Jump to content

அமெரிக்கா அழைக்கிறது புலம்பெயர் தரப்பை. "உள்ளேன் ஐயா" சொல்ல எத்தனை பேர்


Recommended Posts

இந்த சலுகையை நிராகரிக்க வேண்டாம், அமெரிக்காவின் முன்னாள் நிர்வாகங்கள் புலிகளுக்கு பல சலுகைகளை கோரியுள்ளன.
அனைத்து கோரிக்கையும் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு அனைவருக்கும் தெரியும்.
அனைத்து அமெரிக்க கோரிக்கைகளையும் யூதர்கள் திறமையாக நிர்வகித்தனர்.
விளைவு ஒரு சக்திவாய்ந்த நாடு இஸ்ரேல். இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கு ஒரு பெரிய விலை கொடுத்தார்.
இஸ்ரேலிஸ் மாமா சாமுக்கு பல முக்கியமான தொழில்நுட்பங்களை இலவசமாக வழங்கினார். மத்திய கிழக்கில் பிழைக்க.

Good Luck Tamils.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் ரெடி

நீங்க ரெடியா?

நானும் ரெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணா நீங்க சொல்வதைத் தானே இந்தியா செய்திருந்தது.
தாங்கள் விரும்பிய மாதிரி செயற்படக் கூடியரை வைத்திருந்தது.
மீறிப் போன புலிகளை போட்டுத் தள்ள முயற்சி செய்து கடைசியில் வெற்றியும் கண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன் இந்த தளத்தில்.

மருதருடனும், இன்னுமொருவருடனும் விவாதித்துளேன். 

ஹொங்கோங்க்கினை இழந்து விட்ட மேற்குலகுக்கு, ஒரு பொருளாதார தளம் தேவை படுகின்றனது.

ஆசியாவின் 7 பொருளாதார புலிகளும் பிரச்சனை உள்ளவர்கள். தென்கொரியாவின் பிரச்சனை வட கொரியா. தாய்லாந்தின் பிரச்சனை, அரசியல் நிலைப்பாட்டில் தளம்பல். இந்தோனேசியா, மலேசியா முஸ்லிம் நாடுகள். சிங்கப்பூரிலோ 72% சீனர்கள். தைவான், சீனாவின் கழுகுகண்களில். ஹொங்கோங் போயே போய் விட்டது.

இலங்கையில் சீனா தென்பகுதியில் புகுந்து விட்டது.

மிஞ்சி இருப்பது வட, கிழக்கு. அந்த பகுதிகளின், பூர்வீக  குடிகள் பலர் இப்போது மேலை நாடுகளின் குடிகள். நம்பிக்கை வைக்க கூடியவர்கள்.

இந்த அகதிகளாக சென்று குடிகளான, 'குடியியல் நிலை' சார்ந்த நம்பிக்கையே, மத்திய கிழக்கில், இஸ்ரேல் என்னும் பலமிக்க நாடு ஒன்றினை அமைக்கவும், இன்றுவரை அமெரிக்க சார்பு நாடாக அது இருக்கவும் முடிந்தது.

அந்த நம்பிக்கையே அமெரிக்கா கொண்டுள்ளது. அதனை செயல்படுத்தவே, இப்போதைய அழைப்பு மட்டுமல்ல, கோத்தபாய ஜனாதிபதி ஆகியதும் நடந்தது. 

ஒரு போர் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரது குரல் சர்வதேசத்தில் வலுவாக இராது என்பதாலேயே, அமெரிக்க குடியுரிமையினை வேகமாக ரத்து செய்து, போட்டி இட வைத்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஆசியாவின் 7 பொருளாதார புலிகளும் பிரச்சனை உள்ளவர்கள். தென்கொரியாவின் பிரச்சனை வட கொரியா. தாய்லாந்தின் பிரச்சனை, அரசியல் நிலைப்பாட்டில் தளம்பல். இந்தோனேசியா, மலேசியா முஸ்லிம் நாடுகள். சிங்கப்பூரிலோ 72% சீனர்கள். தைவான், சீனாவின் கழுகுகண்களில். ஹொங்கோங் போயே போய் விட்டது.

