Jump to content

மக்கள் மத்தியில் எமது இனம் சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும்!-த.கலையரசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மத்தியில் எமது இனம் சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும்!-த.கலையரசன்

 
IMG_20210415_163818.jpg

 

(குமணன்)

எமது இனம் சார்ந்த அரசியலை எமது உறவுகள் மத்தியில் நாங்கள் உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகம் எங்களைக் கூறுபோட்டுத் துண்டாடி எம்மை ஆக்கிரமிக்கக் கூடிய ஒரு நிலைமையே ஏற்படும். எம்மை இன்னும் ஏமாற்றுகின்ற விடயங்களுக்கு எமது மக்கள் இடம்கொடுக்கக் கூடாது என அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர் தேச உறவுகளின் அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் , வறிய குடும்பம் ஒன்றிக்கு தையல் உபகரணம் , திருச்சபைக்கு குதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இந்த கருத்தினை முன்வைத்தார்.

எமது உறவுகள் சிறப்பாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் தான் நமது புலம்பெயர் உறவுகள் சிலர் எமக்கான உதவித் திட்டங்களைச் செய்து வருகின்றார்கள். அதனைக் கொண்டு நாங்களும் எதிர்காலத்திலே முயற்சியுள்ளவர்களாகச் செயற்பட வேண்டும். எமது சமூகத்திலே மிக மோசான சிந்தனையொன்றுள்ளது. முயற்சி என்பது மிகக் குறைவு ஏதேனும் கிடைக்குமா என்ற சிந்தனையுள்ளவர்களே அதிகமாக இருக்கின்றார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.

நாங்கள் கடந்த காலங்களிலே பல உதவித் திட்டங்களைச் செய்துள்ளோம். ஆனால் அரசினால் வழங்கப்பட வேண்டிய பல உதவித் திட்டங்கள் எமக்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குடிநீர்ப் பிரச்சினை முற்றுமுழுதாகத் தமிழர் பிரதேசங்களிலே புறக்கணிக்கப்பட்ட ஒரு விடயம். ஆனால் எங்களுடைய முயற்சியால் நான் பாராளுமன்றம் சென்ற பிற்பாடு எமது கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடன் உரிய அமைச்சரிடம் நேரடியாகச் சென்று இவ்விடயம் தொடர்பில் ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தோம். அதன் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் அம்முயற்சிகள் வெற்றியடையக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. பலரும் பலவாறு பேசலாம். ஆனால் எமது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், முன்னேற்றங்கள் காணப்பட்டும் இருக்கின்றன.

அம்பாறை மாவட்த்திலே பொத்துவில் பிரதேசம் தமிழர் நிலப்பரப்பின் எல்லையாக இருக்கின்றது. இங்கு எமது மக்களின் காணி தொடர்பான பல விடயங்கள் இருக்கின்றன. இது தொடர்பிலும் நாங்கள் எமது முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அந்தக் காணி விடயங்களைத் தீர்ப்பதற்குரிய பணிகளையும் முன்னெடுத்திருக்கின்றோம். நிச்சயம் எதிர்காலத்தில் அதுவும் வெற்றியளிக்கும் என்று நம்புகின்றோம்.

தமிழ்த் தேசியம் என்று சொல்லப்படுகின்ற தூய்மையான அரசியலை முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகளால் மாத்திரமே எமது மக்களின் பிரச்சினை குறித்தான விடயங்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும். நாங்கள் யாருக்கும் சோரம் போய் யாருக்கும் அடிபணிந்து எமது சமூகத்தை விற்றுப் பிழைப்பதற்குத் தயாரில்லை. எமது பிரதேசங்களின் அனைத்து விடயங்களும் அறிந்தவர்களாகவே நாங்கள் செயற்படுகின்றோம்.

எமது சமூகம் ஏமாற்றப்படும்; சமூகமாக இருந்து விடக் கூடாது. எமது ஒவ்வொரு பிரதேசங்களிலும் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உள்ளுர் அரசியலில் மிகவும் சிறப்பாகச் செயற்படக் கூடியவர்களை நாங்கள் இனங்காண வேண்டும். எதிர்வருகின்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் எமது இனம்சார்ந்த அரசியலை எமது உறவுகள் மத்தியில் நாங்கள் உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகம் எங்களைக் கூறுபோட்டுத் துண்டாடி, எம்மை ஆக்கிரமிக்கக் கூடிய ஒரு நிலைமையே ஏற்படும்.

