு அதுவும் அரைபகுதியுடன் நின்று போகிறது 

ராசன்! மட்டக்களப்பு ஏரியாவிலையும் உப்பிடித்தான் ராணுவம் வீடுகள் கட்டி குடுக்குதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாம் உழைத்து வளமாக வாழ்ந்த பிரதேசத்திற்கு இவர்கள் ஏன்வந்தார்கள்?  இந்த மக்களின் வீடு எப்படி உடைந்தது? யுத்தம் ஏன் வந்தது?  எதற்காக வீடு கட்டிக்கொடுக்க இராணுவம் வரவேண்டும்? யுத்தத்திற்கு முன் இராணுவத்தை கொண்டா இந்த மக்கள்  வீடு  கட்டினார்கள்? நீங்கள் உடைத்ததை  உங்கள் திட்டப்படி    கட்டுகிறீர்கள். பிச்சை போட்டதாக படம் காட்டுகிறீர்கள். நீங்கள் உடைத்தது, அழித்தது எல்லாம் நாமறிவோம், சர்வதேசமும் அறியும், ஆதாரமாக உள்ளது. இதன் பின்னால் என்ன நடக்கும் என்பதையும் நாமறிவோம். உங்கள் செயற்பாடுகளே உங்களின் கொடுமைகளுக்கு சாட்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ராசன்! மட்டக்களப்பு ஏரியாவிலையும் உப்பிடித்தான் ராணுவம் வீடுகள் கட்டி குடுக்குதோ?

மட்டக்களப்பில் சில வீடுகள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரால் கட்டிக்கொடுக்கப்பட்டது சஜித்தினால் தற்போது எந்த திட்டங்களும் வரவில்லை  ஆனால் இரானுவத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்துள்ளார்கள் சேர்ந்தவர்கள் பணக்கார இளைஞர்கள் கிடையாது அவர்களுக்கு இராணுவத்தினரால் வீடு கட்டிக்கொடுக்கப்படலாம் . சில தகவல்கள் எடுக்கிறார்கள் சில வேளை கட்டிக்கொடுக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில் சில வீடுகள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரால் கட்டிக்கொடுக்கப்பட்டது சஜித்தினால் தற்போது எந்த திட்டங்களும் வரவில்லை  ஆனால் இரானுவத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்துள்ளார்கள் சேர்ந்தவர்கள் பணக்கார இளைஞர்கள் கிடையாது அவர்களுக்கு இராணுவத்தினரால் வீடு கட்டிக்கொடுக்கப்படலாம் . சில தகவல்கள் எடுக்கிறார்கள் சில வேளை கட்டிக்கொடுக்கலாம் .

அதாவது சிறீலங்கா இராணுவத்தில் சேர்ந்தால் வீடு கிடைக்க வாய்ப்புள்ளது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம், கடற்படை, விசேட அதிரடிப்படை, பொலீஸ் ஆகிய அரச படைகளில் தமிழர்கள் இணைவதை மட்டக்களப்பில் இருந்த காலங்களில் கண்டிருக்கிறேன். வேலைவாய்ப்பு என்று மட்டுமே பார்த்து இணைகிறார்கள். யாழ்ப்பாணத்தில் 80 கள்வரை கடற்படை மற்றும் பொலீஸில் இருந்தார்கள், பின்னர் குறைந்துவிட்டது.

பசியென்று வரும்போது மற்றையவை எல்லாமே பறந்துவிடும். இதுதான் நடக்கிறது. 

படித்தும் வேலையில்லையென்பதால் ராணுவத்தில் இணைகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

படித்தும் வேலையில்லையென்பதால் ராணுவத்தில் இணைகிறார்கள். 

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில் சில வீடுகள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரால் கட்டிக்கொடுக்கப்பட்டது சஜித்தினால் தற்போது எந்த திட்டங்களும் வரவில்லை  ஆனால் இரானுவத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்துள்ளார்கள் சேர்ந்தவர்கள் பணக்கார இளைஞர்கள் கிடையாது அவர்களுக்கு இராணுவத்தினரால் வீடு கட்டிக்கொடுக்கப்படலாம் . சில தகவல்கள் எடுக்கிறார்கள் சில வேளை கட்டிக்கொடுக்கலாம் .