உண்மையிலேயே, உங்களுக்கு இந்தியா ஒரு பொருளாதாரப் பூனை மாதிரியாகவாவது தெரியவில்லையா,நாதம்?

ஐ ஆம் ரியல்லி ஸாட்...!😗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புங்கையூரன் said:

உண்மையிலேயே, உங்களுக்கு இந்தியா ஒரு பொருளாதாரப் பூனை மாதிரியாகவாவது தெரியவில்லையா,நாதம்?

ஐ ஆம் ரியல்லி ஸாட்...!😗

இந்தியாவின் வங்கியியல் துறை மிக, மிக மோசமானது. அது ஒழுங்காக, இருந்திருந்தால், விஜய், மல்லையா லண்டனில், இருக்க முடியாது. அதாவது கடனே கிடைத்திருக்காது.

பிரிட்டனில், வங்கி ஒன்றில், மில்லியன் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு, புங்கையர், ஆஸ்திரேலியா ஓடி விட்டார் எண்டு நிலைமை ஒருபோதும் வராது. காரணம், கடன் - இடர் கணக்கு பண்ணி தான் கடனே கொடுப்பார்கள்.

Thomas Cook நிறுவனம், பலர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். 200மில்லியன் இருந்தால், தப்பி பிழைக்கும் என்ற நிலை. 

அரசும் உதவ மறுக்க, வங்கிகளும் கடன் தர மறுக்க, பழமையான ஒரு நிறுவனம், சுருண்டது.

loan -risk ஆய்வின் படி.... நிறுவனம் தாக்குப்பிடிக்காது என்று தெரிந்தே மறுத்தார்கள்.

இந்தியாவில், லஞ்சம், அரசியல் நெருக்கடி.... 

******

வட அமெரிக்காவிலும் பார்க்க, பிரிட்டனின் வங்கியியல் சிறப்பானது.

ஆசியாவில், ஹொங்கோங் தான் வங்கியியலில் முதலாம் இடம். அங்கே தான் HSBC வங்கி தலைமை அலுவலகம் இருந்தது.

சீனாவுக்கு ஹொங்கோங் கொடுக்க முதலே, லண்டனுக்கு தலைமை அலுவலகத்தினை, பிரிட்டிஷ் அரசு நகர்த்தி விட்டது.

அடுத்த, வங்கியியல் சிறப்பு, சிங்கப்பூர். அதுவும் 72% வீத சீனர்கள் உள்ள நாடு.

இலங்கை வங்கியியல் இப்போதும் கூட சிறப்பாக உள்ளது. இந்திய பொருளாதாரம் சிறப்பாகும் போது, இலங்கை வங்கித்துறையையே பயன்படுத்தும், அதாவது, அந்தளவுக்கு சிறப்பானதாக உள்ளது, என்று, இலங்கையின் பல பொருளாதார நிபுணர்கள் எழுதினார்கள். Credibility and quality of service.

இந்தியாவில் தனியார்துறை வங்கிகள் கூட, அரச வங்கிகள் போலவே அதிகாரிகள் எடுப்புச்சாய்ப்பு. (red tape-ism).

கரூர் வைஸ்யா , வியஜா பேங்க், பஞ்சாப் தேசிய வாங்கி, கனரா வங்கி இப்படி எல்லாம் புத்தீசல் போல வங்கிகள்.... எப்படி விளங்கும்?

London stock exchange, Colombo stock exchange இணை வாங்கி உள்ளதை அறிவீர்கள்.

ஹிட்லரை உதாரணத்துக்கு இழுக்கும் உந்த நாசமருந்த அரசியல் வாதிகளினால் என்ன நிலைமையில் நாடு இருக்கிறது என்பது தெரியும் தானே.

வங்கியியல் சிறப்பாக இருக்க, சிறிய நாடு தான் தோதானது போல தெரிகிறது.

ஆக, உங்களைப் போன்ற படித்த, கிருபனை போன்ற, IT வித்தகர்கள் நாட்டுக்கு போகும் போது, வங்கியியல் ஆசியாவில் சிறப்பானதாக இருக்கும்.... தமிழ் ஈழத்தில்...

