Jump to content

கருப்பின இளைஞர் சுட்டுக்கொலை - அமெரிக்க நகரில் தொடரும் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகருக்கு வடக்கே உள்ள புரூக்ளின் சென்டர் பகுதியில் கருப்பின இளைஞர் ஒருவரை அங்குள்ள காவல்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால், தீவிரமாகும் பதற்றத்தை தடுக்க நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர் 20 வயதாகும் டான்டே ரைட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அங்கு நிலவும் அமைதியற்ற நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக மின்னிசோட்டா மாகாண ஆளுநர் டிம் வால்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்டை அங்குள்ள காவல்துறையினர் கடுமையான முறையில் தாக்கி கொலை செய்த சம்பவம் பரவலான கண்டனக்குரல்களை எழுப்பியது. அங்குள்ள மின்னியாபோலிஸ் நகரில்தான் அந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இப்போது என்ன நிலைமை?

தாக்குதலில் உயிரிழந்த இளைஞர் பற்றிய தகவல் கிடைத்ததும் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் திரண்டி போராட்டத்தில் குதித்தனர். புரூக்ளின் சென்டர் காவல் தலைமையகத்துக்கு வெளியே திரண்ட பொது மக்கள், டான்டே ரைட்டின் பெயர் அடங்கிய பதாகைகளுடன் தலைமையகத்தை முற்றுகையிட்டு குரல் கொடுத்தனர்.

போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது ஒரு குழுவினர் அங்கிருந்த காவல் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். சிலர் அந்த வளாகத்துக்குள் நுழைய முற்பட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.

REUTERS

பட மூலாதாரம்,REUTERS

முன்னதாக, கூட்டமாக வந்த போராட்டக்காரர்கள் நடைபாதைகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏந்தி டான்டே ரைட் மறைவுக்கு நீதி கேட்டு குரல் கொடுத்தனர். ஆனால், அவர்களின் பாோராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

ஏற்கெனவே ஜார்ஜ் ஃபுளாய்ட் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதையொட்டி, அங்கு மின்னிசோட்டை தேசிய படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக பள்ளிகளை திறக்கவும், நிகழ்ச்சிளை நடத்த வேண்டாம் எனவும் மாகாண நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டான்டே ரைட்டுக்கு என்ன நடந்தது?

போலீஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மின்னிசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸ் நகருக்கு அருகே உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறப்படும் டான்டே ரைட்டுக்கு எதிரான கைது வாரண்ட் உள்ளதாகக்கூறி காவல்துறையினர் அவரை தடுத்துள்ளனர். ஆனால், அதை உதாசீனப்படுத்தியவாறு டான்டே தனது வாகனத்துக்குள் செல்ல முற்பட்டபோது அவரை கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது தனது காரில் டான்டே ஒரு சில அடி தூரம் சென்றபோது அவரை நோக்கி ஒரு காவலர் சுட்டதாகவும் அப்போது அந்த கார் வேறொரு கார் மீது மோதி நின்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அதே இடத்தில் டான்டே உயிர் இழந்ததாக புரூக்ளின் சென்டர் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த காருக்குள் இருந்த மற்றொரு பெண்மணி உயிருக்கு ஆபத்தின்றி தப்பியதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடந்தபோது டான்டேவை சுற்றியிருந்த காவலர்கள் தங்களின் உடலில் பாடிகேம் எனப்படும் சீருடையில் பொருத்தக்கூடிய விடியோ கேமிரா சாதனத்தை பொருத்தியிருந்ததாகவும் அதில் அனைத்து காட்சிகளும் பதிவாகியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, போக்குவரத்து காவலர்கள் டான்டேவிடம் மோதலில் ஈடுபட்டபோது, அவருடன் தான் செல்பேசியில் பேசியதாகவும் அப்போது தனது காரில் இருந்துதான் வாசனை தரும் பாக்கெட்டுகளின் வெளிப்புற கவர்கள் கீழே விழுந்தன என்று கூறி காவலர்கள் தன்னிடம் பிரச்னை செய்வதாக டான்டே கூறினார் என்றும் அவரது தாயார் கேட்டி தெரிவித்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு எனது மகனுடன் அதே காரில் பயணம் செய்த அவனது தோழியின் செல்பேசியில் அழைத்தபோது, அவர் எனது மகன் உயிரற்று சாலையில் கிடப்பதாக தெரிவித்தார் என்றும் கேட்டி கூறினார்.

