Jump to content

பிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்

திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட மான அணை ஒன்றைக்கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 

உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணையை சீனா கட்டுகின்றது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட சீனா திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் 14 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை கட்டுமான பணிக்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் அணையின் கட்டுமானப் பணி தொடங்கப்பட இருக்கிறது.

சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இமயமலையில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா, பங்களாதேஷ்  வழியாக செல்கிறது.

இது ஆசியாவின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று. இந்த நதியின் குறுக்கே தான் சீனா கட்டும் பிரம்மாண்ட அணை அமைய இருக்கிறது.

சீனா இந்த அணையை திபெத்தில் கட்டுவதன் மூலம், பிரம்மபுத்திரா நதி இந்தியாவுக்குள் பாய்வதற்கு முன்பே அந்த தண்ணீரை தடுத்து நிறுத்த இருக்கிறது.

இதனால் இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா நதியில் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். இது இந்தியாவுக்கு பேரிழப்பாக அமையும்.

சீனா நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக இந்த அணையை கட்டுவதாக கூறினாலும் இந்தியாவுக்கு பிரம்மபுத்திரா நதி நீர் கிடைக்காமல் தடுக்கவே இந்த சதியில் சீனா இறங்கி உள்ளது என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறனர்.

இந்த நிலையில், இந்தியா தனது எல்லைக்கு பிரம்ம புத்திரா நதியில் மற்றொரு அணை கட்ட யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

https://www.virakesari.lk/article/103745

Link to comment
Share on other sites

சீனா இந்த அணையை சிறந்த முறையில் கட்டி முடிக்க வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இதனால் இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா நதியில் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். இது இந்தியாவுக்கு பேரிழப்பாக அமையும்.

இதையே இந்திய மாநிலங்கள் செய்யும் போது பார்த்துக் கொண்டிருப்பவர்கள்.
சீனா செய்யும் போது ஏன் துள்ளிக் குதிப்பான்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

சீனா இந்த அணையை சிறந்த முறையில் கட்டி முடிக்க வாழ்த்துகள்!

நாங்கள் சீன் லங்காவில் இருந்து வாழ்த்திறம் எஙக பெரிய சீனாவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்து எழுதியுள்ள பலரும் பலவிதமாக கொள்கைகள் மற்றும் நோக்கங்களை கொண்டிருந்தபோதும் இந்தியா **** என்பதில் மட்டும் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது தெரிகிறது. அந்த அளவுக்கு பேதமற்று இந்தியா எம்முதுகில் குத்தியிருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2021 at 08:06, கிருபன் said:

30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் !!!

30 ஆயிரம் x கோடி x  கிலோ வாட்ஸ்= 30000x10000000x1000 W = 300000000000000 W = 300000 GW

ஒரே அணைக்கட்டில் கிடைக்கும் நீர் மின்சார உற்பத்தியில் இந்த தொகை சாத்தியமற்ற மிகப் பெரிய அளவு மின்சாரம்.

இங்கு 3 ஆயிரம் கோடி வாட்ஸ் = 3000x10000000 = 30000000000 W = 30 GW என்பதை மாறி பிழையாக எழுதியிருக்கலாம். தெரிந்தவர்கள் சரிபார்க்கவும்.

இன்று உலகின் மிகபெரிய நீர்மின் உற்பத்தி நிலையம் சீனாவில் உள்ளது அது 22,5 GW  மின்சாரத்தையே உற்பத்தி செய்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, vanangaamudi said:

30 ஆயிரம் x கோடி x  கிலோ வாட்ஸ்= 30000x10000000x1000 W = 300000000000000 W = 300000 GW

ஒரே அணைக்கட்டில் கிடைக்கும் நீர் மின்சார உற்பத்தியில் இந்த தொகை சாத்தியமற்ற மிகப் பெரிய அளவு மின்சாரம்.

இங்கு 3 ஆயிரம் கோடி வாட்ஸ் = 3000x10000000 = 30000000000 W = 30 GW என்பதை மாறி பிழையாக எழுதியிருக்கலாம். தெரிந்தவர்கள் சரிபார்க்கவும்.

இன்று உலகின் மிகபெரிய நீர்மின் உற்பத்தி நிலையம் சீனாவில் உள்ளது அது 22,5 GW  மின்சாரத்தையே உற்பத்தி செய்கிறது.

 

கணக்கு சரியாக வரும் பாருங்கள் வருடமொன்றுக்கு 300 பில்லியன் கிலோ வாட்ஸ் சக்தி பிறப்பிக்கப்படும் என்கிறார்கள் .

இமயமலை சூப்பர் அணை திட்டம்

https://phys.org/news/2021-04-china-himalayan-super-stoke-india.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்துக்கு..... துரோகம் செய்த,  காங்கிரஸ் கட்சி நல்ல உதாரணம்.

35 minutes ago, குமாரசாமி said:

தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

அப்ப ராஜபக்ச குடும்பம் எப்படி இந்த லிஸ்டில் இல்லையா அண்ண??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப ராஜபக்ச குடும்பம் எப்படி இந்த லிஸ்டில் இல்லையா அண்ண??

போகப்போகத்தானே தெரியும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சீனா பிரம்மபுத்திராவின் பாதையை திருப்பவில்லைத் தானே?

திருப்பவும் முடியாது, ஏனெனில் பாதை முழுவதுமே இயற்கையான மலை பள்ளத்தாக்கின் ஊடான பாதை.

