Jump to content

சுமந்திரனை கட்சியில் வைத்திருந்து தமிழினத்தை அழித்த அவப்பெயரை வரலாற்றில் சூடிக்கொள்ளாதீர்கள்: இரா.சம்பந்தனிற்கு அதிரடி கடிதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் விழித்துக் கொள்ளுங்கள். இலங்கை தமிழ் அரசு கட்சியை அழித்தவர் என்ற அவப்பெயரை வரலாற்றில் சூடிக் கொள்ளாதீர்கள் என காட்டமான கடிமொன்றை இரா.சம்பந்தனிற்கு அனுப்பி வைத்துள்ளார் இலங்கை தமிழர் அரசு கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு நேற்று (16) இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அரச ஆதரவு தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அண்மையில் நேர்காணல் வழங்கிய  கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு வேட்பாளர்கள் தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வெற்றிபெற்றார்கள், கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை, அப்படி வாக்களிததிருந்தால் கட்சித்தலைவர், செயலாளர் வெற்றிபெற்றிருப்பார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் கே.வி.தவராசாவினால், இரா.சம்பந்தனிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் சாராம்சம் வருமாறு-

தங்களின் தலைமைத்துவ காலத்தில் தமிழர்களின் அரசியல் பலத்தை சிதைத்த அவப்பெயரை சம்பாதித்து கொள்ளாதீர்கள்.

கட்சிக்கு வாக்களிக்கவில்லை,  தனிப்பட்ட ரீதியான வாக்குகளாலேயே வெற்றியடைந்ததாக ஆபிரஹாம் சுமந்திரன் அகங்காரத்துடன் தெரிவித்திருப்பது, வாக்களித்த மக்களை அவமதிப்பதாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை. எனினும், ஆபிரஹாம் சுமந்திரன், தானே பேச்சாளர் என பிரதிபலித்துக் கொண்டு கருத்து வெளியிட்டு வருவது கட்சியின் இருப்பிற்கே ஆபத்தானது.

பசில் ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க தயாரன அறிவித்து முதல் தனிப்பட்ட வாக்கினால் வென்றதாக கூறியது வரையானது கட்சிக்கு வாக்களித்த மக்களை அதிருப்திக்குள்ளாக்கும்.

இப்படி பொறுப்பற்ற வகையில் செயற்படும் நபரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

குறித்த நபர் ஊடகப்பேச்சாளர் அல்லவென்பதை விரைவில் அறிவித்து, கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை சரி செய்ய முயற்சியுங்கள். கட்சிக்கு எதிராக செயற்படும் ஆபிராஹாம் சுமந்திரனின் பின்னணி என்ன?

இந்த இக்கட்டான நிலையில் உங்களின் கடமையை சரியாக செய்யாவிட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதி அத்தியாயத்தை எழுத நேரிடும். அப்படியொரு சம்பவம் நடந்தால், அதற்கு பொறுப்பானவராக நீங்களே இருப்பீர்கள்.

https://pagetamil.com/2021/04/16/சுமந்திரனை-கட்சியில்-வைத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"செவிடன் காதில் ஊதிய சங்கு" பழமொழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த வேண்டுகோள், கட்சித் தலைமையை எப்படி பொறுப்பெடுப்பது என்ற முயற்சியில் அவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் குடியேறி கோயிலாகி விட்டார்.இனி எதுவுமே வேலைக்காகாது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் சுமத்திரனை  திட்டுவதுக்கு நிறைய தயார் பண்ணனும் ஒரு சிறிய பிழை என்றாலும் கத்தி பாய்ந்துவிடும் . இப்ப என்னடா என்றால் அவரின் கட்சி ஆட்களே அவரை அரசியலில் இருந்து கலைப்பதுக்கு  முன்னுக்கு நிக்கினம் .

