Jump to content

அகமண முறையும் சாதியை அழித்தொழித்தலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

அகமண முறையும் சாதியை அழித்தொழித்தலும்

by vithaiApril 14, 2021
Ambedkar-depressed-people-meeting-1.jpg

 

“திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்” என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு, வர்க்கம் அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே மணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் சாதி ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது. தமிழர்களைப் பொறுத்த வரையிலும் கூடப் பெரும்பாலும் சாதி அகமணக் குழுக்களாகவே தம் சமூகத்தை உருவாக்கியுள்ளனர். மேலைநாடுகளில் சாதிப்பிரிவுகள் இல்லாத சமுதாயங்களில், வர்க்கம் அல்லது வகுப்பு அகமணக் குழுவாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு அகமணமுறை சார்ந்திருந்த பல சமூகங்களில் தற்காலத்தில் இதன் செல்வாக்குக் குறைந்து வருகின்றபோதும், வேறு சில சமுதாயங்களில் இம்முறை இன்றும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காணலாம். குறிப்பாக சாதிய அல்லது வர்ண நிலவரங்களைப் பாதுகாக்கும் கட்டமைப்பாக மட்டுமன்றி சாதியத்தின் தொற்றுவாயிலும் அகமணத்தன்மை காணப்படுவதை அம்பேத்கர் தன்னுடைய மானிடவியல்சார் ஆய்வின் மூலம் கண்டறிந்தார். தன்னுடைய சாதிக்கு எதிரான சிந்தனைகளின் அடிப்படைகளை சாதியை விஞ்ஞான பூர்வமான, வரலாற்று நிலைப்பட்ட ஆய்விலிருந்தே அம்பேத்கர் ஆரம்பித்தார் என்பது முக்கியமானது.

மொத்தச் சாதிய இருப்பின் அடிநாதமே ‘அகமணங்கள்’ (Endogamous nature) தான் என்கிறார் ’மானிடவியலாளர்’ அம்பேத்கர். தன்னுடைய காலத்திற்கு முன்பு காலனிய ஐரோப்பியரும், கீழைத்தேய ஆய்வாளர்களும் சாதியின் ‘பிறப்பு’ பற்றிச் ஆய்ந்து சொன்னவற்றை, ஆதாரங்களுடன் மேவிச்சென்றார். அவர் அதுவரைகாலமும் இருந்த புறவயமான ஆய்வுகளில் இருந்து விலகி சாதியை அகவயமாகப் புரிந்துகொள்ளும் வழிகளைத்திறக்கிறார். அகமண முறைகளே சாதியின் தோற்றத்திலும் தொடர்ச்சியிலும் பெருத்த பகுதியை வைத்திருக்கின்றன என்ற அவருடைய ஆய்வும் வாதமும் முக்கியமானது. அவர் கலப்பு மணத்தின் இன்மையே சாதியைப் பாதுகாக்கிறது என்கிறார். கெட்கர் விளக்கிய கலப்புமணத்தடை, பிறப்பிலேயே ஒவ்வொருத்தரும் பிறந்த குழுவிற்கு உறுப்பினராகிவிடும்தன்மை என்பவற்றின் இயல்புகளை சாதிய நிலவரங்களைப்பாதுகாக்கும் முக்கிய ஏற்பாடுகள் என்பதை அம்பேத்கர் வலியுறுத்துகின்றார்.

இந்திய வர்ணக் கோட்பாட்டை அடியாகக் கொண்ட சாதிய அமைப்புக்களின் ஏனைய தாங்கு தூண்களின் அடிப்பாகமாக அகமணமே இருந்து வருகின்றது. குறிப்பாக அகமண முறைமையைப் பாதுகாப்பதன் மூலம் சாதி தொடர்ந்தும் பாதுகாக்கப்படுவதை நுட்பமாக அவதானிக்க வேண்டும். முன்பு சதி (உடன் கட்டை ஏறுதல்) ,குழந்தைத்திருமணம் , கட்டாய விதவை முறை என்பன இவ் அகமண அமைப்பினைப் பாதுகாக்கும் கூறுகளாக இருந்தன.