தமிழர் பிரதேசங்களிலை இராணுவம்தான் வீடு வளவு கட்டிக்குடுக்கோணும் எண்டால் உங்கை இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

அப்படித்தான் என்று நினைக்கிறேன். 

ராணுவம் தமிழர்களை இணைத்துக்கொள்வதன்மூலம் தமிழர்களின் கனவைச் சிதைக்க நினைக்கிறது. அது இணைவோருக்குப் புரிவதில்லை, புரிந்தாலும் எனக்கென்ன என்று இணைகிறார்கள். எமக்கு வேலையில்லை, உணவில்லை என்று கூறுபவர்களிடம் உரிமைபற்றிப் பேசுவது கடிணம் என்பது எனது தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

எமக்கு வேலையில்லை, உணவில்லை என்று கூறுபவர்களிடம் உரிமைபற்றிப் பேசுவது கடிணம் என்பது எனது தாழ்மையான கருத்து

மகிழ்ச்சி....இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் புரிகிறது போல் .. நாம் என்னதான் உரிமை, கொள்கை, கோட்பாடு  என்று கூப்பாடு போட்டாலும் நாட்டிலிருப்பவர்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும் அதற்கு கையில் பசை வேண்டும். அவர்களால் முடிந்த வகையில் அதனை தேடிக்கொள்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

அண்ணை,

இதை நீங்கள் எப்பிடி எடுத்துக்கொண்டீர்களோ தெரியவில்லை, ஆனால் அவர்கள் செய்வதை நான் சரியென்று வாதாடுவதற்காக எழுதவில்லை.

88 - 90 காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாழ்ந்த போது பறங்கியர் சமூகத்தில் பலர் கடற்படையில் வேலைபார்த்து வந்தனர். அவர்கள் கூட தம்மை தமிழர்களாகவே அடையாளப்படுத்தியிருந்தனர். இதேபோல மட்டக்களப்பு நகரில் பல படித்தவர்கள் அரச வேலையென்பதற்காக பொலீஸில் இணைந்துவந்தனர். 90 இல் ராணுவம் தமிழர்களை நரவேட்டையாடிய காலத்திலேயே இது நடந்தது. எம்முடம் படித்த தாமரைக்கேணிப் பகுதியில் வசித்த வசதிபடித்த மாணவன் விசேட அதிரடிப்படையில் இணைந்துகொண்டான். 

90 - 93 காலப்பகுதியில் கிருலப்பனையில் நாம் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு பொலீஸ் அதிகாரி. வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மன்னாரில் வேலை பார்த்துவந்தார். புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். அவர் இறந்தபோது நாம் அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருந்தோம். இறந்தபின்னர் பொலீஸ் அதிகாரியானவர்களுக்குக் கொடுக்கப்படும் கொடுப்பனவு அவரின் குடும்பத்திற்குக் கிடைத்துவந்தது.

1998 இல் எம்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து இழுத்துச் சென்று சித்திரவதை செய்த பொலீஸ் அதிகாரி ஜெயரட்ணம் கூட வடமராட்சித் தமிழர்தான். 

அதேபோல 2000 இல் கொழும்பில் வாழ்ந்தபோது மட்டக்களப்பைச் சேர்ந்த பொலீஸ் அதிகாரியொருவரை எனக்குத் தெரிந்திருந்தது. அவரின் மகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தேன். அவுஸ்த்திரேலியா வருவதற்காக பொலீஸ் நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்கு நான் அலைந்துகொண்டிருந்தபோது, சிறுதொகைப் பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு அதைச் செய்துகொடுத்தார். வீட்டில் பேசும்போது புலிகளுக்கு ஓரளவு ஆதரவாகப் பேசுவார், ஆனால் பொலீஸில் உயர் பதவியில் இருந்தார். இவரைப்போன்றே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொரு உயரதிகாரியின் பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தேன், ஒரு கட்டத்தில் புலிகளுக்குச் சார்பானவர் என்று கருதப்பட்டு ஒதுக்கப்பட்டார். 