கனடா தமிழரசு கட்சி தலைவர் கூட சுமத்திரனுக்கு எதிரா போர்க்கொடி தூக்கியுள்ளார் அவர்  கடைசியாக அனுப்பிய பணத்தை சுமத்திரன் லவட்டி விட்டாராம். இப்ப தவராசா இன்னும் வரிசையில் வருவினம் பாருங்க . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சுமந்திரனின் ஆதராவாளன் அல்ல. எனினும் எனது அபிப்பிராயம் சுமந்திரனின் தனிப்பட்ட கொள்கைகள் தமிழரசு கட்சியின் கொள்கைகளுக்கு மாறுபட்டு நிற்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை. ஒரு தனி மனிதனாக சுமந்திரனின் சாதுரியம், விவேகம், புத்திகூர்மை, ஆளுமை என்பவற்றை எடைபோடும் போது தமிழரசு கட்சியில் வேறு எவரும் அவரை நெருங்க முடியாது. ஆகவே கட்சி தலைமை சரியான அறிவுறுத்தலுடன் அவரை ஒரு கட்டுப்பாடுக்குள் இயங்க வைப்பது தான் சரியான தீர்வாக அமையும்.

Link to comment
Share on other sites

எதிர் காலத்தில் சுமந்திரனும் சாணக்கியனும் தான் தமிழரசு கட்சியை வழிநடத்துவார்கள், வரும் தேர்தலுடன் யாழ் மேயர் மணிவண்ணன் அவர்களுடன் இணைவார். மாவை அவர்கள் தலைமைத்துவத்துக்கு உகந்தவர் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

எதிர் காலத்தில் சுமந்திரனும் சாணக்கியனும் தான் தமிழரசு கட்சியை வழிநடத்துவார்கள், வரும் தேர்தலுடன் யாழ் மேயர் மணிவண்ணன் அவர்களுடன் இணைவார். மாவை அவர்கள் தலைமைத்துவத்துக்கு உகந்தவர் அல்ல. 

உங்களின் கற்பனை எக்ஸ்பெயர்  டேட் ஆகி விட்டது வேறு விதமாய் கற்பனை பண்ணி பார்க்கவும் பிளீஸ் .😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபித்தானை யாராவது பாத்தாக்கா, கொஞ்சம் களத்துக்கு வரச் சொல்லிவிடுங்களேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கபித்தானை யாராவது பாத்தாக்கா, கொஞ்சம் களத்துக்கு வரச் சொல்லிவிடுங்களேன். 

 

பாசக்காறப் பயபுள்ளீங்க தொல்லை தாங்க முடியல..

வந்திட்டேனையா வந்திட்டேன்.....

🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி அமக்களம் தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் இடத்திற்கு (தற்போதைய சூழலில்) மாற்று என்று யாரை தவராசா முன்வைக்கிறார்.? 

TNA என்பது உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகி பல வருடங்களாயிற்று. புதிய, ச்மூக நோக்குள்ள, தூர நோக்குள்ள, உலகத்திலுள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் தலைமைத்துவம் ஒன்று TNA க்குள் இருந்து வர நீண்ட காலம் செல்லும்.  

என்னைப் பொறுத்து, புதிய சிந்தனைகளை தமிழரிடையே கொண்டுவர  புலம் பெயர்ந்தவர்களின் புதிய தலைமுறைதான் இலங்கைத் தமிழர் அரசியலின் ஆகச் சிறந்த தெரிவாக அமையும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

எதிர் காலத்தில் சுமந்திரனும் சாணக்கியனும் தான் தமிழரசு கட்சியை வழிநடத்துவார்கள், வரும் தேர்தலுடன் யாழ் மேயர் மணிவண்ணன் அவர்களுடன் இணைவார். மாவை அவர்கள் தலைமைத்துவத்துக்கு உகந்தவர் அல்ல. 

நான் ஏற்கனவே கூறியதுதான்.

கொறோனா பிரச்சனை முடிவதற்குள் சம்பந்தனும் மாவையும் போய்ச் சேர்ந்து விடுவர் (உவர் தவராசா சம்பந்தனின் உடல்நிலை அறிந்துதான் உப்பிடி ஒரு அறிக்கை விட்டவரோ தெரியாது... 😂)

அதன் பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கு TNA சுமந்திரன் + சாணக்கியன் கட்ட்டுப்பாட்டில் (மேற்கின்) இருக்கும். 

இந்னிலையில் இலங்கைத் தமிழரை யார் கட்டுப்படுத்துவது என்கின்ற போட்டியில் இந்தியா குட்டையைக் கிளறிக்கொண்டிருக்கையில் முசிலிம்களும் சிங்களமும் எம்மை சாப்பிட்டு முடித்திருப்பார்கள். 