இந்த அகமணம் நீடிக்கவேண்டுமெனில் குறித்த குழுவிற்குள்ளே சம எண்ணிக்கை தொடர்ச்சியாகப் பேணப்படவேண்டும். எனவே இச்சமநிலையை ஒழுங்குபடுத்தும்போது இந்த அம்சம் நிறைவு காண்கிறது. மணம் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் ஒரேநேரத்தில் இறப்பதற்குச் சாத்தியமில்லை. கணவன் இறந்துபோனால் பெண் கூடுதலாக நிற்கிறாள். அத்தருணத்தைக் கையாளாவிட்டால் அவர் அக்குழுவைத் தாண்டிச்சென்று அகமண வழக்கத்தைக் குலைப்பாள். அதற்காக அவளை விதவையாக்குவதும் உடன்கட்டை ஏற்றுவதும் நடக்கிறது. அவனுக்கு பருவமெய்தாத பெண்ணை மணம் முடிப்பதும் தானேவந்து பிரம்மச்சரியம் ஏற்பதும் நடக்கிறது. அவ்வாறு குலஒழுங்குகளிலிருந்து சாதிக்கான இயல்புகளைத் தொடங்கும் அம்பேத்கர், பிற்கால நடைமுறைகளில் அவை மெல்ல நடைமுறை இழப்பதை விளக்குகிறார். பெண்ணொருத்தி கணவனை இழந்தால் அவள் அவனுடன் தீக்குள் இறக்கிறாள், கணவன் மனைவியை இழந்தால் ‘பிரமச்சரியம்’ கடைப்பிடிக்கிறான். இம் மானுடப்பிறழ்வுகளும், சாதியை விட்டு விலகி வேறு வர்ணங்களுடன் மணத்தொடர்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதைப்பாதுகாக்கும் பொறிமுறைகளாகும். இவ்விடத்தில் ஒரு பெண்ணை அடக்கி வைப்பது மூலமே அகமணம் வழக்கம் காப்பாற்றப்படுகிறது என்று அம்பேத்கர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மொத்தத்தில் சாதி உருவான முறை என்பதாக மட்டுமில்லாமல் அது தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுவந்த முறைமையாக அகமணம் இருப்பதை அவர் விளக்கியிருக்கிறார்.

இவ்விடத்தில் இந்து மதமும் அதன் மூல நூல்களும் எடுக்கும் பாத்திரம் பெரியது. மனுஸ்மிருதி திருமணங்கள் எவ்வாறு நடக்க வேண்டும் யார் யாரைத்திருமணம் செய்ய வேண்டும் என்பதை வர்ணப்பாகுபாட்டைப்பாதுகாக்கும் விதமாக ‘உயர் குடி மணம்’ ’தாழ் குடி மணம்’ என்பவற்றை அனுலோம (இயற்கைக்கு உகந்தது), பிரதிலோம (இயற்கைக்கு ஒவ்வாதது) என்று வரன்முறை செய்கின்றது. பிராமணர்கள், சத்திரியர்கள் போன்ற ஒடுக்கும், சுரண்டும் உயர்குடிகளின் வாழ்வை உறுதி செய்யவும் வைசிக, சூத்திரர்களை ஒடுக்கவுமாக திட்டமிட்டு இந்து மூல நூல்கள் அகமண முறையை கடுமையாக வலியுறுத்துகின்றன.

பிராமணியத்தின் பரவுகை, நாட்டார் வழிபாட்டு முறைகளிடம் இருந்த ‘சடங்கியல் தலைமையைப்’ பறித்துக்கொண்டதைப் போலவே திருமணத்திலும் சடங்கியல் தலைமையையும் கட்டமைப்பையும் தங்களுடைய பிறழ்வான சாதிய நடைமுறையைப்பாதுகாக்கும் அமைப்பாகவே மாற்றியது. மனு, உலகின் பெரிய அழிவே வர்ணதர்மத்தின் அழிவு என்றும், உலகின் பெரும் தீமை வர்ணக்கலப்புத்தான் என்கிறது.

