Jump to content

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 

வின்ஸ்டன் சேர்ச்சில் இடம் வந்த ஒருவர், ஐயா ஒரு நிகழ்வில் பேச வரமுடியுமா என்றார்.

எவ்வளவு நேரம் பேசணும் என்றார் சேர்ச்சில். ஐந்து நிமிடம் போதுமானது என்றார் வந்தவர். 

அப்படியா, ஒரு மாதம் ஆகுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவருக்கு, சேர்ச்சில் குறும்புத்தனம் தெரியும் என்பதால், அப்படியானால் 30 நிமிடத்துக்கு பேசலாமே என்றார். அதுக்கு ஒருவாரம் வேண்டுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவரும் அசராமல், ஒரு மணித்தியாலம் என்றால், என்றார. 

நான் இப்பவே ரெடி, போகலாமே என்றார் சேர்ச்சில்.

ஒரு மேடைப்பேச்சாளர் அல்லது ஒரு நேர்முகத்தில் பேசுபவர் எப்படி தயாராக வேண்டும் என்று இன்றளவும் உலகளாவிய உதாரணமாக காட்டப்படுகின்றனது. அதாவது, தயாராக இல்லாவிடில், வாயில் வரும் எதனையுமே அலம்பலாம் என்பதனை தான் சேர்ச்சில் சொல்லி இருந்தார்.

எழிலன் என்னும் ஒரு போராளியின் மனைவியாக, தனது கணவரை ஒப்படைத்து தேடும் ஒரு விதவையாக அனுதாபம் பெற்று அரசியல் வந்த, அனந்தி சசிதரன், தன்னை ஒரு ஆளுமையாக வெளிப்படுத்தாத காரணத்தால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெல்ல முடியவில்லை.

தமிழக யூடீயூப் விண்ணாதிகளின் நேர்முக கோரிக்கை வந்ததும், எதுவித தயாராதல் இல்லாமல், அலம்பறை பண்ணி, இன்று அதனை சமாளிக்கிறேன் என்று மேலும், மேலும் அலம்பறை பண்ணி, புலிகளையும் இழுத்து, ஏதோதோ சொல்கிறார்.

சம்பலும் சோறும் சாப்பிட்டு இருந்து விடுவோம், என்று தமிழகத்தில் சம்பல் என்றால் என்ன என்று புரியுமா என்ற தெளிவே இல்லாத ஒரு அரசியல்வாதியாகவே இருக்கிறார் அவர்.

இன்று மூன்றாவது யூடீயூப் வந்துள்ளது.

பார்க்கும் போதே, கேள்விகளுக்கு, இழுத்து... அலம்பும் போதே, அய்யோ என்னத்தை சொல்லி முடிக்கப்போகிறாவோ என்று நமக்கே பதை பதைக்கிறது.

பத்தாததுக்கு சிவாஜிலிங்கம் வேறு தொடங்கி விட்டார்.

தமிழக அரசியலினுள், பக்கசார்பாக எம்ஜிஆர் பக்கம் புலிகள் நின்றதை, கலைஞர் கடைசிவரை ஜீரணிக்கவில்லை. முள்ளிவாய்க்கால் துயரம் வரை நீண்டது.

இப்போதும், பக்க சார்பாக நிலை எடுக்காமல், யாராவது அவர்களிடம்  சொல்லி, இந்த ஒரு இழவும் புரியாத அலம்பறைகளை நிறுத்த சொல்லவிடுங்களேன். புண்ணியமாக போகும்.

புலம்பெயர் முகம் தெரியாதவர்கள் வேறு, நமது மண்ணில் உள்ள அரசியல்வாதிகள் வேறு. அவர்கள் தமது பேச்சில், நடுநிலைமையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை, புலிகளின், எம்ஜிஆர், கலைஞர் அனுபவமே உணர்த்தி உள்ளது.

