Jump to content

புதுச்சேரி: முதல்வர் பதவி யாருக்கு? மூன்று வியூகங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரி: முதல்வர் பதவி யாருக்கு? மூன்று வியூகங்கள்!

 

spacer.png

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டமன்றமும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தலைச் சந்தித்து விட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கடைசி ஒரு மாதத்தில் அதிரடியாகப் பல மாற்றங்கள் அரங்கேறின.

திமுக காங்கிரஸ் கூட்டணியாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த நிலையில் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக திடீரென பொங்கியது திமுக. தற்போதைய அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் புதுச்சேரிக்கு வந்து திமுகவின் ஆட்சி அமைப்போம் என்று நிர்வாகிகள் கூட்டத்தைப் பிரமாண்டமாக நடத்திப் பேசினார்.

இந்த நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார் முதல்வர் நாராயணசாமி.

இந்த அதிரடிகள் அரங்கேறிய நிலையில்தான் புதுச்சேரியில் தேர்தல் வந்தது.

காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் உருவாகாமல் தடுப்பதோடு பாஜக ஆட்சியை எப்படியாவது புதுச்சேரியில் நிறுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக வேலை செய்கிறது பாஜக.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் காங்கிரஸ் ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த நமச்சிவாயம் பாஜகவுக்குச் சென்றார். மேலும் பல காங்கிரஸ் பிரமுகர்கள் பாஜகவுக்குத் தாவினார்கள்.

ஒருவழியாக அதிமுக - பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து புதுச்சேரியில் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தன. என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் பாஜக 9 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணியில் இருக்கும் பாமக முதலில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிறகு வேட்பாளர்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.

திமுக கூட்டணியில் திமுக 14 தொகுதிகள், காங்கிரஸ் 14 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் தலா ஒரு தொகுதி என மொத்தம் 30 தொகுதிகளில் போட்டியிட்டனர்.

ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் முகாமிட்டிருக்கிறார். புதுச்சேரி பாஜகவின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும்

சரன்லால் குரானா, மத்திய அமைச்சர் மெக்வால் ஆகியோரும் புதுச்சேரியிலேயே இருந்து தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்கிற தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.

பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, தேர்தல் முடிந்த பிறகு மத்திய அரசும் பாஜகவும் நடத்திய ஆய்வுகளின் முடிவில் தங்கள் அணிக்கு சாதகமான முடிவுகளே வரும் என பாஜக நம்பிக்கையாக இருக்கிறது.

அதாவது என்.ஆர்.காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக - பாஜக ஆகிய கட்சிகளும் ஓரளவு வெற்றி பெறும் என்பதுதான் பாஜக மேலிடத்துக்குக் கிடைத்த அதிகாரபூர்வக் கணிப்பு. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களும் அதிமுகவுக்கு 4 இடங்களும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் கிடைக்கும் என்பது புதுச்சேரி பாஜக பொறுப்பாளர்கள் நடத்திய பல்வேறு தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்குக் கிடைத்துள்ள முடிவு.

இதனால் நம்பிக்கையோடு இருக்கும் பாஜக, அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதத்தில் தற்போது தீவிரமாகிவிட்டது.

கூட்டணியின் அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிடுவதால் ஏற்கனவே முதல்வராகவும் இருந்திருப்பதால் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தன் தலைமையில்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற பிடிவாதத்தில் இருக்கிறார். இதுபற்றி அவர் பாஜக தலைவர்களுடனும் பேசிவருகிறார்.

தேர்தலுக்கு முன் காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பிரச்சாரக் கூட்டத்தில் '2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது நமச்சிவாயம் தலைமையில்தான் ஆட்சி அமைந்திருக்க வேண்டும். ஆனால், நாராயணசாமி டெல்லி சென்று, காந்தி குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் பதவியைத் தனக்குக் குறுக்குவழிகள் மூலம் பெற்றுவிட்டார்' என்று பேசினார். இதன் மூலம் பாஜக அப்போதே நமச்சிவாயத்துக்குத்தான் முதல்வர் பதவி தருவோம் எனக் குறிப்பாக தெரிவித்ததை என்.ரங்கசாமி உணர்ந்துகொண்டார்.

