Jump to content

கரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுமா?

covid-vaccine  
 

ஒ ரு நகைச்சுவை நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிகழ்வு, ஒரு புதிய தொடக்கம். நெடிய தமிழ் சினிமா மரபை எடுத்துக்கொண்டால், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா இருவரின் கலவையும் தொடர்ச்சியும் என்று விவேக்கைச் சொல்லலாம். பழைமைவாதத்தையும் மூடத்தனத்தையும் சிரிக்கச் சிரிக்க விமர்சித்து சிந்திக்க வைக்கும் நகைச்சுவைப் பாணி அவருடையது. சமூக மாற்றத்துக்கான பகுத்தறிவுக் கருத்துகளைத் திரைப்படங்கள் மூலமாகச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அன்றாட வாழ்விலும் சாத்தியப்பட்ட வழிகளில் எல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார்.

கரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசியே இன்று மனிதகுலம் கொண்டிருக்கும் முக்கியமான ஆயுதம் என்பதை மிகத் துல்லியமாக உணர்ந்திருந்த விவேக், தடுப்பூசியைத் தான் செலுத்திக்கொண்டதும், அதற்கு அரசு மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்ததும், ஊடகங்கள் வழியாகப் பொதுமக்கள் மத்தியில் அதைப் பிரச்சாரமாக முன்னெடுத்ததும் அவருடைய சமூகப் பணியின் தொடர்ச்சி. அவருடைய எண்ணங்களுக்கு நேர் எதிராக கரோனா தடுப்பூசிக்கு எதிர்ப் பிரச்சாரத்துக்கு ஒரு கூட்டம் இன்று அவருடைய மரணத்தையே ஒரு ஆயுதமாக்க முற்படுவது இந்தச் சமூகத்தில் புரையோடியிருக்கும் சில மூடத்தனங்களுக்கு எதிராகக் காலம் முழுவதும் நாம் போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டுமோ எனும் சலிப்பையே உண்டாக்குகிறது.

விவேக் கரோனாவுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாளில் தீவிர மாரடைப்புக்குள்ளாகி இறந்தது தற்செயல்தானே அன்றி, தடுப்பூசியின் நேரடி விளைவு அது என்று சொல்லிவிட முடியாது.

பொதுவாக, கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. பயனாளிக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்திருந்தால் அது தற்செயல் நிகழ்வாக ஏற்படலாமே தவிர, தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்த ஒரு ஆய்வுக் கட்டத்திலும் தகவல் இல்லை. இந்தியாவில் இதுவரை 10 கோடிப் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தரவுகள் எதுவும் இல்லை. உலக அளவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக மட்டும் சில தரவுகள் வந்துள்ளன.

ரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பு

மாரடைப்பு என்பது இதயத் தசைகளுக்கு ரத்தம் விநியோகிக்கும் மூன்று கொரோனரி ரத்தக்குழாய்களில் ஏதாவது ஒன்றிலோ பலவற்றிலோ அடைப்பு ஏற்படுவதால் வருகிறது. இந்த அடைப்பு இரண்டு வழிகளில் ஏற்படலாம். ஒன்று, நாம் சாப்பிடும் உணவில் அதிகக் கொழுப்பு இருந்தால், அது கொழுப்புப் புரதமாக மாறி சிறிது சிறிதாக ரத்தக்குழாய்களில் படிந்து அடைத்துக்கொள்வது. இது நேரடியாக கொரோனரி குழாய்களில் படிந்து அடைத்துக்கொள்வதும் உண்டு. சமயங்களில், உடலில் வேறெங்காவது ரத்தக்குழாயில் இருக்கும் கொழுப்புப் புரதக் கட்டியானது ரத்தக்குழாயை உள்புறமாக முக்கால்வாசி அடைத்த பிறகு உடைந்துவிடும். அப்போது ரத்தக்குழாய் செல்களிலிருந்து சிறிது ரத்தமும் கசிந்து அந்த உடைப்புக் கட்டியின்மீது முலாம்போல் பூசி, ரத்த உறைவுக்கட்டியாக அதை மாற்றிவிடும். இது உடல் முழுவதும் பயணிக்கும். அந்தப் பயணத்தின்போது இதயத்துக்கு வந்து கொரோனரி குழாயை அடைப்பதும் உண்டு. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரு நாளில் ஏற்பட வாய்ப்பில்லை. ஏற்கெனவே பல மாதங்களாக, வருடங்களாக இருந்து திடீரென்று அதன் இருப்பைக் காட்டும். அதுதான் நெஞ்சுவலி.

