Jump to content

வரலாற்றை திரிபுபடுத்த முனையும் முன்னாள் ஆயுதக்குழு உறுப்பினர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

வரலாற்றை திரிபுபடுத்த முனையும் முன்னாள் ஆயுதக்குழு உறுப்பினர்கள்!

E59A4C32-29AB-4B2F-AA7E-ADF45958D60C.jpe

அஞ்ஞானி

ஒவ்வொரு இளைஞனும் தங்கள் போராட்டப் பங்களிப்பை வழங்க ஓவ்வொரு இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். தங்கள் தங்கள் இயக்கத்தினுள் என்ன நடந்தது என்பதை மறந்து புலிகளே மோசமானவர்கள் என நிறுவ முன்னாள் புளொட் மற்றும் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தலைகீழாக முயன்று வருகின்றனர். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வரலாறு தெரியாது தானே என்ற நம்பிக்கையில் தான் தங்கள் நடவடிக்கையில் இவர்கள் தீவிரமாக உள்ளனர்.
கடந்த 10 திகதி வெருகல் படுகொலை நினைவு நாள் என்ற பெயரில் சமூக அமைப்புகள் அதனை நடத்துவதாக விளம்பரப்படுத்தப்பட்டது.

1016B47A-3988-482B-922B-A94D8DABE387.jpe

முதலில் ஆயுத மோதல் என்பதற்கும் படுகொலை என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை இந்தப் புத்திஜீவிகளுக்கு. இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெற்று அங்கேயே விலகிக்கொண்ட முன்னாள் புளொட் இயக்க உறுப்பினரும் ,தற்போதைய கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைப்பீட விரிவுரையாளருமான களுதாவளையைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளை சீவரத்தினமும் (யோகன்) இவர்களில் ஒருவர். இவர் சார்ந்த இயக்கமான புளொட் மாலைதீவைத் தவிர வேறு எங்கும் சில மணிநேரம் கூட கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாறு இல்லை. ஆகையால் சமர் என்பது இவருக்குப் புரியாது.


வெருகல் ஆற்றின் இரு கரைகளிலும் இருந்து மோதிக்கொண்ட இருதரப்பினரின் கைகளிலும் ஆயுதம் இருந்தது. எந்த ஆயுதமும் உயிரைக் குடிக்கும் என்பது இந்த விரிவுரையாளருக்குத் தெரியாமல் போனது துரதிஷ்டமே. இரு தரப்பினருமே தங்களால் இயன்றவரை போராடினார்கள். காயங்கள் ஏற்பட்டன, உயிரிழப்பு ஏற்பட்டது. சரணடைந்த கருணா தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டார் சீவரத்தினம்.
எவ்வாறிருந்தாலும் இந்த முரண்பாட்டில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவது என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். அதனை மறுக்க முடியாது. ஆனால் சமூக அமைப்புக்களின் சார்பில் இந் நிகழ்வை நடத்துவதாகக் குறிப்பிட்ட விரிவுரையாளர் தனது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ரவீந்திரநாத் ,தம்பையா ,மாணவி தனுஷ்கோடி பிறேமினியின் உறவுகளின் துயர் பொருட்படுத்தத் தக்கவையல்ல என்ற முடிவுக்கு ஏன் வந்தார்? இது வரைக்கும் எங்காவது இவர்களை நினைவு கூரஏதாவது ஏற்பாட் டைச் செய்திராத இவர் நான் நடுநிலையுடன் பேச முயற்சிக்கின்றேன் என்பது சுத்த அபத்தம் .


இவர்களில் எவருமே ஆயுதம் தாங்கியவர்கள் அல்ல என்பது தனக்குத் தெரியாது என்பது போலவும் வெருகலில் கருணா தரப்பினர் ஆயுதமின்றி வெள்ளைக் கொடியுடன் தான் நின்றனர் என்ற மாதிரியும் நிரூபிக்க முயல்கிறார்.


இவருக்கு மனச்சாட்சி இருந்தால் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பிறேமினியின் இடத்தில் தனது மகளை ஒரு கணமேதும் வைத்துச் சிந்தித்திருப்பார்.


சுமார் 40 ஆயுத அமைப்புக்கள் தோன்றிய போதும் கிழக்கில் இருந்து எவையும் உருவாகவில்லை; அங்கிருந்து (வடக்கிலிருந்து) வந்த குழுக்களிலேயே இங்குள்ள தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டனர் என்பதன் மூலம் இந்த விரிவுரையாளர் வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறார்.
இரா. பரமதேவாவுக்கும் பிரபாகரனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பை ஆரம்பித்தார் பரமதேவா. துரதிஷ்டவசமாக இவரும் இவரைச் சேர்ந்த சிலரும் (நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்) கைதாக நேர்ந்தது. ஆனால் இவரோடு தொடர்புபட்ட பலர் அதே உணர்வுடன் இருந்தனர். உண்மையில் மட்டக்களப்பு சிறையுடைப்பின் முக்கிய பங்காளி இவர்தான். தப்பிச் செல்வதற்கான தோணிகள் முதலானவை முதற்கொண்டு இவரது தொடர்பினாலேயே சாத்தியமாகின. (ஆனால் உரிமை கோரியவை வேறு மூன்று இயக்கங்கள்) தான் விடுதலையாவதற்கு சில நாட்களே உள்ளன என்ற நிலையிலும் புலிகள் இயக்கத்தினரைக் கொண்டு செல்லும் பொறுப்புத்தானே ஏற்றதால் இவரும் சிறையிலிருந்து போகவேண்டி ஏற்பட்டது .


புலிகள் இயக்கத்திலேயே இணைவது என்பது இவரும் இவரது நண்பர் ரஞ்சனும் எடுத்த முடிவு (பொத்துவில் எம். பி கனகரத்தினத்தின் மகன் தான் ரஞ்சன். இயக்கப் பெயர் சைமன்)
அடுத்தது தமிழீழ கழுகுகள் படை .இந்த இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான ராஜ்மோகனை இந்த விரிவுரையாளர் முன்னர் அங்கம் வகித்த புளொட் இயக்கமே காணாமற் செய்தது.
மூன்றாவது தமிழீழ நாகபடை. இதன் நிறுவனர்கள் ஒட்டமாவடியைச் சேர்ந்தவர்களான ஜுனைதீன், தவ்பீக் , பதூர்தீன் (சுப்பையா லேன்) ஆகிய மூன்று முஸ்லீம் இளைஞர்களும் மற்றும் ஸ்ரீபத்மன் (புளியந்தீவு), கணேசமூர்த்தி பையா (மாமாங்கம்) ,சிமிட்டி தயா (புளியந்தீவு),இராசநாயகம் இராஜேந்திரன் (சின்னவன் – ஏறாவூர்), ஐயா – பையாவின் மருமகன் (மாமாங்கம் ), ஜூட் பத்மநாதன்( புளியந்தீவு ) , கண்ணன் (முகத்துவாரம்), சுபாஷ் (தாமரைக்கேணி )உள்ளிட்ட சிலர். இதில் ஜுனைதீனும் சுபாஷ்சும் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர் .


இந்த ஜுனைதீன்தான் முதல் முஸ்லீம் மாவீரர் நான்காவது ` ஈஸ்டன் குரூப்` என்றழைக்கப்பட்ட குழு. மட்டக்களப்பு கச்சேரிக்குள் விவசாயி களிடமிருந்து மீளப் பெறப்பட்ட வேட்டைத் துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள். இதனை கைப்பற்றிய இக் குழு தோணிகள் மூலமாக ஆற்று வழியாகக் கொண்டு சென்றது. குறிப்பிட்ட இலக்கை அடையமுன்னர் விடிந்து விட்டது. எனவே இதனை ஆற்றங்கரையோரமாகப் புதைத்தது. இந்த ஆயுதங்களை புளொட் அபகரித்தது. ஆயுதங்களை புளொட் திருடியதும்,கச்சேரிக்குள் புகுந்தோர் தேடப்பட்டதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து கொண்டனர்.