தேர்தலுக்கு முன்னர் ரங்கசாமியைப் பலவழிகளிலும் பேசி கூட்டணியில் நீடிக்க வைத்தது பாஜக.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய இந்த ஒரு மாதக் காலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி முதல்வராக ஆவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். நமச்சிவாயத்தின் சின்ன மாமனார்தான் ரங்கசாமி. இந்த அடிப்படையில் நமச்சிவாயம் குடும்பத்தினரோடு ரங்கசாமி குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் பேசி முதல்வர் பதவியை டேர்ம் வைத்து பகிர்ந்துகொள்ளலாமா என்பது வரைக்கும் ஆலோசனை நடத்தி உள்ளார்கள்.

ஆனால் அமித் ஷாவிடமிருந்து புதுச்சேரி பாஜக பொறுப்பாளர்களுக்கு இடப்பட்டிருக்கும் உத்தரவு என்னவெனில் பாஜக எவ்வளவு குறைவான இடங்களைப் பெற்றிருந்தாலும் புதுச்சேரியில் பாஜக முதல்வர்தான் இருக்க வேண்டும் என்பதுதான். இதனடிப்படையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் தன்னுடைய கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறது பாஜக. அவர்களுக்கான தேர்தல் செலவையும் பாஜகதான் ஏற்றிருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்து ரங்கசாமி முதல்வராக உரிமை கோரும் பட்சத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை அதிகபட்சமாக பாஜகவுக்கு இழுத்து ரங்கசாமிக்கு நெருக்கடியை உண்டாக்கி பாஜகவைச் சேர்ந்தவரையே முதல்வராக உட்கார வைப்பது என்பதுதான் அமித் ஷாவின் திட்டம்.

அதுமட்டுமல்ல... இந்தத் தேர்தலில் புதுச்சேரி திமுக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் பாஜகவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாலும் திமுக எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் இழுப்பது என்ற ஏற்பாடுகளுக்கும் தயாராகி வருகிறார்கள் புதுச்சேரி பாஜக பொறுப்பாளர்கள்.

இன்னொரு பக்கம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வேறுவிதமான திட்டங்கள் தயாராக இருக்கின்றன. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக இடங்கள் கிடைக்கும் என்ற கணிப்பு பரவலாக புதுச்சேரியில் இருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படலாம் என திமுக - காங்கிரஸார் ஒரு திட்டம் வகுத்துள்ளனர். அதாவது தேர்தலுக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தால்... அக்காட்சியை பாஜகவின் நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் வகையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் ரங்கசாமிக்கு ஆதரவளித்து அவரை பாஜகவின் ஆதரவு தேவை இல்லாமல் முதல்வர் ஆக்குவது... இதன்மூலம் புதுச்சேரி அரசியலில் இருந்து பாஜகவை விரட்டுவது என்ற திட்டத்தில் திமுக - காங்கிரஸ் பிரமுகர்களிடம் ஒரு ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய ஆட்சி கையில் இருக்கும் தைரியத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் பாஜக எந்தக் கட்சியை வேண்டுமானாலும் துண்டாடலாம் என்ற நிலை ஏற்பட சாத்தியம் அதிகம் உள்ளது. இதைத் தடுப்பதற்கு தேர்தலுக்கு முன் இருந்த அரசியல் சூழலுக்கு எதிராக... தேர்தலுக்குப் பிறகு புதிய கூட்டணிகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் புதுச்சேரி அரசியலில் ஏற்பட்டுள்ளது.

வணங்காமுடி

  •  

 

https://minnambalam.com/politics/2021/04/14/32/puducherry-new-cm-who-amitsha-rangasamy-narayasamamy-dmk-plans

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.