Jump to content

இலங்கைக்குள் சீன பிராந்தியம்- தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய காலகட்டம் : ஜனாதிபதி உணர்ந்து கொள்ள வேண்டும் - ஜே.வி.பி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

 

இலங்கைக்குள் சீன பிராந்தியத்தை ஸ்தாபிப்பதற்காக மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் உணர்ந்து கொள்ள வேண்டும். 

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் சர்வசன வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

 

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு நியமனத்திற்கான சட்ட மூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானதாகும். 

இந்த சட்டமூலம் நகரசபை சட்டம் மற்றும் முதலீட்டு சட்டம் உள்ளிட்ட 7 சட்டங்களுக்கும் அப்பாற்பட்டதாகக் காணப்படுகிறது. 

அத்தோடு இந்த சட்ட மூலத்திற்கு அமைய கொழும்பு துறைமுக நகரம் எந்தவொரு நகரசபைக்கோ பிரதேசசபைக்கோ உட்படாததாகவே காணப்படுகிறது. குறைந்தபட்சம் கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்டதாகக் கூட இது அமையவில்லை.

 

நாட்டில் எந்தவொரு பகுதியானாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே அவற்றை ஆட்சி செய்வார்கள். ஆனால் கொழும்பு துறைமுக நகரம் அமைந்துள்ள 1115 ஏக்கர் நிலப்பகுதியினை ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுவையன்றி வேறு எவரும் நிர்வகிக்க முடியாது. அத்தோடு இங்கு பொருட்களை கொள்வனவு செய்து வெளியேறும் போது அவற்றுக்கு வரி செலுத்தப்பட வேண்டும்.

 

இதில் சீனாவின் 80 வீத முதலீடு காணப்படுவதால் குறித்த சீன முதலீட்டு நிறுவனத்தின் தேவைக்கு ஏற்பவும் அழுத்தத்திற்கு அமையவும் இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் இராஜதந்திர பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதே  இதன் இலக்காகும். மாறாக இலங்கைக்கு இதனால் எவ்வித நன்மையும் கிடையாது.

 

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய கால கட்டம் இதுவாகும். 

இலங்கைக்குள் சீன பிராந்தியத்தை உருவாக்குவதற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரமின்றி , சர்வசன வாக்கெடுப்பை நடத்தி நிறைவேற்ற வேண்டும்.

 

எவ்வாறிருப்பினும் நாட்டை பிரித்து அதனை ஏனைய நாடுகளுக்கு பகிரிந்தளிக்கும் உரிமை ஜனாதிபதிக்குக் கிடையாது. இது நாட்டின் சொத்து என்பதால் இது தொடர்பில் எதிர்ப்புக்களை வெளியிட மக்களுக்கு உரிமை உண்டு. எவ்வாறிருப்பினும் இந்த சட்ட மூலம் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படக் கூடாது என்பதற்காகவே 5 நாட்கள் தொடர் விடுமுறை வரும் காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

இது தொடர்பான கருத்துக்களை வெளியிட்ட ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறான நிலைமை எனில் சாதாரண மக்களின் நிலைமை எவ்வாறிருக்கும் என்று சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி பொறுப்பேற்றதன் பின்னர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் இவர் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

எனவே நீதிமன்றம் நாட்டின் இறையாண்மையை கருத்திற் கொண்டும் நாட்டின் எதிர்காலம் , அரசியலமைப்பு மற்றும் அடிப்படை சட்டம் என்பவற்றை பிரதானமாகக் கொண்டு சிறந்த தீர்ப்பினை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய காலகட்டம் : ஜனாதிபதி உணர்ந்து கொள்ள வேண்டும் - ஜே.வி.பி. | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

கழுத்துக்கு மேல் வெள்ளம் போனபின் குத்தி  முறியினம் .

சிலோன்லை இருக்கிற சைனிஸ் ஏரியாவுக்கை  போறதெண்டால் சீனா விசா கட்டாயம் எண்ட நிலை வரும் போல கிடக்கு..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

கழுத்துக்கு மேல் வெள்ளம் போனபின் குத்தி  முறியினம் .

நாட்டுக்கு ஆபத்து சீனாவினால் அல்ல,😀 தமிழர்களினாலும் ,மற்றும் முஸ்லீம்களினாலும் மட்டுமே இந்த உண்மை தெரியாமல்
நீங்கள் எமது அரசை குற்றம் சாட்டுவதை ஏற்று கொள்ள முடியாது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.