Jump to content

கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும் – மட்டு.நகரான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும் – மட்டு.நகரான்

 
Capture-8-696x236.jpg
 92 Views

தமிழர்களின் ஜனநாயக ரீதியான போராட்டம் இன்று சர்வதேச ரீதியான அங்கீகாரத்தினைப் பெற்றுவருகின்றது. ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது தமிழ் மக்களுக்கு சாதகம், பாதகம் என்பதைவிட சர்வதேச ரீதியில் தமிழர்களின் ஜனநாயக ரீதியான கோரிக்கைகளுக்கு வலுவான ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

வடகிழக்கு இணைந்த தாயகத்தின் கோட்பாட்டை தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து பலமான முறையில் வெளிப்படுத்தி வந்ததன் விளைவே, இன்று சர்வதேசம் தமிழ் மக்களுக்கான சமிக்ஞையை காட்டியுள்ளது.

ஆனால் வடகிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையீனம் மற்றும் அரசியல் ரீதியான போட்டிகள் இவ்வாறான சர்வதேச ரீதியான நிலைப்பாடுகளை பாதிக்கும் காரணிகளாக அமைவதற்கான சாத்தியங்கள் காணப்படும். அதேவேளை வடகிழக்கில் தமிழ் மக்கள் மீது பௌத்த சிங்களவாதத்தினால் திணிக்கப்படும் செயற்பாடுகளை தடுக்க முடியாத நிலையேற்படும்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியத்தின் புறக்காரணிகளை பாதிக்கும் வகையிலான பல்வேறு வகையான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தின் போராட்ட வரலாற்றினை முற்றாக மாற்றி, தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தினை ஒரு அதிகாரம் படைத்த தனிப்பட்ட தேவைக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக காட்டுவதற்கு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போராட்டத்தின்போது தமது சுய தேவைக்காக பிரிந்து வந்து கிழக்கு போராளிகளை கொலைக்களத்தில் நிறுத்திக்கொண்டு, சிங்கள பேரினவாதத்திடம் ஒட்டுக்குழுவாக நின்று, ஜோசப் பரராஜசிங்கம் போன்ற ஆளுமைகளை கொன்றொழித்ததுடன், கிழக்கில் தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்பட்ட நடுநிலையான புத்திஜீவிகளையும் கொன்றொழித்தவர்கள், இன்று கிழக்கில் இவ்வாறான போராட்டம் தொடர்பான போலியான கருத்துருவாக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கிழக்கில் கருணாவினால் நடாத்தப்பட்ட துரோகச் செயலுக்கு பின்னர், ஏற்பட்ட நிலைமையினை இன்று சிலர் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பிரசாரமாக திரிபுபடுத்தி முகப்புத்தகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கருணா விடுதலைப்புலிகளில் மேற்கொண்ட ஊழல்களை மறைப்பதற்காக பிரதேசவாத கருத்துகளை முன்வைத்து, விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து சென்றபோது அன்றைய காலத்தில் தவறான கருத்துகள் கிழக்கு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. எனினும் தலைமைப் பீடத்தினால் அது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, கருணா என்னும் தரப்பின் கருத்துகளை மக்கள் உள்வாங்குதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் கிழக்கில் சில போராளிகளை வைத்துக்கொண்டு, அவர்களை தவறான முறையில் மூளைச்சலவை செய்து, தமது தேவைக்கு பயன்படுத்திவந்த நிலையில், கிழக்கில் உள்ள விடுதலைப்புலிகள் போராளிகளை மீட்பதற்கான திட்டம் தீட்டப்பட்டு, வெருகல் பகுதியூடாக வன்னியிலிருந்து படை தரையிறக்கப்பட்டது. தரையிறக்கப்பட்டதும் அது தொடர்பான அறிவித்தல்கள் வாகரையில் கருணா பக்கம் இருந்த போராளிகளுக்கு வழங்கப்பட்டன. விலகிச் செல்லுமாறு கோரப்பட்டது. அதனை தொடர்ந்து பலர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், பலர் வலுக்கட்டாயமாக விடுதலைப்புலிகளுடன் போராடச் செய்யப்பட்டனர்.

