Jump to content

யாழ்ப்பாணத்து முறையில் புளிக்கஞ்சி செய்து சுவைத்து பாருங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புளிக் கஞ்சியை.... இறால் போடாமல், இலங்கையில் செய்து சாப்பிட்டுள்ளோம்.
மிகவும், நன்றாக இருக்கும். நினைவூட்டியமைக்கு நன்றி... நிலாமதி  அக்கா. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த புளிக் கஞ்சியை.... இறால் போடாமல், இலங்கையில் செய்து சாப்பிட்டுள்ளோம்.
மிகவும், நன்றாக இருக்கும். நினைவூட்டியமைக்கு நன்றி... நிலாமதி  அக்கா. 👍

நான் இன்னும் ஒடியல் கூழ் கூட குடிக்கல என்றால் நம்பூவீர்களா ? சிறி ஐயா யாராவது ஊருக்கு வந்தால் செய்து தாங்கோ ஒரு தடவையேனும் குடிக்கணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் இன்னும் ஒடியல் கூழ் கூட குடிக்கல என்றால் நம்பூவீர்களா ? சிறி ஐயா யாராவது ஊருக்கு வந்தால் செய்து தாங்கோ ஒரு தடவையேனும் குடிக்கணும் 

என்ன முனிவர் ஜீ.... இன்னும் ஒடியல் கூழ்  குடிக்க வில்லையா??? 🤔
பாதி வாழ்க்கையை... வீணாக்கி விட்டீர்களே.

ஒடியல் கூழ் ,  புளிக் கஞ்சி இரண்டையும்... ஒரு முறையாவது குடித்து பாருங்கள்.
இரண்டும் வெவ்வேறு சுவை என்றாலும்... ஒரு முறை குடித்தால்...
வருடங்கள் பல கடந்தாலும்... அதன் சுவையை மறக்க மாட்டீர்கள். ❤️

கொரோனாவால்.... ஊருக்கு நாங்கள் வர, 
இன்னும் எவ்வளவு காலங்கள் எடுக்குதோ  தெரியவில்லை.

கொழும்பு வெள்ளவத்தை காலி வீதியில் உள்ள...  
"கற்பகம்"  பனம் பொருள் அபிவிருத்தி கடையில்....
முன்பு... விற்பனை செய்தவர்கள். இப்போ உள்ளதோ.. தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

என்ன முனிவர் ஜீ.... இன்னும் ஒடியல் கூழ்  குடிக்க வில்லையா??? 🤔
பாதி வாழ்க்கையை... வீணாக்கி விட்டீர்களே.

ஒடியல் கூழ் ,  புளிக் கஞ்சி இரண்டையும்... ஒரு முறையாவது குடித்து பாருங்கள்.
இரண்டும் வெவ்வேறு சுவை என்றாலும்... ஒரு முறை குடித்தால்...
வருடங்கள் பல கடந்தாலும்... அதன் சுவையை மறக்க மாட்டீர்கள். ❤️

கொரோனாவால்.... ஊருக்கு நாங்கள் வர, 
இன்னும் எவ்வளவு காலங்கள் எடுக்குதோ  தெரியவில்லை.

கொழும்பு வெள்ளவத்தை காலி வீதியில் உள்ள...  
"கற்பகம்"  பனம் பொருள் அபிவிருத்தி கடையில்....
முன்பு... விற்பனை செய்தவர்கள். இப்போ உள்ளதோ.. தெரியவில்லை.