அபவிருத்திக் குழுக் கூட்டங்களின் போது எமது பிரதேசங்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்ற விடயத்தைப் பலரும் அறிந்திருப்பீர்கள். அண்மையில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. எமது பிரதேசங்கள் அபிவிருத்திகளில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரல் அங்கு இருந்தது. இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அபிவிருத்திக் குழுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றோம்.

நாங்கள் எமது மக்களின் தேவைகளுக்காக, பணிகளுக்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்போம். எம்மை இன்னும் இன்னும் ஏமாற்றுகின்ற விடயங்களுக்கு எமது மக்கள் இடம்கொடுக்கக் கூடாது. எம்மை நாமே ஆளக்கூடிய, எம்மை எமது மக்களே தெரிவு செய்யக் கூடிய நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் திட்டங்களைத் தயார்ப்படுத்தி எமது மக்களை வளப்படுத்தக்கூடிய விதத்தில் நாங்கள் செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

 

http://www.battinews.com/2021/04/blog-post_639.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி... மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம்?

நான் சொல்லுறது.... சீமான் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமித்து விட்டது எண்டால்  இனவாதம் பேசுறார் எண்டு பிழை பிடிக்கிறது.

ஆனால், இனம் சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும் எண்டு இவர் சொல்லுறதை கொண்டாந்து ஓட்டுறது...

விளங்கேல்லயே... 🤔

ஓமோம்.... இவர்... தீம்கா ஆதரவாளர் தானே..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஆனால், இனம் சார்ந்த அரசியல் உருவாகாவிட்டால் மாற்றுச் சமூகம் எம்மை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும் எண்டு இவர் சொல்லுறதை கொண்டாந்து ஓட்டுறது...

விளங்கேல்லயே... 🤔

ஓமோம்.... இவர்... தீம்கா ஆதரவாளர் தானே..😁

செய்தியை ஒட்டினா, அதில் உள்ளதெல்லாம் எனது கருத்து என்று நம்புற அளவுக்கு நீங்கள் இருப்பீர்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை!😂

நான் ஒன்றும் தீம்கா ஆளில்லை. நீங்கள் என்னதான் ஸ்டாலினை வறுத்தாலும் எனக்கு சுடாது.😜

இனவாதத்திற்கும், இனப்பற்றுக்கும் நூலிழை இடைவெளிதான். அண்மையில் குணா கவியழகனும் ஒரு யூடியூப் வீடியோவில் சொல்லியிருந்தார். 

அதை விளங்கினால் நல்லது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

செய்தியை ஒட்டினா, அதில் உள்ளதெல்லாம் எனது கருத்து என்று நம்புற அளவுக்கு நீங்கள் இருப்பீர்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை!😂

நான் ஒன்றும் தீம்கா ஆளில்லை. நீங்கள் என்னதான் ஸ்டாலினை வறுத்தாலும் எனக்கு சுடாது.😜

இனவாதத்திற்கும், இனப்பற்றுக்கும் நூலிழை இடைவெளிதான். அண்மையில் குணா கவியழகனும் ஒரு யூடியூப் வீடியோவில் சொல்லியிருந்தார். 

அதை விளங்கினால் நல்லது..

 

சீமான் பத்திய செய்தியை ஒட்டி, உங்கள் கருத்துக்களை அடிச்சு சொல்லுற மாதிரி, இப்படி செய்தியை ஓட்டினா, உங்கள் கருத்தையும் சொல்லனும்.

உங்கள், போதனைகளை கேட்டு, திருந்தி கொண்டு வரேக்க, எங்களை குழப்பக்கூடாது.

இப்ப, எதுக்கு குணா பத்தி? எங்களுக்கு கிருபன் அய்யா சொல்லுறது தான் வேதம்.

அதுசரி, ப்ரொபைல் படம்.... யாரு? நீங்களே?

**

அது கிடக்குது... ஒரு உதவி வேணுமே.

யாழில், பழைய பதிவுகளை தேடிப் பிடிப்பது எப்படி எண்டு சொல்லுங்கோ.

2015 முன்னம் உள்ள பதிவு ஒண்டை தேடினேன், கிடைக்கவில்லை. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

இப்படி செய்தியை ஓட்டினா, உங்கள் கருத்தையும் சொல்லனும்.

யாரும் பதில் வைக்காவிட்டால் நானும் ஒன்றும் சொல்வதில்லை! ஏதாவது பத்தினால் நானும் என் கருத்தை வைப்பதுண்டு!

