Jump to content

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!


Recommended Posts

 

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!

 

வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் ராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவத்தை கொண்ட கணவனை யுத்தத்தின் போது இழந்த ஒரு குடும்பத்தினருக்கு ஒரு வீட்டினை இராணுவத்தினரால் அமைத்து கொடுத்திருக்கின்றோம்.

அவர் தனது கணவனை இழந்த பின்னரும் தனது விடா முயற்சியின் காரணமாக சுய தொழிலினை வாழ்வாதாரமாக மேற்கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் இந்த வீடானது இன்றைய தினம் கட்டி முடிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இலங்கை இராணுவத்தினரால் வீடு மட்டுமல்லாது வீட்டுக்குத் தேவையான குளிர்சாதனைப்பெட்டி உட்பட்ட அனைத்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த குடும்பத்தில் ஒரு மாணவியும் உள்ளார் அவருக்கான கல்விக்கான நிதி உதவி மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்திருக்கின்றோம். அத்தோடு மேலதிகமான அந்த மாணவிக்கு உரிய கல்வி செயற்பாடுகளுக்கு உதவ தயாராகவுள்ளோம்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின் போது கொல்லப்பட்ட ஒருவருக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம். யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

இலங்கையின் முப்படையினரும் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுக்கிறார்கள் என யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு காசுகளை அனுப்பி, இங்கு காசு வருகிறவர்கள் அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிரான பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த இராணுவம் கொடுமையானது. ராணுவம் இங்கே தேவையற்றது என. ஆனால் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக் கொடுத்ததையிட்டு இலங்கை ராணுவத்தினர் ஆகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன். எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்தார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்! (adaderana.lk)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வெளிநாட்டுடன் தொடர்புடைய சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர் – யாழில் இராணுவத்தளபதி!

வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிராக பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இராணுவம் கொடுமையான இராணுவம். இங்கே தேவையற்றது என பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக்கொடுத்ததையிட்டு இலங்கை இராணுவத்தினராகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன்.

எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Saventhra-Silwa-3.jpg

Saventhra-Silwa-2.jpg

https://athavannews.com/2021/1209405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

 

வெளிநாட்டுடன் தொடர்புடைய சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர் – யாழில் இராணுவத்தளபதி!

வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிராக பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இராணுவம் கொடுமையான இராணுவம். இங்கே தேவையற்றது என பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக்கொடுத்ததையிட்டு இலங்கை இராணுவத்தினராகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன்.

எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Saventhra-Silwa-3.jpg

Saventhra-Silwa-2.jpg

https://athavannews.com/2021/1209405

ஓமடாப்பா, உங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கிற காசிலை இதை செய்து போட்டு கனக்க கதைக்கிறியள். வெளிநாட்டுக்காசு வாறது இப்ப கண்ணுக்கை குத்துது போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

ஓமடாப்பா, உங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கிற காசிலை இதை செய்து போட்டு கனக்க கதைக்கிறியள். வெளிநாட்டுக்காசு வாறது இப்ப கண்ணுக்கை குத்துது போலை

அவங்களுக்கு அது கண்ணுக்குள் குத்தினாலும்  700 வீடுகளுக்கு மேல் அமைத்து கொடுத்துள்ளதாக இங்கு செய்திகள் பிரசுரமாகிறது . ஆனால் வெளிநாட்டு காசு வெளிநாட்டில் உள்ள அவங்கவங்க சொந்தங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் உன்மை இல்லாதவர்களுக்கு சில அமைப்புகளினூடாக வீடு அதுவும் அரைபகுதியுடன் நின்று போகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவங்களுக்கு அது கண்ணுக்குள் குத்தினாலும்  700 வீடுகளுக்கு மேல் அமைத்து கொடுத்துள்ளதாக இங்கு செய்திகள் பிரசுரமாகிறது . ஆனால் வெளிநாட்டு காசு வெளிநாட்டில் உள்ள அவங்கவங்க சொந்தங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் உன்மை இல்லாதவர்களுக்கு சில அமைப்புகளினூடாக வீடு அதுவும் அரைபகுதியுடன் நின்று போகிறது 

