Jump to content

“கோவிட் 19”காலத்தில் உயிர்த்த ஒரு நாற்று மேடைப் பண்ணை – மூத்த குடிகளுக்கான கிராமத்தை நோக்கி…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“கோவிட் 19”காலத்தில் உயிர்த்த ஒரு நாற்று மேடைப் பண்ணை – மூத்த குடிகளுக்கான கிராமத்தை நோக்கி…

“கோவிட் 19”காலத்தில் உயிர்த்த ஒரு நாற்று மேடைப்  பண்ணை – மூத்த குடிகளுக்கான கிராமத்தை நோக்கி…

   — சு.கமலேஸ்வரன் — 

மூத்த குடிமக்களுக்கான சுதந்திரமான கிராம் “Elders garden” (இதை பற்றி பின்னர் எழுதுகிறேன்) ஒன்றை அமைப்பது தொடர்பான முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தேன். அதற்கான நிலம் ஒன்றை பெறும் முயற்சியாக அன்று வாகரைக்கு சென்று இருந்தேன். அன்று தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார்… 

அதன் பின்னரான நாட்கள் பகுதி நேர மற்றும் முழு நேர ஊரடங்கு சட்டத்தால் முடங்கிப் போயின. அன்றைய நாட்கள் மிக நீண்ட, எதிர்கால நாட்கள் பற்றிய நம்பிக்கை இன்மையால் சோர்ந்து போக வைத்த நாட்கள். அத்தகைய சூழ்நிலையில் எனது வெலிக்கடை சிறை நண்பர்கள் மூன்று பேர் மற்றும் முகநூல் நண்பர் ஒருவர் ஆகியோர் எனது உணவு தேவைக்காக என்று 60,000 ரூபாவை எனக்கு கிடைக்க செய்தனர். 

நான் தனிநபர் என்பதாலும் எனது உணவு சகோதரிகளுடன் என்பதாலும் அந்தப் பணத்தில் ஒரு இயற்கை முறையிலான நாற்று மேடைப் பண்ணை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்தேன். “DENS”-இதுதான் அந்த பண்ணையின் பெயர். டொமினிக், ஈசன், நாதன் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத நண்பரின் பெயர்களின் முதல் எழுத்துக்கள் பண்ணையின் பெயரானது.  

DENS பண்ணை எதிர்காலத்தில் மூத்த குடிமக்களுக்கான கிராமத்தின் ஒரு அங்கமாக செயல்ப்படும். இந்த பண்ணையின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால்; இது வரை 100% உள்ளூர் உற்பத்தியை மட்டுமே கொண்டுள்ளமை (எதிர்காலத்தில் சில மாற்றங்கள் இருக்கும்). அடுத்தது 100% இயற்கை முறையில் மட்டுமே தாவரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.  

என்னால் ஆனது… 

அடுத்ததாக இந்த முயற்சி எத்தகைய சாதக பாதகங்களை கொண்டு இருக்கிறது மற்றும் இத்தகைய முயற்சியில் ஈடுபட விரும்பும் நண்பர்களுக்கு எனது ஆலோசனைகள் மற்றும் உதவிகள் எத்தகையதாக இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம். 

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் எல்லா பெரிய மரக் கன்றுகள் விற்பனை நிலையங்களும் வெளி மாகாணங்களை நம்பி மட்டுமே இயங்குகின்றன. ஆனாலும் மாகாண மட்டத்தில் மரக்கன்றுகளின் உற்பத்தியை வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதே எனது அனுபவமாகும். தற்போது என்னிடம் 300க்கும் அதிகமான வகையைச் சேர்ந்த தாய் மரங்கள் உள்ளன. அவற்றில் அலங்கார தாவரங்கள், பூ மரங்கள், பழ மரங்கள் என்பன அடங்கும். பண்ணை ஆரம்பித்து ஒரு வருடம் மட்டுமே ஆவதாலும், கன்றுகளை பெறுவதாலும் அவைகளில் பெரும்பாலானவை கத்தரிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இந்த 300க்கும் அதிகமான தாய் மரங்களில் இருந்து 200க்கும் அதிகமான வகையான கன்றுகளை உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. பல தாய் மரங்களில் இருந்து இந்த மாவட்டத்தின் மாறுபட்ட காலநிலை காரணமாக உடனடியாக கன்றுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனினும் நீண்ட கால இடைவெளியில் பெரும்பாலான வகைகளில் இருந்து கன்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.  