 நீர் தேகத்தை காட்டினால் தான், பிரம்மபுத்திரா கிந்தியவிற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும்.
இது நீர் மின்சாரம் என்பதால், அணையை கட்டி, தண்ணீரை ஏந்தி, மீண்டும் அதை ஓட  விடுவதன் முலம்  தான் மின் பிறப்பிக்க  முடியும்.

மாற்றம் இருக்கலாம். ஆனால் பாதிக்க கூடிய அளவு மாற்றம் இருக்குமா என்பது கேள்வியே?


மேழும், சீனா  இதுவரையில் கட்டிய நீர் மின்பற்றப்பக்கம் எல்லாமே ஒப்பிடலாவில் மென்மையான புவி அமைப்பு கொண்ட பகுதிகள்.

பிரம புதிற்ற போன்று நதியின் பாதை முழுவதும், இயற்கையாக  மலைகளால் ஆனா பள்ள தாக்கால்  பாய்ந்து வரும் நதிகள் அல்ல.

 சீனாவால் திட்டமிடும் அளவிற்கு கட்டமுடியாமல் போகலாம்.

சீன பல சார்வாஹதேச பிரகடனம், உடன்படிக்கைகளை இயற்கை வளம், உணவு பாதுகாப்பு போன்றவற்றில் ஏற்று இருக்கிறது.

பல வழிகள் இருக்கிறது, சீனாவுடன் பிரச்சனையை அணுகுவதற்கு.    

பிரச்னை என்னவென்றால், இப்படி பிரச்சனையை அணுகினால், உள்ளே இருக்கும் காவிரி பிரச்சனைகளும் இது போன்ற சர்வதேச பிரகடனம் என்பதற்குள் வந்து விடும்.

கிந்தியா அதனால் தான் சட்டியில் போட்ட உயிர் மீனை போலா துடிக்கிறது என்றே நம்ப வேண்டி உள்ளது?  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

போகப்போகத்தானே தெரியும். :grin:

ம் பார்க்கலாம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

இதில் சீனா பிரம்மபுத்திராவின் பாதையை திருப்பவில்லைத் தானே?

திருப்பவும் முடியாது, ஏனெனில் பாதை முழுவதுமே இயற்கையான மலை பள்ளத்தாக்கின் ஊடான பாதை.

 நீர் தேகத்தை காட்டினால் தான், பிரம்மபுத்திரா கிந்தியவிற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும்.
இது நீர் மின்சாரம் என்பதால், அணையை கட்டி, தண்ணீரை ஏந்தி, மீண்டும் அதை ஓட  விடுவதன் முலம்  தான் மின் பிறப்பிக்க  முடியும்.

மாற்றம் இருக்கலாம். ஆனால் பாதிக்க கூடிய அளவு மாற்றம் இருக்குமா என்பது கேள்வியே?


மேழும், சீனா  இதுவரையில் கட்டிய நீர் மின்பற்றப்பக்கம் எல்லாமே ஒப்பிடலாவில் மென்மையான புவி அமைப்பு கொண்ட பகுதிகள்.

பிரம புதிற்ற போன்று நதியின் பாதை முழுவதும், இயற்கையாக  மலைகளால் ஆனா பள்ள தாக்கால்  பாய்ந்து வரும் நதிகள் அல்ல.

 சீனாவால் திட்டமிடும் அளவிற்கு கட்டமுடியாமல் போகலாம்.

சீன பல சார்வாஹதேச பிரகடனம், உடன்படிக்கைகளை இயற்கை வளம், உணவு பாதுகாப்பு போன்றவற்றில் ஏற்று இருக்கிறது.

பல வழிகள் இருக்கிறது, சீனாவுடன் பிரச்சனையை அணுகுவதற்கு.    

பிரச்னை என்னவென்றால், இப்படி பிரச்சனையை அணுகினால், உள்ளே இருக்கும் காவிரி பிரச்சனைகளும் இது போன்ற சர்வதேச பிரகடனம் என்பதற்குள் வந்து விடும்.

கிந்தியா அதனால் தான் சட்டியில் போட்ட உயிர் மீனை போலா துடிக்கிறது என்றே நம்ப வேண்டி உள்ளது?  
 

புரியாமல் புழுங்குகிறார்கள், சங்கிகள்...

பாய்ந்து ஓடும் தண்ணீரை தடுத்து நிறுத்த முடியாது. அதன் பாய்ச்சலில் ஒரு பகுதியை, தேக்கி, ஒழுங்கு படுத்தி, அதன் நிச்சயமாக்கப்பட்ட, பாய்ச்சல் பாதையில், மின் பிறப்பாக்கியினை வைத்து, மின்சாரம் உருவாக்குவதே திட்டம். 

இதனால், நீர்வரத்து குறையாது. ஏற்கனவே, மழை பெய்தால், பெரு வெள்ளத்தில், தவிக்கும் சீனாவில், ஓடும் ஆற்றின் பாதையினை தடுத்தால், பெரு நாசம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2021 at 08:06, கிருபன் said:

இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது வருடமொன்றுக்கான மின் உற்பத்தியின் அளவு என்ற தரவு செய்தியின் தமிழாக்கத்தில் தரப்படவில்லை என்பதை கவனிக்க. நீங்கள் காட்டிய இணையத்தில் காணப்படும் ஆங்கில பதிவில் இந்த விபரத்துடன் கூடிய செய்தி உள்ளது. நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.