ராசன்! மட்டக்களப்பு ஏரியாவிலையும் உப்பிடித்தான் ராணுவம் வீடுகள் கட்டி குடுக்குதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாம் உழைத்து வளமாக வாழ்ந்த பிரதேசத்திற்கு இவர்கள் ஏன்வந்தார்கள்?  இந்த மக்களின் வீடு எப்படி உடைந்தது? யுத்தம் ஏன் வந்தது?  எதற்காக வீடு கட்டிக்கொடுக்க இராணுவம் வரவேண்டும்? யுத்தத்திற்கு முன் இராணுவத்தை கொண்டா இந்த மக்கள்  வீடு  கட்டினார்கள்? நீங்கள் உடைத்ததை  உங்கள் திட்டப்படி    கட்டுகிறீர்கள். பிச்சை போட்டதாக படம் காட்டுகிறீர்கள். நீங்கள் உடைத்தது, அழித்தது எல்லாம் நாமறிவோம், சர்வதேசமும் அறியும், ஆதாரமாக உள்ளது. இதன் பின்னால் என்ன நடக்கும் என்பதையும் நாமறிவோம். உங்கள் செயற்பாடுகளே உங்களின் கொடுமைகளுக்கு சாட்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ராசன்! மட்டக்களப்பு ஏரியாவிலையும் உப்பிடித்தான் ராணுவம் வீடுகள் கட்டி குடுக்குதோ?

மட்டக்களப்பில் சில வீடுகள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரால் கட்டிக்கொடுக்கப்பட்டது சஜித்தினால் தற்போது எந்த திட்டங்களும் வரவில்லை  ஆனால் இரானுவத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்துள்ளார்கள் சேர்ந்தவர்கள் பணக்கார இளைஞர்கள் கிடையாது அவர்களுக்கு இராணுவத்தினரால் வீடு கட்டிக்கொடுக்கப்படலாம் . சில தகவல்கள் எடுக்கிறார்கள் சில வேளை கட்டிக்கொடுக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில் சில வீடுகள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரால் கட்டிக்கொடுக்கப்பட்டது சஜித்தினால் தற்போது எந்த திட்டங்களும் வரவில்லை  ஆனால் இரானுவத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்துள்ளார்கள் சேர்ந்தவர்கள் பணக்கார இளைஞர்கள் கிடையாது அவர்களுக்கு இராணுவத்தினரால் வீடு கட்டிக்கொடுக்கப்படலாம் . சில தகவல்கள் எடுக்கிறார்கள் சில வேளை கட்டிக்கொடுக்கலாம் .

அதாவது சிறீலங்கா இராணுவத்தில் சேர்ந்தால் வீடு கிடைக்க வாய்ப்புள்ளது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம், கடற்படை, விசேட அதிரடிப்படை, பொலீஸ் ஆகிய அரச படைகளில் தமிழர்கள் இணைவதை மட்டக்களப்பில் இருந்த காலங்களில் கண்டிருக்கிறேன். வேலைவாய்ப்பு என்று மட்டுமே பார்த்து இணைகிறார்கள். யாழ்ப்பாணத்தில் 80 கள்வரை கடற்படை மற்றும் பொலீஸில் இருந்தார்கள், பின்னர் குறைந்துவிட்டது.

பசியென்று வரும்போது மற்றையவை எல்லாமே பறந்துவிடும். இதுதான் நடக்கிறது. 

படித்தும் வேலையில்லையென்பதால் ராணுவத்தில் இணைகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

படித்தும் வேலையில்லையென்பதால் ராணுவத்தில் இணைகிறார்கள். 

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில் சில வீடுகள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரால் கட்டிக்கொடுக்கப்பட்டது சஜித்தினால் தற்போது எந்த திட்டங்களும் வரவில்லை  ஆனால் இரானுவத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்துள்ளார்கள் சேர்ந்தவர்கள் பணக்கார இளைஞர்கள் கிடையாது அவர்களுக்கு இராணுவத்தினரால் வீடு கட்டிக்கொடுக்கப்படலாம் . சில தகவல்கள் எடுக்கிறார்கள் சில வேளை கட்டிக்கொடுக்கலாம் .