இவர்கள் மக்களினால், தேர்தல் அரசியலில் தெரிவாகாமல், விடுபட்டத்துக்கு ஒரு காரணம் உண்டு, அந்த காரணத்தினை, தமிகத்துக்கும் சொல்கிறார்கள் என்பதே கவலைக்குரியது.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அக்காவுக்கு அர‌சிய‌ல் புரித‌ல் பெரிசா இல்லை

எம்ம‌வ‌ர் வ‌ன்னியில் இருந்த‌ போது ஆன‌ந்தி என்றால் யாருக்கும் தெரியாது

திராவிட‌ சூழ்ச்சி வ‌லைக்குள் விழுந்த‌ மாதிரி தெரியுது 

பேட்டி கொடுக்க‌ முத‌ல் ஒரு க‌ன‌ம் ஆன‌ந்தி அக்கா யோசிக்க‌னும் இத‌னால்  பின் விலைவுக‌ள் ஏதாவ‌து வ‌ருமா என்று 

எழில‌ன் அண்ண‌ கூட‌ அர‌சிய‌ல் பொருப்பில் இருந்த‌வ‌ர் ?

எல்லாள‌ன் தாக்குத‌ல் 2007ம் ஆண்டு ந‌ட‌ந்து கொண்டு இருக்கும் போது தான் த‌லைவ‌ர் எல்லா த‌ள‌ப‌திக‌ளையும் அழைத்து இப்ப‌டி ஒரு தாக்குத‌ல் ந‌ட‌ந்திட்டு இருக்குது என்று த‌ள‌ப‌திக‌ளுக்கு சொன்னார் ,

எல்லாள‌ன் தாக்குத‌ல் த‌லைவ‌ருக்கும் எல்லாள‌ன் தாக்குத‌ல‌ வேவு பார்த்து அத‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்தின‌ போராளிக‌ளுக்கும் தான் எல்லாள‌ன் தாக்குத‌ல் திட்ட‌ம் தெரியும் ? இப்ப‌டி எம் போராட்ட‌த்தில் ப‌ல‌ விதிமுறைக‌ள் இருக்கு அது வெளியில் வ‌ருவ‌தில்லை

ஆனால் ஆன‌ந்தி அக்கா பேட்டி கொடுக்கும் போது ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்கிற‌ மாதிரி உப்பு ச‌ப்பில்லா வார்த்தைக‌ளை அள்ளி கொட்டி தேவை இல்லா ப‌ல‌ விம‌ர்ச‌ன‌த்துக்கு ஆள் ஆகி நிக்கிறா

என்ன‌ பொருத்த‌ வ‌ர‌ இது ஆன‌ந்தி அக்காவுக்கு தேவை இல்லா வேலை 😕

Link to comment
Share on other sites

On 22/4/2021 at 09:59, Nathamuni said:

தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன் 

வின்ஸ்டன் சேர்ச்சில் இடம் வந்த ஒருவர், ஐயா ஒரு நிகழ்வில் பேச வரமுடியுமா என்றார்.

எவ்வளவு நேரம் பேசணும் என்றார் சேர்ச்சில். ஐந்து நிமிடம் போதுமானது என்றார் வந்தவர். 

அப்படியா, ஒரு மாதம் ஆகுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவருக்கு, சேர்ச்சில் குறும்புத்தனம் தெரியும் என்பதால், அப்படியானால் 30 நிமிடத்துக்கு பேசலாமே என்றார். அதுக்கு ஒருவாரம் வேண்டுமே என்றார் சேர்ச்சில்.

வந்தவரும் அசராமல், ஒரு மணித்தியாலம் என்றால், என்றார. 

நான் இப்பவே ரெடி, போகலாமே என்றார் சேர்ச்சில்.

ஒரு மேடைப்பேச்சாளர் அல்லது ஒரு நேர்முகத்தில் பேசுபவர் எப்படி தயாராக வேண்டும் என்று இன்றளவும் உலகளாவிய உதாரணமாக காட்டப்படுகின்றனது. அதாவது, தயாராக இல்லாவிடில், வாயில் வரும் எதனையுமே அலம்பலாம் என்பதனை தான் சேர்ச்சில் சொல்லி இருந்தார்.