இருதியில்

உனக்கும் பெப்பே உன் அப்பனுக்கும் பெப்பே..

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

சுமந்திரனின் இடத்திற்கு (தற்போதைய சூழலில்) மாற்று என்று யாரை தவராசா முன்வைக்கிறார்.? 

TNA என்பது உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகி பல வருடங்களாயிற்று. புதிய, ச்மூக நோக்குள்ள, தூர நோக்குள்ள, உலகத்திலுள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் தலைமைத்துவம் ஒன்று TNA க்குள் இருந்து வர நீண்ட காலம் செல்லும்.  

என்னைப் பொறுத்து, புதிய சிந்தனைகளை தமிழரிடையே கொண்டுவர  புலம் பெயர்ந்தவர்களின் புதிய தலைமுறைதான் இலங்கைத் தமிழர் அரசியலின் ஆகச் சிறந்த தெரிவாக அமையும். 

 அது.. தலைவா! அதற்காத்தான் உமது வருகை வரை வாயே திறக்காமல்  காத்திருதேன்.  எங்கே நீங்கள் வனவாசம் போய்விட்டீர்களோ என்று கலங்கிப்போனேன்.  ஒரு காலத்தில் முன்னாள் நீதியரசர்  விக்னேஸ்வரனுக்கு எதிராக  கட்சிக்குள் போர்க்கொடி கிளம்பியபோது: மக்கள் அவருக்குதானே அதிக விருப்பு வாக்குகள் அளித்திருந்தார்களே என்றொரு கருத்து வைக்கப்பட்டது. அதற்கு பெரிய தலையால் ஒரு விளக்கமளிக்கப்பட்டது. அதாவது விக்கினேஸ்வரனை கட்சிதான் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது அதனாற்தான் மக்கள் அவருக்கு வாக்குப்போட்டார்களாம். இன்று அதே சூழ்நிலையில் சுமந்திரன் வேறொரு விளக்கமளித்துள்ளார்.  அதாவது அன்று விக்கினேஸ்வரனுக்கு விழுந்த வாக்குகள் அவருக்கு விழுந்த  தனிப்பட்ட வாக்குகளா? இன்று சுமந்திரனுக்கு விழுந்த வாக்குகள் கட்சிக்கு விழுந்த வாக்குகள் என்று கொள்ளலாமா? இந்த வழக்கிற்கு நீங்கள்தான் ஒரு நல்ல முடிவு சொல்ல வல்லவர்.  ஒன்று சொல்வார்கள் "நாக்கில் சனி."  என்னைப்பொறுத்தவரை எமது வாக்கே எம்மைத் திருப்பித் தாக்கும் என்பது உண்மைபோல் தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்ப்பு சொல்லு தலைவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, satan said:

 அது.. தலைவா! அதற்காத்தான் உமது வருகை வரை வாயே திறக்காமல்  காத்திருதேன்.  எங்கே நீங்கள் வனவாசம் போய்விட்டீர்களோ என்று கலங்கிப்போனேன்.  ஒரு காலத்தில் முன்னாள் நீதியரசர்  விக்னேஸ்வரனுக்கு எதிராக  கட்சிக்குள் போர்க்கொடி கிளம்பியபோது: மக்கள் அவருக்குதானே அதிக விருப்பு வாக்குகள் அளித்திருந்தார்களே என்றொரு கருத்து வைக்கப்பட்டது. அதற்கு பெரிய தலையால் ஒரு விளக்கமளிக்கப்பட்டது. அதாவது விக்கினேஸ்வரனை கட்சிதான் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது அதனாற்தான் மக்கள் அவருக்கு வாக்குப்போட்டார்களாம். இன்று அதே சூழ்நிலையில் சுமந்திரன் வேறொரு விளக்கமளித்துள்ளார்.  அதாவது அன்று விக்கினேஸ்வரனுக்கு விழுந்த வாக்குகள் அவருக்கு விழுந்த  தனிப்பட்ட வாக்குகளா? இன்று சுமந்திரனுக்கு விழுந்த வாக்குகள் கட்சிக்கு விழுந்த வாக்குகள் என்று கொள்ளலாமா? இந்த வழக்கிற்கு நீங்கள்தான் ஒரு நல்ல முடிவு சொல்ல வல்லவர்.  ஒன்று சொல்வார்கள் "நாக்கில் சனி."  என்னைப்பொறுத்தவரை எமது வாக்கே எம்மைத் திருப்பித் தாக்கும் என்பது உண்மைபோல் தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்ப்பு சொல்லு தலைவா!