Capture.JPG-1-5-300x225.jpg

வெருகல் ஊடாக வாகரைப் பகுதிக்கு வந்த படைப்பிரிவானது, ஜெயந்தன் படைப்பிரிவாகும். அதில் இருந்தவர்கள் முற்றுமுழுதாக கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த போராளிகள். அவர்கள் வாகரைக்குள் நுழையும்போது கூடியளவு தாக்குதல் நடாத்துவதை தவிர்த்தே வந்த நிலையில், ஒரு சில இடங்களில் தாக்குதல் நடாத்தவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் அவர்களினால் உயிரிழப்புகள் இன்றி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவாருங்கள் என்ற கட்டளைக்கு அமைவாக கூடியளவு தாக்குதல் நடாத்துவதை தவிர்த்தபோதும், இராணுவ கட்டளை மையங்களுக்குள் இருந்த கருணா குழுவினாரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடாத்தப்பட்ட தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஜெயந்தன் படையணிக்கும் ஏற்பட்டது. இதன்போது இடம்பெற்ற மோதலில் 32 பேர் மரணமானதுடன், ஏனைய போராளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றதும், பெருமளவான போராளிகள் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த நிலையில் அவர்கள் அன்றைய போர் நிறுத்த கண்காணிப்பு பிரதிநிதிகள் ஊடாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அன்றைய தினம் பல ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டு நிலைமைகள் காண்பிக்கப்பட்டதுடன், சரணடைந்த போராளிகள் மற்றும் தாக்குதல் நடைபெற்ற பகுதி மக்களிடம் நேர்காணல்கள் செய்து செய்திகள் வெளியிடவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அந்தவேளையில் யாரும் அது தொடர்பில் தவறான கருத்துகளை முன்வைக்கவில்லை.

ஆனால் அந்த தாக்குதல் நடாத்தப்பட்டு 17வருடங்களுக்கு பின்னர் அந்த தாக்குதலை ஒரு படுகொலையாக சித்திரித்து அது மட்டக்களப்பு மக்களுக்கு எதிரான தாக்குதலாக காண்பிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன், பெண் போராளிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகவும் கதைகளை முகநூல் வாயிலாக பரப்பிவருகின்றனர். 2000ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களிடம் இவ்வாறான கருத்துகளை கொண்டுசென்று அவர்களை தமிழ்த் தேசிய பாதையில் செல்லாவிடாமல் செய்யவும், அவர்களை தங்களது வலைகளில் வீழ்த்தி தமது செல்வாக்கினை அதிகரிக்கலாம் என்ற நோக்குடன் செயற்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுவதுடன், புலம்பெயர்துள்ள சில புலி எதிர்பாளர்கள் மூலமாகவும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழர் போராட்டத்தில் கிழக்கு தமிழர்களின் வீரம் பல்வேறு கோணங்களில் பேசப்படும் நிலையில், அவற்றினை மழுங்கடிக்கும் வகையில் இவ்வாறான புல்லுருவிகள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை தகர்த்து, தமிழ்த் தேசியத்தின் வாசல்படியாக கிழக்கு இருக்கின்றது என்பதை சொல்லவேண்டிய கட்டாயம் இன்று அனைவருக்கும் உள்ளது.

இதேபோன்று இன்று தமிழ்த் தேசியத்தின் தந்தையாக இருக்கின்ற தந்தை செல்வா போன்றோரின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கோசங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறான கோசங்களையும் இன்று பிள்ளையான் போன்றவர்களின் பின்னால் நிற்பவர்கள் எழுப்பி வருகின்றனர். இதனை நாங்கள் சாதாரண விடயமாக கடந்து செல்ல முடியாது. யுத்தம் நிறைவடைந்து 12வருடங்கள் நிறைவடையும் நிலையில், தற்போதுள்ள இளந்தலைமுறையினருக்கு யுத்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பிலான போதிய தெளிவு இல்லாத நிலையே காணப்படுகின்றது.

DZmPkhMV4AIDh70-180x300.jpg

இதன் காரணமாகவே இன்று அபிவிருத்தியையும் வேலைவாய்ப்பினையும் நோக்கிச் செல்லும் நிலை தமிழ் இளையோர் மத்தியில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியத்தின் பால் பலமான இளைஞர் கட்டமைப்பு கட்டியெழுப்பாத நிலையே இதுவரையில் இருந்து வருகின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் இருப்பவர்கள் தங்களது ஆசனங்களை தக்கவைப்பதற்கும், தமக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுமே தமிழ்த் தேசிய அரசியலை பயன்படுத்தும் நிலையிருந்துவருகின்றது.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தற்போதைய நிலையானது ஆரோக்கியமில்லாத வகையிலேயே தமிழ்த் தேசியத்திற்கு காணப்படுகின்றது. தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் கிழக்கில் தம்மை பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையே இன்றுவரையில் இருந்து வருகின்றது.

பிள்ளையான் போன்றவர்களின் கடந்தகால செயற்பாடுகள் மறைக்கப்பட்டு, தற்போதைய இளந்தலைமுறையினரிடம் ஒரு தலைமையாக காட்டும் முயற்சிகள் முகப்புத்தகங்கள் ஊடாக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான முன்னெடுப்புகளை தடுத்து நிறுத்தி, இவர்களின் முகத்திரைகளை கிளித்தெறிவதற்கு தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இதுவரையில் யாரும் எந்த முயற்சியும் முன்னெடுக்காத நிலையே உள்ளது.