எழிலன் என்னும் ஒரு போராளியின் மனைவியாக, தனது கணவரை ஒப்படைத்து தேடும் ஒரு விதவையாக அனுதாபம் பெற்று அரசியல் வந்த, அனந்தி சசிதரன், தன்னை ஒரு ஆளுமையாக வெளிப்படுத்தாத காரணத்தால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெல்ல முடியவில்லை.

தமிழக யூடீயூப் விண்ணாதிகளின் நேர்முக கோரிக்கை வந்ததும், எதுவித தயாராதல் இல்லாமல், அலம்பறை பண்ணி, இன்று அதனை சமாளிக்கிறேன் என்று மேலும், மேலும் அலம்பறை பண்ணி, புலிகளையும் இழுத்து, ஏதோதோ சொல்கிறார்.

சம்பலும் சோறும் சாப்பிட்டு இருந்து விடுவோம், என்று தமிழகத்தில் சம்பல் என்றால் என்ன என்று புரியுமா என்ற தெளிவே இல்லாத ஒரு அரசியல்வாதியாகவே இருக்கிறார் அவர்.

இன்று மூன்றாவது யூடீயூப் வந்துள்ளது.

பார்க்கும் போதே, கேள்விகளுக்கு, இழுத்து... அலம்பும் போதே, அய்யோ என்னத்தை சொல்லி முடிக்கப்போகிறாவோ என்று நமக்கே பதை பதைக்கிறது.

பத்தாததுக்கு சிவாஜிலிங்கம் வேறு தொடங்கி விட்டார்.

தமிழக அரசியலினுள், பக்கசார்பாக எம்ஜிஆர் பக்கம் புலிகள் நின்றதை, கலைஞர் கடைசிவரை ஜீரணிக்கவில்லை. முள்ளிவாய்க்கால் துயரம் வரை நீண்டது.

இப்போதும், பக்க சார்பாக நிலை எடுக்காமல், யாராவது அவர்களிடம்  சொல்லி, இந்த ஒரு இழவும் புரியாத அலம்பறைகளை நிறுத்த சொல்லவிடுங்களேன். புண்ணியமாக போகும்.

புலம்பெயர் முகம் தெரியாதவர்கள் வேறு, நமது மண்ணில் உள்ள அரசியல்வாதிகள் வேறு. அவர்கள் தமது பேச்சில், நடுநிலைமையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை, புலிகளின், எம்ஜிஆர், கலைஞர் அனுபவமே உணர்த்தி உள்ளது.

இவர்கள் மக்களினால், தேர்தல் அரசியலில் தெரிவாகாமல், விடுபட்டத்துக்கு ஒரு காரணம் உண்டு, அந்த காரணத்தினை, தமிகத்துக்கும் சொல்கிறார்கள் என்பதே கவலைக்குரியது.

தல,
தனிய நின்று புலம்புவதை விட்டுட்டு, அந்த மூன்று காணொளிகளையும் இங்கே இணையுங்கள். நாங்களும் பார்த்து கருத்து சொல்லலாம்(புலம்பலாம்) அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு சாதமும் சட்னியும் என்று சொன்னால் விளங்குது தானே?

அப்படியே சம்பலும் சோறும் என்றால் தமிழகத்து மக்களுக்கு
விளங்காவிடின் என்ன அதை அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்.

அதற்காக ஏன் அனந்தி அவர்களின் பாசையில் கதைக்க வேண்டும்?