வனவாசம் போகவில்லை சாத்தான். கொறோனா (வெரியன்ற்) வந்து தப்பிப் பிழைத்துள்ளோம், முழுக் குடும்பமும். சிறார் பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவந்தார்கள்.  இந்தக் கொடுமையான நாட்களில் எனது குடும்பம் செய்த நன்மை தீமைகளை எடைபோடும் வாய்ப்பு கிடைத்தது. ஆதலால் Kரோனாவுக்கு ஒரு மிகப் பெரிய நன்றி. 🙏

சாத்தான், 

உண்மையில் எங்கள் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளில் எனக்கு(நம் எல்லோருக்குமே) துளியளவும் நம்பிக்கையும் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் விதண்டாவாதத்திற்கும் வேறு தெரிவுகள் இல்லை என்பதாலும் நாம் எல்லோருக்கும் முண்டு கொடுக்கிறோம். 

ஆனால் எனது நிலைப்பாடு என்னவென்றால், ஏற்கனவே நொந்து நூலாகியுள்ள எம்மக்களை மேலும் பலவீனப்படுத்தும்(சாதி, சமயம், பிரதேசம்) எவற்றிற்கும் ஆதரவளிப்பதில்லை என்பதே.

சுமந்திரன் என்று வரும்போது 

1) சாணக்கியன் வருகை TNA யை மேலும் பலப்படுத்தும். தனி ஆவர்த்தனம் வாசிக்க முடியாதல்லவா. 😀

2) சுமந்திரனின் பின்ணணியில் புதிய அரசியற் சிந்தனையுள்ள இளைய தலைமுறை(சட்டத்தரணிகள்) உருவாகிவருகிறார்கள் என்று தோன்றுகிறது(ஆனால் இப்போதக்கு அவர்களால் எந்தப்பிரயோசனமும் இல்லை)

3) சுமந்திரனும் விக்கியரும் ஒன்றுதான். எமக்கு வேறு தெரிவுகள் இல்லாதபடியால் இவர்களுக்கு வாக்களிக்கிறோம். விக்கி (தவராசாவும் உள்ளே) இந்தியா - சுமந்திரன் மேற்கு.  கடந்த தேர்தலில் சுமந்திரனுக்கு இணையாக (personality ) வேறு யாரும் களத்தில் இல்லை. இருந்திருந்தால் சுமந்திரனின் நிலை கேள்விக்குறியாக முடிந்திருக்கும். தற்போதும் அதே நிலைதான். அதுதான் சுமந்திரனின் பலமே. tna யில் சுமந்திரனுக்குப் போட்டிக்கு ஒருவருமே இல்லை.

இலங்கை சைவ சமய்க் காவலனாக சுமந்திரன் தோற்றமெடுக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. 

விக்கியரை மக்கள் வரவேற்றதற்குக் காரணம் சமயம் அல்ல. தேசியம் மீதான அவரது கருத்துக்களும் அவரது தகுதியும்தான் அவரை மக்கள் தெரிவுசெய்யக் காரணம். இந்தியாவின் சொல்கேட்டு சமயத்தை முன்னிறுத்துவதால் அவருக்கும் சச்சியர் போன்றோருக்கும் அரசியல் எதிர்கலமே இல்லை எமது மண்ணில். 

TNA என்கின்ற வட்டத்திற்குள் நின்று சிந்திப்பதைவிட்டு வெளியே வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் குடும்பத்துக்கும்  ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்காக வருந்துகிறேன்.

6 minutes ago, Kapithan said:

சுமந்திரனுக்கு இணையாக (personality ) வேறு யாரும் களத்தில் இல்லை. இருந்திருந்தால் சுமந்திரனின் நிலை கேள்விக்குறியாக முடிந்திருக்கும். தற்போதும் அதே நிலைதான்.

