Jump to content

இலங்கையில் தமிழர்களுக்கு ஈழத்தை கொடுக்காதவர்கள் சீனாவிற்கு தனிநாட்டை கொடுக்கிறார்கள்! ராஜித சீற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர்.

எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அதனை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. அன்றி தமிழீழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.

ஆனால் தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழ் ஈழத்தை தர முடியாதெனக் கூறியவர்கள் சீனாவிற்கு வழங்குகின்றனர். அவ்வாறெனில் இவர்களின் தேசப்பற்று எங்கு சென்றது ? இதுவும் தனியொரு ஈழமாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையான்மைக்கும் தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார்.

https://ibctamil.com/article/rajitha-senaratne-says-portcity-issues-1619070649

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவால்.... சிங்களவருக்குள், பெரிய தலையிடி ஆரம்பித்திருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சீனாவால்.... சிங்களவருக்குள், பெரிய தலையிடி ஆரம்பித்திருக்குது.

றகனின் வாலைப்பிடிச்சாச்சு 

இனி எவராலும் இவர்களை காப்பாற்ற முடியாது

அவ்வளவு தான் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் விண்ணை முட்டும் விலைவாசி மறுபக்கம் நாட்டை துண்டு துண்டாய் விற்பனை இப்போ  துட்ட கைமுனு இருந்து இருந்தால்  “மகாவலி கங்கைக்கு அப்பால் தமிழரும் இன்னொரு பக்கத்தில் கோத சமுத்திரமும் (வங்கக் கடல்) இன்னொரு பக்கம் சீனர்களும்  இருக்கும் போது என்னால் எப்படி காலை நீட்டிப் படுக்க முடியும் நின்றுகொண்டு தூங்குகிறேன்" என்று தாய்க்கு சொல்லியிருப்பான் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனனுக்குப் புத்த மதத்தில நல்ல விருப்பமுள்ளது..!

என்னை நம்பா விட்டால், தலாய் லாமாவிடம் கேட்டுப் பார்க்கவும்...!

புத்தனின் புனித தந்தப் பேழையைச் சுமந்த யானையின்....தோற்றம்..! 

இந்தப் பாவம்....தேரர்களைச் சும்மா விடாது...!

வாயில்லாத சீவன்..!!!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2021 at 20:16, தமிழ் சிறி said:

சீனாவால்.... சிங்களவருக்குள், பெரிய தலையிடி ஆரம்பித்திருக்குது.

செய்த பாவம் திருப்பித் தாக்க வெளிக்கிட்டிருக்குது. தாங்குமா சிங்களம்? அக்களிப்போடு விதைப்பவன் கண்ணீரோடு அறுவடை செய்வான் ஐயா! இது விதி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

செய்த பாவம் திருப்பித் தாக்க வெளிக்கிட்டிருக்குது. தாங்குமா சிங்களம்? அக்களிப்போடு விதைப்பவன் கண்ணீரோடு அறுவடை செய்வான் ஐயா! இது விதி.  

நூற்றி ஐம்பதாயிரம்.... (ஒன்றரை லட்சம்)  தமிழ் மக்களை,
குழந்தை, குட்டி, பெண், வயோதிபர் என்று பார்க்காமல்,
முள்ளி வாய்க்காலில்,  கொத்துக் குண்டு வீசி... அழித்தவன் சிங்களவன்.

