Jump to content

சின்ன கலைவாணர் விவேக் காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை!

நடிகர் விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை- தமிழக அரசு அறிவிப்பு!

மறைந்த  பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவேக்கின் பூதலுடல் இன்று (சனிக்கிழமை) மாலை விருகம்பாக்கத்தில் மின் தகன டேடையில் தகனம் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக அரசு இந்த அரசாணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் அனைவரது மனங்களிலம் நீங்காத இடம்பிடித்துள்ள விவேக்கின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், அவரின் கலை மற்றும் சமூகச் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அன்னாரின் இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதற்கு அரசு ஆணையிட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக், மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் இரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருவதுடன் திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

https://athavannews.com/2021/1210278

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சின்னக் கலைவாணருக்கு கண்ணீரஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் என்பதற்கும் மேலாக நல்ல மனித நேயம் மிக்கவர். சமூக சிந்தனையாளர்.
இவரின் இழப்பு பேரிழப்பு.

ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் கலைவாணரே சிந்திக்கவைத்தே  சென்றுவிட்டீர்கள் உங்கள் மகனின் இழப்பையும் தாங்கி திரையுலகில் சிரிக்க வைத்தீர்கள் இன்று அவனை காண சென்றுள்ளீர்களோ என எண்ணத்தோன்றுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்...   விவேக் பேச்சு.   (15.04.2021)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக திரையுலகில் தனித்துவமான நடிகர் விவேக். அவரின் மறைவு குறித்து குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
கொரோனா தடுப்பூசி ஏற்றிய உடன் அவரின் மரணம் சம்பவித்ததால் இந்த அசம்பாவிதம் நடந்ததின் பின்னணி பல ஐரோப்பிய நாடுகளில் தடைசெய்யப்பட்ட அஸ்ரா செனெக்கா தடுப்பூசி போன்ற மருந்துகளின் பக்க விளைவான இரத்த உறைவு தான் காரணம் என எண்ணத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்🙏

Link to comment
Share on other sites

சிரிப்புடன் சிந்தனையையும் விதைத்த ஒரு சிறந்த கலைஞன்.என்ன செய்வது. எந்தத் திறமையும் எமனின் முன் செல்லாது.அவரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போய்வாருங்கள் கலைஞரே. உங்கள் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.

😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்!

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்!

மறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்வில், விவேக்கின் கலை மற்றும் சமூகப் பணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்பின்னர், விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளைச் செய்ததுடன் உடல், மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

https://athavannews.com/2021/1210333

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை சேர்ந்த... போண்டா மணி, 
விவேக்குடன்... 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 
அவர்,  கூறுவதை கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விவேக் மரணம் - றோக்குத்தர் - தடுப்பூசி குறித்த விளக்கம்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக்கின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலமும் பேசப்படக் கூடிய ஓர் கலைஞன்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையை சேர்ந்த... போண்டா மணி, 
விவேக்குடன்... 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 
அவர்,  கூறுவதை கேளுங்கள்.

 

பண்பான, உயரிய சிந்தனைகள் நிறைந்த சிறந்ததொரு  உரையாடல். எமக்கு தெரியாத விடயங்களையும், நாம் பார்க்காத கோணங்களையும் சொல்கின்றது. காண்பிக்கின்றது.

விவேக் அவர்கள் விட்டுச்சென்ற தன்னலமற்ற சேவையை தொடர்வதில் அனைவரும் பங்குகொள்ளவேண்டும். 

ஒரு ஆள் ஒரு வருடத்துக்கு ஒரு மரம் நடுகை செய்து அதை வளர்த்துவிட்டாலே சமூகத்துக்கு செய்கின்ற பெரும் புண்ணியமாக போகும். பிறந்தநாள் பரிசாக மரம் ஒன்றை கொடுத்து அதை வளர்த்து எடுக்கும் பொறுப்பை பிள்ளைகளிடம் கொடுக்கலாம். ஒவ்வொருவரும் தமது பிறந்ததினத்தின்போது நினைவாக ஒரு மரத்தை நடுகை செய்து வளர்த்து எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் அந்த புண்ணியவானின் ஆத்மா வந்து  இளைப்பாறட்டும்.

Link to comment
Share on other sites

 

குறைந்த பட்சம் தமிழ்பேசும் மக்களிடையே ஆவது "ஒற்றுமை" என்ற விவேக்கின் ஆதங்கம் செயல்படுமா?

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.