 எனது கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லாது சளாப்புவீர்கள்  என்பது தெரியும். சரி, அதை விடுங்கோ! அவர் வல்லவர், தீரர் இப்படியே சொல்லிச் சொல்லி ஏய்த்து கொண்டிருக்கிறார்களேயொழிய, இவர் சாதித்தது என்னவென்றால்: எல்லாம் பூஜ்ஜியமே. தனித்து வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திப்பதும், அது வெளுத்தவுடன் மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்துவதையுந் தவிர, வேறு யாரும் எழுந்து விடக்கூடாது என்பதில் சுமந்திரன் மிகக் கவனமாக செயற்படுகிறார். அப்படி யாராவது எழுந்தால், தூரநோக்கு இல்லாத தலையை வைத்து அவர்களை அரசியலில் இருந்து விரட்டுவதிலும், அல்லது அவர்களை வளைத்துப்போட்டு கட்சியை சுருட்டுவதிலுமே  குறியாய் இருக்கிறார். இதனாலேயே கட்சிக்குள்  விரிசலும், விமர்சனமும் எழுகிறது.  கட்சிக்குள் புகுந்த கறுப்பாடு இது. இது துரத்தப்பட வேண்டும்.

25 minutes ago, Kapithan said:

சாணக்கியன் வருகை TNA யை மேலும் பலப்படுத்தும்.

கொஞ்ச காலம் எடுக்கும் இவர் நிறம் வெளுக்க ......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே சுமந்திரன், விக்கினேஸ்வரனுக்கு ஒரு சவால் விட்டார். அதாவது முடிந்தால் தமிழ் தே. கூட்டமைப்பை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று. அதை அவர் செய்து காட்டியுள்ளார். முடிந்தால் சுமந்திரன் கட்சியை விட்டு வெளியேறி செய்து காட்டட்டும் பாப்போம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

உங்களுக்கும் குடும்பத்துக்கும்  ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்காக வருந்துகிறேன்.

 எனது கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லாது சளாப்புவீர்கள்  என்பது தெரியும். சரி, அதை விடுங்கோ! அவர் வல்லவர், தீரர் இப்படியே சொல்லிச் சொல்லி ஏய்த்து கொண்டிருக்கிறார்களேயொழிய, இவர் சாதித்தது என்னவென்றால்: எல்லாம் பூஜ்ஜியமே. தனித்து வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திப்பதும், அது வெளுத்தவுடன் மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்துவதையுந் தவிர, வேறு யாரும் எழுந்து விடக்கூடாது என்பதில் சுமந்திரன் மிகக் கவனமாக செயற்படுகிறார். அப்படி யாராவது எழுந்தால், தூரநோக்கு இல்லாத தலையை வைத்து அவர்களை அரசியலில் இருந்து விரட்டுவதிலும், அல்லது அவர்களை வளைத்துப்போட்டு கட்சியை சுருட்டுவதிலுமே  குறியாய் இருக்கிறார். இதனாலேயே கட்சிக்குள்  விரிசலும், விமர்சனமும் எழுகிறது.  கட்சிக்குள் புகுந்த கறுப்பாடு இது. இது துரத்தப்பட வேண்டும்.

சளாப்புதல் அல்ல சாத்தான். 

நீங்கள் சுமந்திரன் என்கின்ற தனி மனிதனூடாகப் பார்க்கிறீர்கள். நானோ தமிழர் அரசியல் என்று பார்க்கிறேன். அவ்வளவுதான். 

எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது சுமந்திரன் வெட்டிப் புடுங்குவார் என்று கூறினேனா..? அல்லது போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் கருத்துக்களை விமர்சிக்காமல் இருந்தேனா..? 

எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்.. 👍

tna க்குள் சுமந்திரனைத்தவிர தலைமைத்துவத்திற்கு தகுதியான யாரையாவது உங்களால் அடையாளம் காட்ட முடியுமா..?

சாணக்கியன் திறமை உள்ளவராகத் தெரிகிறார். ஆனால் தலைமையை  ஏற்கும் தகுதிக்கு அவர் தன்னை கொண்டுவரவேண்டும்/நிரூபிக்க வேண்டும். அதற்குக் காலம் செல்லும். 