தமிழர் பிரதேசங்களிலை இராணுவம்தான் வீடு வளவு கட்டிக்குடுக்கோணும் எண்டால் உங்கை இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

அப்படித்தான் என்று நினைக்கிறேன். 

ராணுவம் தமிழர்களை இணைத்துக்கொள்வதன்மூலம் தமிழர்களின் கனவைச் சிதைக்க நினைக்கிறது. அது இணைவோருக்குப் புரிவதில்லை, புரிந்தாலும் எனக்கென்ன என்று இணைகிறார்கள். எமக்கு வேலையில்லை, உணவில்லை என்று கூறுபவர்களிடம் உரிமைபற்றிப் பேசுவது கடிணம் என்பது எனது தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

எமக்கு வேலையில்லை, உணவில்லை என்று கூறுபவர்களிடம் உரிமைபற்றிப் பேசுவது கடிணம் என்பது எனது தாழ்மையான கருத்து

மகிழ்ச்சி....இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் புரிகிறது போல் .. நாம் என்னதான் உரிமை, கொள்கை, கோட்பாடு  என்று கூப்பாடு போட்டாலும் நாட்டிலிருப்பவர்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும் அதற்கு கையில் பசை வேண்டும். அவர்களால் முடிந்த வகையில் அதனை தேடிக்கொள்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

அண்ணை,

இதை நீங்கள் எப்பிடி எடுத்துக்கொண்டீர்களோ தெரியவில்லை, ஆனால் அவர்கள் செய்வதை நான் சரியென்று வாதாடுவதற்காக எழுதவில்லை.

88 - 90 காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாழ்ந்த போது பறங்கியர் சமூகத்தில் பலர் கடற்படையில் வேலைபார்த்து வந்தனர். அவர்கள் கூட தம்மை தமிழர்களாகவே அடையாளப்படுத்தியிருந்தனர். இதேபோல மட்டக்களப்பு நகரில் பல படித்தவர்கள் அரச வேலையென்பதற்காக பொலீஸில் இணைந்துவந்தனர். 90 இல் ராணுவம் தமிழர்களை நரவேட்டையாடிய காலத்திலேயே இது நடந்தது. எம்முடம் படித்த தாமரைக்கேணிப் பகுதியில் வசித்த வசதிபடித்த மாணவன் விசேட அதிரடிப்படையில் இணைந்துகொண்டான். 

90 - 93 காலப்பகுதியில் கிருலப்பனையில் நாம் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு பொலீஸ் அதிகாரி. வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மன்னாரில் வேலை பார்த்துவந்தார். புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். அவர் இறந்தபோது நாம் அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருந்தோம். இறந்தபின்னர் பொலீஸ் அதிகாரியானவர்களுக்குக் கொடுக்கப்படும் கொடுப்பனவு அவரின் குடும்பத்திற்குக் கிடைத்துவந்தது.

1998 இல் எம்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து இழுத்துச் சென்று சித்திரவதை செய்த பொலீஸ் அதிகாரி ஜெயரட்ணம் கூட வடமராட்சித் தமிழர்தான். 

அதேபோல 2000 இல் கொழும்பில் வாழ்ந்தபோது மட்டக்களப்பைச் சேர்ந்த பொலீஸ் அதிகாரியொருவரை எனக்குத் தெரிந்திருந்தது. அவரின் மகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தேன். அவுஸ்த்திரேலியா வருவதற்காக பொலீஸ் நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்கு நான் அலைந்துகொண்டிருந்தபோது, சிறுதொகைப் பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு அதைச் செய்துகொடுத்தார். வீட்டில் பேசும்போது புலிகளுக்கு ஓரளவு ஆதரவாகப் பேசுவார், ஆனால் பொலீஸில் உயர் பதவியில் இருந்தார். இவரைப்போன்றே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொரு உயரதிகாரியின் பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தேன், ஒரு கட்டத்தில் புலிகளுக்குச் சார்பானவர் என்று கருதப்பட்டு ஒதுக்கப்பட்டார். 