2018 இல் நீண்டநாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் சென்றபோது, ஊர்காவற்றுரை (மனைவியின் ஊர்) எங்களின் வாகனத்தை மறித்துச் சோதனையிட்ட பொலீஸார் தமிழர் என்பதை அன்றிரவு அவர் வேலை முடிந்து எமது வீட்டிற்குவந்தபோது அறிந்துகொண்டேன். அவரது பிரிவில் இன்னும் பல தமிழர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு களுத்தறை பொலீஸ் கல்லூரியில் அவர் தனது தமிழ் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைக் காட்டினார். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எனது மாமனார் ஒரு முன்னாள் கடற்படை வீரர். சிங்களம் படித்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கூறியதால் 1980 இல் வேலையை விட்டு விட்டு வர்த்தகக் கப்பல்களில் போய்வந்தவர். அவருக்கும் ஏழ்மை ஒரு காரணமாக இருந்தது.

சிலர் பொலீஸிலும் ராணுவத்திலும் இணைவதை வேலைவாய்ப்பாகவும், பாதுகாப்பிற்காகவும்,  நிரந்தர வருமானமாகவும், ஓய்வூதியத்திற்கான வழியாகவும் பார்க்கிறார்கள். புலிகளுடனான யுத்தம் அற்ற நிலையினால், உயிருக்கு அச்சப்படத் தேவையில்லை என்பதும், ராணுவத்தில் இணைவதால் அதே ராணுவத்திடமிருந்து தமக்குப் பாதுகாப்புக் கிடைக்குமென்பதாலும் சிலர் இணைகிறார்கள். ஆனால், அரச சேவையில் தமிழர்கள் மேல் காட்டப்படும் மாற்றாந்தாய் மனப்பான்மை இவர்கள் மேலும் காட்டப்படும். தமிழர்கள் என்பதனால் தொடர்ச்சியான சந்தேகப் பார்வை இருக்கத்தான் போகிறது. உருவேற்றப்பட்டுவரும் சிங்களப் பேரினவாதம் ஒருநாள் இவர்களையும் அரச சேவையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கும். அதுவரை அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையினை இதைப் பாவித்து ஓட்டிக்கொள்ளட்டும். 

வேறு என்ன சொல்வது ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

அண்ணை,

இதை நீங்கள் எப்பிடி எடுத்துக்கொண்டீர்களோ தெரியவில்லை, ஆனால் அவர்கள் செய்வதை நான் சரியென்று வாதாடுவதற்காக எழுதவில்லை.

88 - 90 காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாழ்ந்த போது பறங்கியர் சமூகத்தில் பலர் கடற்படையில் வேலைபார்த்து வந்தனர். அவர்கள் கூட தம்மை தமிழர்களாகவே அடையாளப்படுத்தியிருந்தனர். இதேபோல மட்டக்களப்பு நகரில் பல படித்தவர்கள் அரச வேலையென்பதற்காக பொலீஸில் இணைந்துவந்தனர். 90 இல் ராணுவம் தமிழர்களை நரவேட்டையாடிய காலத்திலேயே இது நடந்தது. எம்முடம் படித்த தாமரைக்கேணிப் பகுதியில் வசித்த வசதிபடித்த மாணவன் விசேட அதிரடிப்படையில் இணைந்துகொண்டான். 

90 - 93 காலப்பகுதியில் கிருலப்பனையில் நாம் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு பொலீஸ் அதிகாரி. வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மன்னாரில் வேலை பார்த்துவந்தார். புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். அவர் இறந்தபோது நாம் அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருந்தோம். இறந்தபின்னர் பொலீஸ் அதிகாரியானவர்களுக்குக் கொடுக்கப்படும் கொடுப்பனவு அவரின் குடும்பத்திற்குக் கிடைத்துவந்தது.