Link to comment
Share on other sites

ஐந்து கண் நாடுகள் (USA,UK,Canada, Australia, NZ) உலகப் பொருளாதாரத்தில் மேலும் 6 நூற்றாண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தும்.
முழு இலங்கையும் + இந்தோனேசியாவும் சீனா அல்லது இந்தியாவின் செல்வாக்கின் கீழ் வந்தால், ஐந்து கண் நாடுகள் இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கத்தை இழக்கும்.
மேற்கூறிய அறிக்கைகள் பென்டகன் மற்றும் RAND கார்ப்பரேஷனால் வழங்கப்படுகின்றன.
கடந்த நான்கு அமெரிக்கா நிர்வாகங்கள் இந்த எச்சரிக்கையை புறக்கணித்தன. இப்போது வாஷிங்டன் டி.சி (Washington DC) இந்தியப் பெருங்கடலின் அறியாமையை அறுவடை செய்து வருகிறது.
ஐந்து கண் நாடுகளுக்கு எதிராக சீனாவும் இந்தியாவும் அனைத்து துறைகளிலும் சவாலாக வளர்ந்து வருகின்றன.
ஐந்து கண் நாடுகள் பொருளாதார முன்னணியில் மற்றும் மக்கள் முன்னணியில் இழந்து வருகின்றன.
ஆங்கிலம் பேசும் மற்றும் ஆங்கில அன்பான புலம்பெயர்ந்தோர் ஆசியாவிற்கு முன்னிலைப்படுத்த (Pivot to Asia-Pacific)மிகவும் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்தியாவின் வங்கியியல் துறை மிக, மிக மோசமானது. அது ஒழுங்காக, இருந்திருந்தால், விஜய், மல்லையா லண்டனில், இருக்க முடியாது. அதாவது கடனே கிடைத்திருக்காது.

பிரிட்டனில், வங்கி ஒன்றில், மில்லியன் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு, புங்கையர், ஆஸ்திரேலியா ஓடி விட்டார் எண்டு நிலைமை ஒருபோதும் வராது. காரணம், கடன் - இடர் கணக்கு பண்ணி தான் கடனே கொடுப்பார்கள்.

Thomas Cook நிறுவனம், பலர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். 200மில்லியன் இருந்தால், தப்பி பிழைக்கும் என்ற நிலை. 

அரசும் உதவ மறுக்க, வங்கிகளும் கடன் தர மறுக்க, பழமையான ஒரு நிறுவனம், சுருண்டது.

loan -risk ஆய்வின் படி.... நிறுவனம் தாக்குப்பிடிக்காது என்று தெரிந்தே மறுத்தார்கள்.

இந்தியாவில், லஞ்சம், அரசியல் நெருக்கடி.... 

******

ஆசியாவில், ஹொங்கோங் தான் வங்கியியலில் முதலாம் இடம். அங்கே தான் HSBC வங்கி தலைமை அலுவலகம் இருந்தது.

சீனாவுக்கு ஹொங்கோங் கொடுக்க முதலே, லண்டனுக்கு தலைமை அலுவலகத்தினை, பிரிட்டிஷ் அரசு நகர்த்தி விட்டது.

அடுத்த, வங்கியியல் சிறப்பு, சிங்கப்பூர். அதுவும் 72% வீத சீனர்கள் உள்ள நாடு.

இலங்கை வங்கியியல் இப்போதும் கூட சிறப்பாக உள்ளது. இந்திய பொருளாதாரம் சிறப்பாகும் போது, இலங்கை வங்கித்துறையையே பயன்படுத்தும் என்று, இலங்கையின் பல பொருளாதார நிபுணர்கள் எழுதினார்கள். London stock exchange, Colombo stock exchange இணை வாங்கி உள்ளதை அறிவீர்கள்.

ஹிட்லரை உதாரணத்துக்கு இழுக்கும் உந்த நாசமருந்த அரசியல் வாதிகளினால் என்ன நிலைமையில் நாடு இருக்கிறது என்பது தெரியும் தானே.

ஆக, உங்களைப் போன்ற படித்த, கிருபனை போன்ற, IT வித்தகர்கள் நாட்டுக்கு போகும் போது, வங்கியியல் ஆசியாவில் சிறப்பானதாக இருக்கும்.... தமிழ் ஈழத்தில்...

