Jump to content

நம்பிக்கையை இழக்காதீர்கள்! உரிமையை வென்றெடுப்போம்!! - சித்திரைப் புத்தாண்டில் சம்பந்தன்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையை இழக்காதீர்கள்! உரிமையை வென்றெடுப்போம்!! - சித்திரைப் புத்தாண்டில் சம்பந்தன்.!

Screenshot-2021-04-14-11-33-20-514-com-a

தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது.

நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையில் தேசிய பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலகக்கூடாது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லுறவுகளை அரசு பேண வேண்டும். இவையெல்லாம் தவிர்க்க முடியாத கருமங்களாகும்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு இன்று தத்தளிக்கின்றது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. விசேடமாக இந்த ஆட்சிக்கு உகந்ததல்ல.

தமிழர்களாகிய நாங்கள் நாட்டைப் பிரித்துத் தருமாறு கோரவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் போதிய அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட்டு எங்கள் இறைமையை நாங்கள், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் - தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் பயன்படுத்த வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் இவ்விதமான நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை எமது பிரதேசங்களிலும் ஏற்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/04/13/24816/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நம்பிக்கையை இழக்காதீர்கள்! உரிமையை வென்றெடுப்போம்!! - சித்திரைப் புத்தாண்டில் சம்பந்தன்.!

அதானே.... பொழுது, விடிஞ்சிடுச்சு... ஆளை இன்னும் காணவில்லையே என்று பார்த்தன். :grin:
இவர் இல்லாமல், ஒரு புத்தாண்டா... வா தலைவா..... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அதானே.... பொழுது, விடிஞ்சிடுச்சு... ஆளை இன்னும் காணவில்லையே என்று பார்த்தன். :grin:
இவர் இல்லாமல், ஒரு புத்தாண்டா... வா தலைவா..... 🤣

இவரின் செய்திக்காகத்தானே காத்திருந்தீர்கள். நீங்கள் இனி ஆரம்பிக்கலாம் உங்கள் கொண்டாடட்டத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானம் பொய்க்கலாம்.....வரலாறு கூட மாறலாம்!

ஆனால், ஐயாவின் வாழ்த்துச் செய்தி மட்டும் மாறாது...!😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்’- இரா. சம்பந்தன்

12-8-696x392.jpg
 86 Views

“இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்“ என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும்.

இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது.

நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையில் தேசிய பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலகக்கூடாது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லுறவுகளை அரசு பேண வேண்டும். இவையெல்லாம் தவிர்க்க முடியாத கருமங்களாகும்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு இன்று தத்தளிக்கின்றது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. விசேடமாக இந்த ஆட்சிக்கு உகந்ததல்ல.

தமிழர்களாகிய நாங்கள் நாட்டைப் பிரித்துத் தருமாறு கோரவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் போதிய அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட்டு எங்கள் இறைமையை நாங்கள், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் – தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் பயன்படுத்த வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் இவ்விதமான நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை எமது பிரதேசங்களிலும் ஏற்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது” என்றார்

 

 

 

https://www.ilakku.org/?p=47301

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்“ என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

சரி தீபாவழிக்கு பார்ப்போம்.விடுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்’- இரா. சம்பந்தன்

நன்றி வணக்கம் மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுகின்றோம். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சம்பந்தன் அவர்களே,


வணக்கம்,


ஐயா உங்களோடு சில கேள்விகள், நீங்கள் தமிழர்களுடைய அரசியல் சார்ந்து ஒரு நீண்ட பயணத்தில் இருக்கின்றீர்கள், மேலோட்டமாக நான் குறிப்பிடுவது நீங்கள் விடுதலைப்புலிகளின் காலத்திலும் அதற்கு முன்பும் அதோடு விடுதலைப் புலிகள் பின்பும் நீங்கள் அரசியல் தளத்தில் இருக்கின்றீர்கள்.  அதற்கு முதற்கண் உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.


ஆனால் உங்களுடைய இயலாமையின், உங்களை பொறுப்பின்மை அரசியல் அல்லது  அரசியல் அரசியல் அறிவின் அறிவின் அருமை, பெருமையை உணராதவர் ஆக இருக்கின்றீர்கள்.