இக் குழுவில் கப்டன் கரன்( கல்லடி),கப்டன் முத்துசாமி (களுவாஞ்சிக்குடி),லெப் .மொட்டைக் கஜன்(புளியந்தீவு) . லெப் உமாராம்(கல்லடி), லெப் பயஸ் (நாவற்குடா), லெப்.ஈசன் (வந்தாறுமூலை) ஆகியோர் வீரச்சாவெய்தி னர். இவ்வாறு வரலாறு இருக்க மட்டக்களப்பில் எந்த இயக்கமும் சுயமாக உருவாகவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகிறார் இவர்.
புலிகளில் இணைந்து கொண்ட பரமதேவா, ரஞ்சன் முதலானோர் இந்தியா வழங்கிய பயிற்சியினையும் பெற்றுக்கொண்டனர் (முதலாவது முகாம்) . பரமதேவா பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த பிரபாகரன் பயிற்சி முடித்து அவர் வந்ததும் ஒரு தலைமைக்குரிய பண்பும், இலட்சிய உறுதியும் கொண்டவராக இவரை இனங்கண்டார். கிழக்குக்கான தலைமை அங்கேயே உருவாகவேண்டும் என்று அடிக்கடி கூறும் அவர் தனது எண்ணத்துக்குப் பொருத்தமானவராக இவர் இருப்பதையிட்டுத் திருப்தி கொண்டார்.


ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத் தாக்குதலில் பரமதேவா மிகத் திறமையாகச் செயற்பட்டார். இத் தாக்குதல் முடிந்ததும் மட்டக்களப்புக்குப் பொறுப்பாக அனுப்பப்பட்ட போராளியிடம் ” பரமதேவாவைக் கூட்டிக்கொண்டு போங்கள்; ஓரிரு தாக்குதலின் பின்னர் அவரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்.தனியாக இயக்கம் தொடங்கவும் அவருக்கு அனுமதியுண்டு“ எனக் குறிப்பிட்டார் மாத்தையா.


இதுவரை எவருக்குமே வழங்கப்படாத அனுமதி இது. மட்டக்களப்புக்கான கடற்பயணம் தாமதமாகவே முல்லைத்தீவில் ஒரு வாடியில் இவர்கள் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அச் சமயம் அப்போராளி பரமதேவா விடம் “ஓரிரு சண்டைகளின் பின்னர் உங்களிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளேன். தனியாக இயக்கம் தொடங்கவும் உங்களுக்கு அனுமதி உண்டு எனவும் சொல்லியிருக்கிறார்களே“ எனக் கேட்டார்.


இதற்கு “தம்பி (பிரபாகரன்) என்னிடம் இது பற்றி குறிப்பிட்டார். அதற்கு நான் உங்களுக்கும் எனக்குமான புரிந்துணர்வு தனித்துவமானது . இதனைப்போல நாளைக்குப் புதிதாக என்னுடன் இணைந்து கொள்பவர்களுக்கும் இருக்குமென்று சொல்லமுடியாது. நீங்கள் தேவையான ஆயுதங்கள்,ரவைகள் மற்றும் ஏனைய உதவிகளைத்தான் செய்யமுடியும். புரிந்துணர்வு என்பதைப் போராட்டத்தில் புதியவர்களான அவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது. நாளைக்கு இது பெரும் ரத்தக்களரியில் முடியும். எனக்கு நீங்கள் சரியான தலைவராகத் தெரிகிறீர்கள். உங்கள் தலைமைக்கு கீழேயே நான் போராடுவேன் எனக் கூறி அன்பாக மறுத்து விட்டேன்” என்று கூறினார் பரமதேவா .


தமிழரின் துரதிஷ்டம் மட்டக்களப்பில் நடந்தமுதல் தாக்குதலிலேயே பரமதேவாவை இழக்கவேண்டி ஏற்பட்டது. காயமடைந்த நிலையில் இருந்த அவரையும் ரவி (வாமதேவனையையும்) வாகனத்தின் அருகிலேயே விட்டு விட்டு ஏனையோர் பொலிஸ் நிலைய வளாகத்தினுள் புகுந்தனர். எனினும் எதிர்பார்த்த மாதிரி சண்டை நடைபெற வில்லை. பாதகமாகவே போய்க்கொண்டிருந்தது. பின் வாங்கிக்கொண்டு காயமடைந்தவர்களையும் ஏற்றிக்கொண்டு செல்வோமென முடிவெடுக்கப்பட்டது. பரமதேவாவிடம் சென்ற போது “நான் பாரமானவன்; என்னைத் தூக்கிக்கொண்டு போவது சாத்தியமில்லை. நிலைமையை உணர்ந்து நானும் ரவியும் ஏற்கெனவே சைனட் உட்கொண்டு. விட்டோம் இனி எங்களோடு நேரத்தைச் செலவழிப்பதில் பயனில்லை. ஒன்று மட்டும் செய்யுங்கள்.அம்மாவிடம் போய்ச் சொல்லுங்கள் உங்கள் மகன் சண்டையில் தான் செத்தானென்று . அண்ணர் (வாசுதேவ) புளொட் டில் இருக்கிறார் ஆனபடியால் வேற மாதிரி கதைகள் வரலாம். சீக்கிரம் போங்கள் ” என்றபடியே உயிரைவிட்டுக்கொண்டிருந்தார். ரவி ஏற்கெனவே உயிர் இழந்து விட்டார்.
இந்த வார்த்தைகளை சொல்லத்தான் மனவலிமையுடன் அவர் காத்துக்கொண்டிருந்தார் என்பதை உணரமுடிந்தது.


பயிற்சி முடித்து வந்த போராளிகளை முதலில் வீட்டுக்கு அனுப்பி பெற்றோரைச் சந்திக்க வைப்பது வழக்கமாக இருந்தது. பரமதேவாவின் அம்மா இருப்பதோ கல்லடியிலுள்ள இராணுவத்தினரின் பிரதான முகாமுக்கு அருகில் (சகோதரி வீட்டில்) .எனவே அமிர்தகழியிலேயோ வேறேங்கோதான் தாயாரைச் சந்திக்கவேண்டியிருக்கும். இந்த நிலமையைச் சொல்லி அவரது முடிவைக் கேட்டார் ஒரு போராளி. அதற்கு பரம தேவா சொன்ன பதில் “நான் இந்த ஆயுதப் போராட்டத்தில் ஈடு பட்டபின் என்னை ஒரு கைதியாகவே அம்மா பார்த்திருக்கிறார். எனவே இந்த மண்ணில் நடக்கும் தாக்குதலில் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு ஆயுதத்துடன் வீரனாகத் தான் அம்மாவைப் பார்க்க விரும்புகிறேன் அதுவரை பொறுத்திருக்கிறேன்” என்றார். ஆனால் அவரது கனவுகள் ……..

மரணிக்கும் தறுவாயிலும் இயக்கத்துக்குக் கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்பதற்காக அவர் சொன்ன வார்த்தைகள்… அதிலும் புளொட் பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள்; எத்தனை தீர்க்கதரிசனமானவை என்பதை ஸ்டாலின் ஞானமும், சீவரத்தினமும் நிரூபித்துக் காட்டுகின்றனர். (இன்னும் சில புத்தி ஜீவிகள் பட்டியல் உண்டு )


சீவரத்தினம் சகோதரப்படுகொலைகளை தன் கையாலே ஆரம்பித்து வைத்தவர் பிரபாகரன் என்று சொல்கிறார். இதுவும் தவறான தகவல். தமது புளொட்டுக்குள் என்ன நடந்தது என்றே தெரியாதவர்கள் புலிகள் பற்றி வகுப்பு எடுக்கின்றனர். அதற்கு முன்னரே வரலாற்றில் ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் பிரபாகரன் சம்பந்தப்படவில்லை. அந்தக் காலத்தைப் பற்றி இந்த விரிவுரையாளருக்கு விபரிப்பது சிரமம் .மேலும் மைக்கலின் விடயம் ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை. இது தனியே பிரபாகரன் மட்டும் எடுத்த முடிவல்ல.