சுமந்திரனுக்கு முண்டு கொடுக்கிறேன் என்கின்ற கண்ணாடியூடாக பார்க்காமல் நான் சொல்வதிலுள்ள உண்மைத் தன்மையை மட்டும் பாருங்கள். 

சுமந்திரனுக்கு பிரதியீடாக தகுதியான ஒருவரை முன்னிறுத்துவீர்களானால் அவர் தானாகவே காணாமல் போய்விடுவார். 

அதுதவிர சுமந்திரனின் ஊழல்கள் என்பதை எமது இதுப்போன அரசியலின் ஒரு அங்கமாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர தனி மனித ஊழலாகப் பார்க்காதீர்கள். அப்படி இல்லையெனில் சுமந்திரன் திருந்தினால் tna யின்/தமிழர் அரசியல் திருந்திவிட்டதாக கொள்ளவேண்டியேற்படும். இல்லாவிட்டால் திரும்பவும் ஏமாறப்போவது நாங்கள்தான். 

நான்/நாங்கள் முட்டாள்களாக இருக்கலாம் அனால் மக்கள் முட்டாள்கள் அல்லவே..

😀

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

வேறு யாரும் எழுந்து விடக்கூடாது என்பதில் சுமந்திரன் மிகக் கவனமாக செயற்படுகிறார். அப்படி யாராவது எழுந்தால், தூரநோக்கு இல்லாத தலையை வைத்து அவர்களை அரசியலில் இருந்து விரட்டுவதிலும், அல்லது அவர்களை வளைத்துப்போட்டு கட்சியை சுருட்டுவதிலுமே  குறியாய் இருக்கிறார். இதனாலேயே கட்சிக்குள்  விரிசலும், விமர்சனமும் எழுகிறது.  கட்சிக்குள் புகுந்த கறுப்பாடு இது. இது துரத்தப்பட வேண்டும்.

 

54 minutes ago, Kapithan said:

இலங்கை சைவ சமய்க் காவலனாக சுமந்திரன் தோற்றமெடுக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை

இந்த கருத்து ஆச்சரியமானது. ஒருதடவை சுமந்திரனின் செயற்பாடு குறித்து  ஒரு உறவு கருத்து எழுதியபோது, இன்னொருவர் அவர் கிறிஸ்தவர் என்கிற காரணத்தால்தான் இவ்வளவு விமரிசனம் அவர்மேல் எழுவதாக சீறினார். ஆனால் இப்போ, இப்படி மாறியது நீங்களா? அல்லது சுமந்திரனா? அரசியலில் இதெல்லாம் சகஜம். கிறிஸ்தவ கோசம் எடுபடவில்லை போலத் தெரிகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

இதே சுமந்திரன், விக்கினேஸ்வரனுக்கு ஒரு சவால் விட்டார். அதாவது முடிந்தால் தமிழ் தே. கூட்டமைப்பை விட்டு வெளியேறி தேர்தலில் நின்று வென்று காட்டட்டும் என்று. அதை அவர் செய்து காட்டியுள்ளார். முடிந்தால் சுமந்திரன் கட்சியை விட்டு வெளியேறி செய்து காட்டட்டும் பாப்போம்! 

உங்களுக்கு சுமந்திரன் பிரச்சனையா அல்லது அவரது அரசியல் நிலைப்பாடு பிரச்சனையா.. 🤥

சுமந்திரன் என்கின்ற வெள்ளாள, கொழும்பை மையமாகக் கொண்ட, தமிழர் அரசியல் வரலாறே தெரியாத, சம்பந்தனால் வலிந்து அரசியலிற்குள் கொண்டுவரப்பட்ட கிறீத்துவ மத போதகர்தான் பிரச்சனையென்றால் அதனை மாற்ற ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது. 

ஆனால் சுமந்திரனின் அரசியல் நிலைப்பாடு தவறென்று கருதுவீர்களானால் அவருக்கு மாற்றீடான சிறந்த ஒருவரை முன்னிலைப் படுத்துவீர்களானால் அவர் தானாகவே காணாமல் போய்விடுவார். 

உங்களிடம் நல்ல தெரிவு இல்லை என்றால்   என்னால் என்ன செய்ய முடியும்..? 

அடுத்த மாகாணசபை தேர்தலில் டக்கிளஸ் முதலமைச்சராக வரப்போகிறார். அப்போது என்ன செய்வீர்கள்..? 