தேர்தலில் தோற்றுப் போனால் அரசியல் கதைக்க கூடாதோ?
சீமான் இந்த தேர்தலில் தோற்றுத் தான் போகப் போகிறார்
அப்ப இனி அவர் அரசியல் கதைக்க கூடாதோ
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று சொல்லுவீர்களோ

சீமானின் மீதான கண்மூடித்தனமான உங்கள் ஆதரவு
அனந்தி போன்றவர்களைக் கூட எதிர்க்க சொல்லுது

உங்கள் இடுப்புபட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள்
அடுத்த நான்கு வருடங்களிற்குள் இப்படி
நிறைய தாயக மக்களின் பிரதினிதிகள் சீமானை
எதிர்க்க போகின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலில் ஈழத் தமிழர் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. 

தமிழகத்துக்கு நன்மை நடக்கவேண்டும் அதனூடு எமக்கு நல்லது நடக்க வேண்டும் என நாம் விரும்புவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் எம் தலையெழுத்தையே திருத்த முடியாதவர்கள் எப்படி இன்னொருவனுக்கு வழிகாட்ட முடியும். 

இறுதியில் யானை பார்த்த குருடனின்கதைதான்...😂

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

தமிழக அரசியலில் ஈழத் தமிழர் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. 

மறுதலையும் உண்மையாகுமா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

தமிழக அரசியலில் ஈழத் தமிழர் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. 

இதைத்தான் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள். ஆனால் இப்போது புலம்பெயர் தமிழரில் ஒரு கூட்டம் அங்குள்ள சீமானின் கட்சிக்கு ஆதரவு கொடுத்து புலம்பெயர் நாடுகளில் வீரத்தமிழர் முன்னணி, நாம் தமிழர் போன்றவற்றில் வேலை செய்கின்றார்கள். நிதியும் சேர்த்துக்கொடுக்கின்றார்கள். அதைச் சொன்னால் தீமூகா சொம்பு என்று முத்திரை குத்தும் வேலையும் செய்கின்றார்கள். 

அனந்தியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டும் வீடியோக்களும் சீமானின் தம்பிகள் விடுகின்றார்கள். அவற்றை கட்டுப்படுத்தாமல் உற்சாகப்படுத்தும் தலைவரும், தம்பிகளும்தான் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, zuma said:

மறுதலையும் உண்மையாகுமா?😂

தமிழகத்திற்கு நன்மை நடக்க வேண்டும் என்பதில் உங்களுக்கும்(எல்லோருக்கும்) எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எப்படி, யாரால் என்பதில்தான் கருத்து வேறுபாடு எல்லோருக்குள்ளும் ஏற்படுகிறது

எது எவ்வாறாகினும்,

(குருடர்களாகிய ஈ(ன)ழத் தமிழர் எப்படி இன்னொரு குருடனுக்கு வழிகாட்டுவது..?🤣)

பனை மரத்திற்கு தேள் கொட்ட கள்ளுக் குடித்தவனுக்கு நெறிகட்டின கதை போல ஆரம்பகால இந்திய, தமிழகத் தலைவர்களின் படங்களை எமது ஈழத்து வீடுகளில் வைத்து அழகுபார்த்த ஆட்களெல்லோ நாங்கள். 

அந்த நோயின் தாக்கம் இன்னமும் தொடர்கிறது. அம்புட்டுதே.. 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

இதைத்தான் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள். ஆனால் இப்போது புலம்பெயர் தமிழரில் ஒரு கூட்டம் அங்குள்ள சீமானின் கட்சிக்கு ஆதரவு கொடுத்து புலம்பெயர் நாடுகளில் வீரத்தமிழர் முன்னணி, நாம் தமிழர் போன்றவற்றில் வேலை செய்கின்றார்கள். நிதியும் சேர்த்துக்கொடுக்கின்றார்கள். அதைச் சொன்னால் தீமூகா சொம்பு என்று முத்திரை குத்தும் வேலையும் செய்கின்றார்கள். 

அனந்தியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டும் வீடியோக்களும் சீமானின் தம்பிகள் விடுகின்றார்கள். அவற்றை கட்டுப்படுத்தாமல் உற்சாகப்படுத்தும் தலைவரும், தம்பிகளும்தான் இருக்கின்றார்கள்.

