Jump to content

யாழ்ப்பாணத்தில் அருகி வரும் கலை


Recommended Posts

 

யாழ்ப்பாணத்தில அருகி வரும் ஒரு கலை பீடி சுற்றுவது முன்பு ஒரு குடிசை தொழிலா நடந்துகொண்டு இருந்த இந்த தொழில் இப்போ பல்வேறு காரணங்களால பலரால தொடந்து செய்யாம விடுபட்டு வருது. இதுக்கு முக்கிய காரணம் இதுக்கான தேவையும் குறைஞ்சு கொண்டே போறது தான்.  இப்பிடியே போனா ஒரு 3-4 வருஷத்தில இந்த கலையே யாழ்ப்பாணத்தில/இலங்கை முழுவதும் இல்லாம போயிடும், சிலர் எத்தனையோ விதமான பிரச்சனைகள் எதிர்நோக்கி இத தொடந்து செய்து வந்தாலும் ஒரு 1000 பீடி சுத்தினா தான் இவங்களுக்கு 900 இலங்கை ரூபா கிடைக்கும்.  அப்பிடி 1000 பீடி சுத்த தோராயமாக இவங்களுக்கு 7-8 மணி நேரம் எடுக்கும், இத போல உங்களுக்கு வேற ஏதும் தொழில்கள்/ கலைகள் தெரியுமா. இப்பிடி இன்னும் ஒரு 5-6 வருஷத்தில இல்லாம போற மாறி, சொல்லுங்க ஒரு பதிவு பண்ணி வைக்க முயற்சிக்கிறன். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்ரிக் கதிரைகளின் பெருக்கத்தால்... ஊரில் பின்னல் மரக்கதிரைகள்.. சாய்மனைக்கதிரைகளை பின்னவும் பொருட்கள் இல்லை.. ஆக்களும் இல்லை. இந்தக் கலையும் அருகி வரும் கலைக்குள் அடங்குகிறது. 

மீளவும் தும்பு மெத்தைகளுக்கும்.. பஞ்சு மெத்தைகளுக்கும்.. பிரப்பங்கதிரைகளுக்கும் திரும்புமா ஊர்.. உலகம்..??!

பிளாஸ்ரிக் பாவனைக்கு முற்றான தடை வந்தால்.. இந்தக் கலைகள் மீண்டும் உயிர்க்கலாம். குறைந்தது பாடசாலை மட்டத்திலாவது இவற்றை அறிமுகப்படுத்திக் கற்றுக் கொடுப்பதோடு.. இயற்கைக்கு உகந்த பொருட்களை தயாரிக்கவும்.. கண்டறியவும் உதவக் கூடிய அறிவை பிள்ளைகள் மத்தியில் ஊட்டக்கூடிய கல்வியும் அவசியமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிய பல குடும்பங்கள் + பெண்பிள்ளைகள்  பீடி சுத்தியே வாழ்வாதாரத்தை விடவும் மேலதிகமாக தமக்கு வேண்டிய நகைகள், பணம் எல்லாம் சேகரித்து வந்துள்ளார்கள்.... மேலும் மாவிட்டபுரப் பக்கமெல்லாம் வெங்காயக்கூடைகள் பின்னி வலிகாமம் சங்கத்தில் குடுத்தும் உழைப்பார்கள். பின்னேரங்களில் அக்கம் பக்கத்து பெண்கள் எல்லாம் விடுப்பு கதைத்துக் கொண்டு வேலை செய்வார்கள்.....அது ஒரு கனாக் காலம்.......!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, sivarathan1 said:

 

யாழ்ப்பாணத்தில அருகி வரும் ஒரு கலை பீடி சுற்றுவது முன்பு ஒரு குடிசை தொழிலா நடந்துகொண்டு இருந்த இந்த தொழில் இப்போ பல்வேறு காரணங்களால பலரால தொடந்து செய்யாம விடுபட்டு வருது. இதுக்கு முக்கிய காரணம் இதுக்கான தேவையும் குறைஞ்சு கொண்டே போறது தான்.  இப்பிடியே போனா ஒரு 3-4 வருஷத்தில இந்த கலையே யாழ்ப்பாணத்தில/இலங்கை முழுவதும் இல்லாம போயிடும், சிலர் எத்தனையோ விதமான பிரச்சனைகள் எதிர்நோக்கி இத தொடந்து செய்து வந்தாலும் ஒரு 1000 பீடி சுத்தினா தான் இவங்களுக்கு 900 இலங்கை ரூபா கிடைக்கும்.  அப்பிடி 1000 பீடி சுத்த தோராயமாக இவங்களுக்கு 7-8 மணி நேரம் எடுக்கும், இத போல உங்களுக்கு வேற ஏதும் தொழில்கள்/ கலைகள் தெரியுமா. இப்பிடி இன்னும் ஒரு 5-6 வருஷத்தில இல்லாம போற மாறி, சொல்லுங்க ஒரு பதிவு பண்ணி வைக்க முயற்சிக்கிறன். 

