Jump to content

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது 


Recommended Posts

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது 

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது  என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளி யிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் நேற்றைய தினம் 1038 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்தமாக 140 இலட்சத்து 74 ஆயிரத்து 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 124  இலட்சத்து 29 ஆயிரத்து 564 பேர் குணமடைந் துள்ளனர், 14 இலட்சத்து 71 ஆயிரத்து 877 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண் ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

indian.jpg

 

Thinakkural.lk <p>இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது  என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 […]</p>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: பிணவறைகளில் காத்திருப்பு, மயானங்களில் நீண்ட வரிசை

  • கீர்த்தி தூபே
  • பிபிசி செய்தியாளர்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைகளில் இடம் தேட வேண்டியிருக்கிறது; உயிரிழந்து விட்டால் உடல்களைப் பெற பிணவறைகளிலும், பின்னர் எரிப்பதற்கு மயானத்திலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இது அமெரிக்காவோ பிரேசிலோ அல்ல, இந்தியா.

இந்தியாவில் நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்து விட்டது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் இடமில்லை. மற்றொருபுறம் மயானங்களில் நீண்ட காத்திருப்பு. நூறு ஆண்டுகளுக்கு முன் உலகை நடுங்க வைத்த ஸ்பானிஷ் ஃப்ளூ காலத்தை இது நினைவூட்டுகிறது.

புனேயில் உடல்களுடன் காத்திருக்கும் மக்கள்
 
படக்குறிப்பு,

புனேயில் உடல்களுடன் காத்திருக்கும் மக்கள்

மகாராஷ்டிராவில் பிணங்களுடன் நீண்ட வரிசை

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நிலைமை கவலைக்குரியதாக இருக்கிறது. மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை வைத்துக் கொண்டு காத்திருந்தவர்களிடமும், மயானங்களில் வேலை செய்வோரிடமும் பிபிசிக்காக பேசினோம்.

நம்முடன் பேசிய வருண் ஜங்கம் அரசின் மின்மயானத்தில் வேலை செய்கிறார்.

"இப்போது மதியம் ஒரு மணிதான் ஆகிறது. அதற்குள்ளாக 22 உடல்களை எரியூட்டிவிட்டோம். ஒரு நாளைக்கு 50 முதல் 60 உடல்களைத் தகனம் செய்கிறோம். ஒரு உடலை எரித்துவிட்டு அடுத்த உடலை எரிப்பதற்கு இடையில் கிடைக்கும் சிறிது நேரத்தில்தான் மதிய உணவு சாப்பிட வேண்டும். இங்கு ஆறு குளிர்விக்கும் பெட்டிகள் இருக்கின்றன. ஆனால் ஏராளமான உடல்கள் எடுத்துவரப்படுகின்றன. உடல்களுடன் மக்கள் வெளியே காத்திருக்க வேண்டியிருக்கிறது " என்றார் வருண்.

வருணுடன் தொலைபேசியில்தான் பேச முடிந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே, அடுத்த "வேலை" வந்துவிட்டதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.

வருணுடனான உரையாடல், நாட்டின் பல மயானங்களில் இருக்கும் நிலையின் சிறு எடுத்துக்காட்டுதான்.

மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனாவின் பரவல் வேகம் எடுத்திருக்கிறது. நாட்டின் மொத்த எண்ணிக்கையில் இந்த மாநிலங்களின் பங்கு 80 சதவிகிதம். இவற்றில் மகாராஷ்டிராவின் நிலை மிக மோசம். வரும் மே 1-ஆம் தேதி வரை அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உடல்களுடன் ஆம்புலன்ஸ்கள்
 
படக்குறிப்பு,

உடல்களுடன் ஆம்புலன்ஸ்கள்

குஜராத்தில் வெறுங்கைகளில் பிணங்களை எரிக்கும் ஊழியர்கள்

புனே மயான ஊழியர் வருணுக்கு 8 மணி நேரம்தான் வேலை. ஆனால் உடல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பதால், கூடுதல் நேரம் வேலை செய்தாக வேண்டியிருக்கிறது. இவருக்கு பிபிஇ பாதுகாப்பு உடையாவது இருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் உள்ள அரசு மின் மயானத்தில் தினேஷ் பாய் மற்றும் திரு பாய் ஆகியோர் முகக் கவசமும், கையுறையும்கூட இல்லாமல் வேலை செய்கிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு சராசரியாக 12 உடல்கள் வருமென்றும், இப்போது அந்த எண்ணிக்கை 25-ஆக அதிகரித்து விட்டதாகவும் பிபிசி குஜராத்தி சேவை நிருபர் பிபின் தன்காரியாவிடம் அவர்கள் தெரிவித்தனர்.

கொரோனாவில் உயிரிழந்தோரின் உடல்களை எரியூட்டும் பணியில் ஈடுபடுவோர் முழுக் கவச உடை அணிந்திருக்க வேண்டும் என அரசின் விதிமுறையில் உள்ளது. ஆனால் தினேஷ் பாய்க்கும், திருபாய்க்கும் அப்படி எதுவும் வழங்கப்படவில்லை. மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்ஸ்களில் உடல்கள் வரும்போது மட்டும் கையுறைகள் போன்றவை கிடைக்கின்றன. மற்ற நேரங்களில் வெறுங்கைகளுடன் வேலை செய்கிறார்கள்.

உடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மயானங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மயானத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் உடல்கள்
 
படக்குறிப்பு,

மயானத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் உடல்கள்

சூரத் மயானத்தில் 12 மணி நேரக் காத்திருப்பு

கொரோனாவால் அன்புக்குரியவர்கள் பாதிக்கப்படும்போது கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. முதலில் சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனைகளைத் தேடி அலைய வேண்டும். இடம் கிடைத்தாலும் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை மரணம் நேரிட்டுவிட்டால், வேதனையுடன் உடலை வாங்குவதற்குக் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு மயானத்திலும் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

அப்படி காத்திருந்து வலியுடன் இருந்த ஒரு குடும்பத்திடம் பிபிசிக்காக பேசினோம்.

ஹேமந்ந் ஜாதவ் ராஜ்கோட் நகருக்கு அருகேயுள்ள மோர்பியில் வசித்து வருகிறார். மருத்துவமனையில் இருந்து உடலைப் பெறுவதற்கு 12 நேரம் காத்திருந்ததாக அவர் கூறினார்.

தனது சகோதரரின் உடலைப் பெறுவதற்காக ராஜ்கோட் பொதுமருத்துவமனைக்கு காலை 5 மணிக்கு ஹேமந்த் வந்தார். இரவு 7 மணிக்கு பிபிசியிடம் பேசியபோதும் அவருக்கு உடல் கிடைக்கவில்லை.

"தொலைபேசியில் பேசியபோது உடல்நிலை முன்னேறி வருவதுபோலத் தெரிந்தது. விரைவில் வீடு திரும்பிவிடுவார் என நினைத்தோம். ஆனால் மருத்துவமனையில் இருந்து அழைத்து, அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள்" என்றார் ஹேமந்த்

ஆம்புலன்ஸ்

பட மூலாதாரம்,EPA / RAJAT GUPTA

எரிந்து உருகிய தகனமேடை

சூரத்தில் 24 மணி நேரமும் மயானங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் எரிவாயுவும், விறகும் மாறிமாறி பயன்படுத்தப்படுகின்றன. குருஷேத்த்ரா என்ற மயானத்தில் தொடர்ந்து உடல்கள் எரிக்கப்பட்டதால் தகன மேடையின் எரிவாயு உலை உருகிவிட்டதாக அதன் நிர்வாகிகளில் ஒருவரான பிரகாஷ் படேல் கூறினார்.

இங்குள்ள மயானங்களில் கடந்த ஆண்டில் சராசரியாக 25 உடல்கள் எரிக்கப்பட்டதாகவும், இப்போது ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அரசின் புள்ளி விவரங்களின்படி குஜராத்தில் நாள்தோறும் ஆறாயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனோ தொற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆமதாபாத், சூரத், ராஜ்காட் ஆகிய நகரங்கள் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

உத்தர பிரதேச மயானத்தில் விறகு கிடைக்கவில்லை

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உடல்களை எரிப்பதற்கான விறகுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மயானங்களில் பணிகளைச் செய்வதற்கான ஆள்களும் கிடைப்பதில்லை. உறவினர் ஒருவரின் உடலை எரிப்பதற்காக லக்னோவின் வைகுந்தம் மயானத்துக்குச் சென்ற தேவேஷ் சிங், தாங்களே எல்லாவற்றையும் செய்து கொண்டதாக பிபிசி ஹிந்தி நிருபர் சமீரத்மாஜ் மிஷ்ராவிடம் தெரிவித்தார்.

லக்னெளவின் வைகுந்தம், குலாலா காட் மயானங்கள் எப்போதும் நிறைந்திருக்கின்றன. கோவிட் இல்லாத மரணங்களின்போதும் உடல்களை வைத்துக் கொண்டு உறவினர்கள் காத்திருக்கும் காட்சிகளை நேரடியாகவே பார்க்க முடிகிறது.

ஆனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பதை நகராட்சியின் தலைமை மின்பொறியாளர் ராம் நகினா திரிபாதி மறுக்கிறார்.

"மின் மயானத்தில் ஒரு உடலை எரிப்பதற்கு ஒன்றரை மணி நேரமாகும். 45 நிமிடம் உடலை எரிப்பதற்கும், அடுத்த 45 நிமிடம் இயந்திரத்தை தயார் செய்வதற்கும் ஆகும். வைகுந்தம் மயானத்தில் இரண்டு இயந்திரங்களும், குலாலா காட்டில் ஒரு இயந்திரமும் உள்ளன. இவை தவிர விறகுகளைக் கொண்டு உடல்களை எரிப்பதற்காக 8 இடங்கள் இருக்கின்றன." என்கிறார் திரிபாதி.

இரு நாள்களுக்கு முன்பு தனது உறவினரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்ற சக்திலால் திரிவேதி, டோக்கன் பெற்ற பிறகு 6 மணி நேரம் காத்திருந்ததாகவும், அனைத்துக் காரியங்களையும் முடிப்பதற்கு 10 மணி நேரம் ஆனதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: பிணவறைகளில் காத்திருப்பு, மயானங்களில் நீண்ட வரிசை - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.