மத அமைப்பிற்கும் சாதி அமைப்பிற்கும் பழக்கப்படுத்தப்பட்ட சமூகத்தின் மன அமைப்பு சிந்திக்காதவண்ணம் கடவுளின் பெயராலும், பிறப்பின் பெயராலும் மனுதர்மம் போன்ற சித்தாந்தங்கள், பிராமணீய சத்திரிய நலன்களையும் அதிகாரத்தையும் பாதுகாக்கும் முகமான வர்ண சித்தாந்தங்களை நிறுவி, புராண இதிகாசங்கள் மூலம் அதற்கான தொன்மக்கதைகளை உற்பத்தி செய்து சமூக அமைப்பை வர்ண ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவந்தது.

எழுத்தாளர் பிரேம் கட்டுரை ஒன்றில் வர்ண அமைப்பினை வலியுறுத்தக் கூடிய இந்து மூல நூல்களில் ஒன்றான ’கீதை’ சொல்லப்பட்ட இடமென விபரிக்கப்பட்டும் பாரதப்போர்க் காட்சியை இவ்வாறு வாசிப்பார்,
|மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர்க்காட்சி இங்கு இந்திய வேத நூலாகக் கொண்டாடப்படும் பகவத்கீதை பிறக்கிறது. இதை இந்திய மன அமைப்பின் ஒரு பகுதியாகக் கொண்டால் இந்திய வாழ்வியல், அறவியல் பற்றிய முழு அடிப்படையுமே இதற்குள் மறைந்திருக்கிறது என்று கூறலாம். அர்ச்சுனன் போர்க்களத்தில் தனக்கு முன்னே நிற்கும் அனைவரையும் பார்க்கிறான். சில வினாடிகள்தான். அவனால் போர் செய்ய முடியவில்லை. மனம் பதை பதைக்கக் கருவிகளைத் தளரவிட்டு சோர்ந்து போகிறான். ஏனெனில் எதிரே இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்லப்போவதன் துடிப்பு. அவனுக்குத் தேர்ப்பாகனாக வரும் கண்ணன் அர்ச்சுனனைப் போர் செய்யத்தூண்டுகிறான். இந்தக்காட்சியைப் பலரும் பலவாறு விபரித்திருக்கிறார்கள். போரின் அவலம், தான் செய்யப்போகும் கொடுமையின் பதைபதைப்பு, தான் என்ன செய்ய வேண்டும் என்ற அறத்தவிப்பு எனப்பல்வேறு விளக்கங்கள். ஆனால் கீதையில் அர்ச்சுனன் பாத்திரத்தின் ஊடாக வெளிப்படும் தவிப்புகள் மனிதக் கொலைகள் மீதான அவலம் அல்ல, வேறொன்று. அர்ச்சுனன் சொல்கிறான் ‘இதோ எதிரே நிற்கும் அனைவரும் நமது குலத்தைச் சேர்ந்த ஆண்கள். இவர்களைக் கொல்வதன் மூலம் நமது குலம் சிதறிப்போகும் ஆண்கள் அழிந்தால் நமது குலப்பெண்கள் (வேறுகுலத்தவருடன் கலந்து) தூய்மை அழிவார்கள். பெண்களின் குலத்தூய்மை அழிந்தால் சமூக ஒழுங்கும் வர்ண தர்மமும் அழியும் எனவே நான் இந்தக் கொடுமையைச் செய்ய மாட்டேன்’ அதற்கு கண்ணன் அப்படித்தர்மம் அழிய விடமாட்டேன். ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து, அதர்மத்தை (வர்ணக்கலப்பை அழிப்பேன்) என உறுதி வழங்கிக் கொலைக்குத் தூண்டுகிறான். எவ்வளவு பெரிய அழிவையும் விட வர்ணதர்மத்தின் அழிவேமிகப்பெரிய அழிவாகவும், இந்திய மனத்தின் மிகப்பெரும் அச்சமாகவும் செயற்படுவதை நாம் அறிந்துகொள்ள முடியும் |