வந்தாறுமூலையைச் சேர்ந்த கைலாயத்தாரின் மகன் சுரேஷ் (இயக்கப் பெயர் பிரசன்னா) பாண்டிருப்பைச் சேர்ந்த விமல்ராஜ் ஆகியோர் மீது எடுக்கப்பட்டதாக கூறும் நடவடிக்கைகள் இதேபோலத்தான் மேற்கொள்ளப்பட்டன. வெருகலில் மட்டக்களப்பு பக்கமாக நின்று படைநடத்தியவரைக் கேட்டால் இது பற்றி கூறுவார் (இந்தக் காரணங்களை விட பல மடங்கு……… )

63B482AE-B5C8-48FA-BAFE-EB339F3457C8.jpe

மேலும் இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் ஈரோஸ் உறுப்பினரும், தமிழர் தளம் பத்திரிகையின் ஆசிரியருமான மணிசேகரம் தராக்கி (சிவராம்) நடேசன் முதலானோரின் அஞ்சலி நிகழ்வுகளை இதே மக்கள் அமைப்பின் பெயரில் நடத்தத் தயாராக இருக்கின்றாரா என்பதை வெளிப்படுத்தினால் நல்லது. 1980 ல் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கு பின் உருவான பாதுகாப்பு பேரவை என்ற இயக்கத்தின் அமைப்பாளர்களின் ஒருவரான நெப்போலியன் மணிசேகரம் சார்ந்த ஈரோஸ் இயக்கத்தால் மலையகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார் அல்லது காணாமற் செய்யப்பட்டார் என்பது பற்றியும் , சர்வோதய அமைப்பின் தலைவர் கந்தசாமி என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டார் என்பதையும் இன்னொரு நினைவேந்தல் நிகழ்வில் சொல்வாரென எதிர்பார்க்கின்றோம் 

 

https://www.meenagam.com/வரலாற்றை-திரிபுபடுத்த-மு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 08:53, கிருபன் said:

மரணிக்கும் தறுவாயிலும் இயக்கத்துக்குக் கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்பதற்காக அவர் சொன்ன வார்த்தைகள்… அதிலும் புளொட் பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள்; எத்தனை தீர்க்கதரிசனமானவை என்பதை ஸ்டாலின் ஞானமும், சீவரத்தினமும் நிரூபித்துக் காட்டுகின்றனர். (இன்னும் சில புத்தி ஜீவிகள் பட்டியல் உண்டு )

நிர்வாகம் பிழையென்றால் நீக்கிவிடவும் !!!!!!

வெற்றிச்செல்வனின்  ஒப்புதல் வாக்குமூலம் கீழே 

பல தோழர்களும், சில நண்பர்களும் எனது பதிவுகள் செயலதிபர் உமா மகேஸ்வரனை மட்டுமே குற்றவாளியாக காட்டி பதிவு செய்கிறீர்கள், ஏன் உங்கள் மற்ற தலைவர்கள் இயக்கத்தை தவறாக வழி நடத்தவில்லையா? ஏன் அவர்களைப் பற்றி எழுதவில்லை என்று கேட்டார்கள் கேட்கிறார்கள். எங்கள் இயக்க நடைமுறை பற்றி உண்மையில் பலருக்கு தெரியாது. ஏன் பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான தோழர்களுக்கு கூட தெரியாது. எமது அமைப்பில் பலவித அணிகள் இருந்தன. உதாரணத்துக்கு விவசாய தொழிலாளர் மீனவ போன்ற அணிகள். அதுபோல் வெளியுலகத்திற்கு தெரிந்த கட்டுப்பாட்டு குழு,மத்தியகுழு ,பொதுக்குழு போன்றவை. ஆரம்பத்தில் மத்திய குழுவில் இருந்தவர்கள் பெரும்பான்மையோர் பெரிய ஐயாவின் (உமா மகேஸ்வரன்)விசுவாசிகள். அதோடு மத்திய குழுவிலிருந்த ஜான் மாஸ்டர் போன்ற தீப்பொறி குழுவினர் அவர்கள் இயக்கத்தில் இருக்கும் வரை செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு எதிராக மத்திய குழுவில் எந்தக் கருத்தும், இயக்கத்தின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த உட்கட்சி போராட்டத்தையும் பின் தளத்தில் நடத்தியதாக தெரியவில்லை. சந்ததியார் மட்டும் பல இடங்களில் எமது இயக்க தவறானசெயல்பாடுகளை சுட்டிக்காட்டியிருந்தார். எமது தவறான போக்குகளை சந்ததியார் பல தோழர்கள் இடமும் விவாதித்திருக்கிறார். இயக்கத்தில் இருக்கும் வரை சந்ததியாருக்கு பின் தளத்தில் பக்கபலமாக இருக்காமல் , பின் தளத்தில் இருந்துவிட்டு ரகசியமாக ஓடி சென்றபின் தீப்பொறி குழுவினர் பல உண்மைகளை எழுதினார்கள். அதன் முடிவு எங்கள் இயக்க அரசியல் செயலாளர் சந்ததியார் இன் கொலை. அதுமட்டுமல்ல சந்ததியார் ஒரு போதை மருந்து கடத்தல் பெண்ணுடன் வெளிநாட்டுக் ஓடிவிட்டதாக கதை கட்டப்பட்டது.
அடுத்தது மத்திய குழு உறுப்பினராக இருந்த நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன் ((மிக மூத்த உறுப்பினர்)செயலதிபர் உமாமகேஸ்வரன் இன் தனி மனித ஒழுக்கத்தைப் பற்றி நேரடியாக கண்டித்தபடியால் கொலை செய்யப்பட்டார்.அடுத்தது எங்கள் பின் தள ராணுவ பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக செயல்பட்ட, ராஜனை ஒடுக்குவதற்கு செயலதிபர் உமாமகேஸ்வரன்செய்த முயற்சிகள் பலன் அளிக்காததால் 1986இல் நமது இயக்கம் உடைந்து இரண்டாகி விட்டது. பல நூற்றுக்கணக்கான தோழர்கள் மனம் வெறுத்து இயக்கத்தை விட்டு வெளியேறிய சம்பவமும் நடந்தது.
எமது இயக்கம் சம்பந்தமான எல்லா முடிவுகளும் தனிப்பட்ட செயலதிபர் உமாமகேசுவரனால்மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் முடிவுகள் அறிவிக்கும் போது கட்டுப்பாட்டு குழு சார்பாக, மத்திய குழு சார்பாக என்று அறிக்கைகள் வெளி வரும். சந்ததியார், ராஜனுக்கு பின்பு யாரும் மத்திய குழுவில் ஓ, தனிப்பட்ட முறையிலோ பின் தளத்தில் இயக்கத் தவறுகளை சுட்டிக்காட்ட யாருக்கும் தைரியம் இருக்கவில்லை.அதேநேரம் இயக்கத்தின் அதிஉயர் அங்கமான கட்டுப்பாட்டு குழுவில் இருந்த கண்ணன் என்றோ சோ திஸ் வரணும், இரா வாசுதேவா இருவரும் தவறுகளை சுட்டிக்காட்டும் நிலையில் இருக்கவில்லை.ஆமாம் சாமி தான்.
இயக்க ஆரம்பகாலம் முதல் செயலதிபர் இன் மரணம் வரை எல்லா முடிவுகளும் உமா மகேஸ்வரனால்மட்டுமே எடுக்கப்பட்டன. அவரின் நேரடி பார்வையிலேயே எனது வேலைகளும் இருந்தன. அதனால் எனது பதிவுகளில் அவரின் தவறுகளே முதன்மையாக இருக்கின்றது.
சில சில நண்பர்கள் செயலதிபர் உமா மகேஸ்வரனின் எல்லா தவறுகளும் தெரிந்துகொண்டு, அதை தட்டிக் கேட்காமல், அவரின் தவறுகளுக்கு நானும் துணை போனதாகவும், இல்லாவிட்டால் இயக்கத்தை விட்டு விலகி போய் இருக்க வேண்டும் என்று கேட்டார்கள். தவறை தட்டிக் கேட்க எமது இயக்கத்தில் எனக்கு எந்த பக்க பலமும் இல்லை. அதேநேரம் தனி ஒருவனாக தவறை தட்டிக் கேட்க நான் முட்டாளும் இல்லை. அதேநேரம் நான் இயக்கத்தில் இருந்தவரை நடந்த தவறுகளுக்கு இயக்க உறுப்பினர் என்ற முறையில் நானும் தான் பொறுப்பு என்பதை மறுக்கவில்லை.நானும், அதே மாதிரி பல பொறுப்புக்களில் இருந்த தோழர்களும் எமது வேலைகளை தவறுகள் இன்றி சிறப்பாக செய்தோம். நாங்களும் எங்கள்வேலைகளில் தவறுகள் செய்துசொகுசாக இன்று வாழ்ந்திருந்தால் இந்தப் பதிவுகள் வந்திருக்காது. இயக்கத்துக்கு வந்த நான் உட்பட பல தோழர்களுக்கு உமாஉமாமகேஸ்வரன் மட்டும் இயக்கமாக தெரியவில்லை. அதிலிருந்த ஆயிரக்கணக்கான தோழர்களும் இயக்கமாக தெரிந்தார்கள். நான் 1976 ஆண்டு கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிர அரசியலில் இருந்தேன்.1979 ஆண்டு முதல் பயங்கரவாத தடை பிரிகேடியர் வீரதுங்க முகாமிக்கு கொழும்பிலிருந்து கைதுசெய்யப்பட்டு கொண்டு போன அவர்களில் நானும் ஒருவன். சந்தர்ப்ப வசத்தில் இயக்கத்துக்கு வரவில்லை. எமது இயக்கம் ஒருநாள் நல்ல நிலைமைக்கு வரும். போராட்டத்தில் முக்கியப் பங்கு பெறும் என்ற நம்பிக்கை இருந்தபடியால் இயக்கத்தை விட்டு போவதற்கு அன்று எவ்வளவோ வசதி இருந்தும் மனம் வரவில்லை.
1989 ஆண்டு கொழும்பு போய் அங்கு இயக்க நிலைமைகள், செயலதிபர் உமாமகேஸ்வரன் பற்றிய பல உண்மைகளை தெரிந்த பின்பு, இயக்கத்தை விட்டு போய்விட வேண்டும் என்று எண்ணம் மேலோங்கியது. அதேநேரம் மனம் விட்டு பேசக் கூடிய பல தோழர்களிடம் கழக தவறுகளை மனம்விட்டு தைரியமாக பேசக் கூடியதாக இருந்தது. இதற்கு காரணம் வசந்த்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. யாழ் மாவட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் எங்களுக்கு எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைக்கவில்லை. எதிர்பார்த்ததுதான் ஆனால் எல்லோர் முகத்திலும் ஒரு சோகம் தெரிந்தது. உமாமகேஸ்வரன் மட்டும் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். தள மாநாட்டை கூட்டி, இயக்கத்தை சீர்திருத்த வேண்டும், ஏதோ தோழர்கள் தான் தவறானவர்கள் மாதிரி காட்டிக்கொண்டார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, balakumar2 said:

