Jump to content

அதிகரிக்கும் கொரோனா – போராட்டத்தை கைவிட விவசாயிகளிடம் வலியுறுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் கொரோனா – போராட்டத்தை கைவிட விவசாயிகளிடம் வலியுறுத்தல்

 
1-93-696x348.jpg
 44 Views

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும்   போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 1,68,912  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் தற்போது வரையில், 1,35,27,717 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து, 1,70,179 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத், தொடர்ந்து மத்திய அரசுடன்  பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,   கடந்த ஜனவரி 22ஆம் திகதி எங்குப் பேச்சுவார்த்தையை விட்டோமோ அதே இடத்திலிருந்து மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க தயாராகவுள்ளோம்.

ஆனால் மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு உடனடியாக இயற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை” என்று அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், டெல்லியில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=47183

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் கோரிக்கைகளில் சமரசம் இல்லை- விவசாய அமைப்புகள்

பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் கோரிக்கைகளில் சமரசம் இல்லை- விவசாய அமைப்புகள்

 

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 137 நாட்களாக அரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் இந்த மாதம் பல்வேறு முறைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.அதன்படி வரும் ஏப்ரல் 13ம் தேதி, ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படவுள்ளது. அதேபோல வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசியலமைப்பு பாதுகாப்பு தினம் மற்றும் கிசான் பகுஜன் ஒற்றுமை நாள் ஆகியவற்றை அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த் நிலையில்  மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தனது டுவிட்டரில் 

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண விவசாயிகள் முயற்சிக்க வேண்டும்’’ எனக் கூறி  இருந்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் தயாராகவே உள்ளனர். கடந்த ஜனவரி 22-ம் தேதி எங்குப் பேச்சுவார்த்தையை விட்டோமோ அதே இடத்திலிருந்து மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க தயாராகவுள்ளோம்.

ஆனால் மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு உடனடியாக இயற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/12123615/Farmers-ready-to-talk-if-govt-invites-no-change-in.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.