Jump to content

அரசுக்குள் சூடுபிடிக்கும் முரண்பாடு : அவசரமாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(லியோ நிரோஷ தர்ஷன்)

மாகாண சபை தேர்தலுக்கான உத்தேச சட்டமூல யோசனைகள் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் ஆளும் கூட்டணிக்குள் உள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பானது வெள்ளிக்கிழமை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்கு முன்னர் பெசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பொன்றுக்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார்.

தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

ஆனால்  தேர்தல் தொகுதியொன்றில் ஒரே கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களை நிறுத்துவதற்கு உத்தேச புதிய சட்டமூல வரைபின் யோசனைக்கு ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலர் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் எல்லை நிர்ணய விவகாரம் குறித்தும்  எதிர்ப்பை தெரிவித்தவர்கள் கேள்வியெழுப்பினர்.

அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்த யோசனைக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளின் முக்கிய பகுதியாகவே புதிய தேர்தல் சட்டமூல விவகாரம் அமைந்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் மாகாண சபை தேர்தலை நடத்துவதனை தேர்தல் முறைமையை மையப்படுத்தி புதிய சட்டமூல வரைபை அமைச்சரவையில் சமர்பித்திருந்த நிலையில் அது குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த சட்ட மூல வரைபில் காணப்பட்ட ஒருசில யோசணைகளுக்கு ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் அமைச்சரவை பத்திரத்தை வெளியிடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. இதன் பின்னரே கட்சி தலைவர்களுடனான சந்திப்பு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார். எவ்வாறாயினும் உத்தேச மாகாண சபை தேர்தல் தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறையில் நடாத்துவதற்கான பூர்வாங்கல் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. இதனடிப்படையில் மாகாண சபைகளுக்கான உறுப்பினர் தெரிவில் 70 வீதம் தொகுவாரி முறைமையிலும் 30 வீதம் விகிதாசார முறைமையிலும் தெரிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகளை தீர்த்து அடுத்த தேர்தல்களுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் பெசில் ராஜபக்ஷ பொதுஜன கூட்டணியின் அனைத்து கட்சி தலைவர்களையும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் இறுதிக்கட்டமாக ஜனாதிபதியுடன் அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறும். எனவே தான் இதன் உறுதியான நிலைப்பாடு ஜனாதிபதியுடனான கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் தெரியவரும் என ஆளும் கட்சி உறுப்பினரொருவர் தெரிவித்தார். அத்துடன் குறித்த மாகாண சபை தேர்தலுக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இருவாரத்திற்குள் எல்லை நிர்ணயம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரசுக்குள் சூடுபிடிக்கும் முரண்பாடு : அவசரமாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசு, அரசாங்கம் என்ற இரண்டையும் போட்டு குழப்புவதில் எமது பத்திரிகையாளர்கள் விண்ணர்கள்.
இங்கு தலைப்பு "அரசாங்கத்துக்குள் சூடுபிடிக்கும் முரண்பாடு" என்பதுதாகதான் இருந்திருக்கவேண்டும்.

அரசு = நாடு அல்லது மக்கள் (state)
அரசாங்கம் = நாட்டை நிர்வகிக்கும் சபை (government) 

பல இடங்களில் சிங்கள அரசு அல்லது சிங்கள அரசாங்கம் என்று தமிழ் செய்திகளில் குறிப்பிடப்படுகிறது. 
அப்படியானால் இது நாங்களே இலங்கையை ஒரு சிங்கள நாடு என்று ஏற்றுக்கொள்வதுபோலாகும்.

ஒரு அரசின் மக்கள் தாம் தெரிவுசெய்த அரசாங்கம் என்ற அலகின் மூலமாக நாட்டை ஆட்சி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.