தமிழர் தாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், தமிழ்த் தேசியம் வாழவேண்டும். அவ்வாறு தமிழ்த் தேசியம் வாழவேண்டுமானால், இவ்வாறான போலிகள் தமிழ் மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். இன்று கிழக்கில் தமிழர்களின் நில அக்கிரமிப்புகளை தடுக்கமுடியாத கையாலாகாத நிலையில் உள்ள பிள்ளையான் போன்றவர்களை தமிழ் இளையோர் மத்தியில் செல்லாக்காசுகள் என்பதை வெளிபடுத்துவதற்கான செயற்பாடுகள் இளையோர் மத்தியில் முன்னெடுக்க வேண்டும்.

கிழக்கில் தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றிணைந்து இளையோர் மத்தியில் இவ்வாறான போலிகளை அகற்றுவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இதுவும் கடந்து செல்வோம் என்று கருதினால் எதிர்காலத்தில் கிழக்கில் தமிழ் மக்கள் பாரிய இடர்பாடுகளுக்குள் செல்லும் நிலையுருவாகும்.

புலம்பெயர்ந்துள்ள கிழக்கு தமிழர்களும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் இன்று கிழக்கு மாகாணத்தினை பாதுகாப்பதற்கு தமிழ் மக்களுக்கு உள்ள ஒரே தெரிவு தமிழ்த் தேசியம் மட்டுமே. அதற்கு எதிராக செயற்படுவது கிழக்கு மாகாண தமிழர்களை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடு என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

https://www.ilakku.org/?p=47762

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமது இச்சைகளுக்காக இனத்தைக் காட்டிக்கொடுத்து, துரோகம் இழைத்து நிற்கின்ற கருணா பிள்ளையான் தலைமையிலான துரோகக் கும்பல்களின் முழு அக்கிரமங்களும் என்னால் முடிந்தளவு இக்களத்தில் வெளிப்படுத்தப்படும் என்பதனை இக்கணம் தாழ்மையுடன் அறியத்தருகிறேன். !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

தமது இச்சைகளுக்காக இனத்தைக் காட்டிக்கொடுத்து, துரோகம் இழைத்து நிற்கின்ற கருணா பிள்ளையான் தலைமையிலான துரோகக் கும்பல்களின் முழு அக்கிரமங்களும் என்னால் முடிந்தளவு இக்களத்தில் வெளிப்படுத்தப்படும் என்பதனை இக்கணம் தாழ்மையுடன் அறியத்தருகிறேன். !

நல்லது ஆனால் கோபத்தை ஏற்படுத்த அல்ல பல புலம்பெயர்ந்த முன்னாள் மாற்றுக்குழு பிற இயக்கத்தினர் பழைய படுகொலைகளை தூசு தட்டி இணையத்தில் உலாவவிட்டிருக்கிரார்கள் என்பதை உங்கள் காதுக்குள்  போட்டுக்கொள்கிறேன் அங்கே குற்றம் சாட்டப்பட்டு இருப்பது புலிகள் மாத்திரமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனக்கொலையாளிகளின் வேட்டை நாய்கள் தமிழினத்திற்கெதிராக  தொடர்ச்சியாக வேலை செய்துவருவதுபற்றியும் இனத்துரோகிகளுக்கு வெள்ளையடித்து நல்லவர்களாகக் காட்ட முயல்வதுற்றியும் இக்கட்டுரை நன்றாகவே பேசுகிறது.

தமிழினத்திற்கெதிராகத் துரோகமிழைத்து இனக்கொலையாளிகளுக்கு சேவகம் செய்யும் சிலரின் விஷமத்தனமான பிரச்சாரம்பற்றி தனிழினம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் வெள்ளையடித்து கிழக்கின் வரலாற்று நாயகர்களாக அவர்களை முன்னிறுத்த முயலும் சிலருக்கு தற்போது “மாற்றுக்கருத்தாளர்களின்” வாந்திகள் வேதவாக்காகத் தெரிவதில் வியப்பேதுமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நல்லது ஆனால் கோபத்தை ஏற்படுத்த அல்ல பல புலம்பெயர்ந்த முன்னாள் மாற்றுக்குழு பிற இயக்கத்தினர் பழைய படுகொலைகளை தூசு தட்டி இணையத்தில் உலாவவிட்டிருக்கிரார்கள் என்பதை உங்கள் காதுக்குள்  போட்டுக்கொள்கிறேன் அங்கே குற்றம் சாட்டப்பட்டு இருப்பது புலிகள் மாத்திரமே .

கனடாவிலும் ஒருதர் மணி கிலுக்கிக் கொண்டிருக்கிறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2021 at 06:04, alvayan said:

கனடாவிலும் ஒருதர் மணி கிலுக்கிக் கொண்டிருக்கிறார்...

கனடா மட்டும் அல்ல இங்கயும் கன பேர் இருந்து அதுமட்டும் அல்லாமல் வெளி உலகில் கனபேர் ஒத்து ஊதுகிறார்கள் அதுவும் திரிவுபடுத்தப்பட்டு பரவலடைந்து செல்கிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.