அது ப‌ழ‌னி என்ற‌ த‌றுத‌லை பெரிய‌ப்பா , தடா ச‌ந்திர‌சேக‌ர் அவ‌னின் ஒரு சில‌ காணொளிக‌ளை பார்த்து விட்டு பாராட்டினாரோ தெரியாது

ஆனால் அந்த‌ ப‌ழ‌னி பாவிப்ப‌து ப‌டு தூச‌ன‌ம்

நான் கூட‌ அவ‌ருக்கு த‌னி ம‌ட‌லில் எழுதினேன் நீங்க‌ள் தூச‌ன‌ம் பாவிக்க வேண்டாம் என்று ஆனால் அவ‌ன் தொட‌ர்ந்து குரைத்து கொண்டு தான் இருக்கிறான் ,


ப‌ழ‌னி ப‌ர‌ப்புவ‌து அவ‌தூறுக‌ள் , பொய் பொய் , முன்னால் போராளிக‌ள் வேறு ஒரு நாட்டில் இருந்து சிங்க‌ள‌ தேச‌த்துக்கு க‌ண்ட‌ம் விட்டு க‌ண்ட‌ம் தாக்கும் முறையில் இற‌ங்கிட்டின‌ம் அது ந‌ட‌க்கும் என்று வ‌த‌ந்தியை கில‌ப்பி விடுற‌து தான் ப‌ழ‌னியின் முழு வேலை ,

இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று விப‌ர‌ம் தெரியா இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளை ந‌ம்ப‌ வைக்கிறான் ,

நான் அவ‌னின் காணொளிக‌ள் பெரிசா பார்க்கிறேல‌ அவ‌ள‌வ‌த்துக்கு வெறுத்து போச்சு , ப‌ழ‌னியால் க‌ட்சிக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 😕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

இதைத்தான் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள். ஆனால் 

புலிகள் கடைப்பிடித்தார்கள் 

தமிழக அரசியல் தலைவர்கள் கடைப்பிடித்தார்களா??

அதன் வினையை தான் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தற்போது அனுபவிக்கிறார்கள்

தமிழகத்தின் சில விடயங்களை தமது பங்களிப்பு மாற்றும் என்று நம்மவர்கள் சிலர் நம்பி அதற்காக உழைத்தால் நமக்கேன் வியர்க்கணும்??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

தமிழகத்தின் சில விடயங்களை தமது பங்களிப்பு மாற்றும் என்று நம்மவர்கள் சிலர் நம்பி அதற்காக உழைத்தால் நமக்கேன் வியர்க்கணும்??? 

அதுவா? பங்களிப்பு RSS இன் வளர்ப்பு பிள்ளைகளுக்கு போகுது என்பதால்தான். நேரடியாக பிஜேபிக்கு ஆதரவு கொடுத்தால் ஸ்டேட்டும், சென்றலும் கைக்குள் வந்துவிடும் என்று தெரியாமால் இடையில் நிற்கும் ஏஜென்ற்றுக்கு ஊத்தவேண்டாம் என்ற கரிசனைதான்😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அதுவா? பங்களிப்பு RSS இன் வளர்ப்பு பிள்ளைகளுக்கு போகுது என்பதால்தான். நேரடியாக பிஜேபிக்கு ஆதரவு கொடுத்தால் ஸ்டேட்டும், சென்றலும் கைக்குள் வந்துவிடும் என்று தெரியாமால் இடையில் நிற்கும் ஏஜென்ற்றுக்கு ஊத்தவேண்டாம் என்ற கரிசனைதான்😅

கருத்துக்கு வாதம் வைக்க வழியற்று தூற்றப்படும்  இது போன்ற சந்தேகம் என்பது பிசாசு போன்றது

அதற்கு மருந்து இதுவரை இல்லை இனியும் இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

கருத்துக்கு வாதம் வைக்க வழியற்று தூற்றப்படும்  இது போன்ற சந்தேகம் என்பது பிசாசு போன்றது

அதற்கு மருந்து இதுவரை இல்லை இனியும் இல்லை

 

புலம்பெயர் நாடுகளில் இருந்து பங்களிப்பவர்கள் இந்திய உளவுத்துறையின் கண்ணுக்குள் மண்ணைத் தூவி பிடிபடாமல் செய்கின்றோம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் அவர்களின் ஆசிர்வாதத்தோடுதான் நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். 