(பிரேம்: பின்னநவீனத்துவம், பிறகான மாக்சியம், பக் 178-179 )

மதங்களின் வழிவந்த இதிகாசங்கள் புராணங்கள் கடவுளர்களின் <கந்தர்வ மணங்களை> விபரிக்கின்றன. சமூக ஒழுக்கம் திணிக்கப்பட்ட பெண்களை, தேவர்களும் கடவுளர்களும் ‘கந்தர்வ மணம்’ புரியவும், ஏமாற்றவும், பாலியல் அறங்களை மீறும் உரித்தைப் பெறுகின்றனர். இத்தொன்மங்களுக்குரிய நடைமுறை நியாயங்களை மதங்களின் மூல நூல்கள் கற்பிதப்படுத்துகின்றன. இதிகாசங்கள் புராணங்கள் அகமண முறையை மனிதர்களுக்கும், கட்டற்ற தன்மையினை கடவுளர்களுக்கும் கதாநாயகர்களுக்கும் வழங்கும் அபத்தத்தை இச்சமூகம் கொண்டாடிக் கொள்ளுமாறு அவர்களின் மன அமைப்பை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள்.

ஒரே நிலத்தைப்பகிர்ந்துகொள்கின்ற பிராமணர்களின் திருமணச்சடங்கு கடவுளர்களுக்கு நிகழ்த்தப்படும் ‘திருக்கல்யாணத்தை’ ஒத்திருக்கிறது. ஆனால் பிராமணர் அல்லாதோரின் சடங்குகள் அப்படியில்லாது இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
தமிழ்ச்சமூகம் ஆதியில் வர்ணப்பாகுபாடு இல்லாத சமூகமாக இருந்து வந்தது. அதனுடைய கோத்திரங்களும் குடிகளும் சாதியமற்ற பண்பாட்டுக்குப் பழகியிருந்தனர். ஆனால் சாதியத்தின் வருகையுடன் தமிழ்ச்சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு அதிகாரங்களின் மீது சாதியம் ஏறி அமர்ந்துகொண்டது. இந்து மதம் அதை ஒழுங்கமைத்தது. அதன் விளைவாக தமிழ்ச்சமூகத்தின் திருமண முறைகளுக்குள்ளும் அதுசார் சமூக அமைப்புக்குள்ளும் சாதி புகுந்தது. சாதியின் பெரிய பாதுகாப்பான திருமணம் அதுசார் சடங்களில் சாதி இறுக்கமான விதிகளை வகுத்து ‘வர்ண மன அமைப்பை’ உருவாக்கியது.

ஈழமும் அகமணமும்

தமிழ்ச்சமூகத்தில் குறிப்பாக ஈழத்து தமிழ்ச்சமூகத்தின் அகமண அமைப்பு பெண்ணின் பெயரில் இருக்கும் சொத்தையும், உரித்தையும் பாதுகாக்கும் பொறிமுறையைச் சாதியிடமே ஒப்படைத்தது. கூடவே சீதண முறையும் அக மண முறைக்கு உரமிட்டது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களும் ஒடுக்கும் சாதிய அமைப்புக்களின் அகமண முறையைத் தமக்குள் கொண்டிருக்கின்றார்கள். மதத்தின் வழியாகப் பெற்ற சடங்கியல், போலச்செய்தல் பயில்வுகளின் ஊடாக இடைநிலைச்சாதியினரும் சரி, ஒடுக்கப்படுகின்ற சாதியினரும் சரி தமக்குள் அகமண முறையைப் பேண வேண்டியிருக்கிறது.


பால், பாலியல் உரிமைகளை, சுதந்திரத்தை சமூக ஒழுக்கம் என்னும் பெயரில் குறித்த சாதிய, வர்க்க நலன்களுக்காக ஒழுங்கமைத்தது. பாலியலின் சடங்கான, சமூக அங்கீராத்தைக் கோரக்கூடிய மண நிலைமையை கட்டுப்படுத்தி ‘அக’ நியதிகளை மீறாமல் பாதுகாப்பதில் சாதிய, வர்க்க, சமய, ஆணாதிக்க மன அமைப்புக்களின் பண்புகளும் நடைமுறைகளும் பங்கெடுத்தன.

