Jump to content

அம்மாவின் முதலாவது துவசமான இன்று - கோழிப்பண்ணை ஊக்குவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரில் பலருக்கும் தெரிந்த எல்லோருக்கும் உதவியாக இருந்த அதிலும் எமது பெற்றோருக்கு நற்பணிகள் பலவும் செய்த ஒருவரும் அவரது குடும்பத்தினரும் கடைசி காலத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படாமல் வாழட்டும் என்பதற்காக அவர்களுக்கு
செலவுக்கு பணத்தை அனுப்புவதை விடுத்து
அவர்களின் நிலை அறிந்து அவர்களின் விருப்பு முயற்சி ஆளுமையை கேட்டு கண்டறிந்து உதவுவோம் என்ற  நிலைப்பாட்டுக்கு ஏற்ப அங்குள்ள எங்கள் பெரியப்பாவின் பேரன் நேரில் சென்று அவர்கள் அனைவரையும் ஒன்று கூடி பேசி அவர்கள் தமது கடைசி மகளின் வீட்டில் தான் (வன்னியில்)  இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களது ஒருமித்த வேண்டுகோளுக்கு இணங்க அவர்களது கடைசி மகளது வீட்டிலேயே அவர்களது நீண்ட நாள் கனவான கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி தாருங்கள் என்று ஒருமித்த குரலில் கேட்டதற்கு இணங்க

அம்மாவின் முதலாவது துவசமான இன்று

கோழிக்கோடு. - ‪140 000‬ ரூபாய்கள்

கோழிகள் - ‪100 000‬ ரூபாய்கள்
‪60 - 6‬ மாதக்கோழிகள்
40 - முட்டை இடும் கோழிகள்
10 - சேவல்கள்

குழாய்கிணறு - ‪110 000‬ ரூபாய்கள்
மொத்தம் = ‪350 000‬ ரூபாய்கள்

(அத்துடன் 3 மாதத்துக்கு தேவையான கோழிகளுக்கான உணவு, மருந்துகள் மற்றும் உணவு, தண்ணீர் கொடுக்க தேவையான பாத்திரங்களும் வாங்கி கொடுக்க பட்டுள்ளது)

அத்துடன் அம்மாவின் முதலாவது துவசமான இன்று அந்த பகுதியில் வாழும் 100 பேருக்கு அம்மாவின் நினைவாக சாப்பாடு கொடுக்க போதுமான அரிசி, அனைத்து மரக்கறிகள் மற்றும் தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மாவின் நினைவாக அம்மாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து பங்களித்து 
இது போன்ற ஒரு குடும்பத்துக்கு வாழ்வின் இறுதிக்காலத்தில் தாமே உழைத்து மகிழ்வாக வாழ உதவ முடிந்ததில் மிகவும் மன மகிழ்வடைகின்றோம்.

https://photos.app.goo.gl/zRtFeueuLGfzmn5x6

தகவல் : விசுகு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு... ஒரு  குடும்பத்தை மேம்படுத்தி விடுவதை போன்ற, 
செயல்  என்பது மிகவும் பொருத்தமானது.   👍

இதனை... உங்கள் அம்மாவின் திவசத்திற்கு செய்ததை,
அவர் மிகவும், பெருமையுடன்,  மனம் மகிழ்வார் என்பது உறுதி. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

அம்மாவின் நினைவாக அம்மாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து பங்களித்து 
இது போன்ற ஒரு குடும்பத்துக்கு வாழ்வின் இறுதிக்காலத்தில் தாமே உழைத்து மகிழ்வாக வாழ உதவ முடிந்ததில் மிகவும் சந்தோசப்படுகின்றோம்.

அம்மா இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் நினைவில் ஒரு குடும்பம் பொருளாதாரத்தில் முன்னேறவும், பலர் பசியாறவும் செய்த பெருங்காரியம்🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செயல், சொல்லி வேல இல்ல ........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட ஒரு மகன் அம்மாவின் நினைவாகப்  பெரிதாக எதையும் செய்ய முடியாது
உங்களின் நல்ல உள்ளத்தின் வெளிப்பாட்டிற்கு நன்றிகள் கோடி அண்ணா🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துவதற்கு அவர்கள் வார்த்தைகளைத் தேடுவார்கள்....!

