Jump to content

கும்பமேளாவால் பரவும் கொரோனா... அசராத உத்தரகாண்ட் அரசு... இது சரிதானா மோடி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Kumbh Mela

Kumbh Mela ( AP Photo/Karma Sonam )

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒன்றுகூடுவதால் அதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று பலரும் எச்சரிக்கின்றனர்.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவில் பல லட்சம்பேர் பங்கேற்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 14-ம் தேதி ஒருநாள் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பலரையும் கலங்கடித்திருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 1-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா வரும் 30-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் அங்கே திரள்கின்றனர்.

Kumbh Mela

 

Kumbh Mela AP Photo/Karma Sonam

 

கும்பமேளாவுக்கு வருகிறவர்கள் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் வர வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், அதேபோல தனிமனித இடைவெளியையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், லட்சக்கணக்கில் திரளும் மக்களால் அந்தக் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

கும்பமேளா நடைபெறும் பகுதியில் நாளொன்றுக்கு 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் 500 மாதிரிகளுக்கு 20 மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒன்றுகூடுவதால் அதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று பலரும் எச்சரிக்கின்றனர்.

ஆனால், கும்பமேளாவை பாதியிலேயே நிறுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை முன்வைத்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. கடந்த ஆண்டு தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களால்தான் கொரோனா பரவியது என்று பேசியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? இதை ஏன் கண்டிக்கவில்லை அல்லது தடுக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தி

 

மருத்துவச் செயற்பாட்டாளர் புகழேந்தி

 

இதுதொடர்பாக சமூகச் செயற்பாட்டாளரும் மருத்துவருமான புகழேந்தியிடம் பேசினோம், ``இதுபோன்ற கூட்டங்களை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால், அது கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று அறிவியல் சொல்கிறது.

ஆனால், தனிப்பட்ட லாபங்களுக்காக இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று அரசியல் சொல்கிறது என்ற கோணத்தில்தான் இதைப் பார்க்க வேண்டும். நிலைமை இப்படி மோசமாகிக் கொண்டிருக்கும் சூழலில், கும்பமேளாவில் இத்தனை லட்சம் பேர் கூடுவது முற்றிலும் தவறானது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், நாம் கும்பமேளாவை மட்டும் தவறு என்று சொல்லக் கூடாது. தவறு என்றால் எல்லாமே தவறுதான்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இயற்கை பேரழிவுகளின்போது தேர்தலையே தள்ளி வைக்க வழிவகை உள்ளது. ஆனால், இவர்கள் அதைச் செய்தார்களா? தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா விதிகளை மீறி அவ்வளவு கூட்டம் கூடினார்களே அவர்கள் யார் மீதாவது நடவடிக்கை எடுத்தார்களா? இல்லவே இல்லை. இன்று ஏராளமான வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சட்டம் என்றால் எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்? இந்தக் கேள்வி பிரதமர் மோடியிடமிருந்து கேட்கப்பட வேண்டும்.

Hindu devotees gather to take holy dips in the Ganges River during Kumbh Mela

 

Hindu devotees gather to take holy dips in the Ganges River during Kumbh Mela AP Photo/Karma Sonam

 

அயோத்தியில் நடந்த பூஜையில் கலந்துகொண்ட ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பூஜையின்போது பிரதமர் நரேந்திர மோடிதான் அவரை கைத்தாங்கலாகக் கூட்டிச் சென்றார். ஆனால், மோடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை, கொரோனா பரிசோதனையும் செய்துகொள்ளவில்லை. விதிகளைப் பிறப்பிப்பதுடன் நின்றுவிடாமல் அவர்களும் விதிகளைப் பின்பற்றினால்தான் மக்களும் பின்பற்றுவார்கள். கொரோனா நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. ஆகையால், எந்த பேதமும் இல்லாமல் எல்லோரும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனாவை வெல்ல முடியும்" என்றார்.

https://www.vikatan.com/news/india/govt-should-have-been-restricted-kumbh-mela-2021-gatherings-amidst-pandemic?fbclid=IwAR2ZRWRYk64OUcuzh416WdbHyEKjDBHtHLk9WO8v-2FNnNY-wWSIx9PLL6s?utm_source=Newsleter&utm_medium=email&utm_campaign=17th_apr_2021_Cont6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகப்பெரும் பேரவலம்நடக்க போகுது  அல்லது அதிசயம் அல்லது செய்தி ஒன்றுமே வெளிவராது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and text

மாஸ்க்கை... இடம் மாறி, போட்டு விட்டார்கள்  என்று இணையத்தில் கலாய்க்கின்றார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களின் நம்பிக்கை கங்கா நதியில் மூழ்கி எழுந்தால் நோய்கள் தீர்ந்துவிடும் என்பது. எனவே கங்கா நதியில் மூழ்கி எழுந்தால் இந்தக் கொரானா வைரசும் ஓடிவிடும்.  

Link to comment
Share on other sites

1 hour ago, வாலி said:

இந்துக்களின் நம்பிக்கை கங்கா நதியில் மூழ்கி எழுந்தால் நோய்கள் தீர்ந்துவிடும் என்பது. எனவே கங்கா நதியில் மூழ்கி எழுந்தால் இந்தக் கொரானா வைரசும் ஓடிவிடும்.  

இந்தியாவின் சனத்தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இதைவிட அருமையான வாய்ப்பேதும் கிடைக்குமா? இந்தியாவின் பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களிலும் பார்க்க, இந்தியாவுக்கு சுமையாக இருப்பவர்களே இந்த கும்பமேளாவில் பங்குகொள்பவர்களில் அதிகம், ஆகவே அவர்கள் இறைவனடி சேர அனைத்து தெய்வங்களையும் வேண்டிக்கொள்கிறேன்.

6 hours ago, பெருமாள் said:

மிகப்பெரும் பேரவலம்நடக்க போகுது  அல்லது அதிசயம் அல்லது செய்தி ஒன்றுமே வெளிவராது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா

எங்கிருந்தாலும் ஓடி வரவும்.

🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

மீரா

எங்கிருந்தாலும் ஓடி வரவும்.

🤣🤣

என்ன பாசம்ப்பா உங்களுக்கு.... உங்கள் பாசம் என்னைக் கட்டிவிட்டதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

மீரா

எங்கிருந்தாலும் ஓடி வரவும்.

🤣🤣

55 minutes ago, MEERA said:

என்ன பாசம்ப்பா உங்களுக்கு.... உங்கள் பாசம் என்னைக் கட்டிவிட்டதே!

 

போன பிறவியிலை நீங்கள் இரண்டு பேரும் சகோதரங்கள். 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.