1998 இல் எம்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து இழுத்துச் சென்று சித்திரவதை செய்த பொலீஸ் அதிகாரி ஜெயரட்ணம் கூட வடமராட்சித் தமிழர்தான். 

அதேபோல 2000 இல் கொழும்பில் வாழ்ந்தபோது மட்டக்களப்பைச் சேர்ந்த பொலீஸ் அதிகாரியொருவரை எனக்குத் தெரிந்திருந்தது. அவரின் மகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தேன். அவுஸ்த்திரேலியா வருவதற்காக பொலீஸ் நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்கு நான் அலைந்துகொண்டிருந்தபோது, சிறுதொகைப் பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு அதைச் செய்துகொடுத்தார். வீட்டில் பேசும்போது புலிகளுக்கு ஓரளவு ஆதரவாகப் பேசுவார், ஆனால் பொலீஸில் உயர் பதவியில் இருந்தார். இவரைப்போன்றே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொரு உயரதிகாரியின் பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தேன், ஒரு கட்டத்தில் புலிகளுக்குச் சார்பானவர் என்று கருதப்பட்டு ஒதுக்கப்பட்டார். 

2018 இல் நீண்டநாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் சென்றபோது, ஊர்காவற்றுரை (மனைவியின் ஊர்) எங்களின் வாகனத்தை மறித்துச் சோதனையிட்ட பொலீஸார் தமிழர் என்பதை அன்றிரவு அவர் வேலை முடிந்து எமது வீட்டிற்குவந்தபோது அறிந்துகொண்டேன். அவரது பிரிவில் இன்னும் பல தமிழர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு களுத்தறை பொலீஸ் கல்லூரியில் அவர் தனது தமிழ் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைக் காட்டினார். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எனது மாமனார் ஒரு முன்னாள் கடற்படை வீரர். சிங்களம் படித்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கூறியதால் 1980 இல் வேலையை விட்டு விட்டு வர்த்தகக் கப்பல்களில் போய்வந்தவர். அவருக்கும் ஏழ்மை ஒரு காரணமாக இருந்தது.

சிலர் பொலீஸிலும் ராணுவத்திலும் இணைவதை வேலைவாய்ப்பாகவும், பாதுகாப்பிற்காகவும்,  நிரந்தர வருமானமாகவும், ஓய்வூதியத்திற்கான வழியாகவும் பார்க்கிறார்கள். புலிகளுடனான யுத்தம் அற்ற நிலையினால், உயிருக்கு அச்சப்படத் தேவையில்லை என்பதும், ராணுவத்தில் இணைவதால் அதே ராணுவத்திடமிருந்து தமக்குப் பாதுகாப்புக் கிடைக்குமென்பதாலும் சிலர் இணைகிறார்கள். ஆனால், அரச சேவையில் தமிழர்கள் மேல் காட்டப்படும் மாற்றாந்தாய் மனப்பான்மை இவர்கள் மேலும் காட்டப்படும். தமிழர்கள் என்பதனால் தொடர்ச்சியான சந்தேகப் பார்வை இருக்கத்தான் போகிறது. உருவேற்றப்பட்டுவரும் சிங்களப் பேரினவாதம் ஒருநாள் இவர்களையும் அரச சேவையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கும். அதுவரை அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையினை இதைப் பாவித்து ஓட்டிக்கொள்ளட்டும். 

வேறு என்ன சொல்வது ?!

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. ஆனால் வருங்காலங்களில் தமிழ் இராணுவமும் போலீசுமே தமிழரின் போராட்டத்தை அடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 17:35, தனிக்காட்டு ராஜா said:

அவங்களுக்கு அது கண்ணுக்குள் குத்தினாலும்  700 வீடுகளுக்கு மேல் அமைத்து கொடுத்துள்ளதாக இங்கு செய்திகள் பிரசுரமாகிறது . ஆனால் வெளிநாட்டு காசு வெளிநாட்டில் உள்ள அவங்கவங்க சொந்தங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் உன்மை இல்லாதவர்களுக்கு சில அமைப்புகளினூடாக வீடு அதுவும் அரைபகுதியுடன் நின்று போகிறது 

முனிவர், ராணுவம் இலங்கையில் ஒரு பெரிய யானை. அந்த யானையை கட்டி தீனி போட முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. 