2018 இல் நீண்டநாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் சென்றபோது, ஊர்காவற்றுரை (மனைவியின் ஊர்) எங்களின் வாகனத்தை மறித்துச் சோதனையிட்ட பொலீஸார் தமிழர் என்பதை அன்றிரவு அவர் வேலை முடிந்து எமது வீட்டிற்குவந்தபோது அறிந்துகொண்டேன். அவரது பிரிவில் இன்னும் பல தமிழர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு களுத்தறை பொலீஸ் கல்லூரியில் அவர் தனது தமிழ் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைக் காட்டினார். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எனது மாமனார் ஒரு முன்னாள் கடற்படை வீரர். சிங்களம் படித்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கூறியதால் 1980 இல் வேலையை விட்டு விட்டு வர்த்தகக் கப்பல்களில் போய்வந்தவர். அவருக்கும் ஏழ்மை ஒரு காரணமாக இருந்தது.

சிலர் பொலீஸிலும் ராணுவத்திலும் இணைவதை வேலைவாய்ப்பாகவும், பாதுகாப்பிற்காகவும்,  நிரந்தர வருமானமாகவும், ஓய்வூதியத்திற்கான வழியாகவும் பார்க்கிறார்கள். புலிகளுடனான யுத்தம் அற்ற நிலையினால், உயிருக்கு அச்சப்படத் தேவையில்லை என்பதும், ராணுவத்தில் இணைவதால் அதே ராணுவத்திடமிருந்து தமக்குப் பாதுகாப்புக் கிடைக்குமென்பதாலும் சிலர் இணைகிறார்கள். ஆனால், அரச சேவையில் தமிழர்கள் மேல் காட்டப்படும் மாற்றாந்தாய் மனப்பான்மை இவர்கள் மேலும் காட்டப்படும். தமிழர்கள் என்பதனால் தொடர்ச்சியான சந்தேகப் பார்வை இருக்கத்தான் போகிறது. உருவேற்றப்பட்டுவரும் சிங்களப் பேரினவாதம் ஒருநாள் இவர்களையும் அரச சேவையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கும். அதுவரை அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையினை இதைப் பாவித்து ஓட்டிக்கொள்ளட்டும். 

வேறு என்ன சொல்வது ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

அண்ணை,

இதை நீங்கள் எப்பிடி எடுத்துக்கொண்டீர்களோ தெரியவில்லை, ஆனால் அவர்கள் செய்வதை நான் சரியென்று வாதாடுவதற்காக எழுதவில்லை.

88 - 90 காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாழ்ந்த போது பறங்கியர் சமூகத்தில் பலர் கடற்படையில் வேலைபார்த்து வந்தனர். அவர்கள் கூட தம்மை தமிழர்களாகவே அடையாளப்படுத்தியிருந்தனர். இதேபோல மட்டக்களப்பு நகரில் பல படித்தவர்கள் அரச வேலையென்பதற்காக பொலீஸில் இணைந்துவந்தனர். 90 இல் ராணுவம் தமிழர்களை நரவேட்டையாடிய காலத்திலேயே இது நடந்தது. எம்முடம் படித்த தாமரைக்கேணிப் பகுதியில் வசித்த வசதிபடித்த மாணவன் விசேட அதிரடிப்படையில் இணைந்துகொண்டான். 

90 - 93 காலப்பகுதியில் கிருலப்பனையில் நாம் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு பொலீஸ் அதிகாரி. வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மன்னாரில் வேலை பார்த்துவந்தார். புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். அவர் இறந்தபோது நாம் அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருந்தோம். இறந்தபின்னர் பொலீஸ் அதிகாரியானவர்களுக்குக் கொடுக்கப்படும் கொடுப்பனவு அவரின் குடும்பத்திற்குக் கிடைத்துவந்தது.