அவனும்.... அந்த, அனுபவத்தை, செமித்து ஆக வேண்டும். 
இது, இறந்த என் தமிழ் மக்களின் சாபம். 
நிறைவேறும்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சீனா ஈழம்" என்ற சொல்லை ராஜிதா பாவித்தார் .....தமிழன் ஈழத்தை மறந்தாலும் இவர்கள் மறக்க மாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

"சீனா ஈழம்" என்ற சொல்லை ராஜிதா பாவித்தார் .....தமிழன் ஈழத்தை மறந்தாலும் இவர்கள் மறக்க மாட்டார்கள்

அவர்களை உயிர்ப்போடு வைத்திருப்பதே புலிகளும், தமிழீழமுமே. எப்படி அவர்களால் மறக்கமுடியும்? அப்படி அவர்கள் மறந்து விட்டார்கள் என்றால் ஒன்று இறந்துவிட்டார்கள் அல்லது சிங்களவர் விழித்துக்கொண்டு விட்டார்கள் என்று கொள்ளலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2021 at 12:16, தமிழ் சிறி said:

சீனாவால்.... சிங்களவருக்குள், பெரிய தலையிடி ஆரம்பித்திருக்குது.

நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்காது.. இரண்டு பகுதியும் புத்தசமயம். மொழிதான் வேறு. சிங்களத்தைக்குப்பையில் போட்டுவிட்டு ..அவங்கள் சீனாப்பாஷை கதைக்கத்தொடங்கி விடுவார்கள் ..பெரிய தலையிடி  தமிழர் தலையில் வத்து விழும். 😜😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்காது.. இரண்டு பகுதியும் புத்தசமயம். மொழிதான் வேறு. சிங்களத்தைக்குப்பையில் போட்டுவிட்டு ..அவங்கள் சீனாப்பாஷை கதைக்கத்தொடங்கி விடுவார்கள் ..பெரிய தலையிடி  தமிழர் தலையில் வத்து விழும். 😜😜😜

நடக்காது...  என்று, தெரிந்தாலும்... ஒரு நப்பாசை.

நாம்... முள்ளிவாய்க்காலில், அழுத மாதிரி...  
எதிரி... கதறக்  கதற,  அழ  வேண்டும்.

இப்போதைத்கு...   அது, என் பேராசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

நடக்காது...  என்று, தெரிந்தாலும்... ஒரு நப்பாசை.

நாம்... முள்ளிவாய்க்காலில், அழுத மாதிரி...  
எதிரி... கதறக்  கதற,  அழ  வேண்டும்.

இப்போதைத்கு...   அது, என் பேராசை.

கவலைப்படாதீர்கள். உங்கள் ஆசை மட்டுமல்ல எங்கள் எல்லோரின் ஆசையும் இனிதே நிறைவேறும் நாள் நெருங்குகிறது. தூக்கி வைத்தவர்கள், துரத்தித் துரத்தி அடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, satan said:

கவலைப்படாதீர்கள். உங்கள் ஆசை மட்டுமல்ல எங்கள் எல்லோரின் ஆசையும் இனிதே நிறைவேறும் நாள் நெருங்குகிறது. தூக்கி வைத்தவர்கள், துரத்தித் துரத்தி அடிப்பார்கள்.

இதனோடை சேர்த்து இன்னும் 4 விக்கட்டு விழப்போகுது...அதுக்கும் சேர்த்து பால்சோறு ...டோக்கி மீற்ரோடை சாப்பிடுவம்..பார்ட்டி வைப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, alvayan said:

இதனோடை சேர்த்து இன்னும் 4 விக்கட்டு விழப்போகுது...அதுக்கும் சேர்த்து பால்சோறு ...டோக்கி மீற்ரோடை சாப்பிடுவம்..பார்ட்டி வைப்பம்

எதுக்கும் ஆறுமட்டும் பொறுத்திருப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

இதனோடை சேர்த்து இன்னும் 4 விக்கட்டு விழப்போகுது...அதுக்கும் சேர்த்து பால்சோறு ...டோக்கி மீற்ரோடை சாப்பிடுவம்..பார்ட்டி வைப்பம்

இது தான் உண்மை

தமிழினம் விட்டுக்கொடுப்புக்கும் ஏன் மண்ணின் ஒரு பகுதியை இழக்கவும் தயாராகி விட்டது

ஆனால் சிங்களம் அதற்கு அனுமதியாது 

தமிழர்கள் கவனமாக கையாள வேண்டிய வேளை வரும்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.