அப்பொஇதும் இதே பல்லவிதான் பாடிக்கொண்டிருப்பீர்களா.. ? அல்லது எங்கே பிழை விட்டோம் என யோசிப்பீர்களா.. ?

(வட மாகாணத்தில் என்ன நடக்கிறது என்பதாவது தெரியுமா. ..? 🤥)

 

2 minutes ago, satan said:

 

இந்த கருத்து ஆச்சரியமானது. ஒருதடவை சுமந்திரனின் செயற்பாடு குறித்து  ஒரு உறவு கருத்து எழுதியபோது, இன்னொருவர் அவர் கிறிஸ்தவர் என்கிற காரணத்தால்தான் இவ்வளவு விமரிசனம் அவர்மேல் எழுவதாக சீறினார். ஆனால் இப்போ, இப்படி மாறியது நீங்களா? அல்லது சுமந்திரனா? அரசியலில் இதெல்லாம் சகஜம். கிறிஸ்தவ கோசம் எடுபடவில்லை போலத் தெரிகிறது 

தற்போது நடைபெறுவதைக் கூறியுள்ளேன். பொறுத்திருந்து பாருங்கள் புரியும்.

(கிறீத்துவர் என்பதற்காக அவர் எதிர்க்கப்பட்டார் என்கின்ற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. )

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

அடுத்த மாகாணசபை தேர்தலில் டக்கிளஸ் முதலமைச்சராக வரப்போகிறார். அப்போது என்ன செய்வீர்கள்..?

அடுத்த மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்த்தி உள்ள பலர் டக்கிலஸுடன் சேர வாய்ப்புள்ளது. டக்கிலஸும், சிங்களமும் அதை நோக்கியே நகருகிறது. இதற்கு யார் காரணம்? 

 

6 minutes ago, Kapithan said:

சுமந்திரன் என்கின்ற வெள்ளாள, கொழும்பை மையமாகக் கொண்ட, தமிழர் அரசியல் வரலாறே தெரியாத, சம்பந்தனால் வலிந்து அரசியலிற்குள் கொண்டுவரப்பட்ட கிறீத்துவ மத போதகர்தான் பிரச்சனையென்றால் அதனை மாற்ற ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது. 

சாதி, சமயம், பிரதேசவாதம் எனக்குத் தேவையில்லாத ஒன்று. நான் குறிப்பிடுவது: மற்றவர் மேல் சேறு பூசும்போது, தன்மேல் சேறு படாமல் பாத்துக்கொள்ள வேண்டும். தன் சேற்றை மற்றவர் மேல் பூசக்கூடாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

கனடா தமிழரசு கட்சி தலைவர் கூட சுமத்திரனுக்கு எதிரா போர்க்கொடி தூக்கியுள்ளார் அவர்  கடைசியாக அனுப்பிய பணத்தை சுமத்திரன் லவட்டி விட்டாராம்.

இது எப்ப நடந்தது? தேர்தல் காலங்களில் சுமந்திரன்மேல் பண  மோசடி குற்றச்சாட்டு வந்தபோது, அப்படி ஏதும் நடக்கவில்லை, குற்றம் சுமத்திய பெண்மணி  கட்சிக்குள் நடந்ததை  வெளியில் கதைத்தது தவறு, சுமந்திரனைப்போல் திறமையானவர்கள் கட்சிக்கு வேண்டும் என்றாரே. இவர் வேறொருவரோ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, satan said:

1 அடுத்த மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்த்தி உள்ள பலர் டக்கிலஸுடன் சேர வாய்ப்புள்ளது. டக்கிலஸும், சிங்களமும் அதை நோக்கியே நகருகிறது. இதற்கு யார் காரணம்? 

 

2)) சாதி, சமயம், பிரதேசவாதம் எனக்குத் தேவையில்லாத ஒன்று. நான் குறிப்பிடுவது: மற்றவர் மேல் சேறு பூசும்போது, தன்மேல் சேறு படாமல் பாத்துக்கொள்ள வேண்டும். தன் சேற்றை மற்றவர் மேல் பூசக்கூடாது.  

1) சுமந்திரன், உங்கள் விருப்பம்போல்.. 😀

2) யதார்த்தத்தை மீறி உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. 