யார் அதிகம் தமிழ்த்தேசியம் என்று கூவுகின்றார்களோ, அவர்களுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஆதரவும், நிதியும் அள்ளி கொடுப்பார்கள் நம்மவர்கள். அதை தொண்டை நரம்பு புடைக்க கூவுபவர்கள் நன்றாகவே தெரிந்துள்ளனர்😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் இருந்து பங்களிப்பவர்கள் இந்திய உளவுத்துறையின் கண்ணுக்குள் மண்ணைத் தூவி பிடிபடாமல் செய்கின்றோம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் அவர்களின் ஆசிர்வாதத்தோடுதான் நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். 

யார் அதிகம் தமிழ்த்தேசியம் என்று கூவுகின்றார்களோ, அவர்களுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஆதரவும், நிதியும் அள்ளி கொடுப்பார்கள் நம்மவர்கள். அதை தொண்டை நரம்பு புடைக்க கூவுபவர்கள் நன்றாகவே தெரிந்துள்ளனர்😁

 

சபாஷ் 

சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டாலும் குற்றமடா  
நேற்று ஒருவனிட்ட கேட்டன் மச்சான் சீமான்ற பேச்சு கேட்ட நீயாடா என அசிங்கமா திட்டுறான் தூசணத்தில  இங்க இலங்கையில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சபாஷ் 

சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டாலும் குற்றமடா  
நேற்று ஒருவனிட்ட கேட்டன் மச்சான் சீமான்ற பேச்சு கேட்ட நீயாடா என அசிங்கமா திட்டுறான் தூசணத்தில  இங்க இலங்கையில் 

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்காமல் நிரந்தரமாக போகமுடியாதே என்ற அங்கலாய்ப்பில் இருப்பவர்கள்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசிய ஆட்சி வந்தால் அப்படியே தமிழீழம் கிடைக்கும் என்ற கனவில் உள்ளவர்கள்.

தமிழகத்தில் உண்மையான தமிழ்த்தேசியம் மற்றைய இனங்கள் மீதான வெறுப்பில் கட்டமைக்கப்படாமல் வரவேண்டும். ஆனால் அதை வரவிடாமல் செய்வதே இப்ப சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் இருந்து பங்களிப்பவர்கள் இந்திய உளவுத்துறையின் கண்ணுக்குள் மண்ணைத் தூவி பிடிபடாமல் செய்கின்றோம் என்று நினைக்கலாம். ஆனால் எல்லாம் அவர்களின் ஆசிர்வாதத்தோடுதான் நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். 

யார் அதிகம் தமிழ்த்தேசியம் என்று கூவுகின்றார்களோ, அவர்களுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஆதரவும், நிதியும் அள்ளி கொடுப்பார்கள் நம்மவர்கள். அதை தொண்டை நரம்பு புடைக்க கூவுபவர்கள் நன்றாகவே தெரிந்துள்ளனர்😁

ஆசீர்வாதத்துடன் தொடர்பு உள்ளவர்களுக்கு அது தெரிந்திருக்கும் அல்லது ஆசீர்வாதத்துக்குள் கொண்டு வருமாறு கொடுக்கப்பட்ட வேலையாக இருந்தாலும் இருக்கலாம் என்று நினைக்க என்னால் முடிவதில்லை 

காரணம் எனக்கு ஆதாரமும் செயலும் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