நன்றாகக் கவனித்தால் ஆணாதிக்க சமூக ஒழுங்கு அகமணமுறையில் ஆண்களுக்கே சலுகைகளையும் தளர்வுகளையும் வழங்குவதையும் பெண்களை ஒடுக்கும் அதிகபட்ச நடைமுறைகளைக் கையாள்கின்றது. பெண்ணைப் புனிதமாக, தாய்மையாக, தெய்வத்தன்மையாக கற்பிதப்படுத்துவதன் மூலம், அவளைச் சொத்தாக, தூய்மைவாதத்தின் சடப்பொருளாக முன்நிறுத்துகின்றன. அவளுடைய மானுட உரித்தை ஒடுக்குகின்றன. கணவனை இழந்தால் பெண்ணை தீயினுள்ளும் விதவை நோன்பினுள் தள்ளுகின்றன. ஆணுக்கு வாழ்க்கைக்குரிய வேறு வாசல்களைத்திறந்து விடுகின்றன. விதவை முறைமை ஒழிக்கப்பட்ட பிறகும் ’மறுமணம்’, சுதந்திரமான துணைத்தெரிவு, பாலியல் சுதந்திரம் என்பவற்றை ஒடுக்கியபடிதான் உள்ளது. ஏனெனில் சொத்து, சாதிய புனிதம், கலாசார குறிபீடு என்பனவற்றைச் சுமக்கும் பண்டமாகப் பெண்ணை மாற்றுகின்றது.


இந்த வரலாற்றிப்பின்னணியில் இலங்கையில் தாக்கத்தைச் செலுத்திய பிராமணியத்தின் மேற்சொன்ன ஒடுக்குதல் கூறுகள் இலங்கைக்கு வரும் போது வேறுவடிவங்களைப்பெற்றன என்பதையும் நுட்பமாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக பெளத்த, காலனிய நிலமைகள் அதிகாரத்தில் இருக்கும் போது வரலாற்றில் பிராமணீயத்தினால் இலங்கையில் பெருமெடுப்பில் தலையெடுக்க முடியவில்லை.


இலங்கையில் பிராமணியம் அதிகார பீடத்தில் இல்லாவிட்டாலும், இந்துக்கள் திருமணத்தில் கடுமையான அகமண அமைப்பினையே பின் பற்றுகின்றனர். அதிகாரத்தில் இருக்கின்ற ‘வெள்ளாளர்’ களையும் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. மதம், ஆணாதிக்கம், சாதி இவை மூன்றும் இணைந்து அகமண அமைப்பினை அண்டாது செய்கின்றன. மதம், சமூகத்தகுதி, சொத்துடமை எல்லாமே அதிகாரத்துக்கும் ஆதிக்கத்திற்குமான அடிப்படைகளாக இருக்கின்றன என்பார் அம்பேத்கர்.

ஈழத்தில் ஆணவக்கொலைகள் போன்ற கடும் ஒடுக்கு முறைகள் இல்லாவிட்டாலும் அகமணத்தன்மையை மீறி கலப்புத்திருமணம் செய்யும் போது குடும்பப்புறக்கணிப்பு, சமூகப்புறக்கணிப்பு, சொத்துரித்து மறுப்பு, உளவியல் நெருக்கடி என்பவற்றைச் சமூகம் தாராளமாக வழங்குகின்றது. பேசிச்செய்கின்ற திருமணங்கள் தொண்ணூறு வீதத்திற்கு மேலே ஒரே சாதிய, வர்க்க நிலைமைகளின் பேரம் பேசுதல்களின் ஊடாக அகமணத்தை பயில்வில் வைத்திருக்கவும் செய்கின்றன. சாதிய மனநிலை ஊறிய மனங்களும் சமூகப்பயத்துடன் இருக்கும் மனங்களும் காதல் என்று வரும் போது கூட சாதிய நிலமையை ஒருமுறை உமிழ்ந்து விழுங்கிய பிறகே ‘காதலைத்(!) தொடங்கும் அபத்தமும் உள்ளது.

