Jump to content

பெரியார் பெயரை நீக்குவதா?: தலைவர்கள் கண்டனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் பெயரை நீக்குவதா?: தலைவர்கள் கண்டனம்!

 

spacer.png
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயர் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் ரிப்பன் மாளிகையில் தொடங்கி, எழும்பூர், கீழ்ப்பாக்கம் வழியாகச் செல்லும் 14 கிலோ மீட்டர் சாலைக்குப் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்பதற்குப் பதிலாக கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோன்று மாநில நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்றே பதிவிடப்பட்டுள்ளது. இந்த திடீர் பெயர்மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி அல்லது மாநில நெடுஞ்சாலைத் துறை தரப்பில் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், ஈ.வெ.ரா.சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், “தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குப் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979ல் பெயர் சூட்டினார். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது, தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?

எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2க்குப் பிறகு அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “எம்.ஜி.ஆர்.பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்துகின்ற எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், தந்தை பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்து இருக்கின்றது.

ஆர்எஸ்எஸ் சங் பரிவார் வகுத்த வியூகத்தின்படி, மோடி பிறப்பித்த ஆணையை, எடப்பாடி நிறைவேற்றி இருக்கின்றார். தமிழ்நாட்டின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார்.

ஏற்கனவே, சென்னை விமான நிலையத்திலிருந்து, காமராசர் அண்ணா பெயரை நீக்கியதையும் எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக, இப்போது இந்த மாற்றம் நடந்து இருக்கின்றது.

தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி நெடுஞ்சாலைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கின்ற எடப்பாடி பழனிசாமி, தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, இந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்; ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்ற பெயர் தொடர வேண்டும். தவறினால், மே மாதம் பொறுப்பு ஏற்கின்ற திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ ஈ.வெ.ரா.சாலையை நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில் - ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்? யாரைத் திருப்தி செய்ய? என்ன பின்னணி - விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

உடனடியாக அதை இணைய தளத்திலிருந்து நீக்கி, ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

https://minnambalam.com/politics/2021/04/13/29/tamilnadu-political-leaders-vaiko--stalin-k-veeramani-condemns-renaming-of-evr-periyar-salai

Link to comment
Share on other sites

பி.ஜே.பி , ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் பினாமி கட்சிகள் தங்கள் மதவாத, அடிப்படைவாத, இனவாதக் கருத்துகளை தமிழகம் ஏற்காமல் இருப்பதற்கான காரணம் பெரியாரிசம் என்பதை புரிந்து வைத்து இருப்பதால் எப்பாடுபட்டாவது அதை ஒழிக்க நினைக்கின்றனர். தென்னிந்தியாவில் தம் பிரதான எதிரியே பெரியாரிசம் என நம்புகின்றனர். அதை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற நினைக்கின்றனர். ஆனால் அது மீண்டும் மீண்டும் அவர்களையே திருப்பி தாக்கி வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றம்!

spacer.png

 

நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையில் ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்டு, கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று குறிப்பிடப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பெரியார் பெயரை நீக்குவதா என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினர். மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று மாற்றவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில், நெடுஞ்சாலை இணையதளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்டிருக்கிறது. அண்ணாசாலையின் பெயர் கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு எனவும், காமராசர் சாலை (கடற்கரை சாலை)யின் பெயர் ‘கிராண்ட் நார்தென் டிரங்க் ரோடு என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பெரியார் ஈ.வெ.ரா. சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய விளக்கமோ, பதிலோ கொடுக்கப்படாத நிலையில், அண்ணாசாலை, காமராஜர் சாலை பெயரும் மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயர் மாற்றப்பட்ட கொடுமையைப் போலவே, ‘அண்ணா சாலை’யின் பெயரும் சென்னை காமராசர் சாலையின் பெயரும் மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

அதாவது ‘மவுண்ட் ரோடு’ என்பது ‘அண்ணா சாலை’ என்று மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் பெரியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அண்ணாவுக்கும், காமராசருக்கும் செய்துள்ளனர்!. விமான நிலையத்தில் அண்ணா, காமராசர் பெயர்களும் அகற்றப்பட்டு, அப்படியே நீடிக்கும் கொடுமையில் மாற்றமில்லை. விரைவில் இந்த அநியாய அக்கிரமங்களைக் கண்டித்து, மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடங்க மக்களைத் தமிழ்நாட்டு அதிமுக அரசு ஏனோ தூண்டுகிறது!

வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்! அரசே இப்படி போராட்டங்களைத் தூண்டலாமா?. அண்ணா பெயரில் கட்சி - ஆனால், அண்ணா பெயருக்கும் ஆபத்து என்றால், இதன் ‘‘மூலப் புருஷர்கள்’’ யார்? எந்தப் பின்னணியில் இந்த விஷமங்கள் விதைக்கப்பட்டன? தமிழ்நாட்டு மக்களே, அறைகூவல்கள் எப்படி உருக்கொள்கின்றன பார்த்தீர்களா?” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றி தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?

வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்?. உடனடியாக இந்த உத்தரவுகளைத் திரும்பப் பெற்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரிலேயே அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

https://minnambalam.com/politics/2021/04/14/56/annasalai-kamarajar-salai-name-changed

Link to comment
Share on other sites

 

 

பெரியார் சாலை பெயர் மாற்றம் : அரசியல் நடவடிக்கையா? எதார்த்த செயல்பாடா?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.