நீங்கள் விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஒரு ஆட்சி அதிகாரத்தை நிறுவ ஆயுதம் கொண்டு போராடியவர்களில் சமகாலத்தில், அவர்களுக்கு வெளியில் நின்று நீங்களும் அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா அரசியலில் ஒரு அரசியல் நாடகத்தை நடத்திக்கொண்டு இருந்தீர்கள்.


அது ஏதோ;

உங்களுடைய கருத்து அல்லது செல்வாக்கு தமிழ் மக்களிடையே எடுபடவில்லை என்பதன் பால் நீங்கள் உங்களுடைய உருவை மாற்றிக் கொண்டீர்கள். அதாவது நாங்கள் இங்கே குறிப்பிடுவது உதாரணமாக நீங்கள் விடுதலைப்புலிகள் அரசியல் கருத்துகளை உள்வாங்கி ஏதோ அவர்களால் நீங்கள் முழுவதுமாக ஆட்கொள்ளப் பட்டவர்களாக காட்சி அளித்து உங்களுக்கான வருங்கால அரசியல் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டீர்கள்.


அதனோடு கூட பயணித்து காலத்தில் விடுதலைப் புலிகளின் பலம் அற்றுப்போய்விட்டது. ஆனால் ஒரு சுதந்திரமான தமிழ் மக்களின் பிரதிநிதியாக நீங்கள் உங்களுடைய அரசியலை செய்வதை அடியோடு மறந்து போனீர்கள். 


உங்கள் மீது வைக்கப்படுகின்ற அதியுச்ச விமர்சனம் நீங்கள் புலிகளின் போராட்டம் ஓய்ந்த பின்னர் எவ்வகையான அரசியல் நிலைப்பாட்டை எடுத்தீர்கள் என்பதே.


பிரதான குற்றச்சாட்டு:
2009 ஆம் ஆண்டுக்கு பின் நடந்து பொறிமுறைகள் உருப்படியாக இல்லை என்பதே அதாவது நீங்கள் போராட்டத்தின் பின்பு முக்கியத்துவம் அளித்து, அளிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் ஆக இருந்தது,


    அவர்களுடைய தொழில் மற்றும் தொழிலாளர்களுக்கான உடனடித் தீர்வுகளை ஆராய்ந்து கலையை செய்து     தீர்வுகளை பெற்றுக் கொடுத்து அதற்கு அவர்களுடைய மண்சார்ந்த உழவுத் தொழில் ,மீன்பிடி சிறு     கைத்தொழில்கள் அடங்கும்.


    அந்த மக்களின் சுகாதார மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு விரைவான கட்டமைப்பை     அமைக்காமல் விட்டது.


    அவர்களுடைய கல்வி சம்பந்தமான தேவைகள் கல்வி,கல்வி கற்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்தி     கொடுக்காமல் விட்டது.


    அவசர வீடமைப்புத் திட்டங்களை ஏன் அல்லது உங்களால் பரிந்துரைக்கப்பட வேண்டி இருந்த வீட்டு     சேவைகள் அல்லது குடியிருப்பு சம்பந்தமான திட்டங்களை நீங்கள் உருவாக்கவில்லை.


    போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தெளிவான கட்டுமானங்களையும்

    அதாவது அவர்களுடைய நிலங்களை பெற்றுக்கொள்ளுதல் அல்லது மீள் குடியேற்றங்கள் , குடியேறுதல்     சம்பந்தமான ஒரு தெளிவான கட்டமைப்பை உருவாக்கி வைத்துக் கொள்ளவில்லை அல்லது அதனை     எதிர்த்தரப்பு பரிந்துரைக்கவில்லை.


    உங்களுடைய தேவைகள் எதுவென்பதை உங்களால் புரிந்து கொள்ளாமல் விட்டு அது பாரிய நெருக்கடியை     தமிழ் மக்களுக்கு உருவாக்கித் தந்தது, வெளிநாடுகள், வெளிநாடு துறை சார்ந்த     நிறுவனங்களுக்கு     உங்களுடைய தேவைகளை உங்களால் ஆணித்தரமாக எடுத்து வைக்க முடியவில்லை.


அதற்குரிய காரணங்களாக பெரும்பாலானவர்கள் எடுத்துரைப்பது,


    உங்களுக்கு அரசியல் வெற்றி அல்லது இருக்கை என்பதே இலக்கு.