உறவினர்களை உருவாக்குதல், அவற்றின் பரம்பரை மரத்தினைப் பேணுதல் சாதிய அகமணத்தினாலும் பேணப்படுகின்றது. யாழ்ப்பாணத்துச் சாதியத்தைப் பற்றி எழுதும் போது மைக்கல் பாங்ஸ் “’ஒவ்வொரு சாதியும் பெயரிடப்படாத புனைவான், அகமணக்கட்டுடைய அலகுகளாக உள்ளார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் பல்வேறு கிராமங்களிற் சிதறிவாழும் கணிசமான குழுக்களை உள்ளடக்கியது. இவை இடுகுறிப்பெயர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் இனப் பொதுவியல்பான பெயர்களும் அற்றவையாகும். ‘என்னுடைய சொந்தக்கார’ எனும் வெளிப்பாடு ‘எனது உறவினர்’ என்ற நேரடியான அர்த்தம் தரும். அது எனது சாதியைச் சார்ந்தவர்களைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.’’
(பனுவல் இதழ் 07, பக் 08)

ஈழத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு தளங்களில் செல்வாக்கு மிக்க புலமாக உள்ள ‘புலப்பெயர்வாளர்கள்’ வேறு அரசியல் பண்பாட்டுச்சூழலுக்குள் சென்றாலும் கலப்புத்திருமணம் அரிதாகவே இருந்தது. அவர்கள் சாதிய, சமய நம்பிக்கைகளை வேறொரு நிலத்திலும் பண்பாட்டிலும் பின்பற்றவே திருவுளம் கொண்டனர்.


குடும்ப அமைப்பு சாதிய அகமணப்பேணுகையின் பெரிய பாத்திரத்தை எடுக்கிறது அது ஆதிக்க மனநிலை வழங்கியவற்றை உணர்ச்சிப்பாங்கோடு உறவுக் கற்பிதங்களால் செய்து முடிக்கின்றது . குடும்பம்; திருமணம் என்ற ஆதாரத்தின் மீது அமைந்திருக்கிறது என்றார் ஏங்கல்ஸ். திருமணத்தின் மீது குடும்பமும் குடும்பத்தின் மீது திருமணமும் கொண்டுள்ள இயக்கத்தில் அகமணமும் சாதிய, வர்க்க நலன்களும் தங்களின் வேர்களை விரவி ஓடியிருக்கின்றன.


சாதிய அகமணத்தோடு இணைந்திருக்கும் மற்றொரு கூறு புவியியல் சார் அகமணத்தன்மையாகும். குறித்த குழுக்கள் குறித்த நிலத்தில் வாழும் குழுக்களுடன் திருமணம் செய்து கொள்ளும் மரபினைப் பேணுகின்றன. மேலும் இடைநிலைசாதியினரும் சரி, தாழ்த்தப்படும் சாதியினரும் சரி, ஒடுக்கும் சாதியினரைப்போல் மாற வேண்டும் என்ற போலச்செய்யும் அல்லது அதே போன்ற மாற்றை உருவாக்கும் நடை முறைக்குள் செல்லும் மனநிலையோடு இருக்கும் பண்புகளைத் திருமணத்திலும் அவதானிக்கின்றோம். அவர்கள் பொருளாதாரம் ஈட்டுவதன் ஊடாக வர்க்க மேன்நிலையாக்கமும், ஒடுக்கும் சாதிக்குழுக்களுடன் கலப்புத்திருமணங்களைச் செய்வதன் ஊடாக அவர்களின் மனநிலைக்குள் சென்று சேரவும் சாதியை ஒழிக்காமல் அதை ‘மேன்நிலையாக்கம்’ செய்யவும் விரும்புகின்றனர்.

ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இருந்த திருமணச்சடங்குகளின் பல்தன்மை, , உள்ளூர் மரபுகள் தேய்ந்தழிந்துள்ளன. ஈழத்தில் உள்ளூர் மரபுகளில் இருந்த ‘சோறுகொடுத்தல்’ முதலான திருமணச்சடங்குகள் நீங்கிப் போயுள்ளன. அவை அகமண முறைமையை வியாபித்த, தங்களை உயர் குடிகளாகக் காட்டிக்கொண்ட பிராமணீய சடங்கியல் அதிகாரத்தினால் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. ஈழத்தில் பிராமணர்களிடையே ‘திருமணம்’ முதலான மங்கலச் சடங்குகளுக்கு உரியவர்கள், மரணம் முதலான அமங்கலச்சடங்குகளுக்கு உரியவர்கள் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.

ஒரு வகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் மரபுரித்துகளைச் சடங்குகளை அகமண முறையைப் பின்பற்றும் சாதிய அமைப்பைப் பின்பற்றும் தங்களையே ஒடுக்கும் குழுக்களைப் போலச்செய்தும், அவர்களினால் திட்டமிட்டு திணிக்கப்பட்ட தளைகளுக்குள் சிக்கிக்கொண்டும் இழந்து போயுள்ளனர். பழய தொல்குடிச் சமயங்கள், வழக்குகள், திணை வாழ்வு என்பவை, தருகின்ற தொல், இலக்கியச்சான்றுகள் சாதிக்கு முந்திய சமூகத்தில் இருந்த ஒடுக்குதல் அற்ற சுதந்திரமான காதல் வாழ்க்கையை விபரித்துச்செல்கின்றன.


இலங்கையில் ஈழ விடுதலைப்போராட்டங்கள் நடைபெற்ற காலப்பகுதியில் போராட்டத்தில் அதிகாரம் மிக்க அமைப்பாக மாறியிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினர் தங்களுடைய அமைப்பின் கொள்கைகளில் சமய, சாதிப்பாகுபாடுகளை புறக்கணித்தனர். நடைமுறையுலும் அவை இயலுமான அளவு பயிலப்பட்டன. விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களோ, அவர்கள் சார்ந்து திருமணம் முடிப்பவர்களோ சமய சடங்குகள் அற்று புலித்தாலி, மோதிரமாற்று, கைக்கடிகாரம் மாற்றிக்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக திருமணத்தை மேற்கொண்டனர். இங்கே சாதிய அகமண முறைக்கெதிரான பண்புகள் அதிகரித்ததுடன் கலப்புத்திருமணங்களும் நடக்க சமூக வாய்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததை இங்கே அவதானித்தே நகர்ந்து செல்ல வேண்டும்.

இலங்கையைப்பொறுத்தவரையில் வட இலங்கைக்கு என்று குறிப்பிட்ட அகமணத்தன்மைகளும், கிழக்கிற்கு என்று அகமணத்தன்மைகளும், மத்திய மலைநாட்டில் இருக்கும் இந்திய வம்சாவளிகள் இந்திய, சாதிய அகமண முறைகளையே பின்பற்றுவர், முஸ்லீம்களிடையே சாதிய நிலமை காணப்படாவிட்டாலும் அங்கே வர்க்க அகமணத்தன்மை செறிவாக உள்ளது. சிங்கள மக்களிடையே சாதிய அமைப்பு நிலவுவதுடன் சாதிய, வர்க்க அகமணத்தன்மை உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் அதனுடைய அகமணத்தன்மை மானுடவியல் கண்களுடன், முன்னேறிய கோட்பாடுகளின் சமகாலத்தன்மைகளுடன் அணுகப்பட்டது குறைவாகவே இருக்கின்றது.


இலங்கையின் தமிழ் கிறிஸ்தவ சூழலிலும் சாதிய நிலமைகளும் அகமணமும் நிகழ்கின்றது, கிறிஸ்துவ திருச்சபையின் அதிகாரம் இன்று வரையும் ‘கிறிஸ்தவ வெளாளர்’ களிடமே உள்ளது. கிறிஸ்தவம் சாதிய அமைப்பினை ஏற்காவிடினும் அதிகாரத்தை ஒழுங்குபடுத்த கிறிஸ்தவத்திற்கும் சாதியமும் அகமண மரபும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மதமும் சடங்கும் சடங்கியல் தலைமையும் மாறினாலும் சாதிய நீக்கம் செய்வதும் கைவிடுவதும் பெரும் சவாலாகவே இருப்பதை அவதானிக்கிறோம்.