 

மன்னிக்க வேணும்.... இனி இல்லாமல் போகும் தானே.

புகையிலை பயிர்ச்செய்கை தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, பீடி சுத்தல் தொழிலும் இல்லாமல் போகும். அத்துடன், இது நோய் தரும் பொருள். இல்லாமலே போகட்டுமே.

****

நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்களாயின், இவர்களுக்கு, புலம் பெயர் தமிழர் சார்ந்த தொழில்களை அறிமுகப்படுத்துங்கள்.

வேறு நாடுகளில் இருந்து வருபவைகளில், கலப்படம் இருப்பதாக கருதும் இங்குள்ள மக்கள், நேரடியாக, மொளகாய்த்தூள், இடித்து வறுத்த அரிசிமா, அங்கிருந்து dhl, fedex மூலம் வரவைக்கிறார்கள்.

நேற்று இங்கிருக்கும் பெரிய ஆசிய கடை ஒன்றுக்கு போயிருந்தேன். 500 வருசத்துக்கு முன்னம் வரை, தமிழன் வித்த மிளகினை, பிரேசில் நாட்டில் செய்து பேக் பண்ணி அனுப்பி விக்கிறார்கள்.

போர்த்துகேயன் கொண்டு போய் அங்கே சேர்த்து விட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்திலை பீடி சுத்துற இலைக்கு பெரிய தட்டுப்பாடு வந்துட்டுது. பீடி இலை மாதிரியே மொருக்கம் பழ மரத்து இலையும் இருக்கும்.அதாலை சனமெல்லாம் மொருக்க மர இலையெல்லாத்தையும் உருவி காயப்போட்டு விக்க வெளிக்கிட்டினம்.

என்ரை புகை பழக்கத்தை ஆரம்பிச்சு வைச்சதே உந்த பீடிதான். இஞ்சை ஆரும் பீடி பத்தியிருக்கிறியளோ? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

ஒரு காலத்திலை பீடி சுத்துற இலைக்கு பெரிய தட்டுப்பாடு வந்துட்டுது. பீடி இலை மாதிரியே மொருக்கம் பழ மரத்து இலையும் இருக்கும்.அதாலை சனமெல்லாம் மொருக்க மர இலையெல்லாத்தையும் உருவி காயப்போட்டு விக்க வெளிக்கிட்டினம்.

என்ரை புகை பழக்கத்தை ஆரம்பிச்சு வைச்சதே உந்த பீடிதான். இஞ்சை ஆரும் பீடி பத்தியிருக்கிறியளோ? 😁

நான் பத்திப் பார்த்திருக்கின்றேன்..!

ஆனால் இலங்கையில இல்லை....லண்டனில எண்டு சொன்னால் நம்பவா போறீங்கள்?

பங்களா தேசிகளின் கடைகளில் விப்பார்கள்! ஒரு பம்பலுக்குக் கொஞ்சப் பேர் சேர்ந்து பத்திப் பார்த்தோம்!

பீடி மணம் மனசிலையிருந்து போக ஒரு கிழமை எடுத்தது எண்டால் பாருங்கோவன்!🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

என்ரை புகை பழக்கத்தை ஆரம்பிச்சு வைச்சதே உந்த பீடிதான். இஞ்சை ஆரும் பீடி பத்தியிருக்கிறியளோ? 😁

உங்களுக்கு அப்பிடி , எண்டை ஊரில் பீடி சுத்தியே கோடீஸ்வரியான அக்கா ஒருவரும் இருக்கிறா 
கோடிஸ்வரியான பிறகு பீடியிலை பக்கமும் போறதில்லை (வேற ஒன்றுமில்லை பீடி சுத்தப்போன இடத்தில் 
பீடி கம்பெனி முதலாளியின் கோடீஸ்வர மகன் அக்காவை  போட்டு சுத்தோ சுத்து என்று சுத்தி வாந்தியெடுக்க வைக்க, முதலாளியும் வேறை வழியில்லாமல் கண்ணாளம் கட்டிக்கொடுக்க அக்காவும் கோடிஸ்வரியாகி போனா) 

 

Link to comment
Share on other sites

10 hours ago, nedukkalapoovan said:

பிளாஸ்ரிக் கதிரைகளின் பெருக்கத்தால்... ஊரில் பின்னல் மரக்கதிரைகள்.. சாய்மனைக்கதிரைகளை பின்னவும் பொருட்கள் இல்லை.. ஆக்களும் இல்லை. இந்தக் கலையும் அருகி வரும் கலைக்குள் அடங்குகிறது. 