பொருளாதாரம் மேலும், மோசமாகும் போது, ராணுவத்தின் அளவு குறைக்கப்படவே வேண்டும்.

இன்றய நிலையில், வேறு வழி இல்லாமல், ராணுவத்தினை, சும்மா சம்பளத்தினை கொடுத்து வைத்திருக்க முடியாது என்பதால், வேறு வேலைகள் கொடுக்கிறார்கள். ராணுவத்தளபதிக்கும், கொரோனா தடுப்புக்கும் என்ன தொடர்பு? சும்மா தானே இருக்கிறாய் என்று கொடுத்து உள்ளனர். அதேபோல, வீடு கட்டுதல், ரோட்டு போடுதல் என்று செய்யினம்.

இப்ப, யோசிப்பினம், புலிகள் இருந்திருந்தால், நாம நல்லா இருந்திருப்போம், இப்படி ஆச்சுதே, நம்ம நிலைமை என்று.

Link to comment
Share on other sites

On 12/4/2021 at 18:23, satan said:

தாம் உழைத்து வளமாக வாழ்ந்த பிரதேசத்திற்கு இவர்கள் ஏன்வந்தார்கள்?  இந்த மக்களின் வீடு எப்படி உடைந்தது? யுத்தம் ஏன் வந்தது?  எதற்காக வீடு கட்டிக்கொடுக்க இராணுவம் வரவேண்டும்? யுத்தத்திற்கு முன் இராணுவத்தை கொண்டா இந்த மக்கள்  வீடு  கட்டினார்கள்? நீங்கள் உடைத்ததை  உங்கள் திட்டப்படி    கட்டுகிறீர்கள். பிச்சை போட்டதாக படம் காட்டுகிறீர்கள். நீங்கள் உடைத்தது, அழித்தது எல்லாம் நாமறிவோம், சர்வதேசமும் அறியும், ஆதாரமாக உள்ளது. இதன் பின்னால் என்ன நடக்கும் என்பதையும் நாமறிவோம். உங்கள் செயற்பாடுகளே உங்களின் கொடுமைகளுக்கு சாட்சி. 

இவ்வளவு கேள்விக்கும் சிங்களம் நேர்மையாக தனக்குள் விடை  தேடி இருந்தால்  இவ்வளவு கடன் நாட்டுக்கு வந்திருக்காது. ஒரு சிங்கபூராகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்திருக்கும். சீனா ,இந்தியா, மேற்கு நாடுகளுக்கு  அடிபணிய வேண்டிய தேவையும் இருந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2021 at 00:27, விசுகு said:

அதாவது சிறீலங்கா இராணுவத்தில் சேர்ந்தால் வீடு கிடைக்க வாய்ப்புள்ளது??

சிலருக்கு ராணுவத்தில் உள்ள நலன்சார்ந்த அமைப்புக்களால் வீடு அமைத்து கொடுக்கப்படுகிறது  ஒரு சிலர் வங்கியில் கடன் பெறுவதாக இருந்தால் கூட அரச வேலை வேண்டும் உயர்த்தரம் மேல்படிப்பை தொடர முடியாதவர்கள் வேஎறு தெரிவின்றி இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸ் என்பதை தொழிலாக தெரிவு செய்கிறார்கள் அவர்களின் வயிற்று பிழைப்புக்காக அவர்களை குறை சொல்ல முடியாது அல்லவா 

On 14/4/2021 at 01:58, குமாரசாமி said:

தமிழர் பிரதேசங்களிலை இராணுவம்தான் வீடு வளவு கட்டிக்குடுக்கோணும் எண்டால் உங்கை இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? 😁

இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் கிணறு கொங்கிறீட் ரோட்டுக்கு றிபன் கட்டி திறக்கிறார்கள் மற்ற ஒன்றும் பெரிதாக செய்ததாக இல்லை மாறி உங்களால் தெரிவு செய்த பிள்ளையான் என்ன செய்கிரார் என கேட்பீர்கள் தேவையானவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் முழுமையாக இன்னும் பல வருடங்கள் எடுக்கும் ஆனால் ஆட்சி மாறினால் மீண்டும் கிடப்பில் கிடந்துவிடும் 

On 14/4/2021 at 04:59, அக்னியஷ்த்ரா said:

மகிழ்ச்சி....இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் புரிகிறது போல் .. நாம் என்னதான் உரிமை, கொள்கை, கோட்பாடு  என்று கூப்பாடு போட்டாலும் நாட்டிலிருப்பவர்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும் அதற்கு கையில் பசை வேண்டும். அவர்களால் முடிந்த வகையில் அதனை தேடிக்கொள்கிறார்கள்

விளங்கினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அக்னி . ஆனால் அதுதான் உண்மையும் 

15 hours ago, Nathamuni said:

முனிவர், ராணுவம் இலங்கையில் ஒரு பெரிய யானை. அந்த யானையை கட்டி தீனி போட முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. 

பொருளாதாரம் மேலும், மோசமாகும் போது, ராணுவத்தின் அளவு குறைக்கப்படவே வேண்டும்.

இன்றய நிலையில், வேறு வழி இல்லாமல், ராணுவத்தினை, சும்மா சம்பளத்தினை கொடுத்து வைத்திருக்க முடியாது என்பதால், வேறு வேலைகள் கொடுக்கிறார்கள். ராணுவத்தளபதிக்கும், கொரோனா தடுப்புக்கும் என்ன தொடர்பு? சும்மா தானே இருக்கிறாய் என்று கொடுத்து உள்ளனர். அதேபோல, வீடு கட்டுதல், ரோட்டு போடுதல் என்று செய்யினம்.

இப்ப, யோசிப்பினம், புலிகள் இருந்திருந்தால், நாம நல்லா இருந்திருப்போம், இப்படி ஆச்சுதே, நம்ம நிலைமை என்று.

மீண்டும் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கப்படுகிறது ஆயிரத்துக்குமேல் பட்டவர்கள் பயிற்ச்சிக்காக காத்து இருக்கிரார்கள் கடிதம் வந்தால்  சரி இலங்கை ராணுவம் படைக்கு ஆட் களை சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறது இதில் காத்திருப்பவர்கள் தமிழ் இராணுவத்தினர் என்றாக் உங்களால் நம்ப முடிகிறதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களும் இலங்கையில் உள்ளவர்களுக்கு காசு அனுப்பி அவர்களை வைத்து அலுவல்கள் பார்க்கின்றார்கள்தானே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களும் இலங்கையில் உள்ளவர்களுக்கு காசு அனுப்பி அவர்களை வைத்து அலுவல்கள் பார்க்கின்றார்கள்தானே.

 

தமிழர்கள் அனுப்பும் அளவுக்கு அவர்களால் அனுப்ப முடியாது என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2021 at 01:16, விசுகு said:

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

தற்போது இராணுவத்தில் உள்ள பல பிரிவுகளுக்கு ஆட் களை இணைக்கிறார்கள் கட்டிட வேலை , தட்ச்சு தொழில் , உடை வடிவமைப்பு ( ரெய்லர்) சாரதி , மின் இணைப்பாளர், தட்டச்சு , முகாமைத்துவ உதவியாளர்  மட்டக்களப்பில் எனது நண்பர் கோப்ரல் எனும் பதவியில் உள்ளார் அவரிடம் விசாரிச்ச போது இது போன்ற பல விடயங்களை சொன்னார் அதுமட்டும் இல்லாமல் நேர்முக பரீட்சையிலும் அவரே இருந்து நேர்முக பரீட்சையையும் நடத்தினார்.