அண்ணா... நீங்கள் சொன்ன இடத்தில் ஒரு பத்தோ பதினைந்தோ தான் இருக்கீறது(தொடர்).  மொத்தமாகவும் சில்லறையாகவும் எங்கு கிடைக்கும்?

(கிடைத்தால் யாழில் மொத்தமாக எழுதி ஒரு ஆவணபடுத்தி விடலாம். அதான் கேட்கிறேன். படங்களோடு போட்டுவிடுவேன். தயவு கூர்ந்து கூறுங்கள்.)

பிரைவேட் ல் உங்கள் மெயில் ஐடி யை போட்டு விடுங்கள் பகுதி 1லிருந்து கடைசியாய் அவர் போட்ட பகுதி 77 மட்டும் உள்ளது .முதலில் இருபக்கமும் அனுமதி எடுக்கப்பாருங்கள் வெற்றியிடமும் ஓம் படுவாரோ தெரியலை ? அதே போல் இங்கும் நிர்வாகத்திடம் அனுமதியை கேட்டு விடுங்கள் என்னால் அவற்றை இணைக்கமுடியாது ஈழம் என்ற கனவுடன் வெளிக்கிட்டவர்களை இந்தியாவில் வைத்தே போட்டு தள்ளி யுள்ளார்கள் யார் பின்தளம் அமைக்க உதவினார்களோ அந்த மக்களை கொள்ளை கொலை பாலியல் வல்லுறவு செய்துள்ளார்கள் ராஜீவ் கொலைக்கு முன்பே தென் இந்திய மக்களின் வெறுப்பை உருவாக்கி உள்ளார்கள் எனக்கு சில சமயங்களில் உமாமகேஸ்வரன் என்பவர் இலங்கை அரசின் திட்டமிடப்பட்டு  அனுப்ப பட்ட உளவாளியோ என்ற சந்தேகம் பல இடங்களில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை .

பாஸ்தியாம்பிள்ளை அழிப்பில் செட்டியை  போட்டு கொடுத்தவர் என்று உமாவும் ஊர்மிளாவும் பிரபாகரனை நம்ப வைக்கிறார்கள்   இது அய்யரின் பதிவில் எடுக்கப்பட்டது ஆனால்  நான் கேள்விப்பட்டது ஊர்மிளாக்கு செட்டியின்  கடிதம் கிடைத்தவிடையம் சந்தேகமானது அதை தவிர செட்டியின் எழுத்து திறமை யற்றவர் . இப்படி பல துரோகங்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, பெருமாள் said:

பிரைவேட் ல் உங்கள் மெயில் ஐடி யை போட்டு விடுங்கள் பகுதி 1லிருந்து கடைசியாய் அவர் போட்ட பகுதி 77 மட்டும் உள்ளது .முதலில் இருபக்கமும் அனுமதி எடுக்கப்பாருங்கள் வெற்றியிடமும் ஓம் படுவாரோ தெரியலை ? அதே போல் இங்கும் நிர்வாகத்திடம் அனுமதியை கேட்டு விடுங்கள் என்னால் அவற்றை இணைக்கமுடியாது ஈழம் என்ற கனவுடன் வெளிக்கிட்டவர்களை இந்தியாவில் வைத்தே போட்டு தள்ளி யுள்ளார்கள் யார் பின்தளம் அமைக்க உதவினார்களோ அந்த மக்களை கொள்ளை கொலை பாலியல் வல்லுறவு செய்துள்ளார்கள் ராஜீவ் கொலைக்கு முன்பே தென் இந்திய மக்களின் வெறுப்பை உருவாக்கி உள்ளார்கள் எனக்கு சில சமயங்களில் உமாமகேஸ்வரன் என்பவர் இலங்கை அரசின் திட்டமிடப்பட்டு  அனுப்ப பட்ட உளவாளியோ என்ற சந்தேகம் பல இடங்களில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை .

பாஸ்தியாம்பிள்ளை அழிப்பில் செட்டியை  போட்டு கொடுத்தவர் என்று உமாவும் ஊர்மிளாவும் பிரபாகரனை நம்ப வைக்கிறார்கள்   இது அய்யரின் பதிவில் எடுக்கப்பட்டது ஆனால்  நான் கேள்விப்பட்டது ஊர்மிளாக்கு செட்டியின்  கடிதம் கிடைத்தவிடையம் சந்தேகமானது அதை தவிர செட்டியின் எழுத்து திறமை யற்றவர் . இப்படி பல துரோகங்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது.

அண்ணே, நான் எல்லாத்தையும் எழுதப்போறதில்லை. அந்த தொடரில் எங்கெல்லாம் புளொட் செய்த திருகுதாளங்கள் வருகிறதோ அவற்றை மட்டும் எடுத்து வைத்துவிடுவோம். பின்னாளில் யாரேனும் கம்பு சுற்ற வந்தால் இதை எடுத்துக் காட்டி விடுவோம்... 😁😁


இந்த எண்ணம் எப்படி?😇

Link to comment
Share on other sites

எதை எவர் மறைத்தாலும் அத்தனையும் பூனை கண்ணை மூடி கொண்டு பால்குடித்த கதை தான்.  அப்பாவிகளை துரோகி என்று அவதூறு பட்டம் கொடுத்து படுகொலை செய்த‍ விடயத்தில் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட  அனைத்து ஆயுத இயக்கங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பது மக்களுக்கு தெரியும். சாதாரணமாக மக்கள் அனைவரும் உரையாடும் விடயம் இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, balakumar2 said:

அண்ணே, நான் எல்லாத்தையும் எழுதப்போறதில்லை. அந்த தொடரில் எங்கெல்லாம் புளொட் செய்த திருகுதாளங்கள் வருகிறதோ அவற்றை மட்டும் எடுத்து வைத்துவிடுவோம். பின்னாளில் யாரேனும் கம்பு சுற்ற வந்தால் இதை எடுத்துக் காட்டி விடுவோம்... 😁😁


இந்த எண்ணம் எப்படி?😇

ஒருத்தர் இப்பவே கம்பு சுற்றுகிரார் முதலில் அவரை கவனியுங்கள் .😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, tulpen said:

எதை எவர் மறைத்தாலும் அத்தனையும் பூனை கண்ணை மூடி கொண்டு பால்குடித்த கதை தான்.  அப்பாவிகளை துரோகி என்று அவதூறு பட்டம் கொடுத்து படுகொலை செய்த‍ விடயத்தில் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட  அனைத்து ஆயுத இயக்கங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பது மக்களுக்கு தெரியும். சாதாரணமாக மக்கள் அனைவரும் உரையாடும் விடயம் இது. 