ஆசீர்வாதத்துடன் தொடர்பு உள்ளவர்களுக்கு அது தெரிந்திருக்கும் அல்லது ஆசீர்வாதத்துக்குள் கொண்டு வருமாறு கொடுக்கப்பட்ட வேலையாக இருந்தாலும் இருக்கலாம் என்று நினைக்க என்னால் முடிவதில்லை 

காரணம் எனக்கு ஆதாரமும் செயலும் வேண்டும்

இந்திய புலனாய்வு, மற்றும்  சீமானை, தூக்கிப்பிடிப்பதால், இலங்கை புலனாய்வு துறையின் வேலை கண்ணுக்கு தெரியாமல் போகும் என்று சிலர் கருதலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்காமல் நிரந்தரமாக போகமுடியாதே என்ற அங்கலாய்ப்பில் இருப்பவர்கள்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசிய ஆட்சி வந்தால் அப்படியே தமிழீழம் கிடைக்கும் என்ற கனவில் உள்ளவர்கள்.

அதாவது தமிழீழம் புலம்பெயர் வயதானவர்களின் கனவு என்கிறீர்கள்??

எப்படி இருந்த கிருபன் இப்படி??

அடுத்தது குளிர் அடிக்கும் போது ஊருக்கு தான் போகவேண்டும் என்பது உலகை அறியாதவர் கிணற்று தவளைகளின் பார்வை. இதற்கு பதில் எழுதுவதே நேரத்தை வீணடிக்கும் வேலை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இலங்கையில் இருப்பவர்கள் சீன்மானை கண்டுகொள்வதில்லை. புலம்பெயர் நாடுகளில் தங்களையும் தங்கள் சந்ததியையும் நிலைப்படுத்தியவர்கள்தான் குளிர் அடிக்கும்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும், ஆனால் தமிழீழம் கிடைக்காமல் நிரந்தரமாக போகமுடியாதே என்ற அங்கலாய்ப்பில் இருப்பவர்கள்தான் தமிழகத்தில் தமிழ்த்தேசிய ஆட்சி வந்தால் அப்படியே தமிழீழம் கிடைக்கும் என்ற கனவில் உள்ளவர்கள்.

தமிழகத்தில் உண்மையான தமிழ்த்தேசியம் மற்றைய இனங்கள் மீதான வெறுப்பில் கட்டமைக்கப்படாமல் வரவேண்டும். ஆனால் அதை வரவிடாமல் செய்வதே இப்ப சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை. 

இங்கே இருப்பவர்களை கேட்டால் சீமான் பேசுகிறார் ஏன் எதற்க்காக என தெரியவில்லை என் கிறார்கள் ஆனால் அவர் வென்றால் இந்தியா என்ற கோட்டை தாண்ட மாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரன், முன்னாள்... யாழ். கள உறுப்பினர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும். 🤔

எனது.... பார்வையில்,  அவர், ஒரு  "விளம்பரப் பிரியர்" என்றே நினைக்கின்றேன். :grin:

மற்றும் படி... அவரின் கருத்துக்களை, தூக்கி...  "குப்பை வாழிக்குள்"  போட வேண்டியவை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அடுத்தது குளிர் அடிக்கும் போது ஊருக்கு தான் போகவேண்டும் என்பது உலகை அறியாதவர் கிணற்று தவளைகளின் பார்வை. இதற்கு பதில் எழுதுவதே நேரத்தை வீணடிக்கும் வேலை.