மீளவும் தும்பு மெத்தைகளுக்கும்.. பஞ்சு மெத்தைகளுக்கு.. பிரப்பங்கதிரைகளுக்கும் திரும்புமா ஊர்.. உலகம்..??!

பிளாஸ்ரிக் பாவனைக்கு முற்றான தடை வந்தால்.. இந்தக் கலைகள் மீண்டும் உயிர்க்கலாம். குறைந்தது பாடசாலை மட்டத்திலாவது இவற்றை அறிமுகப்படுத்திக் கற்றுக் கொடுப்பதோடு.. இயற்கைக்கு உகந்த பொருட்களை தயாரிக்கவும்.. கண்டறியவும் உதவக் கூடிய அறிவை பிள்ளைகள் மத்தில் ஊட்டக்கூடிய கல்வியும் அவசியமாகும்.

உண்மை தான், முந்தி என்க வீட்ட ஒரு தும்பு மெத்தை இருந்த அதுல ஒரு மொத்த துணி விரிச்சு படுத்தா நல்ல தூக்கம் வரும் இப்போ அப்பிடி எல்லாம் இல்ல, நிச்சயமா நான் இங்க யாரும் அந்த மாறி இப்பவும் செய்யிணமா எண்டு தேடி பாக்கிறன், அப்பிடி கண்டு பிடிச்சா அவங்ககூட கதச்சு எப்படி இது செய்யிறாங்க எண்டும் இதன் நன்மைகள் பத்தியும் ஒரு பதிவு போடுகின்றேன்.

 

8 hours ago, Nathamuni said:

 

மன்னிக்க வேணும்.... இனி இல்லாமல் போகும் தானே.

புகையிலை பயிர்ச்செய்கை தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, பீடி சுத்தல் தொழிலும் இல்லாமல் போகும். அத்துடன், இது நோய் தரும் பொருள். இல்லாமலே போகட்டுமே.

****

நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறீர்களாயின், இவர்களுக்கு, புலம் பெயர் தமிழர் சார்ந்த தொழில்களை அறிமுகப்படுத்துங்கள்.

வேறு நாடுகளில் இருந்து வருபவைகளில், கலப்படம் இருப்பதாக கருதும் இங்குள்ள மக்கள், நேரடியாக, மொளகாய்த்தூள், இடித்து வறுத்த அரிசிமா, அங்கிருந்து dhl, fedex மூலம் வரவைக்கிறார்கள்.

நேற்று இங்கிருக்கும் பெரிய ஆசிய கடை ஒன்றுக்கு போயிருந்தேன். 500 வருசத்துக்கு முன்னம் வரை, தமிழன் வித்த மிளகினை, பிரேசில் நாட்டில் செய்து பேக் பண்ணி அனுப்பி விக்கிறார்கள்.

போர்த்துகேயன் கொண்டு போய் அங்கே சேர்த்து விட்டான்.

 

முதல் 2018 அப்பிடி புகையிலை பயிர்ச்செய்கை 2021 முதல் தடை எண்டு சொன்னாங்க, ஆனா எதோ பிரச்சனையால அது நடக்கல, தடை சம்மந்தமான எந்த செய்திகளும் இன்னும் வரவில்லை இங்க. 

நோய் தரும் எண்டுறதை நான் மறுக்கல, நிச்சயமாக நாங்க இப்போ குடிசைதொழிலா  நல்லெண்ணெய், மிளகாய் தூள் செய்யிற ஆக்களோட கதைச்சுட்டு இருக்கம், கட்டாயம் அவங்க பத்தி பதிவு போடுறான், அவங்க தொடர்ப்பு இலக்கங்களோட, அதனால வெளிநாடுல இருக்க ஆக்கள் இலகுவா தொடர்பு கொண்டு அவங்க கிட்ட வாங்க ஏலுமா  இருக்கும்.  


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.