எல்லோரும் இவ்வாறே....நினைவு கூர்தல்களை நிகழ்த்தினால்.....வானம் தானே எமது இனத்தின் எல்லையாகும்!

நன்றி...உங்கள் குடும்பத்தினருக்கு...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றீர்கள், வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடியும் விசுகர்!
ஊருக்கு ஒரு விசுகு இருந்தால் சகலதும் நலமே.

Link to comment
Share on other sites

எந்தக் குழந்தையை நினைந்து தாயின் உள்ளம் குளிர்கிறதோ அந்தக்குழந்தையின் வாழ்வு சிறக்கும்.அவ்வகையில் உங்கள் வாழ்வும் சிறக்கும்.முன் உதாரணமான நற்செயல் சகோ.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எடுத்துக்காட்டான செயல் விசுகு

 

Link to comment
Share on other sites

ஊரிலுள்ளள உறவுகளுக்கு உதவ நினைக்கும் உள்ளங்களுக்கான நல்ல முன்னுதாரணம். நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குகதாசன் அண்ணை 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 12:53, விசுகு said:

எமது ஊரில் பலருக்கும் தெரிந்த எல்லோருக்கும் உதவியாக இருந்த அதிலும் எமது பெற்றோருக்கு நற்பணிகள் பலவும் செய்த ஒருவரும் அவரது குடும்பத்தினரும் கடைசி காலத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படாமல் வாழட்டும் என்பதற்காக அவர்களுக்கு
செலவுக்கு பணத்தை அனுப்புவதை விடுத்து
அவர்களின் நிலை அறிந்து அவர்களின் விருப்பு முயற்சி ஆளுமையை கேட்டு கண்டறிந்து உதவுவோம் என்ற  நிலைப்பாட்டுக்கு ஏற்ப அங்குள்ள எங்கள் பெரியப்பாவின் பேரன் நேரில் சென்று அவர்கள் அனைவரையும் ஒன்று கூடி பேசி அவர்கள் தமது கடைசி மகளின் வீட்டில் தான் (வன்னியில்)  இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்களது ஒருமித்த வேண்டுகோளுக்கு இணங்க அவர்களது கடைசி மகளது வீட்டிலேயே அவர்களது நீண்ட நாள் கனவான கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி தாருங்கள் என்று ஒருமித்த குரலில் கேட்டதற்கு இணங்க

அம்மாவின் முதலாவது துவசமான இன்று

கோழிக்கோடு. - ‪140 000‬ ரூபாய்கள்

கோழிகள் - ‪100 000‬ ரூபாய்கள்
‪60 - 6‬ மாதக்கோழிகள்
40 - முட்டை இடும் கோழிகள்
10 - சேவல்கள்

குழாய்கிணறு - ‪110 000‬ ரூபாய்கள்
மொத்தம் = ‪350 000‬ ரூபாய்கள்

(அத்துடன் 3 மாதத்துக்கு தேவையான கோழிகளுக்கான உணவு, மருந்துகள் மற்றும் உணவு, தண்ணீர் கொடுக்க தேவையான பாத்திரங்களும் வாங்கி கொடுக்க பட்டுள்ளது)

அத்துடன் அம்மாவின் முதலாவது துவசமான இன்று அந்த பகுதியில் வாழும் 100 பேருக்கு அம்மாவின் நினைவாக சாப்பாடு கொடுக்க போதுமான அரிசி, அனைத்து மரக்கறிகள் மற்றும் தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மாவின் நினைவாக அம்மாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து பங்களித்து 
இது போன்ற ஒரு குடும்பத்துக்கு வாழ்வின் இறுதிக்காலத்தில் தாமே உழைத்து மகிழ்வாக வாழ உதவ முடிந்ததில் மிகவும் மன மகிழ்வடைகின்றோம்.

https://photos.app.goo.gl/zRtFeueuLGfzmn5x6

தகவல் : விசுகு 

அம்மாவின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணை. உங்களை போலவே அவரும், இல்லை அவரை போலவே நீங்களும் உதவும் குணம் உள்ளவராக இருப்பது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முதலில்  படங்களை இணைக்க  முடியவில்லை (தெரியவில்லை)

spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

இப்பொழுது ஏன் இதை இணைக்கின்றேன்  என்பதற்கான  பதில் அடுத்த  புதன்கிழமை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  முன் மாதிரியான செயல், வாழ்த்துகள் விசுகு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.