Jump to content

ஒரே நாளில் இந்தியாவில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் இந்தியாவில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. 

இந்நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.

அதன்படி, ஒரே நாளில்  3,14,835  பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

india_covid_19.jpg

இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் ஆரம்பமானதிலிருந்து இந்தியா ஒரே நாளில் பதிவு செய்த மிக உயர்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

மேலும் இந்தியாவில் மகாராஷ்டிராவில் 568  பேரும், டெல்லியில் 249 பேருமாக ஒரே நாளில்  2,104 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் புதிய கொரோனா தொற்றாளர்களுடன் 22,91,428 பேர்  சிகிச்சை பெற்றுவருவதுடன்,  1,34,54,880 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/104189

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உலகின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்

மக்கள் மீது அக்கறை அற்ற அரசு தான்தோன்றி தனமாக நடந்து இந்த அல்ல நிலையில் அவர்களையும் நாட்டையும் விட்டுள்ளது 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

டெல்லியில்.. இந்த நிலைமை என்றால்,
மற்றைய  வட மாநிலங்களின்  நிலைமை, 
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். 

தேர்தல், கும்ப மேளா என்று... கொண்டாட்டங்கள்  வைத்ததால் வந்த வினை.

இதற்கு... முழுப் பொறுப்பும், அரசியல்வாதிகளையே  சேரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

டெல்லியில்.. இந்த நிலைமை என்றால்,
மற்றைய  வட மாநிலங்களின்  நிலைமை, 
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். 

தேர்தல், கும்ப மேளா என்று... கொண்டாட்டங்கள்  வைத்ததால் வந்த வினை.

இதற்கு... முழுப் பொறுப்பும், அரசியல்வாதிகளையே  சேரும்.

பிரேசிலை விட நிலமை மோசமடையும் என்றே தெரிகிறது

ஐரோப்பா போன்ற தேசங்களில் உதவிகள் மற்றும் கொடுப்பனவுகள் போன்றவற்றால் மக்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளவில்லை 

ஆனால் இந்திய மக்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

டெல்லியில்.. இந்த நிலைமை என்றால்,
மற்றைய  வட மாநிலங்களின்  நிலைமை, 
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். 

தேர்தல், கும்ப மேளா என்று... கொண்டாட்டங்கள்  வைத்ததால் வந்த வினை.

இதற்கு... முழுப் பொறுப்பும், அரசியல்வாதிகளையே  சேரும்.

ஐ.பி.எல் ஐயும் திறந்து விட்டிருந்தால்.. அமோகமாக போய் இருக்கும் தோழர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

150 ரூபாவுக்கு போட்ட ஊசி திடீரென 450 ரூபா என அறிவித்துள்ளனர்.

திடீரென 3 மடங்கு விலை கூட்டினால் மக்கள் என்ன செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

பிரேசிலை விட நிலமை மோசமடையும் என்றே தெரிகிறது

ஐரோப்பா போன்ற தேசங்களில் உதவிகள் மற்றும் கொடுப்பனவுகள் போன்றவற்றால் மக்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளவில்லை 

ஆனால் இந்திய மக்கள்??

விசுகு, உலக நாடுகளை... கொரோனாவால், இந்தியா முந்தி விட்டதாக... 
ஒரு, செய்தியில் நேற்று பார்த்தேன்.  

நீங்கள் இணைத்த, காணொளியை பார்த்த பின்...
அந்த அழுகை சத்தங்கள்... மீண்டும் கண் முன்னே வந்து போகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

இந்தியா உலகின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்

இங்கிலாந்து இந்திய விமானங்களுக்கு தடை அறிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஐ.பி.எல் ஐயும் திறந்து விட்டிருந்தால்.. அமோகமாக போய் இருக்கும் தோழர்..

ஏதோ... கடவுள் காப்பாற்றினார் என்று தான்... சொல்ல வேண்டும், தோழர்.

யாழ். நயினா தீவில்,  
சிங்களவர்களின்  "வெசாக்" கொண்டாட்டம்  திட்டமிட்டபடி நடத்தப்  போகின்றார்கள்.
தமிழர்  பகுதியில்... இந்த நேரம், சிங்களவர்  வைக்கும்  கொண்டாட்டம்,
பல தமிழர்களை... கொரோனா மூலம், மீண்டும்  கொல்லப் பார்க்கிறார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஏதோ... கடவுள் காப்பாற்றினார் என்று தான்... சொல்ல வேண்டும், தோழர்.

யாழ். நயினா தீவில்,  
சிங்களவர்களின்  "வெசாக்" கொண்டாட்டம்  திட்டமிட்டபடி நடத்தப்  போகின்றார்கள்.
தமிழர்  பகுதியில்... இந்த நேரம், சிங்களவர்  வைக்கும்  கொண்டாட்டம்,
பல தமிழர்களை... கொரோனா மூலம், மீண்டும்  கொல்லப் பார்க்கிறார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.

