Jump to content

புலம்பெயர் இலங்கையர், அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட விரும்பும் அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

usa-sri-lanka.jpg

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஏனைய பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள்.

இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு தெற்காசிய நாடுகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம்.

அதேவேளை இருதரப்பினரதும் அக்கறைக்குரிய விடயங்கள் குறித்து தற்போது இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்களையும் பெரிதும் வரவேற்கின்றோம் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புலம்பெயர் இலங்கையர், அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட விரும்பும் அமெரிக்கா | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

ராசன்! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். இது உலக நியதி.

Link to comment
Share on other sites

இந்த சலுகையை நிராகரிக்க வேண்டாம், அமெரிக்காவின் முன்னாள் நிர்வாகங்கள் புலிகளுக்கு பல சலுகைகளை கோரியுள்ளன.
அனைத்து கோரிக்கையும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு அனைவருக்கும் தெரியும்.
அனைத்து அமெரிக்க கோரிக்கைகளையும் யூதர்கள் திறமையாக நிர்வகித்தனர்.
விளைவு ஒரு சக்திவாய்ந்த நாடு இஸ்ரேல். இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கு ஒரு பெரிய விலை கொடுத்தார்.
இஸ்ரேலிஸ் மாமா சாமுக்கு பல முக்கியமான தொழில்நுட்பங்களை இலவசமாக வழங்கினார். மத்திய கிழக்கில் பிழைக்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா

 
us-state-696x349.png
 52 Views

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடலை கொண்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தடை விதித்திருக்கும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு இராஜதந்திர வட்டாரங்களில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அரசுக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தெற்காசியப் பிராந்தியத்துடனான எமது தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் பெறுமதி மிக்க பங்காளிகளாக உள்ளனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உள்பட தெற்காசிய புலம்பெயர் சமூகத்தினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பாடலைக் கொண்டிருப்போம்” எனத் தெரிவித்திருக்கின்றது.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல புலம்பெயர்ந்த அமைப்புக்கள் கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைவிட, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா உட்பட பல நாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டனர்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தவுடன் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் ஜெனைிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாகக் கருதப்படும் நிலையில்தான் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரஸ்பரம் நலன்தரும் விடயங்களிலான பேச்சுக்கள் தொடரும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

 

https://www.ilakku.org/?p=47331

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா விடுக்கும் இந்த அழைப்பின் நோக்கம் தமிழரின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் இராஜதந்திர தளமொன்றை அமைத்து ஈழத்தமிழினத்திற்கு உதவுவதற்காகவா அல்லது இலங்கையில் தான் விரும்பாத சீனாவின் பிரசன்னத்தை அதே தமிழரை வைத்தே கையாள்வதற்காகவா? எதுவாகினும் அமெரிக்கா இதை வெளிப்படைதன்மையுடன் செய்யபோவதில்லை. எடுபிடிகள், கூலிப்படை, காட்டிகொடுப்போர், அள்ளக்கைகள் இப்படி ஏதாவது தனிதிறமையுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vanangaamudi said:

அமெரிக்கா விடுக்கும் இந்த அழைப்பின் நோக்கம் தமிழரின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் இராஜதந்திர தளமொன்றை அமைத்து ஈழத்தமிழினத்திற்கு உதவுவதற்காகவா அல்லது இலங்கையில் தான் விரும்பாத சீனாவின் பிரசன்னத்தை அதே தமிழரை வைத்தே கையாள்வதற்காகவா?

நிச்சயமாக இரண்டாவதுதான். ஆனால், தமிழ்த்தலைமைகள் (அப்படியொன்று இருக்கா என்ன?) இச்சந்தர்ப்பத்தைப் பேரம் பேசும் ஒரு சந்தர்ப்பமாகப் பார்த்து அரசியல் ரீதியான தீர்வொன்றுக்கு இலங்கையைத் தள்ள வேண்டும்.

ஆனால் , பொங்கலுக்கும், வருடப் பிறப்பிற்கும், தீபாவளிக்கும் வாழ்த்துச் செய்தி சொல்ல மட்டுமே அரசியலில் இருக்கும் கருங்காலிகள் இதைச் செய்வார்களா என்பது சந்தேகம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 14:40, vanangaamudi said:

இலங்கையில் தான் விரும்பாத சீனாவின் பிரசன்னத்தை அதே தமிழரை வைத்தே கையாள்வதற்காகவா?