    அல்லது ஸ்ரீலங்கா அரசோடு ஒரு மறைமுகமான இணங்கி கடந்து போதல். 


    அது ஸ்ரீலங்காவை வரும் நாட்களில் அல்லது கடந்து போன நாட்களில் வெளிநாட்டு அமைப்புகளில் இருந்து     வருகின்ற அச்சுறுத்தல்கள் அதாவது மனித உரிமைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் நலன் சார்ந்து போராடும்     அமைப்புகளை சாந்தப்படுத்துவது.


    உங்களை ஒரு அடையாளமாக காட்டிக்கொள்ள விட்டமை.


    இலங்கை தமிழர்களின் புனர்வாழ்வு அல்லது அவர்களின் நலனில் எள்ளளவும் அக்கறையற்ற மறைமுக     ஒடுக்குமுறைகளை தூண்ட நினைக்கின்ற இந்திய அரசோடு நட்போடு இருத்தல். 


அதன் பின்னணி கருதும்,சில எடுகோள்கள்:
     நீங்கள் திரு சுமந்திரன் அவர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள் வாங்கினீர்கள். திரு சுமந்திரனுக்கும் அரசியலுக்கும் அதாவது தமிழர் அரசியலுக்கும் மிகத் தொலைவு. நீங்கள் இந்தியாவின் அறிவுறுத்தலின்படி ராஜபக்ஷே களின் ஆணைப்படி திரு சுமந்திரனை தமிழ்தேசியகூட்டமைப்புக்கு கொண்டு வந்தீர்கள்.


    திரு கோட்டாபய ராஜபக்ச, திரு சுமந்திரன் அவர்கள் ( Madras University) மெட்ராஸ் யுனிவர்சிட்டி பழைய மாணவர்கள். அவர்களை ஒருசேர தங்களின் மேலாண்மையை தக்கவைப்பது இந்தியாவால் உயர்சாதி வகுப்பாக தங்களை அடையாளப்படுத்தும் ஒரு குழுவினர். அவர்களின் பரவல் தமிழ்நாட்டிலும் இந்திய மத்திய அரசிடம் இருந்துகொண்டு தமிழர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி ஒன்றுமில்லாமல் ஆக்கச் செய்துகொண்டிருப்பது அவர்களது வேலை. நடப்பதை தெளிவாக உங்களுக்கு  கூறுகின்றோம்.


    அடுத்து பின்னாளில் உங்களிடம் சேர்க்கையாக வந்து சேர்ந்தவர் திரு ஸ்ரீதரன் அவர்கள். 


அவர்கள் உங்களின் ஒரு இல்லா தன்மைக்காக காத்துக்கிடக்கும் விச கிருமிகள். நீங்கள் விட்டுச்செல்ல போகின்ற அந்த ஸ்ரீலங்கா, இந்திய அழு வருடிகள் மீண்டும் அவர்கள் எவ்வாறு தமிழரை மீண்டும் ஒரு இக்கட்டான அடிமைப்பட்ட தரத்துக்கு, தளத்துக்கு கொண்டு செல்லப் போகிறார்கள் என்பதை கவனமாக கவனியுங்கள்.


    போராட்டத்தின் ஓய்வுக்குப் பின் புலன்பெயர் தமிழர்களையும் உள்நாட்டு தமிழர்களையும் ஏதோ ஒரு விதத்தில் கட்டுப்படுத்திய கவர்ந்த ஊடகமாக திரு சிறிதரனின் சகோதரன் , திரு குகன் அவர்களின் தனிப்பட்ட ஊடகங்கள் பெரும் பங்கு ஆற்றின.
             அதை பின்னாளில் ஐபிசி (IBC)  என்கின்ற குழுமம் அதாவது திரு பாஸ்கரன் என்பவரால் கொள்வனவு செய்யப்படுகிறது. அது போராட்டத்தின் பின் இலகுவாக இலங்கையிலும் கால் பதிக்கிறது. இலங்கை அரசின் பூரண ஒத்துழைப்போடு அது பல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. எப்பொழுதுமே ஊடகங்களை தடை செய்கின்ற அரசு, ஐபிசி (IBC) எந்தத் தடையும் கொடுக்கவில்லை அதற்கு மாறாக, அவர் அறிவுறுத்தப்பட்டது போல் ஒரு மனிதனுடைய எவ்வளவு தனிப்பட்ட தகவல்கள், ஒரு சமுதாயம் சார்ந்து இரகசியமாக பேணப்படும் அதனைத் தாண்டி அங்கே பாதிக்கப்பட்டவர்களின், தந்திரமாக உதவி என்ற பெயரின் அடிப்படையில் தனது ஊடகங்களில் பிரசுரித்தார்.


