Jump to content

சைபர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சைபர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா!

சைபர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா!

ரஷ்யாவின் சைபர் தாக்குதல்கள் மற்றும் பிற விரோத செயல்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

டஸன் கணக்கான ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைக்கும் இந்த நடவடிக்கைகள், ரஷ்யாவின் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பாரிய ‘சோலார் விண்ட்ஸ்’ இணைய ஊடுருவலுக்கு பின்னால் ரஷ்ய உளவுத்துறை இருந்ததாகவும், 2020ஆம் ஆண்டு தேர்தலில் மாஸ்கோ தலையிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும், ரஷ்யா அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில் விரிவாக உள்ளன.

முன்னதாக கடந்த மாதம் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா ஏழு ரஷ்ய அதிகாரிகள் மற்றும் ஒரு டஸன் அரசாங்க நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1210016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத் தடைகளுடன் ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுகிறது அமெரிக்கா

10 ரஷ்ய இராஜதந்திரிகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதாகவும், பல நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் அமெரிக்க ஜானதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

800.jpeg

அத்துடன் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தலையிடுவதற்கும் கூட்டாட்சி அமைப்புகளை ஹேக்கிங் செய்வதற்கும் ரஷ்யா பொறுப்புக் கூற வேண்டும் என்றும் பைடன் நிர்வாகம் கூறியுள்ளது.

அமெரிக்க ஜனநாயகத்தின் மையப்பகுதியைக் குறைப்பதாகக் கூறும் செயல்களுக்காக ரஷ்யாவைத் தண்டிப்பதற்கும், மொஸ்கோ மீது பொருளாதார செலவுகளைத் திணிப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலச் செயல்களைத் தடுப்பதற்கும், நிதிக் கடன் வாங்குவதற்கான திறனை இலக்காகக் கொள்வதற்கும் இந்த கடுமையான தடைகள் வழிவகுக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

டஜன் கணக்கான ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைக்கும் இந்த நடவடிக்கைகள், "ரஷ்யாவின் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு நடவடிக்கைகளை" தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பாரிய "சோலார் விண்ட்ஸ்" ஹேக்கின் பின்னால் ரஷ்ய உளவுத்துறை இருந்ததாகவும், 2020 தேர்தலில் மொஸ்கோ தலையிட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

எனினும் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த ரஷ்யா, இது குறித்து தாம் பதிலளிப்பதாகவும் கூறியது.

வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய பொருளாதாரத் தடைகள் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில் விரிவாக உள்ளன. 

இவற்றுள் நாட்டின் இணைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஆறு ரஷ்ய நிறுவனங்கள் மீதான தடைகள், கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தலையிட முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 32 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடைகள் ஆகியவையும் இவற்றுள் அடங்களும்.

அத்துடன் வெளியேற்றப்பட்ட 10 இராஜதந்திரிகளில் ரஷ்ய உளவுத்துறையின் பிரதிநிதிகளும் அடங்குவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் இந்த பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவுடனான பதட்டங்களை அதிகரிப்பது உறுதி.

 

https://www.virakesari.lk/article/103850

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சைபர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா!

சைபர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா!

ரஷ்யாவின் சைபர் தாக்குதல்கள் மற்றும் பிற விரோத செயல்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

டஸன் கணக்கான ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைக்கும் இந்த நடவடிக்கைகள், ரஷ்யாவின் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பாரிய ‘சோலார் விண்ட்ஸ்’ இணைய ஊடுருவலுக்கு பின்னால் ரஷ்ய உளவுத்துறை இருந்ததாகவும், 2020ஆம் ஆண்டு தேர்தலில் மாஸ்கோ தலையிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும், ரஷ்யா அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில் விரிவாக உள்ளன.

முன்னதாக கடந்த மாதம் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா ஏழு ரஷ்ய அதிகாரிகள் மற்றும் ஒரு டஸன் அரசாங்க நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1210016

சரி சரி இருந்துட்டு போகட்டும், வைகாசி 18, கார்த்திகை 27.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.