ஒருவருடைய கொரோனரி ரத்தக்குழாயில் கொழுப்புப் புரதக் கட்டி இருக்கிறதா, இல்லையா என்பதை சாதாரணப் பரிசோதனைகளில் தெரிந்துகொள்ள முடியாது. முக்கியமாக, கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பு பரிசோதிக்கப்படும் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ரத்த ஆக்ஸிஜன் அளவு ஆகிய பரிசோதனைகளில் இதை அறிய முடியாது. கொரோனரி ஆஞ்சியோகிராம், சி.டி. ஆஞ்சியோகிராம் ஆகிய பரிசோதனைகளில்தான் இது தெரியவரும். வழக்கமாக, 50 வயதைக் கடந்தவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மிகை ரத்தக் கொழுப்பு போன்றவை கட்டுப்பாடில்லாமல் இருந்தால் மாரடைப்பு வரும். இது நாட்பட்ட நிகழ்வு. இதயம் தொடர்பான பிரச்சினை உடையவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாகத் தங்கள் இதய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது என்று சொல்வதற்குக் காரணம், நடிகர் விவேக்குக்கு நிகழ்ந்ததுபோல் தற்செயல் நிகழ்வுக்காகத் தடுப்பூசியைக் குறை சொல்லக் கூடாது என்பதற்குத்தான்.

ரத்த உறைவு ஏற்படுவது ஏன்?

தடுப்பூசியால் ஏற்படுகிற ‘ரத்த உறைவு’ பிரச்சினைக்கு இப்போது வருவோம். அடினோ வைரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மிக அரிதாக ‘ரத்த உறைவு’ ஏற்பட்டு இறப்புகள் நிகழ்ந்ததாக வெளிநாடுகளில் தகவல்கள் வந்துள்ளன. இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ரத்தத்தில் தட்டணுக்கள் குறைந்துவிடுவதாலும் தட்டணுக்கள் தேனடைபோல் ஒன்று சேர்ந்துகொள்வதாலும் ரத்த உறைவு ஏற்படுகிறது என அறிந்திருக்கிறார்கள். இந்த ரத்த உறைவு உடனே ஏற்படுவதில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 நாட்கள் கழித்தே உருவாகிறது.

ஐரோப்பாவில் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கும், பிரிட்டனில் 25 ஆயிரம் பேரில் ஒருவருக்கும் அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் ஒருவருக்கும் மரணம் நேர்ந்திருக்கிறது. ஆக, இந்த விபரீதம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியால் ரத்த உறைவு வந்து இறந்திருப்பவர்கள் 79 பேர் மட்டுமே. இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் வெறும் 0.0002%. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு கோவிட் 19 நோய் வந்து, தீவிரமானால் ரத்த உறைவு வந்து இறப்பதற்கு 40% வாய்ப்பு இருக்கிறது.

இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த ரத்த உறைவானது ‘மாடர்னா எம்.ஆர்.என்.ஏ.’, ‘பைசர் எம்.ஆர்.என்.ஏ.’, ‘கோவேக்சின்’ போன்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. நடிகர் விவேக் செலுத்திக்கொண்டது ‘கோவேக்சின்’ தடுப்பூசி. ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு மாரடைப்பு வந்தது என்று கூறுவதற்கு ஆதாரமே இல்லை. மேலும், தடுப்பூசியால் உடலில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய ‘டி-டைமர்’ பரிசோதனை உள்ளது. இந்தப் பரிசோதனையிலும் அவருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதற்கு ஆதாரமாகத் தகவல் இல்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கொரோனரி ஆஞ்சியோகிராம் உறுதிசெய்துள்ளது என்றுதான் மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. எனவே, கரோனா தடுப்பூசி குறித்து ஊடகங்களில் உலவும் அறிவியலற்ற அறைகூவல்களுக்குப் பொதுச் சமூகம் அடிமையாகிவிடாமல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.

இந்த இடத்தில் அரசுக்குச் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. தடுப்பூசி போட்ட பின்னர் உடனடியாக நடக்கும் மரணங்களில், இறந்தவர்களின் உடல்களை மருத்துவத் துறையினர் உடற்கூறு ஆய்வுசெய்து உண்மையான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கும் முடிவை அரசு எடுக்க வேண்டும். அது தேவையற்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

https://www.hindutamil.in/news/opinion/columns/660877-covid-vaccine-2.html

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.