    அவர்களுக்குத் (IBC) தெரியும் ஒரு தனி மனிதனுடைய ரகசியமும், வாழ்க்கை முறையும் எவ்வாறு பாதுகாக்க பட வேண்டும் என்பது. அவர்கள் உதவி செய்ய எத்தனையோ படிமுறைகள், வழிமுறைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். 


இவர்கள் வேலை கூட்டாகச் சேர்ந்து தகவல்களை சேகரித்து இந்திய, இலங்கை அரசுகளுக்கு அல்லது கொள்கை வகுப்பாளர்களுக்கு அந்தப் பேதை மனிதர்களின் இயலாமையை தெரியப்படுத்தி விடுதல். அதன்பால் கிடைக்கின்ற தகவல்களை வைத்து, தங்களுக்கான கொள்கைகளை வகுத்து தமிழர்களின் அரசியல்  இருப்பை தகமை படுத்துதல்.


உங்களிடம் தயவாக கூறுவது நீங்கள் அரசியலில் ஓய்வு எடுக்கும் காலம் வந்துவிட்டது. தமிழர்கள்  தங்களுடைய அரசியல் பிரதிநிதிகள் யார் என்பதை தாங்களாகவே உணர்வார்கள். தயவுசெய்து நீங்கள் ஓய்வாக இருங்கள்.
நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, ஓய்வாகத்தானே பல காலமாக இருக்கின்றார். மேலும், எப்ப அவரும் கூட்டமைப்பும் சொந்தமாக சிந்தித்து வேலை செய்தவர்கள்?

spacer.png

 


spacer.png

spacer.png

spacer.png


spacer.png

spacer.png

 

 

Link to comment
Share on other sites

 

Quote

நம்பிக்கையை இழக்காதீர்கள்! உரிமையை வென்றெடுப்போம்!! - சித்திரைப் புத்தாண்டில் சம்பந்தன்.!

 

வருச பிறப்பு நாளில் கடுப்பு ஏத்திரிங்கள் மை லார்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இவர்ர கருத்துக்கு பதில் எழுதுவர்களை நிநைக்த்தான் கடுப்பு ஏறுது மை லார்ட்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு துடப்ப கட்டையை TNA  சார்பில் தேர்தலில் நிக்க வைத்தாலும் வெல்லும் என்று இன்னும் கனவில் இருக்கிறார் போல் உள்ளது . ஒரு ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்களை இவ்வளவு இழிவாக முட்டாள்கள் என  சிங்கள கட்சிகள்  கூட எண்ணியதில்லை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

வருச பிறப்பு நாளில் கடுப்பு ஏத்திரிங்கள் மை லார்ட்.

என்னாது ....உங்களுக்கே கடுப்பாக இருக்குதோ, 
ஐயாவிற்கு  இதைவிடகேவலமான,வெட்கக்கேடான விடையமுண்டோ, கூத்தாடிகள் கூத்தைப்பார்த்து  கோ.ப.செக்களே கடுப்பாகுறினம்  

10 hours ago, கிருபன் said:

ஐயா, ஓய்வாகத்தானே பல காலமாக இருக்கின்றார். மேலும், எப்ப அவரும் கூட்டமைப்பும் சொந்தமாக சிந்தித்து வேலை செய்தவர்கள்?