நூறு வீதம் உண்மை. சோழியன் குடுமி சும்மா ஆடாது. போரினால் கணவரை இழந்தவருக்கு வீடு கட்டிக்குடுக்கினமாம் மனிதாபிமானமான இலங்கை இராணுவம், கூடிகூத்தடிச்சு அழிச்சவை இணைந்து செயற்படபோகினமாம். எல்லாம் காலம் செய்யும் திருவிளையாடல். அதுக்கு கிடைச்சான் தமிழன். ஏட்டிக்குப்போட்டியாக பக்கத்து வீட்டு பெரியண்ணரும் ஓடிவரப்போறார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 03:16, குமாரசாமி said:

ராசன்! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். இது உலக நியதி.

எப்படி அகப்பட்டாலும் நண்பனை காட்டிக்கொடுக்க மாட்டானுகள் மற்ற நண்பனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எப்படி அகப்பட்டாலும் நண்பனை காட்டிக்கொடுக்க மாட்டானுகள் மற்ற நண்பனும் 

இவரை தெரியுமா? அமெரிக்காவின் செல்லப்பிள்ளை.

Kosovo approves new army despite Serb opposition, NATO criticism | Reuters

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 23:28, Sean said:

இந்த சலுகையை நிராகரிக்க வேண்டாம், அமெரிக்காவின் முன்னாள் நிர்வாகங்கள் புலிகளுக்கு பல சலுகைகளை கோரியுள்ளன.
அனைத்து கோரிக்கையும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு அனைவருக்கும் தெரியும்.

என்னென்ன கோரிக்கைகள் புலிகளால் நிராகரிக்கப்பட்டன என்று சொல்ல முடியுமா பாஸ் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 18:07, தனிக்காட்டு ராஜா said:

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

இலங்கை கடல் படை என்பது பொருந்தாது ஆனாலும் கூட்டுப்படைகள் இணைந்து புலிகளின் கப்பலை வரிசையாக அழித்து  வருகையில் கடைசி கப்பல் தகர்க்கப்பட்ட  இடத்தில் இருந்து  அழிப்பாளர்களின் உண்மை  முகம் தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இவரை தெரியுமா? அமெரிக்காவின் செல்லப்பிள்ளை.

Kosovo approves new army despite Serb opposition, NATO criticism | Reuters

இஸ்ரேல் ராணுவத்தளபதி போல் இருக்கிறது அவரா இவர்?

5 hours ago, பெருமாள் said:

இலங்கை கடல் படை என்பது பொருந்தாது ஆனாலும் கூட்டுப்படைகள் இணைந்து புலிகளின் கப்பலை வரிசையாக அழித்து  வருகையில் கடைசி கப்பல் தகர்க்கப்பட்ட  இடத்தில் இருந்து  அழிப்பாளர்களின் உண்மை  முகம் தெரியும் .

அப்படி தெரிந்தும் என்ன செய்ய முடிந்த்து  ஆனால் யுத்தம்முடிந்தது முடித்து வைக்கப்பட்டது  இது எல்லோருக்கும் ஐ நா வரைக்கும் யாராவது வாய் திறக்கமுடியுமா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி தெரிந்தும் என்ன செய்ய முடிந்த்து  ஆனால் யுத்தம்முடிந்தது முடித்து வைக்கப்பட்டது  இது எல்லோருக்கும் ஐ நா வரைக்கும் யாராவது வாய் திறக்கமுடியுமா என்ன?

பல சந்தர்ப்பங்கள் லூப் கோல் loophole கிடைத்தன அதையெல்லாம் சுமத்திரன்  சம்பந்தன் போன்ற அகராதி பிடித்தவர்கள் தவற  விட்டார்கள் இப்ப கூட அருமையான டக் கிடைத்துள்ளது எடுத்த எடுப்பில் போர் குற்றம் நிறுவ முடியாது என்று எரியும்  கற்பூரத்தில அடிச்சு சத்தியம் பண்ணுகினம் இப்படியானவர்களை  வைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது .

யுத்தம் முடித்து வைக்கப்பட்டது உண்மையே புலி இல்லாத கடந்த பத்துவருட உலகம் தொழில் நுட்ப பாய்ச்சல் அபரிதமானது இப்பவும் பேச்சு வார்த்தை என்று இழுத்துக்கொண்டு புலி படையணிகள் அழிக்க படாமல் இருந்தால் யார் யார் பயந்து கொண்டு இருப்பினம்  தென்னாசியாவின் குடும்பி யாரிடம் இருந்து இருக்கும் உங்கள் சிந்தனைக்கு விட்டு செல்கிறேன் .

