Jump to content

`பாலின பாகுபாடு, பாலியல் வன்முறைகள்!' - சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பிய கூகுள் ஊழியர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`பாலின பாகுபாடு, பாலியல் வன்முறைகள்!' - சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பிய கூகுள் ஊழியர்கள்

கூகுள் - சுந்தர் பிச்சை

கூகுள் - சுந்தர் பிச்சை

ஆல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணியிடத்தில் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும், நிர்வாகம் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களை இப்படி தான் நடத்த வேண்டும் என்று மற்ற நிறுவனங்களுக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடுகள் வேதனை அளிப்பதாக, கூகுள் ஊழியர்கள் சமீப காலமாக மனம் குமுறி வருகின்றனர். பணியிடத்தில் பாலின சமத்துவம், சுதந்திரம், பெண்களுக்குப் பாதுகாப்பு என அனைத்திலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்த கூகுள் நிறுவனத்தின் மீது கடந்த சில வருடங்களாகப் புகார்கள் வந்து குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது.

டிம்னிட் கெப்ரு  - சுந்தர் பிச்சை
 
டிம்னிட் கெப்ரு - சுந்தர் பிச்சை

முன்னதாக கடந்தாண்டு கூகுள் நிறுவனத்தின் நுண்ணறிவு பிரிவில் பணிபுரிந்து வந்த கறுப்பின பெண் டிம்னிட் கெப்ரு (Timnit Gebru) என்பவர் கூகுளில் நிற மற்றும் இன பாகுபாடு மிக அதிகமாக இருப்பதாக ஆய்வுக்கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அதனையடுத்து, கூகுள் நிறுவனம் நிர்வாகத்தின் மீது குற்றம் சாற்றிய டிம்னிட்'டை பணியிலிருந்து நீக்கி ஒழுங்கை நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், அப்போது அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 2000-க்கும் மேற்பட்டோர் கெப்ருவின் நீக்கம் குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்குக் கூட்டாகக் கடிதம் எழுதி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஊழியர்களின் கடிதத்திற்குப் பதிலளித்த சுந்தர் பிச்சை, ``நடந்தவற்றுக்குத் தான் மன்னிப்பு கோருவதாகவும், ஊழியர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும்" ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

 

அந்த நேரத்தில் கூகுள் நிறுவன ஊழியர்களின் கடிதம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள். தற்போது மீண்டும் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களுக்கு பணியிட பாதுகாப்பு துளியும் இல்லை என்று குற்றம்சாட்டி இருக்கின்றனர். ஆல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணியிடத்தில் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்குப் பல நேரங்களில் ஆளாக்கப்படுவதாகவும், நிர்வாகம் குற்றம் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதாகவும் சுந்தர் பிச்சைக்குத் திறந்த மடல் ஒன்றினை அனுப்பியிருக்கின்றனர்.

கூகுள் நிறுவனம்
 
கூகுள் நிறுவனம்

தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு ஆல்பாபெட் ஊழியர்கள் 1,378 பேர் எழுதி அனுப்பியுள்ள அந்த திறந்த மடலில், "ஆல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு அலுவலகத்தில் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை. அலுவலகத்தில் பாலியல் ரீதியிலான வன்முறைகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனால், இது குறித்து நிர்வாக உயரதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அலுவலகத்தில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை ஒரு குழுவினை நிர்வகிக்கும் உயர் பதவிகளில் அமர்த்தக்கூடாது என்று நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம். அதே போல், பணியிடங்களில் பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துபவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்காமல் அவர்களைப் பாதுகாத்து வருகிறது. இது நிறுவனத்தில் பெண்கள் பணிபுரிவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கிறது. எனவே, தலைமை பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

இதற்கிடையில, சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் பொறுப்புகளிலிருந்து விலகிய முன்னாள் ஊழியர் நீட்ஃபெல்ட் (nietfeld) என்ற பெண் செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், கூகுள் நிறுவனத்தில் தான் பாலியல் வன்முறைகளைச் சந்தித்ததாகவும், அது குறித்து தலைமை நிர்வாகிகளிடம் புகார் அளித்த போது உயரதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தன்னுடைய பணியிடத்தை மாற்றுமாறு கேட்டபோது நிறுவனம் மறுத்ததாகவும் தனக்குத் தொல்லை கொடுத்த நபருடன் தான் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததாகவும் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

Emi nietfeld
 
Emi nietfeld credits - New york Times

ஊழியர்களின் தொடர் புகார்கள் கூகுள் நிறுவனத்திற்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கூகுள் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ஊழியர்களின் புகார்களை முறையாக விசாரித்து அவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நிறுவனம் முயற்சித்து வருவதாகவும், பணியிடத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிறுவனம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பூதாகரமாக வெடித்துள்ள கூகுள் ஊழியர்கள் புகார் குறித்து சுந்தர் பிச்சை இதுவரையிலும் விளக்கமளிக்காத நிலையில், கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவன ஊழியர்கள் அவரின் பதிலுக்காக காத்திருக்கின்றனர்.

 

 

https://www.vikatan.com/news/crime/google-company-workers-send-a-letter-to-sundar-pichai-regarding-harassment-in-google

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.