கலையரசன் சொல்லும் இனம் சார்ந்த அரசியல் இனப்பற்று இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில். அபிவிருத்தி அரசியல் என்று புள்ளையான், கருணா அம்மான், வியாழன் செய்வது அடிமை சேவக அரசியல்.

 

 

58 minutes ago, Nathamuni said:

அதுசரி, ப்ரொபைல் படம்.... யாரு? நீங்களே?

நானேதான்! 😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

அது கிடக்குது... ஒரு உதவி வேணுமே.

யாழில், பழைய பதிவுகளை தேடிப் பிடிப்பது எப்படி எண்டு சொல்லுங்கோ.

2015 முன்னம் உள்ள பதிவு ஒண்டை தேடினேன், கிடைக்கவில்லை. நன்றி.

2015 க்கு முன்னர் என்றால் மோகன் archive இல் போட்டிருப்பார். யாழில் உள்ள தேடு பெட்டியில் தேடினால் கிடைக்காது. ஆனால் கூகிளில் தேடினால் கிடைக்கும்!

இப்படித் தேடினால் சிலவேளை கிடைக்கும்.

site:yarl.com “பிகிலு”

 

Link to comment
Share on other sites

On 17/4/2021 at 08:35, கிருபன் said:

திருச்சபைக்கு குதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இந்த கருத்தினை முன்வைத்தார்.

தென்னிலங்கையிலிருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்குத் திருச்சவையைச் சேர்ந்தோர் அத்தனை விரைவாக எப்படி வரமுடிந்தது என்று இப்போது விளங்கியது.🧐 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

2015 க்கு முன்னர் என்றால் மோகன் archive இல் போட்டிருப்பார். யாழில் உள்ள தேடு பெட்டியில் தேடினால் கிடைக்காது. ஆனால் கூகிளில் தேடினால் கிடைக்கும்!

இப்படித் தேடினால் சிலவேளை கிடைக்கும்.

site:yarl.com “பிகிலு”

 

தேடியது கிடைத்தது, கூகிளில். நன்றி கிருபன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நாம் தொடர்பு சொல்லி வருகிறோம்

ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பொத்திக் கொண்டு இருந்தால் போதும் என்று ஆகிவிட்டது

ஆனால் நாட்டின் நிலமை அப்படி அல்ல.

காலம் உணர்த்தும்

அதுவரை????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இதைத்தான் நாம் தொடர்பு சொல்லி வருகிறோம்

ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பொத்திக் கொண்டு இருந்தால் போதும் என்று ஆகிவிட்டது

ஆனால் நாட்டின் நிலமை அப்படி அல்ல.

காலம் உணர்த்தும்

அதுவரை????

அப்ப அப்ப கதைப்பார் கண்டுக்காதீங்க போனஸ்சும் இல்லையென்றால்  போஸ்ட்டர் அடிச்சிருப்பானுகள்  அம்பாறை மாவட்டத்திற்கு இவரு காணி போறதைப்பற்றி கதைக்கிறார் காணி போன இடங்கள் வளத்தாப்பிட்டி , வீரமுனை , சம்மாந்துறை , குளனி , திராய்க்கேணி , அட்ட்ப்பள்ளம் , அக்கறைப்பற்று ஆலங்குளம் , 40 ம் கட்டை பொத்துவில் , காட்டுப்பகுதி உகந்தை வரைக்கும் போய்க்கொண்டு இருக்கிறது தெரிந்த பிரதேசங்களை வரையறுத்து கூறியுள்ளேன் இவர்களால் என்ன செய்ய  முடிந்தது  இதுவரைக்கும் 

நீங்கள் சொன்ன கூற்றுக்கு வருகிறேன் உங்களை தள்ளி அம்பாறையில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் காணிகளை வாங்கியுள்ளார்களா மாறாக புலம்பெயர்ந்தவர்கள் அதிக விலைக்கு விற்றுள்ளார்கள் இனியும் அம்பாறையை கட்டியெல்லாம் காப்பற்ற   முடியாது தற்போது சங்கமான் கண்டியில் புத்தர் சிலை வைக்க முனைகிறார்கள் எவராலும் தடுக்க முடியாது , எங்களுக்கு புத்தர் சிலைவந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை  இவர்கள் அரசியல் செய்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை ( எவரும்) 
இதில் மாற்றுக்கட்சிகளும் அடங்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பொத்திக் கொண்டு இருந்தால் போதும் என்று ஆகிவிட்டது

