Jump to content

உச்சத்தில் கொரோனா: இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை ரத்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உச்சத்தில் கொரோனா: இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை ரத்து!

spacer.png

இந்தியாவில் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி இன்று (ஏப்ரல் 18) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

“ ஏப்ரல் 25-26 தேதிகளில் ஜான்சன் இந்தியா வர திட்டமிடப்பட்டிருந்தது. இதை அறிவித்த , ’தற்போதுள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து பிரதமர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரமாட்டார் என்று பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான உறவுவுகளை வலுப்படுத்தும் கூட்டங்களையும், சந்திப்புகளையும் இரு தரப்பினரும் எதிர்வரும் நாட்களில் மெய்நிகர் முறையில் நடத்தவுள்ளனர்.

இரு தலைவர்களும் இந்தியா-இங்கிலாந்து கூட்டணியை அதன் முழு திறனுக்கும் எடுத்துச் செல்வதில் மிகுந்த முக்கியத்துவ கவனத்தைக் கொண்டுள்ளனர், மேலும் இது தொடர்பாக நெருங்கிய தொடர்பில் இருக்கவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நேருக்கு நேர் சந்திப்பை வைத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலகம் ஏப்ரல் மாத இறுதியில் ஜான்சன் இந்தியாவுக்குப் பயணம் செய்வதாக அறிவித்திருந்தது. பிரெக்சிட்டைத் தொடர்ந்து அவரது முதல் முக்கிய பயணமாக இந்தியப் பயணம் திட்டமிட்டப்பட்டிருந்தது.

https://minnambalam.com/politics/2021/04/19/53/covid-second-wave-England-prime-minister-india-visit-cancelled

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தியாவில் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

கிந்தியாவிலை கொரோனா கொஞ்சநஞ்ச உச்சமில்லை. வானுயர்ந்த உச்சம்.இன்று ஜெர்மன் தொலைகாட்சிகளில் காட்டினார்கள். பயம்.....  பயம் என்னவென்று தெரியாதவர்கள் கொரோனா இந்தியா என தேடுதளங்களில் தேடிப்பாருங்கள். மரண பயம் தொற்றிக்கொள்ளும்.

நான் பல ஒளிப்பதிவுகளையும் படங்களையும் பார்த்து நடுங்கி போய் விட்டேன். சொல்லணா கொடூரங்கள்.

நாளை இந்த நிலை எமக்கும் வரலாம். ஏனெனில் இந்திய கொரோனா வைரஸ் என இப்போதே இங்கு கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து வர, போக தடை அறிவிப்பு வருகிறது.

மேலும் டெல்லி அரசு, இன்றிரவு 10 மணிமுதல் அடுத்த திங்கள் வரை லோக்கடவுன் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளின் முன்னுதாரணங்களை செவிமடுக்க தவறி தேர்தல் சினிமா கொண்டாட்டங்கள் என திறந்து விட்டதன் பயனை இனி வரும் காலங்களில் அனுபவிக்க போகின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

இந்தியாவில் இருந்து வர, போக தடை அறிவிப்பு வருகிறது.

மேலும் டெல்லி அரசு, இன்றிரவு 10 மணிமுதல் அடுத்த திங்கள் வரை லோக்கடவுன் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியலிலும் அரசிலும் கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாவிட்டால் வரும் நிகழ்வுகள்.

May be an image of 10 people, beard and people standing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான விமான சேவைகளை இரத்து செய்தது ஹொங்கொங்!

இந்தியாவுடனான விமான சேவைகளை இரத்து செய்தது ஹொங்கொங்!

இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மே மாதம் 3 ஆம் திகதிவரை இந்தியாவுடனான அனைத்து விமான சேவைகைளையும் இரத்து செய்ய ஹொங்கொங் தீர்மானித்துள்ளது.

இது குறித்து ஹொங்கொங் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தியாவில் இருந்து ஹொங்கொங் செல்லும் அனைத்து விமானங்களுமே மே மாதம் 3 ஆம் திகதிவரை இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடனான விமானச் சேவையும் இரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் மாத்திரம், விஸ்தரா விமானத்தில் ஹொங்கொங் வந்த சுமார் 50 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1210720

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.