Jump to content

வினோதன் படையணி வரலாறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

வினோதன் படையணி வரலாறு

main-qimg-df8e94245db9d66e20ab7e395ec2045b.jpg

 

(இப்படையணி பற்றி எந்தச் செய்தியும் இல்லை. யாரேனும் தெரிந்தால் கூறவும். நான் தேடி அறிந்தவற்றை இங்கே எழுதிவைக்கிறேன்)

---------------------------------------------------------------------------------------------------------


மட்டு. தரவை முகாமல்தான் சிங்களத்தின் சிறப்பு அதிரடிப்படைகள் இருந்ததோடு தொப்பிக்கல்லினை வல்வளைக்கவும் உதவின. மேலும் அங்கிருந்தபடியே புலிகளின் நகர்வுகளை அவதானிக்க முடிந்ததோடு பலவீனப்படுத்தக்கூடிய பதிதாக்குதல்களையும் நடத்த தரவை தாவளத்தினைப் பயன்படுத்தினர். 

இதனால் இத்தாவளம் மீது தாக்குதல் நடத்த வேண்டிய இன்றியமையாமையினை உணர்ந்த புலிகள் 27-05 -1995 அன்று இத்தாவளம் மீது தாக்குதலை நடத்தினர். கட்டளையாளர் இள பேரரையன்(Lt.Col) வினோதன் அவர்கள் கட்டளையாளர் இள பேரரையன் பாலேந்திராவின் உதவியுடன் தரவை தாவளத்தை கைப்பற்றுவதில் முன்னின்று செயலாற்றினார். இவர்களின் வீரஞ்செறிந்த தாக்குதலினால் அத்தாவளம் அழிக்கப்பட்டதோடு தரவையில் அமைந்திருந்த மாவீரர் துயிலுமில்லமும் மீட்டெடுக்கப்பட்டது. 

Vinothan Event

'இள பேரரையன்(Lt. Col) வினோதன் உட்பட பதினெட்டு போராளிகளின் திருவுருவப் படங்கள் '

இந்த தரவை தாவளம்(camp)  மீதான தாக்குதலில் இள பேரரையன்(Lt. Col) வினோதன் உட்பட பதினெட்டு போராளிகள் வீரச்சாவடைந்தனர். அந்த தாக்குதலின் பின்னர் எந்த வினோதனின் பெயரால் சிங்களம் கலங்கியதோ அதே வினோதனின் பெயரால் 'வினோதன் படையணி' தவிபு ஆல் கட்டப்பட்டது. அதன் முதலாவது கட்டளையாளராக 'துரோகி ஜிம்கெலி தாத்தா' என்பவன் நியமிக்கப்பட்டான். இவன் கருணாவோடு சேர்ந்து ஆடிய கூத்துகளுக்கு சம்பளமாக - சிங்களத்தோடு சேர்ந்துவிட்டான், சேமணையன் - 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் சிங்களத்திடம் இருந்து தென் தமிழீழத்திற்கு நயமாக வரவழைக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


Vinothan Event

'வினோதன் படையணி'

வீரர் - Sap green color uniform and a kind of blue color beret.

உயர் அதிகாரிகள்Sap green color uniform and Maroon color beret.

--> தமிழ்நெட்டில் இருந்து தகவல் எடுத்து சொந்தமாக கட்டுரையாக்கினேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இப்படையணி பற்றிய பாடல்  " மீனிசை (https://tamileelamsongs.com/meenisai/என்னும் குறுவெட்டில் உள்ள 'கீழ்த்திசை வானில்' என்னும் பாடலில் உள்ளது.

அக் குறுவெட்டில் உள்ள பாடல்களை எழுதியோர்:-

 --> அரியம், கவியுகன், புலேந்திரன், சச்சுதானந்தம்.

அக் குறுவெட்டில் உள்ள பாடல்களை பாடியோர்:-

 --> எஸ்.ஜி.சாந்தன், மனோ, சிவராஜா, குலம், யாழினியன், சந்திரமோகன் , தவமலர், கோகிலா, கலைவாணி.

இசையமைத்தோர்:-

--> 2ம் லெப்டினன்ட் ரசிகன் இசைக்குழு போராளிக் கலைஞர்கள்.

வெளியீடு:

--> வினோதன் படையணி, அன்பரசி படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள்

 

----http://thesakkaatu.herokuapp.com/albums?page=4

---------------------------------------------------------------------------------------

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.