இதைத்தான் சுமே அக்காவிடமும் சொன்னேன் நம்புகிறார்கள் இல்லை நான் இதுவரை அந்த கூழ் புளிக்கஞ்சி குடித்தது இல்லை இங்கயும் யாழ்ப்பாண சமையல்கள் பெரிதாக கிடைப்பதில்லை காத்தான் குடி சூப் மட்டும்தான் கிடைக்கும் 

நான் கூழ் குடிக்கல என்று சொல்ல வெட் கமாகவும் இருக்கு யாழ் இணையத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இதைத்தான் சுமே அக்காவிடமும் சொன்னேன் நம்புகிறார்கள் இல்லை நான் இதுவரை அந்த கூழ் புளிக்கஞ்சி குடித்தது இல்லை இங்கயும் யாழ்ப்பாண சமையல்கள் பெரிதாக கிடைப்பதில்லை காத்தான் குடி சூப் மட்டும்தான் கிடைக்கும் 

நான் கூழ் குடிக்கல என்று சொல்ல வெட் கமாகவும் இருக்கு யாழ் இணையத்தில் 

அதென்ன... காத்தான்குடி சூப்.
சிலவேளை... ஆட்டுக்கால்,  போட்டு செய்யும்... இரசத்தை சொல்கிறீர்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அதென்ன... காத்தான்குடி சூப்.
சிலவேளை... ஆட்டுக்கால்,  போட்டு செய்யும்... இரசத்தை சொல்கிறீர்கள் போலுள்ளது.

அது ஆட்டுக்கால் இல்லை மாட்டுக்கால் சிறி அண்ணை  ரசம் போலவே இருக்கும் உள்ள மரக்கறிகளை வெட்டிப்போட்டு செய்வார்கள் சுவையும் நன்றாக இருக்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது.பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் இன்னும் ஒடியல் கூழ் கூட குடிக்கல என்றால் நம்பூவீர்களா ? சிறி ஐயா யாராவது ஊருக்கு வந்தால் செய்து தாங்கோ ஒரு தடவையேனும் குடிக்கணும் 

இதில் வெட்கப்பட ஒன்றுமே கிடையாது தனி......நான்கூட தவளை,நத்தை, பாம்பு சாப்பிட்டததில்லை. அதுக்காக நான் வெட்கப்பட்டதில்லை. ஒடியல் கூல் செய்வது மிக சுலபம்.உங்கள் ஊரிலேயே அத்தனை சாமான்களும் கிடைக்கும்.அதிலும் தரமான கடலுணவு நிறைய கிடைக்கும்.ஒடியல் மா, பெரிய மீன்தலை,நண்டு,பிலாக்கொட்டை போன்றவை மிக முக்கியம். குடிக்கிறதுக்கு அக்கம்பக்கத்தில் ஐஞ்சாறு பேர், குஞ்சு குருமான்களையும் (பொடிப்பிள்ளைகள்)கூட்டு சேர்த்து கொள்ளவும்.பெரிய பிலாவிலைகள் பொறுக்கி கோலி ஓரத்தை ஈர்க்குகளால் குத்தி வைக்கவும்.அல்லது வடலி ஓலையில் சிறிய பிளா கோலி வைக்கவும். மூக்கால் ஒழுகுவதை துடைக்க பழைய சரத்தை கிழித்து தயாராய் வைக்கவும். முற்றத்தில் வட்டமாக இருந்து நிலவைப் பார்த்துக்கொண்டு பகிடிகதைகள் கதைத்துக்கொண்டு  குடிக்க அந்தமாதிரி இருக்கும். கூழ்குடிக்க இன்றே தயாராகவும். இன்னும் ஆறேழுநாளில் பௌர்ணமி வந்திடும். மறக்காமல் பிள்ளையை அப்பம்மாவிடம் குடுத்து விடவும்......!   👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அது ஆட்டுக்கால் இல்லை மாட்டுக்கால் சிறி அண்ணை  ரசம் போலவே இருக்கும் உள்ள மரக்கறிகளை வெட்டிப்போட்டு செய்வார்கள் சுவையும் நன்றாக இருக்கும்  

இதில் யாழ்ப்பணிகளுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்வதில் நான் மனமுவந்து ஆமோதிக்கிறேன்.

நானும்  யாழ்ப்பாணி தான்.