தமிழ்ச்சூழலில் இணையேற்பு, சுயமரியாதைத் திருமணம் போன்ற சொற்கள் புழங்க ஆரம்பித்திருக்கின்றன. மேலும் தற்பாலீர்ப்பாளர் மணங்களுக்கு அல்லது இணையேற்பிற்கு இந்தியாவில் சட்ட பூர்வ அனுமதி கிடைத்திருக்கிறது. இலங்கையில் அத்தகைய தற்பாலீர்ப்பாளர்களின் மணமும் குடும்ப வாழ்வும் அங்கீகரிக்கப்பட வேண்டும். சாதியும் சமயமும் தலைக்குள் உழன்று கொண்டிருக்கும் இச்சமூகத்தைச் சிந்திக்கவும் பன்மைத்தன்மையை, கலப்பு மானுட வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் பழக்க வேண்டும். ஒடுக்குதலற்ற சுதந்திரமான உடலையும் கருத்தையும் மக்கள் அடைய வேண்டும்.


சமூக அமைப்புக்களின் திருமணச்சடங்குகளும் அதுசார் கருத்தியல்புகளும் பன்முகமானவை, இங்கே அப் பல்தன்மைகள் அதிகாரமிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது. ஒடுக்க கூடிய சாதிய, சமய அடிப்படையில் எழும், அவற்றைப்பாதுகாக்கும், அகமணங்களைப் பேணுகின்ற சமூகங்கள் மையத்தில் இயங்கும் போது அவற்றின் ஒடுக்குமுறை அரசியல், பொருளாதார, பண்பாட்டு மேலதிகாரம் என்பவற்றை எதிர்க்கவும் வேண்டியுள்ளது.

கலப்புத்திருமணங்கள் பற்றிப்பேசும் போது நடைமுறையில் சாதிய, வர்க்க கலப்பு நடைபெறுவதற்கான பெரிய புள்ளியாக ‘காதலைக்’ கருதினால், ஒரு குறித்த சமூகத்தைச்சேர்ந்த ஆண் பெண் உடல்கள் காதல் வயப்படுதலிற்கான பாலியல் தேர்வும், பழக்க வழக்கமும், ஒழுக்க நடைமுறைகளும், நம்பிக்கைகளும் தனிப்பட்ட இரண்டு உடல்களுக்குள் இயங்கு விதத்தை குடும்பம், சமூகச்சூழல், பொருளாதாரம் முதலானவையே தீர்மானிக்கின்றன. அதற்கு மதம், சாதி என்பன அதிகாரக் கற்பிதங்களையும், மரபார்ந்த நம்பிக்கைகளையும் கொடுக்கின்றன. இங்கே வெவ்வேறு அடையாளங்களை, இயல்புகளைக் கொண்டிருக்கின்ற உடல்கள் சந்திப்பதற்குரிய சூழமைவைக் கொண்டுவருவதற்கு பொருளாதார சமத்துவமும், சுயமரியாதையும் சமதர்மமும் கொண்ட சமூகத்துக்கான பயணத்தில் பங்கெடுக்க வேண்டும். சாதிய, சமய, ஆணாதிக்க பண்புகளற்ற கலப்புத்திருமணங்களோ, இணையேற்புகளோ வெறுமனே அதிர்ச்சி மதிப்பீடுகளோ சாகசங்களோ அல்ல அவை அபூர்வமாக நிகழ்வதில் இருந்து இயல்பாக நிகழ்வதற்கான வழி முக்கியமானது.

-யதார்த்தன்

(நன்றி – ஜீவநதி)

 

https://vithaikulumam.com/2021/04/14/அகமண-முறையும்-சாதியை-அழி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.