ருல்பன்/துல்பன் அண்ணே...
நான் அவங்கள பற்றி எழுதப் போறன் என்டு சொன்னதுக்கு நீங்கள் எதுக்கண்ணே குதிக்கிறியள்? 

(செஞ்சத தானே எழுதப் போறன் என்டனான்🤔. இதுக்கே இவ்வளோ துள்ளலா?🤔.... கிரிகாலா கவனமா இரு😖)
 

3 hours ago, பெருமாள் said:

ஒருத்தர் இப்பவே கம்பு சுற்றுகிரார் முதலில் அவரை கவனியுங்கள் .😁

கூத்து தொடங்குறத்துக்கு முன்னாலையே கல்லடியா😖😖Rendu Images : Vadivelu Memes Images Download | Vadivelu In Rendu Tamil  Memes | Online Memes Generator For Vadivelu Create Your Own Memes Using  Rendu Images - Memees.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

எதை எவர் மறைத்தாலும் அத்தனையும் பூனை கண்ணை மூடி கொண்டு பால்குடித்த கதை தான்.  அப்பாவிகளை துரோகி என்று அவதூறு பட்டம் கொடுத்து படுகொலை செய்த‍ விடயத்தில் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட  அனைத்து ஆயுத இயக்கங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பது மக்களுக்கு தெரியும். சாதாரணமாக மக்கள் அனைவரும் உரையாடும் விடயம் இது. 

எல்லாவற்றையும் விட அதி  பயங்கரமானது ஈழம் வேண்டும் என்று நம்பி போராட  வந்தவர்களை உமாமகேஸ்வரனின் கட்டளைக்கு பணிந்து ராமேஸ்வரம் சவுக்கம் காடுகளில் இரவோடு இரவாக மண்டையில் போட்டு தாட்டது . உமாமகேஸ்வரன் ஜே ஆரின் திட்டமிடப்பட்டு தமிழரின் போராட்டத்தை அழிக்க  என அனுப்ப பட்ட ஒரு ஆள் ஊர்மிளாவும் அவ்வாறானவரே.

உலகிலே தன்  இனத்துக்கு என்று போராட வெளிக்கிட்டு அதே போராளிகளால் தோழர்களால்  கொல்லப்பட்ட துரோகி உமாமகேஸ்வரன்தான் .

Link to comment
Share on other sites

1 hour ago, balakumar2 said:

ருல்பன்/துல்பன் அண்ணே...
நான் அவங்கள பற்றி எழுதப் போறன் என்டு சொன்னதுக்கு நீங்கள் எதுக்கண்ணே குதிக்கிறியள்? 

(செஞ்சத தானே எழுதப் போறன் என்டனான்🤔. இதுக்கே இவ்வளோ துள்ளலா?🤔.... கிரிகாலா கவனமா இரு😖)
 

கூத்து தொடங்குறத்துக்கு முன்னாலையே கல்லடியா😖😖Rendu Images : Vadivelu Memes Images Download | Vadivelu In Rendu Tamil  Memes | Online Memes Generator For Vadivelu Create Your Own Memes Using  Rendu Images - Memees.in

நான் உங்களை பற்றி கூறவில்லையே. உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் கூறியது அனைத்து இயகங்களும் செய்த திருகு தாளங்கள் குறித்து. அது தமிழ்மக்கள் அனைவரும் அறிந்த வெளிப்படையான விடயங்கள் தானே. அப்படி நேர்மையாக அனைத்தையும்  எழுதும் நேர்மை உங்களிடம்  இல்லை என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டதற்கு நன்றி. விருப்பப்படி நீங்கள் எழுதலாம் 

2 minutes ago, பெருமாள் said:

எல்லாவற்றையும் விட அதி  பயங்கரமானது ஈழம் வேண்டும் என்று நம்பி போராட  வந்தவர்களை உமாமகேஸ்வரனின் கட்டளைக்கு பணிந்து ராமேஸ்வரம் சவுக்கம் காடுகளில் இரவோடு இரவாக மண்டையில் போட்டு தாட்டது . உமாமகேஸ்வரன் ஜே ஆரின் திட்டமிடப்பட்டு தமிழரின் போராட்டத்தை அழிக்க  என அனுப்ப பட்ட ஒரு ஆள் ஊர்மிளாவும் அவ்வாறானவரே.

உலகிலே தன்  இனத்துக்கு என்று போராட வெளிக்கிட்டு அதே போராளிகளால் தோழர்களால்  கொல்லப்பட்ட துரோகி உமாமகேஸ்வரன்தான் .

உண்மை அதை நான் மறுக்கவில்லை. நீங்கள் கூறியது போல் ஈத்திற்காக போராட வந்தவர்களை கொன்றவர்களும் , ஈழத்திற்கக போராட வந்த ரெலோ இயக்க இளம் போராளிகளை படு கொலை செய்தவர்களும், கைது செய்து வைத்திருந்த ஈபிஆர்எல் எவ போராளிகளை ஈவிரக்கமின்று படுகொலை செய்தவர்களும் என்னை பொறுத்தவரை ஒரே ரகத்தினரே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

உண்மை அதை நான் மறுக்கவில்லை. நீங்கள் கூறியது போல் ஈத்திற்காக போராட வந்தவர்களை கொன்றவர்களும் , ஈழத்திற்கக போராட வந்த ரெலோ இயக்க இளம் போராளிகளை படு கொலை செய்தவர்களும், கைது செய்து வைத்திருந்த ஈபிஆர்எல் எவ போராளிகளை ஈவிரக்கமின்று படுகொலை செய்தவர்களும் என்னை பொறுத்தவரை ஒரே ரகத்தினரே. 

தமிழ் ஈழ கனவுடன் இளவயதில்  வந்தவர்களை தலைமையை எதிர்த்தார்கள் என்ற சப்பை காரணம் சொல்லி ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையை தென்னிந்திய சவுக்கம்காடுகளுக்கள் உரமாக போட்டவர்கள்  அவர்களை விட  மக்களுக்காக போராடி மாண்டவர்கள் மீதுதான் உங்கள் ஓரவஞ்சனை பலதடவை அதுக்கான காரணம் கூறப்பட்டது  நல்லாயிருக்கு உங்கள் நியாயம் அதை எதிர்பார்ப்பது என் முட்டாள் தனம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, tulpen said:

நான் உங்களை பற்றி கூறவில்லையே.

அண்ணே... இவ்வளவு நாளாக இத்திரிக்கு வராமல், நான் புளட்டின் திருகுதாளங்களை ஆவணப்படுத்தபோகிறேன் என்று பறைந்தவுடன்,  தாங்கள் வலியவந்து அவ்வாறு கருத்திட்டதன் நோக்கம்? 

(எனது எண்ணம்: தங்களது புலிவெறுப்பும் பிற ஒட்டுக்குழுக்கள் மீதான விருப்பமுமே.😇😁  )
 

Quote

உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் கூறியது அனைத்து இயகங்களும் செய்த திருகு தாளங்கள் குறித்து. அது தமிழ்மக்கள் அனைவரும் அறிந்த வெளிப்படையான விடயங்கள் தானே.

அண்ணே,

நான் அமைதியாகத் தானே கேட்டேன்?

தாங்கள் ஏன் பொங்குகிறீர்கள்? 
 