ஆனால், மாட்டு இறைச்சியின் பாவிப்பு பெரும்பாலும் யாழ்ப்பணிகளுக்கு தெரியாது. அனறைய இளம் வட்டத்தினர், மாட்டிறைச்சி மொக்கன் கடை அளவு மட்டுமே தெரியும்.

அப்படியே, ஆட்டிலும் எப்படி முழு பகுதியையும் சமைப்பது  என்று தெரியாது.

இது பெரும்பாலும் மாறவில்லை என்றே நினைக்கிறன்.

ஆனால், கிழக்கு, முக்கியமாக திருமலையில் தமிழரின் உணவு பழக்கவழக்கம் மாறி விட்டது.

திருமலையில் பல விதமான கடைகள், இறைச்சி கடைகள் வைத்திருக்கும் முஸ்லிம்களுடன் பழக வேண்டி வந்தது. அவர்கள் சொல்வது, தமிழர்களே தமது வியாபார வருமானத்தின் பெரும் பகுதியை தருவது, முஸ்லிம்களோ, சிங்களவர்களோ அல்ல.    

ஆம், திருமக்கலையில் மாட்டிறைச்சி விபரத்தில் என்பதை குறிப்பிட மறந்து விட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நன்றாக இருக்கின்றது.பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!

இதில் வெட்கப்பட ஒன்றுமே கிடையாது தனி......நான்கூட தவளை,நத்தை, பாம்பு சாப்பிட்டததில்லை. அதுக்காக நான் வெட்கப்பட்டதில்லை. ஒடியல் கூல் செய்வது மிக சுலபம்.உங்கள் ஊரிலேயே அத்தனை சாமான்களும் கிடைக்கும்.அதிலும் தரமான கடலுணவு நிறைய கிடைக்கும்.ஒடியல் மா, பெரிய மீன்தலை,நண்டு,பிலாக்கொட்டை போன்றவை மிக முக்கியம். குடிக்கிறதுக்கு அக்கம்பக்கத்தில் ஐஞ்சாறு பேர், குஞ்சு குருமான்களையும் (பொடிப்பிள்ளைகள்)கூட்டு சேர்த்து கொள்ளவும்.பெரிய பிலாவிலைகள் பொறுக்கி கோலி ஓரத்தை ஈர்க்குகளால் குத்தி வைக்கவும்.அல்லது வடலி ஓலையில் சிறிய பிளா கோலி வைக்கவும். மூக்கால் ஒழுகுவதை துடைக்க பழைய சரத்தை கிழித்து தயாராய் வைக்கவும். முற்றத்தில் வட்டமாக இருந்து நிலவைப் பார்த்துக்கொண்டு பகிடிகதைகள் கதைத்துக்கொண்டு  குடிக்க அந்தமாதிரி இருக்கும். கூழ்குடிக்க இன்றே தயாராகவும். இன்னும் ஆறேழுநாளில் பௌர்ணமி வந்திடும். மறக்காமல் பிள்ளையை அப்பம்மாவிடம் குடுத்து விடவும்......!   👍

 

என்னதான் நாங்கள் இங்கு செய்தாலும் ( வாய்ப்பு குறைவு ) யாழ்ப்பாண மண்ணில் அந்த பிளாவில் குடிக்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கு சுவி அண்ணை 

5 hours ago, Kadancha said:

இதில் யாழ்ப்பணிகளுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்வதில் நான் மனமுவந்து ஆமோதிக்கிறேன்.

நானும்  யாழ்ப்பாணி தான்.

ஆனால், மாட்டு இறைச்சியின் பாவிப்பு பெரும்பாலும் யாழ்ப்பணிகளுக்கு தெரியாது. அனறைய இளம் வட்டத்தினர், மாட்டிறைச்சி மொக்கன் கடை அளவு மட்டுமே தெரியும்.

அப்படியே, ஆட்டிலும் எப்படி முழு பகுதியையும் சமைப்பது  என்று தெரியாது.