1998 இல் எம்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து இழுத்துச் சென்று சித்திரவதை செய்த பொலீஸ் அதிகாரி ஜெயரட்ணம் கூட வடமராட்சித் தமிழர்தான். 

அதேபோல 2000 இல் கொழும்பில் வாழ்ந்தபோது மட்டக்களப்பைச் சேர்ந்த பொலீஸ் அதிகாரியொருவரை எனக்குத் தெரிந்திருந்தது. அவரின் மகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தேன். அவுஸ்த்திரேலியா வருவதற்காக பொலீஸ் நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்கு நான் அலைந்துகொண்டிருந்தபோது, சிறுதொகைப் பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு அதைச் செய்துகொடுத்தார். வீட்டில் பேசும்போது புலிகளுக்கு ஓரளவு ஆதரவாகப் பேசுவார், ஆனால் பொலீஸில் உயர் பதவியில் இருந்தார். இவரைப்போன்றே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொரு உயரதிகாரியின் பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தேன், ஒரு கட்டத்தில் புலிகளுக்குச் சார்பானவர் என்று கருதப்பட்டு ஒதுக்கப்பட்டார். 

2018 இல் நீண்டநாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் சென்றபோது, ஊர்காவற்றுரை (மனைவியின் ஊர்) எங்களின் வாகனத்தை மறித்துச் சோதனையிட்ட பொலீஸார் தமிழர் என்பதை அன்றிரவு அவர் வேலை முடிந்து எமது வீட்டிற்குவந்தபோது அறிந்துகொண்டேன். அவரது பிரிவில் இன்னும் பல தமிழர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு களுத்தறை பொலீஸ் கல்லூரியில் அவர் தனது தமிழ் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைக் காட்டினார். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எனது மாமனார் ஒரு முன்னாள் கடற்படை வீரர். சிங்களம் படித்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கூறியதால் 1980 இல் வேலையை விட்டு விட்டு வர்த்தகக் கப்பல்களில் போய்வந்தவர். அவருக்கும் ஏழ்மை ஒரு காரணமாக இருந்தது.

சிலர் பொலீஸிலும் ராணுவத்திலும் இணைவதை வேலைவாய்ப்பாகவும், பாதுகாப்பிற்காகவும்,  நிரந்தர வருமானமாகவும், ஓய்வூதியத்திற்கான வழியாகவும் பார்க்கிறார்கள். புலிகளுடனான யுத்தம் அற்ற நிலையினால், உயிருக்கு அச்சப்படத் தேவையில்லை என்பதும், ராணுவத்தில் இணைவதால் அதே ராணுவத்திடமிருந்து தமக்குப் பாதுகாப்புக் கிடைக்குமென்பதாலும் சிலர் இணைகிறார்கள். ஆனால், அரச சேவையில் தமிழர்கள் மேல் காட்டப்படும் மாற்றாந்தாய் மனப்பான்மை இவர்கள் மேலும் காட்டப்படும். தமிழர்கள் என்பதனால் தொடர்ச்சியான சந்தேகப் பார்வை இருக்கத்தான் போகிறது. உருவேற்றப்பட்டுவரும் சிங்களப் பேரினவாதம் ஒருநாள் இவர்களையும் அரச சேவையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கும். அதுவரை அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையினை இதைப் பாவித்து ஓட்டிக்கொள்ளட்டும். 

வேறு என்ன சொல்வது ?!

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. ஆனால் வருங்காலங்களில் தமிழ் இராணுவமும் போலீசுமே தமிழரின் போராட்டத்தை அடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 17:35, தனிக்காட்டு ராஜா said:

அவங்களுக்கு அது கண்ணுக்குள் குத்தினாலும்  700 வீடுகளுக்கு மேல் அமைத்து கொடுத்துள்ளதாக இங்கு செய்திகள் பிரசுரமாகிறது . ஆனால் வெளிநாட்டு காசு வெளிநாட்டில் உள்ள அவங்கவங்க சொந்தங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் உன்மை இல்லாதவர்களுக்கு சில அமைப்புகளினூடாக வீடு அதுவும் அரைபகுதியுடன் நின்று போகிறது 

முனிவர், ராணுவம் இலங்கையில் ஒரு பெரிய யானை. அந்த யானையை கட்டி தீனி போட முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. 