(குற்ற உணர்ச்சியால் பொங்குகிறீர்கள் போலும். சரி, பரவாயில்லை, மூத்தவர்தானே.🤣)

Quote

அப்படி நேர்மையாக அனைத்தையும்  எழுதும் நேர்மை உங்களிடம்  இல்லை

அண்ணே, நான் வேறொருவர் எழுதியதை ஆவணப்படுத்தப்போகிறேன் என்றதற்கும் நேர்மைக்கும் என்ன தொடர்பு என்று இந்த அவையில் மொழிவீர்களா?😀 இது வரை ஆவணப்படுத்தப்படாத புளொட்டின் திருகுதாளங்களை நான் நேர்மையாகத்தான் ஆவணப்படுத்த போகிறேன்.. இதில் உங்களுக்கு என்ன சிக்கல்?

ஓ, அதாவது நீங்கள் சார்ந்த இயக்கத்தின் திருகுதாளங்களை ஆவணப்படுத்த வேண்டாம் என்று மறைமுகமாக கெஞ்சுகிறீர்கள்? அப்படித்தானே😜😜

அப்புறம், நான் கண்டவரை, நீங்களே இதுவரை நேர்மையாக எழுதியதில்லை,🥴  இதில் அடுத்தவனிடம் ஏனதை எதிர்பார்க்கிறீர்கள்? 😒

  • குறிப்பு: நான் நேர்மையாகத்தான் ஆவணப்படுத்துவேன். சொட்டுக் கூட தவற விடமாட்டேன். கவலை வேண்டா😁😆

----------------------------------------------------------------------------------

 ஆனால், நான் முதலில் கேட்ட கேள்விக்கு நீங்கள் கடைசிவரை மறுமொழி அளிக்கவில்லை.
மீண்டும்... 

 "நான் அவங்களைப் பற்றி ஆவணப்படுத்தப் போகிறேன் என்று அறிவித்ததற்கு நீங்கள் ஏனண்ணே குதிக்கிறீர்கள்? "🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, balakumar2 said:

 "நான் அவங்களைப் பற்றி ஆவணப்படுத்தப் போகிறேன் என்று அறிவித்ததற்கு நீங்கள் ஏனண்ணே குதிக்கிறீர்கள்? "🤣

அவர் ஏன் குதிக்கிறார்  தங்களின் உண்மைகள் வெளியில் வந்து விடும் அதன் பின் புலியின் மீது கல் எறிய  முடியாது கீழே வெற்றி செல்வன் தொடர் நம்பர் 67ல் ஒரு சிறு சம்பவம் விபரிக்கின்றார் .

 

