Jump to content

காபி கொட்டையில் புதிய வகை கண்டுபிடிப்பு: புவி வெப்ப நிலை அதிகரிக்கும்போது உதவி செய்யும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காபி கொட்டையில் புதிய வகை கண்டுபிடிப்பு: புவி வெப்ப நிலை அதிகரிக்கும்போது உதவி செய்யும்

காபி ஸ்டெனோஃபில்லா

பட மூலாதாரம், CIRAD

பருவநிலை மாற்றத்தால், அதிகரிக்கும் வெப்பத்தால் காபிச்செடிகள் அழியக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், அதிக வெப்பத்தைத் தாங்கி நிற்கும் காட்டுவகை காபிச் செடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அராபிகா காபி போன்றே சுவையுள்ள, ஆனால் வெப்பமான சூழலில் வளரக்கூடிய இந்த செடியின் பெயர் ஸ்டெனோபில்லா. 

மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வரும் இந்த வகை காபியை நாம் விரைவில் சுவைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

வெப்பநிலை அதிகரிக்கும் போது, நல்ல காபிச்செடி வளர்வது தொடர்ந்து கடினமாகிவிடும். 2050 ஆம் ஆண்டுக்குள், உயர்தர காபிக்கு பயன்படுத்தப்படும் நிலத்தில் பாதிப் பகுதி பயனற்றதாகிவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காபி ஸ்டெனோஃபில்லா

பட மூலாதாரம், RBG KEW

 
படக்குறிப்பு, காபி ஸ்டெனோஃபில்லா

சிறந்த சுவையுள்ள, வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கக்கூடிய ஒரு காட்டுவகை காபியைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்று பிரிட்டனின், கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவின் காபி ஆராய்ச்சித் தலைவர் டாக்டர் ஆரோன் டேவிஸ் கூறினார்.

"நிறைய காட்டுவகை காபிகளை நாங்கள் ருசித்துள்ளோம். ஆனால் அவை அவ்வளவாக நன்றாக இருக்காது. அராபிகாவை போல சுவையாக இருக்காது. எனவே எங்கள் எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தன," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"ஆனால் இந்த காபியின் ருசியால் நாங்கள் மிகவும் கவரப்பட்டோம். அது மிகவும் சுவையாக இருந்தது. பருவநிலை மாற்றத்தை தாங்கி நிற்கும் பிற பண்புகளையும் இது கொண்டுள்ளது. அராபிகா காபியை ஒப்பிடும்போது இது அதிக வெப்பமான சூழ்நிலையில் வளரக்கூடிய பயிராகும்,"என்று அவர் குறிப்பிட்டார்.

காஃபியா ஸ்டெனோபில்லா என்பது மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒரு காட்டு காபி இனமாகும். ஐவரி கோஸ்ட்டில் மட்டுமே இது வளர்வதாகவும், பிற பகுதிகளில் இந்த இனம் அழிந்துவிட்டதாகவும், சமீப காலம் வரை கருதப்பட்டது.

இந்தச்செடி சியரா லியோனில் வளர்வது சமீபத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு இங்கு இது, காபி பயிராக பயிரிடப்பட்டு வந்தது.

சியரா லியோன் மற்றும் ஐவரி கோஸ்ட்டில் இருந்து இந்த காபிக்கொட்டைகள் வறுக்கப்பட்டு காபியாக தயாரிக்கப்பட்டது. பின்னர் அது காபி ரசிகர் குழுவால் சுவைக்கப்பட்டது.

80% க்கும் மேற்பட்ட குழுவினரால், ஸ்டெனோபில்லாவிற்கும், உலகின் மிகவும் பிரபலமான காபியான அராபிகாவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் பிளான்ட்ஸ் இதழில் தெரிவித்தனர்.

அவர்கள் இந்த செடியின் காலநிலைத் தரவுகளையும் வடிவமைத்தனர். இது அராபிகாவை விட குறைந்தது 6 டிகிரி அதிக வெப்பநிலையை தாங்க முடியும் என்று அந்தத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

உயர்தர காபியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் இந்த காட்டு காபியின் திறனை மதிப்பிடுவதற்காக, இந்த ஆண்டு இந்தக் காபி செடியின் நாற்றுகள் நடப்படும்.

சியரா லியோனில் ஸ்டெனோபில்லா, மீண்டும் பெரிய அளவில் வளர்க்கப்படும் நாள் வரும் என்று டாக்டர் டேவிஸ் நம்புகிறார்."இது அடுத்த இரண்டாண்டுகளில் காபி கடைகளில் கிடைக்கப் போவதில்லை. 

ஆனால் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் ஒரு முக்கிய காபியாகவும், அதிக மதிப்புள்ள காபியாகவும், இது சந்தையில் நுழைவதை நாம் பார்ப்போம் என்று நினைக்கிறேன். அதன் பிறகு இது அதிக அளவில் வரத்தொடங்கும் என்று கருதுகிறேன், "என்று அவர் கூறினார்.

காபி ஸ்டெனோஃபில்லா

பட மூலாதாரம், RBG KEW

 
படக்குறிப்பு, காபி ஸ்டெனோஃபில்லா

 

 

அராபிகா காபி என்றால் என்ன?

அராபிகா காபி கொட்டை சிறந்த சுவை கொண்டதாக கருதப்படுகிறது. இந்த காபி மலைகளில் வளர்க்கப்படுகிறது. உலகின் காபி உற்பத்தியில் 60% க்கும் அதிகமாக இருப்பது இந்த வகைதான். 

அராபிகா காலநிலை மாற்றத்தை, ஓரளவிற்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும். இதன் விவசாயிகள் உயர் வெப்பநிலை , குறைந்த அல்லது ஒழுங்கற்ற மழையின் தாக்கம் போன்றவற்றின் விளைவுகளை ஏற்கனவே அனுபவித்து வருகின்றனர். 

விலை ஏற்ற இறக்கம், பூச்சிகள் மற்றும் நோய்கள், தீவிர வானிலை ஆகியவை காபி உற்பத்தி எதிர்கொள்ளும் வேறு சில இடர்ப்பாடுகள். பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனமான சிராட் மற்றும் கிரீன்விச் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

காட்டு காபி எங்கே காணப்படுகிறது?

காட்டு காபியின் பெரும்பகுதி ஆப்பிரிக்காவின் தொலைதூர காடுகளிலும், மடகாஸ்கர் தீவிலும் வளர்கிறது. ஆப்பிரிக்காவுக்கு அப்பால், இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் சிலபகுதிகள் உள்ளிட்ட வெப்பமண்டலப் பகுதிகளில் இந்த காட்டு காபி காணப்படுகிறது. 

நாம் அருந்தும் காபி வகைகள் என்ன?

100 க்கும் மேற்பட்ட வகையான காபி மரங்கள் காடுகளில் இயற்கையாகவே வளர்கின்றன. 

ஆனால் ஒரு சில வகைகளே குடிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அராபிகா (காஃபியா அராபிகா) மற்றும் ரோபஸ்டா (காஃபியா கேனெஃபோரா) ஆகிய இரண்டு முக்கிய காபி பயிர்கள், உலகளாவிய காபி துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 

மூன்றாவது இனம் - லைபரிகா (காஃபியா லைபரிகா). இது உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது. ஆனால் இது அரிதாகவே காபி பானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது

 

https://www.bbc.com/tamil/global-56823030

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.