புலம்பெயர் தமிழர்கள் நீரோடு செல்கின்ற ஓடம் போன்றவர்கள் அந்த ஓடம் எங்கெல்லாம் செல்லுதோ அங்கெல்லாம் சென்று வாழ்வார்கள். எதிர் நீச்சல் போடும் வல்லவர்களே பிறந்த தாய் மண்ணில் வாழ்பவர்கள்.  எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்தே ஆகவேண்டும்  இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நான் நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

புலம்பெயர் தமிழர்கள் நீரோடு செல்கின்ற ஓடம் போன்றவர்கள் அந்த ஓடம் எங்கெல்லாம் செல்லுதோ அங்கெல்லாம் சென்று வாழ்வார்கள். எதிர் நீச்சல் போடும் வல்லவர்களே பிறந்த தாய் மண்ணில் வாழ்பவர்கள்.  எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்தே ஆகவேண்டும்  இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நான் நினைக்கிறன் 

இது உங்கள் கருத்து சகோ.

நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்கள் அறிந்தவற்றை உங்கள் அனுபவங்களை வைத்து எழுதுகிறீர்கள்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களாகிய எமது அனுபவங்களும் அறிந்தவைகளும் பட்டவைகளும் வேறு

அவற்றை வார்த்தைகளில் வார்த்துவிட முடியாது.

அதனால் தான் மண்ணின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் அதன் அருமையையும் உணர்கிறோம்.

இதனை சொன்னால் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. இங்கு வந்த சில வாரங்களிலிலேயே நீங்கள் அதை தேட விரும்ப காக்க தொடங்கி விடுவீர்கள். அது தான் இங்கு வந்தவர்கள் வந்த பின்னர் செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

புலம்பெயர் தமிழர்கள் நீரோடு செல்கின்ற ஓடம் போன்றவர்கள் அந்த ஓடம் எங்கெல்லாம் செல்லுதோ அங்கெல்லாம் சென்று வாழ்வார்கள். எதிர் நீச்சல் போடும் வல்லவர்களே பிறந்த தாய் மண்ணில் வாழ்பவர்கள்.  எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்தே ஆகவேண்டும்  இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நான் நினைக்கிறன் 

உவ்விடம் இருப்பவர்கள்  தமிழரின் பிரச்சனைகளை சொல்லி வீதியில் இறங்கி போராட முடியாது.பல சொற்களை கூட பகிரங்கமாக கதைக்க முடியாது. ஆனால் புலம்பெயர் தமிழர்கள் அதை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

இது உங்கள் கருத்து சகோ.

நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்கள் அறிந்தவற்றை உங்கள் அனுபவங்களை வைத்து எழுதுகிறீர்கள்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களாகிய எமது அனுபவங்களும் அறிந்தவைகளும் பட்டவைகளும் வேறு

அவற்றை வார்த்தைகளில் வார்த்துவிட முடியாது.

அதனால் தான் மண்ணின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் அதன் அருமையையும் உணர்கிறோம்.

இதனை சொன்னால் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. இங்கு வந்த சில வாரங்களிலிலேயே நீங்கள் அதை தேட விரும்ப காக்க தொடங்கி விடுவீர்கள். அது தான் இங்கு வந்தவர்கள் வந்த பின்னர் செய்வது.

அப்படி புலம்பெயர்ந்தவர்கள் அத்தனை பேரும் காக்க நினைத்திருந்தால் ?? இன்று இந்த நிலமை வந்திராது என்று சொல்லிக்கொள்லலாமா ??

 

20 hours ago, குமாரசாமி said:

உவ்விடம் இருப்பவர்கள்  தமிழரின் பிரச்சனைகளை சொல்லி வீதியில் இறங்கி போராட முடியாது.பல சொற்களை கூட பகிரங்கமாக கதைக்க முடியாது. ஆனால் புலம்பெயர் தமிழர்கள் அதை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இருந்தும் இதுவரைக்கும் கிடைத்த சாதகமான பலன் கள் அல்லது முடிவுகள் ? ஏதும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி புலம்பெயர்ந்தவர்கள் அத்தனை பேரும் காக்க நினைத்திருந்தால் ?? இன்று இந்த நிலமை வந்திராது என்று சொல்லிக்கொள்லலாமா ??

இதை ஏற்றுக் கொள்கிறேன்

எமது இனத்தின் சாபக்கேடு இது

அது புலம்பெயர்ந்தோரிடம் மட்டும் இல்லை   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இதை ஏற்றுக் கொள்கிறேன்

எமது இனத்தின் சாபக்கேடு இது

அது புலம்பெயர்ந்தோரிடம் மட்டும் இல்லை   

ம் ஏற்றுக்கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி புலம்பெயர்ந்தவர்கள் அத்தனை பேரும் காக்க நினைத்திருந்தால் ?? இன்று இந்த நிலமை வந்திராது என்று சொல்லிக்கொள்லலாமா ??

