Jump to content

சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

large.0-02-05-5efd33be98e8035f5a7eae7050c3c3937265622f5f32b50c3217b7e4c74beb67_1c6da464cb69a3.jpg.49d09677e0a23977e1fff5e40d0a92a6.jpg

சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!

*******************************

 

நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020

நீழ் துயர் எமை விட்டு அகலவேண்டும்

உலகத்து நாடனைத்தும் உயர வேண்டும்

உயர்வான எண்ணங்கள் தோன்ற வேண்டும்.

 

அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம்

அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும்

உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும்

ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும்.

 

விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம்

விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும்

அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும்

அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும்.

 

விண் மேகம் கடலோடு  உரச வேண்டும்-பூமி

விளைநிலத்தில் தென்றலது பாடவேண்டும்

இருள் வெளுக்க சூரியனும் ஒளிர வேண்டும்

இயற்கையவள் எமைச் சேர்த்து வாழவேண்டும்.

 

அவளிடத்தில் எங்களுக்கு பணிவு வேண்டும்

அனைத்துயிரும் எமைப்போல காக்கவேண்டும்

அண்டவெளி பிரபஞ்சம் நாம் அறிய வேண்டும்

அறிந்த பின்பு எம்மையவன்அழைக்கவேண்டும்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

13.04.2021

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020

நீள் துயர்  துயர் எமை விட்டு அகலவேண்டும்

 

விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம்

விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும்

அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும்

அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும்.

 

 

 அழகான வரிகள் எம் விருப்புகளை எல்லாம் நிறைவேற்ற அந்த பரம் பொருளை வேண்டுவோம். பாராட்டுக்கள் கோபி  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம்

அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும்

உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும்

ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும்.....!

 

நிஜமாகவே  இப்படி ஒரு காலம் வரவேண்டும் என மனசு கிடந்தது அடிக்குது......!

பாராட்டுக்கள் கோபி......!   👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020

நீள் துயர்  துயர் எமை விட்டு அகலவேண்டும்

 

விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம்

விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும்

அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும்

அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும்.

 

 

 அழகான வரிகள் எம் விருப்புகளை எல்லாம் நிறைவேற்ற அந்த பரம் பொருளை வேண்டுவோம். பாராட்டுக்கள் கோபி  

எமக்கு மேலே இருக்கின்ற அந்த சக்தியால் தான் எல்லாமே முடியும். உண்மையே அக்கா நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை  தமிழ் புத்தாண்டு தமிழருக்கு எங்களுக்கு ஏன் இரண்டு வருடப்பிறப்பு சின்னவர்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை உங்களிடம் உள்ளதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை விசேடம்  கொடுப்பதற்கான நேரம் UK இல் எவை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு, பணம் இருக்கிறது,   என்று சொல்லி இவற்றை (கை விசேடம் ..)  கைவிடாதீர்கள். ஈழத்தமிழரின் தேசத்தின் முக்கிய  அடையாளம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2021 at 20:14, suvy said:

அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம்

அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும்

உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும்

ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும்.....!

 

நிஜமாகவே  இப்படி ஒரு காலம் வரவேண்டும் என மனசு கிடந்தது அடிக்குது......!

பாராட்டுக்கள் கோபி......!   👏

நாளைய விடிவு நமக்கா விடியுமென்ற நம்பிக்கையோடு வாழுவோம். நன்றி அண்ணா

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.