தினசரி காலையில் தமிழ்நாடு காவல்துறை கியூ பிராஞ்ச் அதிகாரிகள் சந்திக்க வந்து விடுவார்கள். எவ்வளவுதான் அவர்கள் நட்பாக பழகினாலும் பேசினாலும் மனதுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். காரணம் எமது செயலதிபர் உமா மகேஸ்வரனின் நேரடி கண்காணிப்பில் இயங்கிய வசந்த் தலைமையிலானரகசிய கொள்ளை கோஷ்டி, பற்றிய விபரங்கள் தெரிந்திருக்குமோ அல்லது அவர்கள் யாரும் பிடிபட்டு பிரச்சினையோ என்று பயமாய் இருக்கும். தமிழகத்தில் எனது தலைமையில் எதுவும் சட்டவிரோதமாக நடைபெற்றால் என்னையும் தூக்கி சிறையில் போடுவதாக கூறியிருந்தார்கள். நான் இதைப்பற்றி பெருமுயற்சி எடுத்து கஷ்டப்பட்டு ஒருமுறை கொழும்பில் இருந்த செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு இதுபற்றி கூறிய போது,என்ன நடந்தாலும் அவர்கள் எமது இயக்கத்தில் எனது கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் என்று கூறி விடும்படி கூறி இருந்தார். அதோடு அவர்களின் நடவடிக்கைகளில் குறுக்கிடும் செய்யக்கூடாது என கட்டளையிட்டார்.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் இயக்கங்களை சேர்ந்தவர்களை தற்காலிகமாக கைது செய்து போலீஸ் நிலையத்தில் காவல் வைப்பார்கள். கியூ பிரான்ச் எஸ்பி முதல் நாளே ரகசியமாக கூறிவிடுவார் நாளை உங்களையெல்லாம் தற்காலிகமாக கைது செய்ய அதிகாரிகள் வருவார்கள் என்று. நானும் என்னோடு இருந்த தோழர்களும் இரவு முன் கதவுக்கு பூட்டு போட்டுவிட்டு பின்கதவால் வீட்டுக்குள் வந்து லைட் எல்லாம் மறைத்துவிட்டு சத்தம் போடாமல் இருப்போம். அதிகாலை நாலு மணிக்கு கியூ பிரான்ச் போலீசார் வந்து பார்த்து வீட்டைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டார்கள் என்று கதைப்பது கேட்கும். அடுத்தநாள் பகல் வரை உள்ளேயே இருப்போம்.பின்பு எங்களது விளையாட்டு எங்களை கண்காணிக்கும் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரத்துக்கு தெரிந்துவிட்டது. நாங்கள் எந்தவித பிரச்சினையும் கொடுக்காததால், எங்களை கண்டும் காணாமல் விட்டு விட்டார். எங்களை காலையில் சந்திக்க வரும் கியூ பிரான்ச் ஹெட் கான்ஸ்டபிள் ராஜசேகரன் பலமுறை எனக்கும் நண்பர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்திருக்கிறார். எங்கள் நிலையறிந்து அனைவருக்கும் பகல் சாப்பிட பல நாள் காசு கொடுத்து இருக்கிறார். நாங்கள் மறுத்தாலும் ஒரு சகோதரனாக நினைத்து வாங்கிக்கொள் என்று கூறுவர். அவர்கள் செய்த உதவியை மறக்க முடியாது. இவர்கள் எங்களுக்கு மட்டுமல்ல கஷ்டப்பட்ட பல இலங்கைத் தமிழர்களுக்கு பலவித உதவிகள் செய்து உள்ளார்கள். அதேநேரம் குற்றச்செயலில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள், ஈழ விடுதலை என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் தங்கியிருந்து கொண்டு தமிழ் நாட்டு விடுதலை இயக்கங்களோடு, இந்தியா எதிர்ப்பு இயக்கங்களோடு சேர்ந்து மறைமுகமாக இயங்கும் இலங்கை தமிழர்கள் போன்றவர்கள் பிடிபட்டால் மிகக் கடுமையான சித்திரவதை தான். இப்படியானவர்களின் செயலால் பலஅதிகாரிகள் அதிகாரிகள் எல்லா இலங்கை தமிழர்களையும் குற்றவாளிகள் போல் தான் பார்த்தார்கள். ஒரு சில அதிகாரிகள் தான் இலங்கைத் தமிழர்களின் வித்தியாசங்களை கண்டு மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டார்கள். குறிப்பாக கியூ பிரான்ச்இன்ஸ்பெக்டர்கள் ஏகாம்பரம் முரளி போன்றவர்கள் ஒரு இயக்க பையனைப் பார்த்து எந்த இயக்கம் என்று சரியாக கூறிவிடுவார்கள். ஒரு முறை அவரிடம் எப்படி உங்களால் முடிகிறது என்று கேட்டேன். ஒவ்வொரு இயக்க பையன்களுக்கும் நடை உடை பேசும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது. எங்கள் இயக்கத்தை பற்றி கேட்டேன். உங்கள்இயக்க தோழர்கள் எடுத்தெறிந்து பேசுவார்கள், அதிகாரிகளை மதிக்கமாட்டார்கள். சரியாக பதில் சொல்ல மாட்டார்கள். நீயும், சித்தார்த்தனும் மட்டும்தான் வித்தியாசமானவர்கள் அதிகாரிகளை மதித்து நடந்து கொண்டவர்கள் என்று ஏகாம்பரம் இன்ஸ்பெக்டர் கூறினார். ஆனால் பொதுவாக தமிழ்நாட்டு கியூ பிரான்ச்அதிகாரிகளை இலங்கை தமிழர்கள் எல்லோரும் கடுமையாகவிமர்சித்து எழுதுகிறார்கள் எழுதுவார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏற்பட்ட அமைப்பு, ஈழவிடுதலை என்று கூறிக்கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நாங்கள் நடந்து கொண்டால், அவர்கள் அமைதியாகபார்த்துக் கொண்டிருப்பார்கள், எங்களை கௌரவமாக நடத்துவார்கள் என எதிர்பார்ப்பது தவறு. அதேநேரம் ஒவ்வொரு இயக்கமும் தங்கள் இயக்கத்துக்கும், தங்கள் தலைமைக்கும் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று சொந்த தமிழ் இளைஞர்களை பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்து இருக்கிறோம். ஒரு விடுதலை இயக்கமே இப்படி இருக்கும்போது, தமிழ்நாட்டு அரசாங்கத்தின் போலீசார் மட்டும் எங்களிடம் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா,?
ஒரு நாள் அதிகாலை வசந்த், கரூர் விஜயனும் ஒரு வேனை எடுத்துக் கொண்டு வந்து, சென்னையில் இருந்த இயக்க முக்கியமான ஆவணங்கள், நாலு பெரிய பெட்டிகளிலும், நான் டெல்லியில் சேகரித்து வைத்திருந்த எமது இயக்க, மற்ற இயக்க வெளியீடுகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் எல்லாம் மூன்று பெட்டிகளில் இருந்தன, எல்லாவற்றையும் இலங்கைக்கு அனுப்ப lசொல்லி செயலதிபர் உமா மகேஸ்வரன் சொல்லியிருக்கிறார் எனவும் அவற்றை எடுத்துக்கொண்டு தாங்கள் போவதாகவும் சொன்னார்கள். அதோடு இரண்டு நாளில் தாங்கள் செயலதிபர் ஓடு வயர்லெஸ் செட்டில் பேசப் போவதாகவும், விரும்பினால்என்னையும் வரச் சொன்னார்கள். எனக்கும் ஒரு மாற்றம் என்று சந்தோசமாக அவர்களுடன் வேனில் கிளம்பிவிட்டேன். வசந்தும், கரூர் விஜியனும் மாரி மாரி வண்டியோட்டி போனார்கள். போகும்போது திருச்சி சமயபுரத்தில் வைத்து வண்டியின் முன் கண்ணாடி சிதறிவிட்டது. ஒரு மாதிரி ஒட்டிக் கொண்டு போய் கரூரில் சிறு தொழில் செய்த வசந்தின் நண்பன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணவன் மனைவி அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக எமது இயக்க எல்லா பெட்டிகளையும் இறக்கி வைத்துவிட்டு, நாங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் வசந்தின் இடத்திலிருந்து உடனடியாக நானும் வசந்ததும் ரயில் மூலம் கேரளா போனோம்.
போகும்போது வசந்த் கேரளாவின் பல இடங்களை குறிப்பிட்டுக் காட்டினார். அந்த இடங்களில் எல்லாம் தாங்கள்கைவரிசையை காட்டியுள்ளதாக கூறினார். நாங்கள் திருவனந்தபுரம் போய் இறங்கி, இருந்து பஸ் மூலம் இரண்டு மணி நேரம் பயணம் செய்து, பின்பு ஜீப்பில் காட்டுப் பிரதேசம் ரப்பர் தோட்டங்கள் உள்ள இடங்களில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து, அதன்பின்பு 2மணிநேரம் மலை உச்சியில் நடை பயணம் செய்து வசந்த் கூட்டிக்கொண்டு போனார். சன நடமாட்டமே இல்லை. எனக்கு பயமாகி விட்டது. செயலதிபர் உமா மகேஸ்வரனும் வசந்த இடம் என்னை கொலை செய்ய கூறிவிட்டார் என்று நம்பி விட்டேன். வசந்த் இடம் உண்மையைக் கூறும்படி கேட்டேன் என்னை கொலை செய்ய தானே கூட்டி கொண்டு போகிறாய் என்று. வசந்த் சிரித்த சிரிப்பு இருக்கிறதே, எனக்கு பயமாகி விட்டது. எமது வயர்லெஸ் செட் இங்கு மலை உச்சியில் இருக்கும் கேரள தீவிர நக்சலைட் ஒருவரின் வீட்டில் இருப்பதாகவும் அங்கு எமது தோழர் ஒருவர் நிரந்தரமாக இருப்பதாகவும் கூறினார். எங்களைக் கண்டவுடன் எமது தோழருக்கு மிகவும் சந்தோசம். வெளியுலகத் தொடர்பும் இன்றி, டீ குடிப்பதற்கு கூட மூன்று கிலோ மீட்டர் நடந்து போய் வர வேண்டும். கேரளா நக்சலைட் தோழரின் தூரத்தில் இருக்கும் ரகசிய வீட்டிலிருந்து காலையில் தேநீர் வரும் . பின்பு பகலும் இரவும் சோறும் மாட்டு இறைச்சியும் தாராளமாக வரும். நக்சலைட்தோழரும் வந்து இருந்து கதைத்துக் கொண்டிருப்பார். கரண்ட் இல்லை. எமது வயர்லெஸ் செட் கார் பேட்டரி மூலம் இயக்கி கொண்டிருந்தார்கள்.
இரவில் வீட்டைச்சுற்றி காட்டு மிருகங்களின் நடமாட்டம் இருக்கும். மயான அமைதி. அங்கிருந்த நாலு நாட்களும் செயலதிபர் உமாமகேஸ்வரன்உடன் வசந்த தொடர்பு கொள்ள முடியவில்லை. நானும் வசந்தம் திரும்ப வரும்போது அங்கிருந்த தோழருக்கு மிகவும் கவலை சோகம். இந்த கேரளா நக்சலைட் தோழர் நாங்கள் கொண்டு போக அன்போடு நிறைய செவ்வாழை பழங்கள் கொடுத்துவிட்டார். நானும் வசந்தனும் திரும்ப திருவனந்தபுரம் மூவி பஸ் மூலம் செங்கோட்டை வழியாக மதுரை வந்தோம். வரும்போது வசந்த் பல கதைகளைக் கூறினார். இந்தியாவுக்கு கொடுத்த ஆயுதங்களை உமா மகேஸ்வரன் இந்த கேரளா நக்சலைட் தொடர்பு மூலம் பல ஆயுதங்களை விற்றதாகவும், சிலதை சும்மா கொடுத்ததாகவும் கூறினர். அதோடு கேரளாவில் தாங்கள் இந்த நக்சலைட்டுகளின் உதவிய கொள்ளைகள் செய்திருப்பதாகவும், அந்தப் பணத்தையும் தங்கமாக மாற்றி, இலங்கைக்கு செயலதிபர் உமாமகேஸ்வரநுக்கு அனுப்பி வருவதாகவும் கூறினர். பயணத்தின்போது இருவரும் மனம் விட்டுபேசிக் கொண்டதில் நாங்கள் ஒரு விடுதலை இயக்கத்தை விட ஒரு கொள்ளை கூட்ட இயக்கத்தில் இருப்பது போல் தெரிகிறது என்று கவலைப் பட்டோம்.
வசந்த் தவறான இந்த வேலைகளை செய்தாலும், மனதுக்குள் எமது இயக்கத் தலைமையைப் பற்றி கொதித்து கொண்டிருந்தான் என்பதுதான் உண்மை. தனது அம்மா அப்பா தான் செய்யும் இந்த வேலைகளை வெளிப்பட்டால் உயிரையே விட்டு விடுவார்கள், அதோடு தானும் இயக்கத்திற்கு வரும்போது தனது வாழ்க்கை போராளியாக இல்லாமல் ஒரு பொறுக்கியாக மாறும் என்று நினைக்கவே இல்லை என்றும் கூறி வருத்தப்பட்டார். பல எமது இயக்கத் தோழர்களின் மனநிலை உண்மையில் அப்படித்தான் இருந்தது வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை.
Link to comment
Share on other sites

12 hours ago, balakumar2 said:

அண்ணே... இவ்வளவு நாளாக இத்திரிக்கு வராமல், நான் புளட்டின் திருகுதாளங்களை ஆவணப்படுத்தபோகிறேன் என்று பறைந்தவுடன்,  தாங்கள் வலியவந்து அவ்வாறு கருத்திட்டதன் நோக்கம்? 

(எனது எண்ணம்: தங்களது புலிவெறுப்பும் பிற ஒட்டுக்குழுக்கள் மீதான விருப்பமுமே.😇😁  )
 

அண்ணே,

நான் அமைதியாகத் தானே கேட்டேன்?

தாங்கள் ஏன் பொங்குகிறீர்கள்? 
 