சுமந்திரனுக்கு பிரதியீடாக அல்லது அவரைவிட திறமையான ஒருவரை (தற்போதைய சூழலில்) உங்களால் முன்னிறுத்த முடியுமா ? இல்லையென்றால் நீங்கள் இங்கே குத்தி முறிவது வீண். 

ஏனென்றால் முடியாத ஒன்றைப் பற்றி விவாதிப்பது வீண். 

(உங்கள் கரிசனை சுமந்திரன் என்கின்ற தனி மனிதன் பற்றியது. எனது அக்கறை தமிழர் அரசியல் தொடர்பானது. மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் என்பவர்; புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து அரசின் கட்சியாக செயற்படுவோருடன் இணைய வைக்க அரசினால் நியமிக்கப்பட்ட சகுனி.  அதை அவர் சரிவர செய்து த. தே. கூட்டமைப்பின்   உறுப்பினர்களை குறிப்பிட்ட கட்சியின் பக்கம் தள்ளிக்கொண்டே இருக்கிறார். கட்சி நொறுங்கி, அழியும்வரை இவர் கட்சியை விட்டு வெளியேற மாட்டார். மற்றவரை முன்வர விடவும் மாட்டார். ஒருவேளை சம்மந்தர் தலைசாய்ந்தபின் நிறைவேற்றலாம். அதற்குத்தான் தன் கைக்குள் ஒவ்வொருவராய் இழுத்துக்கொண்டு இருக்கிறார். மாவை இவர் சுழிக்குள் அகப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை நிலைமை மாறியிருக்கும். ஒரு துளி விஷம் போதும் எல்லாவற்றையும் அழிப்பதற்கு.

இவர் திறமையானவராக இருந்திருந்தால்: இவர் அரசியலுக்குள் நுழைந்த காலத்திலிருந்து நமது பிரச்சனைகள் தீர்ந்து, சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருப்போம். இப்படி புலம்பிக்கொண்டிருக்க  மாட்டோம்.

சொரணை கெட்டதுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் உறைக்காது, இடம் கொடுத்தால் வெளியேற்றுவது கடினம். கொடுத்தவர்கள் தான் வெளியேறனும். கறையான் பூச்சிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

1) சுமந்திரன் என்பவர்; புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து அரசின் கட்சியாக செயற்படுவோருடன் இணைய வைக்க அரசினால் நியமிக்கப்பட்ட சகுனி.  அதை அவர் சரிவர செய்து த. தே. கூட்டமைப்பின்   உறுப்பினர்களை குறிப்பிட்ட கட்சியின் பக்கம் தள்ளிக்கொண்டே இருக்கிறார். கட்சி நொறுங்கி, அழியும்வரை இவர் கட்சியை விட்டு வெளியேற மாட்டார். மற்றவரை முன்வர விடவும் மாட்டார். ஒருவேளை சம்மந்தர் தலைசாய்ந்தபின் நிறைவேற்றலாம். அதற்குத்தான் தன் கைக்குள் ஒவ்வொருவராய் இழுத்துக்கொண்டு இருக்கிறார். மாவை இவர் சுழிக்குள் அகப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை நிலைமை மாறியிருக்கும். ஒரு துளி விஷம் போதும் எல்லாவற்றையும் அழிப்பதற்கு.

2) இவர் திறமையானவராக இருந்திருந்தால்: இவர் அரசியலுக்குள் நுழைந்த காலத்திலிருந்து நமது பிரச்சனைகள் தீர்ந்து, சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருப்போம். இப்படி புலம்பிக்கொண்டிருக்க  மாட்டோம்.

3) சொரணை கெட்டதுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் உறைக்காது, இடம் கொடுத்தால் வெளியேற்றுவது கடினம். கொடுத்தவர்கள் தான் வெளியேறனும். கறையான் பூச்சிகள்.

சொறணை கெட்டவர்கள் என்று கூறியது என்னை அல்லவே..😂

1) அது முடியாது ராஜா..😂

2) இன்னும் இந்த அரசியல்வாதிகளை நம்புகிறீர்களா பாஸ்.. ? உருப்பட்டமாதிரித்தான். ☹️

3) tna யைச் சொல்கிறீர்கள. சரிதானே.. 😀

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.