நடந்த சம்பவம் குறித்து நகர மேயர் எலியாட் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "சட்ட அமலாக்கத்துறையினரால் மற்றுமொரு கருப்பின மனிதர் உயிரிழந்திருப்பதற்கு அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது," என கூறியுள்ளார்.

கருப்பின இளைஞர்

மின்னியாபோலிஸில் ஏன் பதற்றம்?

கடந்த ஆண்டு மே மாதம் மின்னியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கழுத்துப் பகுதியில் தனது முழங்காலை பல நிமிடங்கள் அழுத்திப் பிடித்திருந்த காவலர் டெரெக் சாவ்வின் மீதான வழக்கு விசாரணை கடந்த இரண்டு வாரங்களாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் கழுத்துப் பகுதியில் அந்த காவலர் 9 நிமிடங்களுக்கும் மேலாக காலை அழுத்தி வைத்திருந்தார். அந்த காட்சிகள் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பரவியதை அடுத்து அந்த விவகாரம் உலக அளவில் கண்டனக் குரல்களை பலரும் எழுப்புவதற்குத் தூண்டின.

கருப்பின இளைஞர் சுட்டுக்கொலை - அமெரிக்க நகரில் தொடரும் போராட்டத்தை தடுக்க ஊரடங்கு உத்தரவு - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்க சுடுறாங்கள் என்று இங்கு ஓடிவந்தால்  
இங்கும் சுட்டால் இனி எங்கு போக? 

ஒழிக்க இடமில்லாமல்  ஓடிப்போய் 
விதானை வீட்டில் ஒழித்த நிலமையாய் இருக்கிறது 

(எழுத்துப்பிழை திருத்தம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்காவில் கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டுக்கொலை - எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டுக்கொலை - எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை
 
 

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
பதிவு: ஏப்ரல் 13,  2021 08:53 AM
வாஷிங்டன்,

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இதனைத்தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்ட்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன.

இதன் எதிரொலியாக போலீஸ் அதிகாரி டெர்ரக் சவுவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.‌ இந்த விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த விசாரணையையொட்டி மினசோட்டா மாகாணம்‌ முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த நிலையில் மினசோட்டா மாகாணத்தில் கருப்பின வாலிபர் ஒருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மினியாபொலிஸ் நகருக்கு அருகில் உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி கார் ஒன்றை தடுத்து நிறுத்திய போலீசார் காரை ஓட்டி வந்த கறுப்பினத்தைச் சேர்ந்த டான்ட் ரைட் (20) என்ற வாலிபரை கைது செய்ய முற்பட்டனர்.‌ ஆனால் டான்ட் ரைட் தான் எந்த தவறும் செய்யவில்லை என போலீசிடம் கூறிவிட்டு மீண்டும் காரில் ஏறி அமர்ந்தார்.

அவர் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரான சமயத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கி குண்டு காயத்துடன் டான்ட் ரைட் காரை சிறிது தூரம் ஓட்டி சென்றார். பின்னர் அந்த கார் மற்றொரு கார் மீது மோதி நின்றது. இதையடுத்து போலீசார் சென்று பார்த்தபோது டான்ட் ரைட் காருக்குள் பிணமாக கிடந்தார். மேலும் அவருடன் காரில் பயணித்த பெண்ணொருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் துடித்துக்கொண்டிருந்தார். போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதனிடையே கருப்பின வாலிபர் ஒருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் புரூக்ளின் சென்டர் நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இது அங்கு பெரும் போராட்டத்துக்கு வழி வகுத்தது. நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி டான்ட் ரைட் சாவுக்கு நீதி கேட்டு போராடத் தொடங்கினர்.

புரூக்ளின் சென்டர் நகரில் உள்ள போலீஸ் தலைமையகம் முன்பு திரண்ட போராட்டக்காரர்கள் டான்ட் ரைட் பெயரை முழக்கமிட்டதோடு, போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும்படி போலீசார் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரித்தனர்.

ஆனால் அதற்கு செவி சாய்க்காத போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்கள் மீது கற்களை வீசி எறிந்து தாக்கினர். இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.

இந்த வன்முறை புரூக்ளின் சென்டர் நகர் முழுவதும் பரவி ஆங்காங்கே போலீசாரும் போராட்டக்காரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் அந்த நகரம் முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.

இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மினசோட்டா மாகாண ஆளுனர் டிம் வால்ஸ், புரூக்ளின் சென்டர் நகரில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் அந்த நகரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

https://www.dailythanthi.com/News/World/2021/04/13085326/Black-youth-shot-dead-by-police-in-the-United-States.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.