மேதினக் கொண்டாட்டம் கொண்டாட விட்டால் அதே கதி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

150 ரூபாவுக்கு போட்ட ஊசி திடீரென 450 ரூபா என அறிவித்துள்ளனர்.

திடீரென 3 மடங்கு விலை கூட்டினால் மக்கள் என்ன செய்வார்கள்.

May be an image of 5 people and text that says 'ஒரே நாடு ஒரே தடுப்பூசி ஆனால் 3 விலைகள் Apollo மத்திய அரசுக்கு ரூ. 150 மாநில அரசுகளுக்கு ரூ.400 மருத்துவ மனைகளுக்கு ரூ.600 கொல்லை நோயிலும் கொள்ளை அடிக்கும் கொலைகாரர்கள்'

 

 

May be an image of 2 people and text that says 'NEWS TAMIL #BIGNEWS WS 2021 BREAKING நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்! "தூத்துக்குடி ஸ்டெர்லைட் VEDANTA LIMITED ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்துகொள்ள அனுமதிக்கலாம்" www.newe7tamil.lveo தமா ADIL @ammavasa போட்ட பிளான் சக்சஸ்! இதற்கு தானே ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று சொன்னீர்கள்! ஆக்ஸிஜன் தட்டுபாட்டை உருவாக்கியதே ஸ்டர்லைட் மாதிரி கம்பெனிக்காகத்தான்!'

 

 

May be an image of text that says 'நீங்க வச்சுருந்த ஆக்ஸிஜனை, உங்களை கேட்காம வேற மாநிலத்துக்கு அனுப்பிட்டாங்கனு நியூஸ் பார்த்தேன் ப்ரோ! ரொம்ப வேதனையா இருந்தது. செயல்லேட் உழவு ஸ்டெர்லைட் உமான தமிழ்நாடு நாங்க வேணா ஆக்ஸிஜன் தயாரிச்சு தரட்டுமா?'

ஈழப்பிரியன்....
அரசியல் வாதிகளுக்கும், அவர்களுடன் ஒத்துப் போகும் நிறுவனங்களுக்கும்...  
"கொரோனா"  ஒரு வியாபாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

மேதினக் கொண்டாட்டம் கொண்டாட விட்டால் அதே கதி தான்.

மே மாதம் வரை சில நிகழ்வுகளுக்கு தடை போட்டு இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மே மாதம் வரை சில நிகழ்வுகளுக்கு தடை போட்டு இருக்கிறார்கள் 

முனிவர் ஜீ...
நயினாதீவில்... வெசாக் கொண்டாட்டம், 
"தேசிய நிகழ்வு"  என்பதால்....  திட்டம்  இட்டபடி, நடக்குமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ...
நயினாதீவில்... வெசாக் கொண்டாட்டம், 
"தேசிய நிகழ்வு"  என்பதால்....  திட்டம்  இட்டபடி, நடக்குமாம்.

நடந்த  பிறகு  நாட்டைமுடக்குவானுகள்  அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நடந்த  பிறகு  நாட்டைமுடக்குவானுகள்  அவ்வளவுதான்

நாட்டை... முடக்கினாலும், 
இறந்த உயிர்களுக்கும்,  அவர்களின் பிரிவால்...
ஏழ்மை நிலைக்கு சென்றவர்களை.... மீட்டு எடுக்க, 
இவர்களிடம் ஒரு வழியும் இல்லையே...

ஆக.. மிஞ்சினால், சிங்கள  இராணுவத்தில் சேரச்  சொல்வார்கள்.

இது... எல்லாம்,  
கொரோனவை வைத்து, திட்டம் இட்டபடி நடக்கும், ஒரு இன அழிப்பு. 
நாம் தான்... அவதானமாக இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தொடந்து மூன்றாவது நாளாகவும் 3 இலட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில்  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

இன்று தொடர்ந்து 3 ஆவது  நாளாக 3 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பதிவாகியுள்ளது.

சரியாக 3 இலட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,264 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை, ஒரே நாளில் 2 இலட்சத்து 19 ஆயிரத்து 838 பேர் குணம் அடைந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை  1 கோடியே 66 இலட்சத்து 10 ஆயிரத்து 481 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள்.

தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 38 இலட்சத்து 67 ஆயிரத்து 997- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்து 89 ஆயிரத்து 544- ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25 இலட்சத்து 52 ஆயிரத்து 940 ஆக உள்ளது. 
 

https://www.virakesari.lk/article/104312

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.