Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17992108_10155213394136950_5614372792773858909_n.jpg?_nc_cat=109&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=ry5T82MH7UgAX9GkU51&_nc_ht=scontent.fgba1-1.fna&oh=e3f2a598fff23d439c046e99cf90b2d0&oe=60A2C67018010576_10155213400151950_5880881385831153885_n.jpg?_nc_cat=104&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=Az0IkSiAy3EAX85cCLa&_nc_ht=scontent.fgba1-1.fna&oh=0bdefb7f4a9ed1b7d91b19473fef58b1&oe=60A17248
 
 
இன்று அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நினைவு நாள்
மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே.
(குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது).
திலீபனின் உண்ணா விரதம்
தீயிலுடலை எரிக்கவா - கொடுந்
தேளெனைக் கொட்டச் சிரிக்கவா
காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன்
கண்களைக் குத்திக் கெடுக்கவா - ஈழத்
தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும்
தாங்குவன் நானெனக் கூறியே
பாயும் புலி எம் திலீபனும் - பெரும்
பட்டினிப் போரைத் தொடங்கவே
இந்தியச் சோதரர் இஃதினை
எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள்
முந்தைய வாக்குறுதி தனை - விட்டு
மோசங்கள் செய்யத் தொடங்கினர்
சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள்
தேச விடுதலைப் போரினைத் - தங்கள்
சொந்த நலன்களைப் பேணவே
சொதப்பிடலாமென எண்ணினர்
நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள்
நன்மைகளுக் கொரு காப்பிலை
ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில்
ஆயிரமாய்க் குடியேற்றலும்
சாக்குச் சமாதானம் கூறலும்
சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப்
போக்கினர் காலம் திலீபனோ - தன்றன்
பொன்னுடல் தேயத் தொடங்கினான்
மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று
மன்னவன் மண்ணின் விடுதலைத்
தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ
தேசம் அழுது துடித்தனள்
பாயும் புலி பசும் புல்லினை - தன்றன்
பட்டினி போக்கப் புசிக்குமோ - அட
வாயில் வயிற்றில் விடுதலைப் பசி
வாட்டத் துடித்தது அவனுயிர்
காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன்
கருணை உரைத்த உயர் நிலம் - பச்
சோந்திகளின் புதரானதால் - எங்கள்
சோகத்தை யாரும் மதித்திலர்
ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு)
என்ன எனத் திமிர் கொண்டுமே
சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி
செய்தனர் எம்மை ஒடுக்கவே
நீருமருந்த மறுத்துமே - கொடு
நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப்
பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள்
பாலகன் தன்னுயிர் நீத்தனன்
ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி
யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில்
ஈரமில்லாதவரோடினிக் - கதை
ஏதென ஈழம் தெளிந்தனள்
அன்னை பூபதி
இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின்
எதற்கினி வாழ்வெனக் கென்றுமே
தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு
தாய் எழுந்தாள் அந்த நாளிலே
அன்னை அவள் பெயர் பூபதி - தன்
ஐம்பத்தியாறு வயதிலே
உன்னி விடுதலைக் காகவே - தன்
உணவை மறுத்தனள் சாகவே
பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ
பூமியிற் சோகம் கவிந்தது
சேய் பதினாயிரம் சேர்ந்திட - மறச்
சேனை பெருகிச் சிறந்தது
வாபதில் சொல்கிறோம் என்று - நின்றிட்ட
வானர சேனையிற் பாய்ந்தது
தாயவள் காளி விழித்தனள் - இந்தத்
தாரணி ஆடச் சிரித்தனள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2021 at 22:22, karu said:
17992108_10155213394136950_5614372792773858909_n.jpg?_nc_cat=109&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=ry5T82MH7UgAX9GkU51&_nc_ht=scontent.fgba1-1.fna&oh=e3f2a598fff23d439c046e99cf90b2d0&oe=60A2C67018010576_10155213400151950_5880881385831153885_n.jpg?_nc_cat=104&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=Az0IkSiAy3EAX85cCLa&_nc_ht=scontent.fgba1-1.fna&oh=0bdefb7f4a9ed1b7d91b19473fef58b1&oe=60A17248
 
 
இன்று அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நினைவு நாள்
மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே.
(குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது).
திலீபனின் உண்ணா விரதம்
தீயிலுடலை எரிக்கவா - கொடுந்
தேளெனைக் கொட்டச் சிரிக்கவா
காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன்
கண்களைக் குத்திக் கெடுக்கவா - ஈழத்
தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும்
தாங்குவன் நானெனக் கூறியே
பாயும் புலி எம் திலீபனும் - பெரும்
பட்டினிப் போரைத் தொடங்கவே
இந்தியச் சோதரர் இஃதினை
எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள்
முந்தைய வாக்குறுதி தனை - விட்டு
மோசங்கள் செய்யத் தொடங்கினர்
சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள்
தேச விடுதலைப் போரினைத் - தங்கள்
சொந்த நலன்களைப் பேணவே
சொதப்பிடலாமென எண்ணினர்
நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள்
நன்மைகளுக் கொரு காப்பிலை
ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில்
ஆயிரமாய்க் குடியேற்றலும்
சாக்குச் சமாதானம் கூறலும்
சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப்
போக்கினர் காலம் திலீபனோ - தன்றன்
பொன்னுடல் தேயத் தொடங்கினான்
மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று
மன்னவன் மண்ணின் விடுதலைத்
தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ
தேசம் அழுது துடித்தனள்
பாயும் புலி பசும் புல்லினை - தன்றன்
பட்டினி போக்கப் புசிக்குமோ - அட
வாயில் வயிற்றில் விடுதலைப் பசி
வாட்டத் துடித்தது அவனுயிர்
காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன்
கருணை உரைத்த உயர் நிலம் - பச்
சோந்திகளின் புதரானதால் - எங்கள்
சோகத்தை யாரும் மதித்திலர்
ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு)
என்ன எனத் திமிர் கொண்டுமே
சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி
செய்தனர் எம்மை ஒடுக்கவே
நீருமருந்த மறுத்துமே - கொடு
நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப்
பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள்
பாலகன் தன்னுயிர் நீத்தனன்
ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி
யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில்
ஈரமில்லாதவரோடினிக் - கதை
ஏதென ஈழம் தெளிந்தனள்
அன்னை பூபதி
இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின்
எதற்கினி வாழ்வெனக் கென்றுமே
தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு
தாய் எழுந்தாள் அந்த நாளிலே
அன்னை அவள் பெயர் பூபதி - தன்
ஐம்பத்தியாறு வயதிலே
உன்னி விடுதலைக் காகவே - தன்
உணவை மறுத்தனள் சாகவே
பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ
பூமியிற் சோகம் கவிந்தது
சேய் பதினாயிரம் சேர்ந்திட - மறச்
சேனை பெருகிச் சிறந்தது
வாபதில் சொல்கிறோம் என்று - நின்றிட்ட
வானர சேனையிற் பாய்ந்தது
தாயவள் காளி விழித்தனள் - இந்தத்
தாரணி ஆடச் சிரித்தனள்

கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி தமிழ்த் தேசியன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.