பொருளாதாரம் மேலும், மோசமாகும் போது, ராணுவத்தின் அளவு குறைக்கப்படவே வேண்டும்.

இன்றய நிலையில், வேறு வழி இல்லாமல், ராணுவத்தினை, சும்மா சம்பளத்தினை கொடுத்து வைத்திருக்க முடியாது என்பதால், வேறு வேலைகள் கொடுக்கிறார்கள். ராணுவத்தளபதிக்கும், கொரோனா தடுப்புக்கும் என்ன தொடர்பு? சும்மா தானே இருக்கிறாய் என்று கொடுத்து உள்ளனர். அதேபோல, வீடு கட்டுதல், ரோட்டு போடுதல் என்று செய்யினம்.

இப்ப, யோசிப்பினம், புலிகள் இருந்திருந்தால், நாம நல்லா இருந்திருப்போம், இப்படி ஆச்சுதே, நம்ம நிலைமை என்று.

Link to comment
Share on other sites

On 12/4/2021 at 18:23, satan said:

தாம் உழைத்து வளமாக வாழ்ந்த பிரதேசத்திற்கு இவர்கள் ஏன்வந்தார்கள்?  இந்த மக்களின் வீடு எப்படி உடைந்தது? யுத்தம் ஏன் வந்தது?  எதற்காக வீடு கட்டிக்கொடுக்க இராணுவம் வரவேண்டும்? யுத்தத்திற்கு முன் இராணுவத்தை கொண்டா இந்த மக்கள்  வீடு  கட்டினார்கள்? நீங்கள் உடைத்ததை  உங்கள் திட்டப்படி    கட்டுகிறீர்கள். பிச்சை போட்டதாக படம் காட்டுகிறீர்கள். நீங்கள் உடைத்தது, அழித்தது எல்லாம் நாமறிவோம், சர்வதேசமும் அறியும், ஆதாரமாக உள்ளது. இதன் பின்னால் என்ன நடக்கும் என்பதையும் நாமறிவோம். உங்கள் செயற்பாடுகளே உங்களின் கொடுமைகளுக்கு சாட்சி. 

இவ்வளவு கேள்விக்கும் சிங்களம் நேர்மையாக தனக்குள் விடை  தேடி இருந்தால்  இவ்வளவு கடன் நாட்டுக்கு வந்திருக்காது. ஒரு சிங்கபூராகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்திருக்கும். சீனா ,இந்தியா, மேற்கு நாடுகளுக்கு  அடிபணிய வேண்டிய தேவையும் இருந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2021 at 00:27, விசுகு said:

அதாவது சிறீலங்கா இராணுவத்தில் சேர்ந்தால் வீடு கிடைக்க வாய்ப்புள்ளது??

சிலருக்கு ராணுவத்தில் உள்ள நலன்சார்ந்த அமைப்புக்களால் வீடு அமைத்து கொடுக்கப்படுகிறது  ஒரு சிலர் வங்கியில் கடன் பெறுவதாக இருந்தால் கூட அரச வேலை வேண்டும் உயர்த்தரம் மேல்படிப்பை தொடர முடியாதவர்கள் வேஎறு தெரிவின்றி இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸ் என்பதை தொழிலாக தெரிவு செய்கிறார்கள் அவர்களின் வயிற்று பிழைப்புக்காக அவர்களை குறை சொல்ல முடியாது அல்லவா 

On 14/4/2021 at 01:58, குமாரசாமி said:

தமிழர் பிரதேசங்களிலை இராணுவம்தான் வீடு வளவு கட்டிக்குடுக்கோணும் எண்டால் உங்கை இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? 😁

இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் கிணறு கொங்கிறீட் ரோட்டுக்கு றிபன் கட்டி திறக்கிறார்கள் மற்ற ஒன்றும் பெரிதாக செய்ததாக இல்லை மாறி உங்களால் தெரிவு செய்த பிள்ளையான் என்ன செய்கிரார் என கேட்பீர்கள் தேவையானவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் முழுமையாக இன்னும் பல வருடங்கள் எடுக்கும் ஆனால் ஆட்சி மாறினால் மீண்டும் கிடப்பில் கிடந்துவிடும் 

On 14/4/2021 at 04:59, அக்னியஷ்த்ரா said:

மகிழ்ச்சி....இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் புரிகிறது போல் .. நாம் என்னதான் உரிமை, கொள்கை, கோட்பாடு  என்று கூப்பாடு போட்டாலும் நாட்டிலிருப்பவர்கள் மூன்று வேளை சாப்பிட வேண்டும் அதற்கு கையில் பசை வேண்டும். அவர்களால் முடிந்த வகையில் அதனை தேடிக்கொள்கிறார்கள்

விளங்கினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அக்னி . ஆனால் அதுதான் உண்மையும் 

15 hours ago, Nathamuni said:

முனிவர், ராணுவம் இலங்கையில் ஒரு பெரிய யானை. அந்த யானையை கட்டி தீனி போட முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. 

பொருளாதாரம் மேலும், மோசமாகும் போது, ராணுவத்தின் அளவு குறைக்கப்படவே வேண்டும்.

இன்றய நிலையில், வேறு வழி இல்லாமல், ராணுவத்தினை, சும்மா சம்பளத்தினை கொடுத்து வைத்திருக்க முடியாது என்பதால், வேறு வேலைகள் கொடுக்கிறார்கள். ராணுவத்தளபதிக்கும், கொரோனா தடுப்புக்கும் என்ன தொடர்பு? சும்மா தானே இருக்கிறாய் என்று கொடுத்து உள்ளனர். அதேபோல, வீடு கட்டுதல், ரோட்டு போடுதல் என்று செய்யினம்.

இப்ப, யோசிப்பினம், புலிகள் இருந்திருந்தால், நாம நல்லா இருந்திருப்போம், இப்படி ஆச்சுதே, நம்ம நிலைமை என்று.

மீண்டும் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கப்படுகிறது ஆயிரத்துக்குமேல் பட்டவர்கள் பயிற்ச்சிக்காக காத்து இருக்கிரார்கள் கடிதம் வந்தால்  சரி இலங்கை ராணுவம் படைக்கு ஆட் களை சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறது இதில் காத்திருப்பவர்கள் தமிழ் இராணுவத்தினர் என்றாக் உங்களால் நம்ப முடிகிறதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களும் இலங்கையில் உள்ளவர்களுக்கு காசு அனுப்பி அவர்களை வைத்து அலுவல்கள் பார்க்கின்றார்கள்தானே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களும் இலங்கையில் உள்ளவர்களுக்கு காசு அனுப்பி அவர்களை வைத்து அலுவல்கள் பார்க்கின்றார்கள்தானே.

 

தமிழர்கள் அனுப்பும் அளவுக்கு அவர்களால் அனுப்ப முடியாது என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2021 at 01:16, விசுகு said:

அதாவது படித்தாலும் சிறீலங்காவில் வேலையில்லை ஆனால் இராணுவத்தில் மட்டும் தாராளமாக இருக்கிறது

தற்போது இராணுவத்தில் உள்ள பல பிரிவுகளுக்கு ஆட் களை இணைக்கிறார்கள் கட்டிட வேலை , தட்ச்சு தொழில் , உடை வடிவமைப்பு ( ரெய்லர்) சாரதி , மின் இணைப்பாளர், தட்டச்சு , முகாமைத்துவ உதவியாளர்  மட்டக்களப்பில் எனது நண்பர் கோப்ரல் எனும் பதவியில் உள்ளார் அவரிடம் விசாரிச்ச போது இது போன்ற பல விடயங்களை சொன்னார் அதுமட்டும் இல்லாமல் நேர்முக பரீட்சையிலும் அவரே இருந்து நேர்முக பரீட்சையையும் நடத்தினார்.