நாதமுனி...உங்கள் பதிவு...சில பழைய நினைவுகளைக் கிளறி விட்டது!

நாங்கள் வெளி நாடு வெளிக்கிட்ட காலத்தில் முதன் முதலில் எங்களுடன் எடுத்துச் சென்ற முதலீடு இவர்களது பயணக் காசோலை நூறு பவுண்ட்ஸ் பெறுமதியானது தான்! வந்த சில நாட்களிலேயே அதைப் பதிவுத் தபாலில் திருப்பி அனுப்பி விட்டோம் என்பது வேறு கதை!

அந்த நாட்களில் பிறிஸ்டல் என்று ஒரு சிகரட் இருந்தது! அதை விளம்பரப் படுத்தும் போது...Bristol won several gold medals என்று தான் விளம்பரம் செய்வார்கள்! முதன் முதலாக கொப்பன் கேஹன் விமான நிலையத்தில்...தற்காலிக நண்பனாகிய ஒரு வெள்ளையிடம், எமது சிகரட்டின் பெருமையை எடுத்து விளக்கிய எம்மவர் ஒருவர் அவருக்கு அன்பளிப்பாக ஒரு சிகரட்டைக் கொடுத்தார்! இரண்டே இரண்டு இழுவை தான்...! சிகரட்  கொடுத்தவருக்கே திருப்பிக் கொடுக்கப்பட்டது! கொடுத்தவருக்கே நம்பவே முடியவில்லை!

இது போலத் தான்...இந்தியப் பொருளாதாரமும்..! தரம் என்பது அறவே கிடையாது! நாங்கள் வாங்கும் மளிகைச் சாமானிலிருந்து call centres  வரை எல்லாவற்றிலுமே ஒரு சுத்து மாத்து மறைந்திருக்கும்! அது பொருளாதரப் பூனயாக மட்டுமல்ல...பொருளாதார எலியாகக் கூட வர முடியாது!

நன்றி...நாதம்ஸ்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புங்கையூரன் said:

நாதமுனி...உங்கள் பதிவு...சில பழைய நினைவுகளைக் கிளறி விட்டது!

இது போலத் தான்...இந்தியப் பொருளாதாரமும்..! தரம் என்பது அறவே கிடையாது! நாங்கள் வாங்கும் மளிகைச் சாமானிலிருந்து call centres  வரை எல்லாவற்றிலுமே ஒரு சுத்து மாத்து மறைந்திருக்கும்! அது பொருளாதரப் பூனயாக மட்டுமல்ல...பொருளாதார எலியாகக் கூட வர முடியாது!

நன்றி...நாதம்ஸ்..!

இரு எழுத்து பெயரில் பிராண்ட் பெயரைக் கொண்ட, மளிகை பொருட்களை உருவாக்கி, வியாபாரம் செய்யும் கனேடிய நிறுவனம்.

இதன் கனேடிய உரிமையாளர், ஐரோப்பிய சந்தையினை குறிவைத்து, கனடாவில் இருந்து பொருட்களை அனுப்பினார், அவரது London மச்சான் மூலமாக.

ஆர்வமில்லாமல் தொடங்கிய அவரோ, வியாபாரத்தினை பார்த்து ஆர்வமாகி விட்டார்.

எதுக்கு ஒரு சிறு கமிஷன் மட்டும் என்று, இந்தியாவில் இருந்து ஆர்டர் பண்ண தொடங்கினார், கனடாகாரருக்கு தெரியாமல், அதே பிராண்டில்.

வந்தது, தரம் குறைவானது, தடை செய்யப்பட்ட பொருட்களுடன் வந்த நான்கு கொள்கலன்களை தடுத்து விட்டார்கள்.

இறுதியில், கனடா பிராண்டினை அப்படியே வைத்துக்கொண்டு, நாலு எழுத்தில் வேறு பிராண்டினை உருவாக்கி, இந்தியாவில் இருந்து எடுத்து சந்தைப்படுத்துகிறார்கள். ஆனால், நான் இரண்டையுமே வாங்குவது இல்லை.

இதுதான் இந்திய சந்தை நிலை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.