Jump to content

சின்ன கலைவாணர் விவேக் காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை!

நடிகர் விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை- தமிழக அரசு அறிவிப்பு!

மறைந்த  பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவேக்கின் பூதலுடல் இன்று (சனிக்கிழமை) மாலை விருகம்பாக்கத்தில் மின் தகன டேடையில் தகனம் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக அரசு இந்த அரசாணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் அனைவரது மனங்களிலம் நீங்காத இடம்பிடித்துள்ள விவேக்கின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், அவரின் கலை மற்றும் சமூகச் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அன்னாரின் இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதற்கு அரசு ஆணையிட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக், மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் இரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருவதுடன் திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

https://athavannews.com/2021/1210278

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சின்னக் கலைவாணருக்கு கண்ணீரஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் என்பதற்கும் மேலாக நல்ல மனித நேயம் மிக்கவர். சமூக சிந்தனையாளர்.
இவரின் இழப்பு பேரிழப்பு.

ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் கலைவாணரே சிந்திக்கவைத்தே  சென்றுவிட்டீர்கள் உங்கள் மகனின் இழப்பையும் தாங்கி திரையுலகில் சிரிக்க வைத்தீர்கள் இன்று அவனை காண சென்றுள்ளீர்களோ என எண்ணத்தோன்றுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்...   விவேக் பேச்சு.   (15.04.2021)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக திரையுலகில் தனித்துவமான நடிகர் விவேக். அவரின் மறைவு குறித்து குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
கொரோனா தடுப்பூசி ஏற்றிய உடன் அவரின் மரணம் சம்பவித்ததால் இந்த அசம்பாவிதம் நடந்ததின் பின்னணி பல ஐரோப்பிய நாடுகளில் தடைசெய்யப்பட்ட அஸ்ரா செனெக்கா தடுப்பூசி போன்ற மருந்துகளின் பக்க விளைவான இரத்த உறைவு தான் காரணம் என எண்ணத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்🙏

Link to comment
Share on other sites

சிரிப்புடன் சிந்தனையையும் விதைத்த ஒரு சிறந்த கலைஞன்.என்ன செய்வது. எந்தத் திறமையும் எமனின் முன் செல்லாது.அவரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போய்வாருங்கள் கலைஞரே. உங்கள் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.

😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்!

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்!

மறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்வில், விவேக்கின் கலை மற்றும் சமூகப் பணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்பின்னர், விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளைச் செய்ததுடன் உடல், மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

https://athavannews.com/2021/1210333

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை சேர்ந்த... போண்டா மணி, 
விவேக்குடன்... 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 
அவர்,  கூறுவதை கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விவேக் மரணம் - றோக்குத்தர் - தடுப்பூசி குறித்த விளக்கம்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவேக்கின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலமும் பேசப்படக் கூடிய ஓர் கலைஞன்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையை சேர்ந்த... போண்டா மணி, 
விவேக்குடன்... 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 
அவர்,  கூறுவதை கேளுங்கள்.

 

பண்பான, உயரிய சிந்தனைகள் நிறைந்த சிறந்ததொரு  உரையாடல். எமக்கு தெரியாத விடயங்களையும், நாம் பார்க்காத கோணங்களையும் சொல்கின்றது. காண்பிக்கின்றது.

விவேக் அவர்கள் விட்டுச்சென்ற தன்னலமற்ற சேவையை தொடர்வதில் அனைவரும் பங்குகொள்ளவேண்டும். 

ஒரு ஆள் ஒரு வருடத்துக்கு ஒரு மரம் நடுகை செய்து அதை வளர்த்துவிட்டாலே சமூகத்துக்கு செய்கின்ற பெரும் புண்ணியமாக போகும். பிறந்தநாள் பரிசாக மரம் ஒன்றை கொடுத்து அதை வளர்த்து எடுக்கும் பொறுப்பை பிள்ளைகளிடம் கொடுக்கலாம். ஒவ்வொருவரும் தமது பிறந்ததினத்தின்போது நினைவாக ஒரு மரத்தை நடுகை செய்து வளர்த்து எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் அந்த புண்ணியவானின் ஆத்மா வந்து  இளைப்பாறட்டும்.

Link to comment
Share on other sites

 

குறைந்த பட்சம் தமிழ்பேசும் மக்களிடையே ஆவது "ஒற்றுமை" என்ற விவேக்கின் ஆதங்கம் செயல்படுமா?

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.