இது பெரும்பாலும் மாறவில்லை என்றே நினைக்கிறன்.

ஆனால், கிழக்கு, முக்கியமாக திருமலையில் தமிழரின் உணவு பழக்கவழக்கம் மாறி விட்டது.

திருமலையில் பல விதமான கடைகள், இறைச்சி கடைகள் வைத்திருக்கும் முஸ்லிம்களுடன் பழக வேண்டி வந்தது. அவர்கள் சொல்வது, தமிழர்களே தமது வியாபார வருமானத்தின் பெரும் பகுதியை தருவது, முஸ்லிம்களோ, சிங்களவர்களோ அல்ல.    

ஆம், திருமக்கலையில் மாட்டிறைச்சி விபரத்தில் என்பதை குறிப்பிட மறந்து விட்டேன். 

ஓம் ஆடு , மாடை விதம் விதமாக சமைப்பார்கள்  தற்போது நோன்பு காலம் வாசனையும் உணவுகளின் கண்காட்சியும் களை கட்டுகிறது , இறைச்சி கட்லட், இறைச்சி சம்சா, இறைச்சி ரோல்ஸ், இறைச்சி றொட்டி , அதுமட்டும் இல்லாமல் இந்தியர்களை கொண்டு இந்திய சமையல் அனைத்தையும் செய்து  காசு பார்க்கிறார்கள் . 

அண்மையில்  ஓர் கடைக்கு போனேன் கடையில் வேலை செய்பவர் ஓர் கிந்தி பேசும் வட நாட்டுக்காரர் நாண் றொட்டி சுட்ட கோழியும் செய்கிரார்கள் நமக்கு தெரிந்த கிந்திய பேசினேன் அந்த மனுசன் சந்தோசமாக அவரின் வேலையை விபரித்தார் என்றால் பாருங்கோவன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிலாமதி said:

 

ஐயோ பாக்கவே வாயூறுது. இவங்கடை கண்டறியாத சாப்பாடுகளை சாப்பிட வெளிக்கிட்டு ஊர்வாசனையே மறந்து போச்சுது.ஆனால் நாங்கள் புளிகஞ்சிக்கு மச்சம் பாவிக்கிறேல்லை. ஆனால் அதின்ரை சுவை சொல்லி வேலையில்லை.நாக்கை ஒரு பிரட்டு பிரட்டியெடுக்கும்.

இணைப்பிற்கும் நினைவூட்டலுக்கும் நன்றி சகோதரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அண்மையில்  ஓர் கடைக்கு போனேன் கடையில் வேலை செய்பவர் ஓர் கிந்தி பேசும் வட நாட்டுக்காரர் நாண் றொட்டி சுட்ட கோழியும் செய்கிரார்கள் நமக்கு தெரிந்த கிந்திய பேசினேன் அந்த மனுசன் சந்தோசமாக அவரின் வேலையை விபரித்தார் என்றால் பாருங்கோவன்

ஐசீ! அப்ப நீங்க சிலோன்லை நிண்ட கிந்தி ஆமியளுக்கு வேலை செய்திருக்கிறீங்க??? அப்பவும் நான் யோசிச்சனான்.😂

மகா சனங்களே சிங்கன் வசமா மாட்டி 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 03:50, குமாரசாமி said:

ஐசீ! அப்ப நீங்க சிலோன்லை நிண்ட கிந்தி ஆமியளுக்கு வேலை செய்திருக்கிறீங்க??? அப்பவும் நான் யோசிச்சனான்.😂

மகா சனங்களே சிங்கன் வசமா மாட்டி 😁

அப்ப வயசு 6 கூப்பிட்டு றொட்டியும் ( சப்பாத்தியும் ) பாலும் கொடுப்பானுகள் நியாபம இருக்கு ஆனால் கிந்தி பழகியது மத்திய கிழக்கில் இருக்கும் போது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.