Link to comment
Share on other sites

  On 15/4/2021 at 18:28, Sean said:

இந்த சலுகையை நிராகரிக்க வேண்டாம், அமெரிக்காவின் முன்னாள் நிர்வாகங்கள் புலிகளுக்கு பல சலுகைகளை கோரியுள்ளன.
அனைத்து கோரிக்கையும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு அனைவருக்கும் தெரியும்.

என்னென்ன கோரிக்கைகள் புலிகளால் நிராகரிக்கப்பட்டன என்று சொல்ல முடியுமா பாஸ் ?

My Pentagon correspondent replied me "not to answer" you, because Pentagon identified that you are a "RAW" agent.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 03:07, தனிக்காட்டு ராஜா said:

கடைசியில் அமெரிக்கா கப்பல் அனுப்புனமாதிரித்தான் இருக்கும் சிங்கன் சறுக்கிறான் என்றால் அவன் அவன்ற லாபத்தை எடுக்கபோறான் நம்மள வச்சி என்பது தெரிகிறது 

சிறிலங்கா டயஸ்பரா என்று தான் சொல்லியிருக்கு ....டமிழ் டயஸ்பரா என சொல்லவில்லை....

இவர்கள் அறிக்கை விட முதல் உதயகம்பன்பிலா(சிறிலங்கா அமைச்சர்) அறிக்கை விட்டவர்...
சிறிலங்காவிலிருந்து ஒருவரும் புலம்பெயரவில்லை அப்படி ஒரு சமுகமே இல்லை என்று...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

சிறிலங்கா டயஸ்பரா என்று தான் சொல்லியிருக்கு ....டமிழ் டயஸ்பரா என சொல்லவில்லை....

இவர்கள் அறிக்கை விட முதல் உதயகம்பன்பிலா(சிறிலங்கா அமைச்சர்) அறிக்கை விட்டவர்...
சிறிலங்காவிலிருந்து ஒருவரும் புலம்பெயரவில்லை அப்படி ஒரு சமுகமே இல்லை என்று...
 

நான் கூட நினைக்கவில்லை அப்படியொரு அமைப்பு இயங்குகிறதா என  இருந்தாலும் அமைச்சர் என்னத்தை நினைத்து சொன்னாரோ தெரியல ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2021 at 07:20, குமாரசாமி said:

இவரை தெரியுமா? அமெரிக்காவின் செல்லப்பிள்ளை.

Kosovo approves new army despite Serb opposition, NATO criticism | Reuters

கொசோவோ சேர்பியர்களுக்கெதிராக பல இனப்படுகொலைகளைச் செய்தவரெல்லோ.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

கொசோவோ சேர்பியர்களுக்கெதிராக பல இனப்படுகொலைகளைச் செய்தவரெல்லோ.. 🤥

ஆம் அவரேதான்.

இவருக்கு ஐரோப்பிய யூனியனின் ஆதரவும் அமெரிக்காவின் ஆசீர்வாதமும் இருந்தது. ஆனால் இப்போது இவர் எங்கே???????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2021 at 02:28, தனிக்காட்டு ராஜா said:

நான் கூட நினைக்கவில்லை அப்படியொரு அமைப்பு இயங்குகிறதா என  இருந்தாலும் அமைச்சர் என்னத்தை நினைத்து சொன்னாரோ தெரியல ? 

அமேரிக்காவின் ஆசிய பிராந்திய கொள்கை வகுப்பாளர்கள் ....எங்களை விட சிறிலங்கா அரசியலையும் பிராந்திய அரசியலையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள் .

டமிழ் டயஸ்பரா என்ற சொல் பொதுவாக ஊடகஙளில் பாவிக்கப்படும் சொல்.....அதே சொல்லை அமேரிக்கா பாவித்தால் சிங்கள மக்கள் அமெரிக்கா மீது வெறுப்படைவார்கள்...அமெரிக்கா, மேற்குலகு, இந்தியா இவர்களுக்கு தற்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் தான் பிரச்சனை, தமிழ்மக்கள் மீதான மனித உரிமை மீறல் ,தமிழர் அரசியல் பிரச்சனை போன்றவை தொட்டுக்க பாவிக்கும் ஊறுகாய்....ஆகவே தான் சிறிலங்கா டயஸ்பரா என்று சொல்லி தாங்கள் நடுநிலையானவர்களாம் என சிங்கள மக்களை முதுகில் தட்டிகொடுக்கினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.