எங்களை மாதிரி கனரி ஐலண்ட், கியூபா, பார்படேஸ், தாய்லாந்து,  அல்லது செளத் ஒஃப் ஸ்பெயின்/இத்தாலி என்று வெயில் குடிக்கப்போகின்றவர்கள் ஏன் குளிரும்போது ஊருக்குப்போகவேண்டும் என்று யோசிக்கப்போகின்றார்கள்! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அனந்தி சசிதரன், முன்னாள்... யாழ். கள உறுப்பினர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும். 🤔

எனது.... பார்வையில்,  அவர், ஒரு  "விளம்பரப் பிரியர்" என்றே நினைக்கின்றேன். :grin:

மற்றும் படி... அவரின் கருத்துக்களை, தூக்கி...  "குப்பை வாழிக்குள்"  போட வேண்டியவை. 🤣

உண்மையில் இந்த பேட்டி அவரை தேவையற்ற விடயங்களில் வீழ்த்தும் வஞ்சகத்தனமானது பாவப்படத்தான் முடியும்

 

6 minutes ago, கிருபன் said:

எங்களை மாதிரி கனரி ஐலண்ட், கியூபா, பார்படேஸ், தாய்லாந்து,  அல்லது செளத் ஒஃப் ஸ்பெயின்/இத்தாலி என்று வெயில் குடிக்கப்போகின்றவர்கள் ஏன் குளிரும்போது ஊருக்குப்போகவேண்டும் என்று யோசிக்கப்போகின்றார்கள்! 😂

உங்கள் பொறாமைக்கு அளவே இல்லையா

ஊருக்கு போனாலும் பொருமுகிறீர்கள் 

இத்தாலி போனாலும் பொருமுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

உண்மையில் இந்த பேட்டி அவரை தேவையற்ற விடயங்களில் வீழ்த்தும் வஞ்சகத்தனமானது பாவப்படத்தான் முடியும்

விசுகு... 
உண்மையில்.... நான், அனந்தி சசிதரனை,
காணாமல் போன... போராளிக் கணவனை, மற்றையவர்களைப் போல்... 
தேடிக்  கொண்டிருக்கும்... ஒரு அப்பாவி  பெண்ணாகவே பார்க்கின்றேன்.

ஆனால்... அவர், அரசியல்வாதி மாதிரி கதைப்பது..
"குருவி, தனது  தலையில்... பனங் கொட்டையை"   வைத்த மாதிரி உள்ளது.
 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு... 
உண்மையில்.... நான், அனந்தி சசிதரனை,
காணாமல் போன... போராளிக் கணவனை, மற்றையவர்களைப் போல்... 
தேடிக்  கொண்டிருக்கும்... ஒரு அப்பாவி  பெண்ணாகவே பார்க்கின்றேன்.

ஆனால்... அவர், அரசியல்வாதி மாதிரி கதைப்பது..
"குருவி, தனது  தலையில்... பனங் கொட்டையை"   வைத்த மாதிரி உள்ளது.
 :grin:

அவர் அப்பாவி என்பதால் தான் திமுக வின் முகவர் வலையில் சிக்கினார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கே இருப்பவர்களை கேட்டால் சீமான் பேசுகிறார் ஏன் எதற்க்காக என தெரியவில்லை என் கிறார்கள் ஆனால் அவர் வென்றால் இந்தியா என்ற கோட்டை தாண்ட மாட்டார்

சீமான் ஒரு இந்தியப் பிரசை என்பதால் இந்திய அரசியற் சட்ட வரைவிற்குள் நின்றுதான் செயற்பட முடியும். அவரிடமிருந்து அதிகம் நாங்கள் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது. 

[ஆனால் மத்திய அரசிற்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க முடியும். மாநில அரசுகளின் ஒன்றியம்தான் (எழுத்தில்/எண்ணக்கருவில்) மத்திய அரசு. இந்த அடிப்படை அரசியற் புரிதல் இல்லாமல், சீமான் புடுங்குவார் என்பதும் சீமான் ஒன்றையும் புடுங்க முடியாது என்பதும் வெட்டிப் பேச்சு. MGR உதவ முடியும்/கருணாநிதி உதவ முடியும். ஆனால் சீமானால் உதவ முடியாதென்று கூறுவதை கொடுப்பிற்குள் சிரித்துக் கொள்ளத்தான் முடியும். ]

🤥

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.