இதை ஒரு வெற்றிகரமான தொழிலாக முன்னெடுக்க தனிப்பட்ட ஒரு பாரிய பண்ணையில் பல ஆயிரம் தாய் மரங்களை வளர்ப்பதன் மூலம் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் குடிசைக் கைத்தொழில் பாணியில் பலரை ஊக்கிவிப்பதன் ஊடக அந்தப் பிரதேசத்தை மரக் கன்றுகளின் உற்பத்தி மற்றும் வர்த்தக பிரதேசமாக மாற்ற முடியும்.  

ஏற்கனவே நான் வாழும் பகுதியில் பகுதி நேரத் தொழிலாக பல குடும்பங்கள் மரக் கன்றுகளின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. அத்தகைய பலருக்கு தாய் மரக் கண்றுகளை ஏற்கனவே வழங்கி உள்ளேன். அது பண்டமாற்று அடிப்படையில் நான் செய்த போதிலும் எனது தரப்பில் இருந்து அதிகமாகவே வழங்கி உள்ளேன். எதிர்காலத்திலும் இதை ஒரு தொழிலாக மேற்கொள்ள விரும்பும் நபர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய தயாராகவே இருக்கிறேன். 

ஒரு விவசாய முயற்சியில் நவீன முறைகளை பின்பற்றுவது பற்றி எனக்கு முரண்பாடுகள் கிடையாது. ஆனால் எல்லா துறைகளையும் போலவே விவசாய துறையிலும் நவீன உத்திகள் என்பது வியாபார தந்திரத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. “DENS” பண்ணையில் எந்த விதமான நவீன உத்திகளும் மற்றும் இரசாயன ஊக்கிகளும் பயன்படுத்தப்படவில்லை. ஒரு கிறீன் கவுஸ் கூட கிடையாது. மர நிழல் போதுமான அளவு இருப்பதால் தேவைப்படவில்லை. அதிக வெயிலில் இருந்து பாதுகாக்க கிறீன் கவுஸ் பாவிக்கலாம். இரசாயன ஊக்கிகளை பொறுத்தவரை, இத்தகைய ஊக்கிகளை பாவித்து வளர்க்கப்பட்ட விற்பனை நிலையங்களில் காணப்படும் கன்றுகளை விடவும் இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்க்கப்பட்ட DENSஇன் கன்றுகள் செழிப்பானவைகளாகவே உள்ளன. ஆனால் செயற்கை ஊக்கிகள் அளவிற்கு பூக்கும் வீதம் இல்லாத நிலை இருக்கிறது. இதை நிவர்த்தி செய்ய எதிர்வரும் நாட்களில் எலுமிச்சை தோலில் இருந்து தயாரிக்கப்படும் மற்றும் தேமோர் எனப்படும் இயற்கை ஊக்கிகளை பயன்படுத்த உத்தேசித்து உள்ளேன்.  

குறைந்த முதலீட்டில் வளர்ச்சி அடையக் கூடிய ஒரு வளர்ந்து வரும் தொழிலை நீங்களும் ஆரம்பிக்க முடியும்! வாழ்கையில் ஆக்கப்பூர்வமான மற்றும் விருப்பமான ஒரு தொழிலை ஆரம்பித்த, அத்துடன், எனது நண்பர்களின் உழைப்பின் பயனைப்பார்த்து அவர்களும் மகிழ்ச்சி கொள்ளும் ஒரு செயலை செய்த மகிழ்ச்சியுடன்…! 
 

https://arangamnews.com/?p=4772

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.