என்ன கிருபண்ணை 
இப்படி ஆயிட்டீங்கோ , ஐயா முன்னோக்கி பாயப்போறார் என்று நீங்க காட்டிய பில்டப்பை பார்த்து நாங்கள் பயந்து நடுநடுங்கிபோய் கிடக்க, ஐயாவோ பழைய சாண(ணி)க்கிய தனத்தை மீண்டும் கிளறி உங்களுக்கும் பிரஷர் எத்திறார் போல, 

ஐயா எம காதகன் அவர் போவதற்கு முன் கனபேருக்கு பிரஷர் சூட்அப் பண்ணி முன்னமே அனுப்பிவைத்துவிட்டுதான் பெட்டியை காட்டுவார் போல கிடக்கு       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

என்ன கிருபண்ணை 
இப்படி ஆயிட்டீங்கோ , ஐயா முன்னோக்கி பாயப்போறார் என்று நீங்க காட்டிய பில்டப்பை பார்த்து நாங்கள் பயந்து நடுநடுங்கிபோய் கிடக்க, ஐயாவோ பழைய சாண(ணி)க்கிய தனத்தை மீண்டும் கிளறி உங்களுக்கும் பிரஷர் எத்திறார் போல, 

ஐயா எம காதகன் அவர் போவதற்கு முன் கனபேருக்கு பிரஷர் சூட்அப் பண்ணி முன்னமே அனுப்பிவைத்துவிட்டுதான் பெட்டியை காட்டுவார் போல கிடக்கு

ஐயாவையோ, கூட்டமைப்பையோ ஒரு நாளும் நம்பியதில்லை. 😀

ஆனால், கூட்டமைப்பை விட மற்றவர்கள் (கஜேன்&கஜன், விக்கியர், புள்ளையான் எக்ஸட்ரா) இன்னும் ஆபத்தானவர்கள்! 

மொத்தத்தில் தூரநோக்கில் சிந்தித்து செயற்படுபவர்கள் இப்போதைய அரசியல் தலைமைகளில் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

மொத்தத்தில் தூரநோக்கில் சிந்தித்து செயற்படுபவர்கள் இப்போதைய அரசியல் தலைமைகளில் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு!

Vadivelu How Do IDell U GIF - Vadivelu HowDoIDellU Tamil - Discover & Share  GIFs | Funny gif, Comedy memes, Cute gif

கொஞ்சம் ஓவரா தெரியல்லைசாமி உங்களுக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் ஓவரா தெரியல்லைசாமி உங்களுக்கே

கண் முன் அநீதியும், அடக்குமுறைகளும் நிகழும் போது “இதனால் எனக்கு ஆபத்தில்லையே” என யோசிக்கும் ஒரு தலைமுறை வளர்ந்துவருவது உண்மைதான். ஆனால், அரசியல் ரீதியாக விழிப்புணர்வு கொண்டுள்ள இளைஞர்களில் இருந்து சரியானவர்கள் வருவார்கள்.  இப்போது முதியோர்களாக இருக்கும் தலைவர்கள், அடுத்த நிலை தலைவர்களையோ, அல்லது இளைஞர்களையோ வளர்ப்பதாகத் தெரியவில்லை. அப்படி யாராவது வளர வெளிக்கிட்டாலும் தமது இருப்புக்கு ஆபத்து என்று ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு சங்கிலித் தொடர்ச்சியான தலைமை இல்லாததால், இந்த முதியோர்களின் காலம் முடியும்போது திறமையுள்ளவர்கள் தலைவர்கள் ஆவார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

கண் முன் அநீதியும், அடக்குமுறைகளும் நிகழும் போது “இதனால் எனக்கு ஆபத்தில்லையே” என யோசிக்கும் ஒரு தலைமுறை வளர்ந்துவருவது உண்மைதான். ஆனால், அரசியல் ரீதியாக விழிப்புணர்வு கொண்டுள்ள இளைஞர்களில் இருந்து சரியானவர்கள் வருவார்கள்.  இப்போது முதியோர்களாக இருக்கும் தலைவர்கள், அடுத்த நிலை தலைவர்களையோ, அல்லது இளைஞர்களையோ வளர்ப்பதாகத் தெரியவில்லை. அப்படி யாராவது வளர வெளிக்கிட்டாலும் தமது இருப்புக்கு ஆபத்து என்று ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு சங்கிலித் தொடர்ச்சியான தலைமை இல்லாததால், இந்த முதியோர்களின் காலம் முடியும்போது திறமையுள்ளவர்கள் தலைவர்கள் ஆவார்கள்!

இலவு காத்த கிளி பழமொழி தான் எனக்கு நியாபகம் வருகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

ஒரு துடப்ப கட்டையை TNA  சார்பில் தேர்தலில் நிக்க வைத்தாலும் வெல்லும் என்று இன்னும் கனவில் இருக்கிறார் போல் உள்ளது . ஒரு ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்களை இவ்வளவு இழிவாக முட்டாள்கள் என  சிங்கள கட்சிகள்  கூட எண்ணியதில்லை . 