 

இருந்தும் இதுவரைக்கும் கிடைத்த சாதகமான பலன் கள் அல்லது முடிவுகள் ? ஏதும் 

ஜேர்மனியில் நான் ஒரு அகதி. ஜேர்மனியர்கள் நீ யார் எதற்கு இங்கு வந்தாய் என்று என்னை கேட்கும் போது இலங்கை வரலாற்றை/ ஈழத்தமிழர் தமிழர் வரலாற்றை சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. அண்மைக்கால ஈழத்தமிழரின் அழிவுகளும் சாட்சிகளாக அமைந்து வருகின்றது. 

நீங்கள் எதையோ தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள்.😁

எனது பார்வையில் 100 வருடங்கள் சென்றாலும் உண்மையும் நியாயமும் ஜெயிக்கும். இதுதான் நியதி.😷
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் நான் ஒரு அகதி. ஜேர்மனியர்கள் நீ யார் எதற்கு இங்கு வந்தாய் என்று என்னை கேட்கும் போது இலங்கை வரலாற்றை/ ஈழத்தமிழர் தமிழர் வரலாற்றை சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. அண்மைக்கால ஈழத்தமிழரின் அழிவுகளும் சாட்சிகளாக அமைந்து வருகின்றது. 

நீங்கள் எதையோ தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள்.😁

எனது பார்வையில் 100 வருடங்கள் சென்றாலும் உண்மையும் நியாயமும் ஜெயிக்கும். இதுதான் நியதி.😷
 

நியாயம் என்பது

பசிக்கும் போதே சாப்பாடு கிடைக்க வேண்டும்  பசி தீர்ந்த பின் கிடைக்கும் சாப்பாடு ??

Link to comment
Share on other sites

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நியாயம் என்பது

பசிக்கும் போதே சாப்பாடு கிடைக்க வேண்டும்  பசி தீர்ந்த பின் கிடைக்கும் சாப்பாடு ??

பசி தீர்ந்தபின் கிடைக்கும் சாப்பாட்டை, சாப்பாடு கிடைக்காமல் பசியோடு வாடும் பலருக்கும் கொடுக்கும் மனநிலை கொண்ட உறவுகள் பலரை யாழ்களத்திலும் காண முடியும் ராசாவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2021 at 12:51, Paanch said:

பசி தீர்ந்தபின் கிடைக்கும் சாப்பாட்டை, சாப்பாடு கிடைக்காமல் பசியோடு வாடும் பலருக்கும் கொடுக்கும் மனநிலை கொண்ட உறவுகள் பலரை யாழ்களத்திலும் காண முடியும் ராசாவே.

நான் யாரையும் இழுத்து சொல்லவில்லை அண்ண எனது கருத்து நீதியென்பது உடனுக்குடனாவது கிடைக்க வேண்டும் 


பள்ளியில் ஒரு குழந்தை ஒரு குழந்தைக்கு அடிக்கிறான் என்றால் அந்த குழந்தை அழும் அழுதுகொண்டே இருக்கும் அடித்த குழந்தைக்கு ஆசிரியர் அடித்தால் அழுத குழந்தை அழுகையை நிறுத்தும் . 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பள்ளியில் ஒரு குழந்தை ஒரு குழந்தைக்கு அடிக்கிறான் என்றால் அந்த குழந்தை அழும் அழுதுகொண்டே இருக்கும் அடித்த குழந்தைக்கு ஆசிரியர் அடித்தால் அழுத குழந்தை அழுகையை நிறுத்தும் . 

 அழும் குழந்தையின் அழுகையை நிறுத்த அடித்த குழந்தையை அடிப்பது தவரானது. ஆசிரியருக்குப் பயிற்சி போதாது. அரவணைத்து ஆறுதல்படுத்தத் தெரியவேண்டும். அதுபோலவே எங்களுக்கு நியாயம் கிடைக்காது தடுப்பவர்களைத் தண்டிக்க முயலக்கூடாது.