(குற்ற உணர்ச்சியால் பொங்குகிறீர்கள் போலும். சரி, பரவாயில்லை, மூத்தவர்தானே.🤣)

அண்ணே, நான் வேறொருவர் எழுதியதை ஆவணப்படுத்தப்போகிறேன் என்றதற்கும் நேர்மைக்கும் என்ன தொடர்பு என்று இந்த அவையில் மொழிவீர்களா?😀 இது வரை ஆவணப்படுத்தப்படாத புளொட்டின் திருகுதாளங்களை நான் நேர்மையாகத்தான் ஆவணப்படுத்த போகிறேன்.. இதில் உங்களுக்கு என்ன சிக்கல்?

ஓ, அதாவது நீங்கள் சார்ந்த இயக்கத்தின் திருகுதாளங்களை ஆவணப்படுத்த வேண்டாம் என்று மறைமுகமாக கெஞ்சுகிறீர்கள்? அப்படித்தானே😜😜

அப்புறம், நான் கண்டவரை, நீங்களே இதுவரை நேர்மையாக எழுதியதில்லை,🥴  இதில் அடுத்தவனிடம் ஏனதை எதிர்பார்க்கிறீர்கள்? 😒

  • குறிப்பு: நான் நேர்மையாகத்தான் ஆவணப்படுத்துவேன். சொட்டுக் கூட தவற விடமாட்டேன். கவலை வேண்டா😁😆

----------------------------------------------------------------------------------

 ஆனால், நான் முதலில் கேட்ட கேள்விக்கு நீங்கள் கடைசிவரை மறுமொழி அளிக்கவில்லை.
மீண்டும்... 

 "நான் அவங்களைப் பற்றி ஆவணப்படுத்தப் போகிறேன் என்று அறிவித்ததற்கு நீங்கள் ஏனண்ணே குதிக்கிறீர்கள்? "🤣

 

 

பாலகுமார், நான் கொதிக்கவும் இல்லை பொங்கவும் இல்லை. எனது கருத்தை மட்டுமே பதிவிட்டேன். நான்கு வரியில் பொதுவாக  நான் கூறிய உண்மை தெளிவானது. உங்களை கருத்தை பாதிப்பதும் அல்ல. சாதாரண அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரிந்த பகிரங்க உண்மைகளே. இதை எவராலும் மறைக்க முடியாது. தெளிவான அந்த கருத்து தவறானது என்று உங்கள் மனச்சாட்சியால் கூற முடியாது. அதனால் அதை மறுக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத நீங்கள் என்னை வலுக்கட்டாயமாக  ஏதோ ஒரு இயக்கத்திற்குள் அடைக்க முற்படுகின்றீர்கள். இதே யாழ் களத்தில் புலி எதிர்ப்பு உள்நோக்கத்தோடு புலிகளை கொச்சைபடுத்த முற்பட்டவர்களோடு  கூட நான் எதிர்த்து  விவாதித்துள்ளேன். என்னைப்பொறுத்தவரை கண்மூடித்தனமாக புலிஎதிர்ப்பு மனநிலை கொண்டவர்களும் கண்மூடித்தனமான புலிஆதரவு மனநிலை கொண்டவர்களும் ஒரே ரகத்தினரே. இவர்களில் எந்த வித்தியாசத்தையும் கண்டு பிடிக்க முடியாது. இந்த இரு ரகத்தினரும் எமது இனத்தை அழிக்கும் அழிவுச்சக்திகளே. இந்த இரு அழிவுச்சக்திகளின் அழிவில் தான் தாயகத்தில் தமிழ் மக்களின் தேசியத்தின் இருப்பு காப்பாற்றப்படும்.

வரலாற்றை அறிய விரும்பும் மாணவனாக உங்களை நீங்கள் உங்களை ஆரம்ப அறிமுகத்தில் அறிமுகப்படுத்தியதினீர்கள், ஒரு காலக்கட்டதின் வரலாறு என்றால் அக்காலகட்டத்தில் நடைபெற்ற எல்லா உணமைகளையும் கூறுவதேயாகும். இதில் பாரபட்சம் தேவையில்லை என்பதை மட்டுமே நான் உங்களுக்கு சுட்டிக்காட்டினேன்.  எந்த ஆயுதக்குழுவினதும் நீதிக்கு மாறான படுகொலைகளையும் மறைக்கவேண்டிய அவசியமோ, அவ்வாறு  படுகொலைகள் செய்த எந்த குற்றவாளிக்காகவும் வக்காலத்து வாங்கும் தேவை எனக்கும் இல்லை உங்களுக்கும் இல்லை.

எனது கருத்து உங்களுக்கு புரியவில்லை என்றால் மீண்டும் அந்த கருத்தை விளக்கமாக கூறுகிறேன்.

ஈழப்போராட்டம் என்று புறப்பட்ட இயக்கங்களான தமிழீழ விடுதலை புலிகள், புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் ஆகிய நான்கு  இயக்கங்களிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் போராட வந்த தியாக போராளிகளும் இருந்தார்கள் அதேவேளை மிக மோசமான குற்றவாளிகளும் இருந்தார்கள். இந்த நான்கு இயக்கங்களின் தலைமைகளும் போராட வந்த அப்பாவி போராளிகளை ஈவிரக்கமற்று படுகொலை செய்த வரலாறு தமிழ் மக்களை அனைவருக்கும் தெரிந்த உண்மை.

 மேற்கண்ட நான் தெரிவித்த கருத்து தாயகத்திலோ, வெளிநாடுகளிலோ சாதாரண மக்கள் தம்முள்  உரையாடும் போது அடிக்கடி கூறும் கருத்து தான் இது.  ஆனால் ஒவ்வொரு இயக்கத்தின் விசுவாசிகளும் தமது இயக்கம் செய்த கொலைகளை மறைத்து அடுத்தவர் மீது பழி போட முற்படுவது தொடர்ந்து  நடைபெற்றே வருகிறது. பல உண்மைகள் மக்களுக்கு தெரியும் என்பதால் அது பலிக்காது என்பதே எனது எண்ணம். எனது இந்த கருத்து புளொட் செய்த அநியாய படுகொலைகளை வெளிக்கொண்டு வரும் தங்கள் முயற்சிக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. உங்கள் முயற்சியை ஆதரிக்கும்.

நான் எழுதிய மேற்கண்ட எனது கருத்துககளுக்கு மட்டும் தான் என்னால் பொறுப்பேற்கமுடியும். உங்களது  கற்பனையில் ஆயுத குழுக்களுக்குள் என்னை அடைத்து என்னை முத்திரை குத்தும் தந்திரங்களுக்கு என்னால் பொறுப்பேற்கவோ பதில் கூறவோ முடியாது.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2021 at 16:07, tulpen said:

 

உண்மை அதை நான் மறுக்கவில்லை. நீங்கள் கூறியது போல் ஈத்திற்காக போராட வந்தவர்களை கொன்றவர்களும் , ஈழத்திற்கக போராட வந்த ரெலோ இயக்க இளம் போராளிகளை படு கொலை செய்தவர்களும், கைது செய்து வைத்திருந்த ஈபிஆர்எல் எவ போராளிகளை ஈவிரக்கமின்று படுகொலை செய்தவர்களும் என்னை பொறுத்தவரை ஒரே ரகத்தினரே. 

ஈகத்துக்காக போராடவந்தவர்கள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு இருந்து இருக்கலாம் 
சொந்த போராளிகள் தளபதிகள் (தாஸ் அண்ணா உட்பட) கொன்றுவிட்டு 
ஊரில் ஏப்பம் விட்டுக்கொண்டு திரிந்ததை கூட பொறுத்துக்கொண்டுதான் போனார்கள் 

புலிகளின் தளபதி கப்டன் லிங்கத்தை வேட்டையாடி பின்பு கூட 
எல்லோரையும் ஓடும்படி நேருக்கு நேர் நின்று  ஒலிபெருக்கியியில் அறிவித்துவிட்டு 
நேரம் காலம் இடம் கூறிவிட்டுதான் ஆயுதங்களை வாங்க சென்றார்கள் 
அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தவர்களை ... அதே பாணியில் எதிர்கொண்டார்கள்.

நேரடியாக போராட துப்புக்கெட்டவர்கள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு இருந்து இருக்கலாம் 
உங்களின் பொய்களை நம்புவதுக்கு உங்களை போன்ற சிலர்தான் உண்டு. 

புலி பசித்தாலும் புல்லை தின்னாது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.