ஆனால் தமிழருக்கு அதை விட வேறு வழி இல்லை இதுவரை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

சரி தீபாவழிக்கு பார்ப்போம்.விடுங்க.

ஐயா தீபாவளிக்கு வாயே திறக்க மாட்டாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ஐயா தீபாவளிக்கு வாயே திறக்க மாட்டாரே.

வருடம் வருடம் வாறதாலை எந்த தீபாவளி என்று கொஞ்சம் தடுமாற்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

ஐயா, ஓய்வாகத்தானே பல காலமாக இருக்கின்றார். மேலும், எப்ப அவரும் கூட்டமைப்பும் சொந்தமாக சிந்தித்து வேலை செய்தவர்கள்?

spacer.png

 


spacer.png

spacer.png

spacer.png


spacer.png

spacer.png

 

 

நன்றி கிருபா,

என்னால்  படங்களை இணைக்க முடியவில்லை. உங்களுடைய நிர்வாகம் அதற்குரிய பிரிவிலிஜ் (privilege) தரவில்லை.

21 hours ago, பெருமாள் said:

ஒரு துடப்ப கட்டையை TNA  சார்பில் தேர்தலில் நிக்க வைத்தாலும் வெல்லும் என்று இன்னும் கனவில் இருக்கிறார் போல் உள்ளது . ஒரு ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்களை இவ்வளவு இழிவாக முட்டாள்கள் என  சிங்கள கட்சிகள்  கூட எண்ணியதில்லை . 

அவர்களின் நோக்கம் TNA என்பது முழுக்க முழுக்க தமிழரசுக் கட்சியினால் ஆளப்பட வேண்டும். இதர கட்சிகளும் தமிழரசுக் கட்சியுடன் ஒட்டியிருக்க வேண்டும் என்ற ஒரு வரையறை செய்யப்படாத சண்டித்தனம் செய்வதாக அறிந்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

ஆனால் தமிழருக்கு அதை விட வேறு வழி இல்லை இதுவரை??

அதுதான் நாங்கள் எல்லாரும் கூட்டாக சேர்ந்து விடுகின்ற ஒரு மாபெரும் தப்பு, எல்லோரும் ஓரணியில் ஒத்த கருத்துடன் அவர்களுக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் சற்று சிந்திப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

மொத்தத்தில் தூரநோக்கில் சிந்தித்து செயற்படுபவர்கள் இப்போதைய அரசியல் தலைமைகளில் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு!

அம்பிகா அன்ரி வடிவில் என்று சொல்லாமல் சொல்லுறீங்கோ ....
அன்ரியோட பல்லு கொஞ்சம் எடுப்பாகவும் மூக்கு கொஞ்சம் புடைப்பாக இருப்பதாலும் நிச்சயம் தமிழ் மக்களுக்கு தீர்வு உறுதி   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

அம்பிகா அன்ரி வடிவில் என்று சொல்லாமல் சொல்லுறீங்கோ ....
அன்ரியோட பல்லு கொஞ்சம் எடுப்பாகவும் மூக்கு கொஞ்சம் புடைப்பாக இருப்பதாலும் நிச்சயம் தமிழ் மக்களுக்கு தீர்வு உறுதி   

அரசியலில் தமிழ் பெண்கள் ஈடுபட முயல்வது எவ்வளவு கஷ்டம் என்பதை கடந்த பொதுத்தேர்தலில் பார்த்தோமே. சமூகவலைத் தளங்களில் யாரும் யாரையும் சேறடிக்கலாம் என்ற நிலை இருக்கும்போது, பெண்களின் நிலை இன்னும் பரிதாபம்தான். ஆண்களின் மூக்கையோ, தொந்தியையோ, வழுக்கையையோ யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் பெண் என்றால், போடும் உடுப்பு, கையில் வைத்திருக்கும் ஹாண்ட்பாக், மேக்கப், பக்கத்தில் நிற்பவர் என்று எல்லாவற்றிலும் கவனம் வந்துசேரும். 

அம்பிகா அன்ரி இது எல்லாத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதிர்காலத்தில் நல்ல தலைவராகவும் வரலாம்😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.