2020 வரை பொலிசில் இணைந்த இளைஞர்களை கணக்கு பார்த்தால்  3,4 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இருக்கும் கொரோனா காலம் சந்தியில் நிற்கக்கூடாது வீட்ட போங்கள் என்று சொன்னார் ஒரு ராணுவம் அவரை அவரின் சிங்கள உச்ச்சரிப்பை கேட்டதும் நீங்க தமிழா என்று கேட் க ஓம் என்றார் அவர் மலையத்தை பிறப்பிடமாக கொண்டவர் . வயிற்றுப்பிழைப்பு ஆகிப்போனது இப்போது தொழில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மீண்டும் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கப்படுகிறது ஆயிரத்துக்குமேல் பட்டவர்கள் பயிற்ச்சிக்காக காத்து இருக்கிரார்கள் கடிதம் வந்தால்  சரி இலங்கை ராணுவம் படைக்கு ஆட் களை சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறது

எந்த நாட்டோடு  போராடபோகினமாம் ஆள் சேர்த்து? சிங்கள  இராணுவத்துக்கெதிரான குற்றச் சாட்டுக்களை நீத்துப்போகச் செய்வதற்கான தந்திரமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர்.

Lt.-Gen.-Shavendra-Silva.jpg

கடந்த மூன்று மாத காலப் பகுதியில் யாழ் மாவட்டத்தை
சேர்ந்த 1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர் என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 
இன்னமும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களை நாங்கள் பார்க்கின்றோம் அந்த நிலையில் 1500 பேர் இராணுவத்தில் இணைந்துள்ளமை பெரும் வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.
 
ரோனா வைரஸ் காலத்தில் படையினர் பொதுமக்களிற்கு ஆற்றிவரும் சேவையையும் அவர் பாராட்டியுள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

எந்த நாட்டோடு  போராடபோகினமாம் ஆள் சேர்த்து? சிங்கள  இராணுவத்துக்கெதிரான குற்றச் சாட்டுக்களை நீத்துப்போகச் செய்வதற்கான தந்திரமாக இருக்கலாம்.

எப்படித்தான் உங்களால் யோசிக்க முடிகிறதோ தெரியல இ ப்படித்தான் கனபேர்  சுத்துறாங்கள் ஒரு ராணுவ ( இலங்கை ) வீரருக்கு 22 வருடங்கள் சேவைகள் புரிய வேண்டும்  22 வருடங்கள் முடிந்த பிறகு ஓய்வு பெறலாம் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது அநேகமாக யுத்தத்தில் கலந்து சண்டையிட்டவர்கள் ஓய்வு  பெற்று இருக்கலாம்  தற்போது புதியார்கள் இணைகிறார்கள் பழய முன்னாள் ராணுவத்தினர் தளபதிகள் முக்கியமானவர்கள் மட்டும் இருக்கலாம்  ஆனால் அவர்களுக்கு நாடு தடை போடலாம் தண்டனை கொடுக்க முடியாது . 

தற்போது பல முன்னாள் இராணுவத்தினர் விலகி சொந்த வியாபாரத்திலும் சிலர் வங்கிகளில் ( ஆயுத பயிற்ச்சி எடுத்தவர்கள் ) செக்க்யுரிட்டி வேலையும் செய்யுறார்கள்  நாம  அந்த இடத்திலே நிற்கிறம் வெளியால வாங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் ஆசிரியர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கிராம சேவைஅலுவலர் வரை அனைவருமே இலங்கை அரசாங்கத்திற்கு கூலிக்கு வேலை செய்கிறார்கள். இந்த வகையில் இலங்கை இராணுவம், இலங்கை காவல்துறை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படையில் இணைந்து பணியாற்றுவது ஒன்றும் குற்றம் அல்லவே. இராணுவத்தில் தமிழர்கள் ஏற்கனவே உயர் பதவியும் வகித்து உள்ளார்கள். 

வெளிநாட்டு காசு ஊரில் எல்லாருக்கும் கிடைப்பது இல்லையே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.