2020 வரை பொலிசில் இணைந்த இளைஞர்களை கணக்கு பார்த்தால்  3,4 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இருக்கும் கொரோனா காலம் சந்தியில் நிற்கக்கூடாது வீட்ட போங்கள் என்று சொன்னார் ஒரு ராணுவம் அவரை அவரின் சிங்கள உச்ச்சரிப்பை கேட்டதும் நீங்க தமிழா என்று கேட் க ஓம் என்றார் அவர் மலையத்தை பிறப்பிடமாக கொண்டவர் . வயிற்றுப்பிழைப்பு ஆகிப்போனது இப்போது தொழில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மீண்டும் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கப்படுகிறது ஆயிரத்துக்குமேல் பட்டவர்கள் பயிற்ச்சிக்காக காத்து இருக்கிரார்கள் கடிதம் வந்தால்  சரி இலங்கை ராணுவம் படைக்கு ஆட் களை சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறது

எந்த நாட்டோடு  போராடபோகினமாம் ஆள் சேர்த்து? சிங்கள  இராணுவத்துக்கெதிரான குற்றச் சாட்டுக்களை நீத்துப்போகச் செய்வதற்கான தந்திரமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர்.

Lt.-Gen.-Shavendra-Silva.jpg

கடந்த மூன்று மாத காலப் பகுதியில் யாழ் மாவட்டத்தை
சேர்ந்த 1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர் என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 
இன்னமும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களை நாங்கள் பார்க்கின்றோம் அந்த நிலையில் 1500 பேர் இராணுவத்தில் இணைந்துள்ளமை பெரும் வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.
 
ரோனா வைரஸ் காலத்தில் படையினர் பொதுமக்களிற்கு ஆற்றிவரும் சேவையையும் அவர் பாராட்டியுள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

எந்த நாட்டோடு  போராடபோகினமாம் ஆள் சேர்த்து? சிங்கள  இராணுவத்துக்கெதிரான குற்றச் சாட்டுக்களை நீத்துப்போகச் செய்வதற்கான தந்திரமாக இருக்கலாம்.

எப்படித்தான் உங்களால் யோசிக்க முடிகிறதோ தெரியல இ ப்படித்தான் கனபேர்  சுத்துறாங்கள் ஒரு ராணுவ ( இலங்கை ) வீரருக்கு 22 வருடங்கள் சேவைகள் புரிய வேண்டும்  22 வருடங்கள் முடிந்த பிறகு ஓய்வு பெறலாம் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது அநேகமாக யுத்தத்தில் கலந்து சண்டையிட்டவர்கள் ஓய்வு  பெற்று இருக்கலாம்  தற்போது புதியார்கள் இணைகிறார்கள் பழய முன்னாள் ராணுவத்தினர் தளபதிகள் முக்கியமானவர்கள் மட்டும் இருக்கலாம்  ஆனால் அவர்களுக்கு நாடு தடை போடலாம் தண்டனை கொடுக்க முடியாது . 

தற்போது பல முன்னாள் இராணுவத்தினர் விலகி சொந்த வியாபாரத்திலும் சிலர் வங்கிகளில் ( ஆயுத பயிற்ச்சி எடுத்தவர்கள் ) செக்க்யுரிட்டி வேலையும் செய்யுறார்கள்  நாம  அந்த இடத்திலே நிற்கிறம் வெளியால வாங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் ஆசிரியர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கிராம சேவைஅலுவலர் வரை அனைவருமே இலங்கை அரசாங்கத்திற்கு கூலிக்கு வேலை செய்கிறார்கள். இந்த வகையில் இலங்கை இராணுவம், இலங்கை காவல்துறை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படையில் இணைந்து பணியாற்றுவது ஒன்றும் குற்றம் அல்லவே. இராணுவத்தில் தமிழர்கள் ஏற்கனவே உயர் பதவியும் வகித்து உள்ளார்கள். 

வெளிநாட்டு காசு ஊரில் எல்லாருக்கும் கிடைப்பது இல்லையே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.