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்"  என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார். இதனை நன்றாக உணர்ந்துள்ள மூன்று நான்கு தமிழர்களை எங்களுக்கு வழிகாட்டிகளாக தமிழர்களே தெரிவுசெய்துள்ளார்கள். அவர்கள் யாரென்று உங்களுக்கு நான்சொல்லித் தெரியவேண்டியதில்லை.🧐

Link to comment
Share on other sites

பிடன் நிர்வாகம் இலங்கை தமிழ் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை அடுத்த நிர்வாகத்திற்கு அனுப்பும்.
வெள்ளை மாளிகை மெமோ கசிந்தது.
இலங்கைக்கு 1948 சுதந்திரம் கிடைத்ததிலிருந்து 1.2 மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உயிரை இழந்ததாக வெள்ளை மாளிகை மதிப்பிட்டுள்ளது.
இலங்கை தமிழ் இனப்படுகொலை குறித்து இந்தியாவுக்கு முழுமையும் பொறுப்பும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sean said:

பிடன் நிர்வாகம் இலங்கை தமிழ் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை அடுத்த நிர்வாகத்திற்கு அனுப்பும்.
வெள்ளை மாளிகை மெமோ கசிந்தது.
இலங்கைக்கு 1948 சுதந்திரம் கிடைத்ததிலிருந்து 1.2 மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உயிரை இழந்ததாக வெள்ளை மாளிகை மதிப்பிட்டுள்ளது.
இலங்கை தமிழ் இனப்படுகொலை குறித்து இந்தியாவுக்கு முழுமையும் பொறுப்பும் உள்ளது.

இவ்வளவு, தகவல்கள் இருந்தும்...........
எமக்கு, விடிவு கிடைக்க முடியாமைக்கு முக்கிய காரணம்...
அடிப்படை அரசியல் அறிவற்ற,  தமிழ்த்  தலைமைகள்.

இந்தக் கூட்டம் இன்னும், 
சிங்களவனுக்கு, வெள்ளையடிக்க நினைக்குதே  தவிர,
சொந்தப்  புத்தி, இல்லாமல்... மூளை, விருத்தி பெறாத விசர் கூட்டத்திடம்,
ஈழத் தமிழர் படும்  கொடுமைகளை... என்னவென்பது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2021 at 18:08, தனிக்காட்டு ராஜா said:

அப்படி புலம்பெயர்ந்தவர்கள் அத்தனை பேரும் காக்க நினைத்திருந்தால் ?? இன்று இந்த நிலமை வந்திராது என்று சொல்லிக்கொள்லலாமா ??

முடியாது  இது. இலங்கையரசின்  கையிலுள்ள விடயம்...இந்த இலங்கையரசு.  இலங்கையிலுள்ள சிங்களவரின் கையிலுள்ளது.  மாறாக புலம்பெயர்தமிழர் கையிலில்லை. இருப்பினும். நாம் எம்மால் இயன்றவற்றைச்செய்கிறோம் பலன் பூச்சியம் என்பது எமக்கும் தெரியும் .ஆனாலும். இங்குள்ள அரசாங்கங்கள்  இலங்கை பற்றி நிறையாவே கற்றுக்கொண்டுள்ளன.  சர்வதேசயரங்கில் இலங்கை பொய் கூறமுடியாத  ஒர் நிலையுண்டு  இது புலம்பெயர்தமிழரின் வெற்றியாகும் 

 

On 19/4/2021 at 18:08, தனிக்காட்டு ராஜா said:

இருந்தும் இதுவரைக்கும் கிடைத்த சாதகமான பலன் கள் அல்லது முடிவுகள் ? ஏதும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2021 at 17:58, தனிக்காட்டு ராஜா said:

நியாயம் என்பது

பசிக்கும் போதே சாப்பாடு கிடைக்க வேண்டும்  பசி தீர்ந்த பின் கிடைக்கும் சாப்பாடு ??

தனி.   சாப்பிட்டால் தான்.  பசி தீரும்.  எப்படி உங்களுக்கு பசி தீர்த்தது?இப்போ உங்களுக்கு யார் சாப்பாடு தந்தது. ? என்னைப்பொறுத்தளவில் சாப்பிடவுமில்லை..பசி தீரவுமில்லை.  எவரும். சாப்பாடு தரவுமில்லை...இவற்றுக்குப் போராடிக்கொண்டிருக்கிறோம். இடையிடை கிடைக்கும் சாப்பாட்டை நாம்மவரே  தட்டி விடுகிறார்கள். குமாரசாமியண்ணை. அவரது பூட்டப்பிள்ளைகள். உரிமையுடன் வாழுமென நம்புகிறார்  அவர்  இப்படியாவது  உரிமையுடன் வாழட்டும்..😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.