Jump to content

தடுப்பூசிகளால் அரிதாக நடக்கும் ரத்தம் உறைதல் விளைவு... ஏன் ஏற்படுகிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்ட்ரா ஜெனிகா, ஸ்புட்னிக் 5, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 தடுப்பூசிகளும் தற்போது இவ்வகை ரத்தம் உறைதல் பாதிப்பை அளிப்பதாக அறிவியல் தரவுகள் சொல்கின்றன. இது ஏன் ஏற்படுகிறது?

கடந்த சில நாள்களாக மக்களிடையே பெருகிவரும் அச்சம், கோவிட் தடுப்பூசியால் மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த உறைவு ஏற்படுமா என்பதுதான். காரணம், அது தொடர்பான ஊடகச் செய்திகள். உலகில் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி ஆய்வில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். உலகின் முன்னணி மருத்துவ நிறுவனங்களான ஃபைஸர், ஜான்சன் அண்ட் ஜான்சன் எனப் பல நிறுவனங்கள் அவர்களுடைய இணை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடனோ, தம் மருத்துவ ஆய்வகத்தின் உதவியுடனோ தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து மக்கள் நலனுக்காகச் சந்தைப்படுத்துகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விதமான அணுகுமுறை கொண்டு தடுப்பூசியை வடிவமைத்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
 
கொரோனா தடுப்பூசி

கொரோனாவுக்கான தடுப்புசிகள் 3 வகையாகத் தற்போது வழங்கப்படுகின்றன.

1. mRNA எனப்படும் கொரோனா வைரஸின் மரபணு பிரித்தறியும் தொழில்நுட்பம் வாயிலாக நமக்கு நோய் பாதுகாவல் தரும் முறை.

2. வெக்டார் எனும் அணுகுமுறை. இதுதான் பல நிறுவனங்கள் உபயோகிக்கும் முறை. அதாவது, வேற்று இன (மனிதக் குரங்கு) செல்களில் உருவகப்படுத்திய செயலிழக்கச் செய்த அடினோ வைரஸுக்குள் கொரோனா மரபணுவைப் புகுத்தி, அதை நம் உடலுக்குள் செலுத்தி அதன் மூலம் நம் செல்களை இந்த கொரோனா நோய்க்கு எதிராகப் பாதுகாக்க வைக்கும் முறை.

3. செயலிழக்கப்பட்ட முழுமையான வைரஸை நம் உடலுக்குள் செலுத்தி, அதன் வாயிலாக முழுமையான நோய் பாதுகாவல் தேட முயல்வது.

இதில் mRNA வழியாக நமக்குப் பாதுகாவல் தேடுபவை, ஃபைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள். மாடர்னா தடுப்பூசியை அமெரிக்க வாழ் மக்களுக்கென அந்நாட்டு அரசு இந்த நிறுவனத்தின் மொத்த உற்பத்தியையும் கேட்டுப் பெற்றிருக்கிறது.

 

அடுத்ததாக ஃபைஸர் தடுப்பூசி, mRNA வழியாக நமக்கு நோய் பாதுகாவல் தரும் ஆன்டிபாடி அணுக்களை உருவாக்கும் முறையில் செயல்படுகிறது. ஆனால், நம் நாட்டின் தட்பவெட்பம் இந்த ஊசிக்கான - 60 டிகிரி குளிர் பிணைப்பைக் கொடுக்க இயலாது என்பதால் நம்மால் ஃபைஸர் தடுப்பூசியைத் தாராளமாகவும் தைரியமாகவும் பெற்று உபயோக்க இயலாமல் இருக்கிறது.

சரி... ரத்தம் உறைதல் விஷயத்துக்கு வருவோம். அடினோ வைரஸ் எனும் வெக்டார் மூலம் உருவாகும் கீழ்க்காணும் ஆஸ்ட்ரா ஜெனிகா, ஸ்புட்னிக் 5, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 தடுப்பூசிகளும் தற்போது இவ்வகை ரத்தம் உறைதல் பாதிப்பை அளிப்பதாக அறிவியல் தரவுகள் சொல்கின்றன. அதில் இந்தியாவில் தற்சமயம் உபயோகிக்கும் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி சுமார் 39 பேருக்கு இந்தப் பாதிப்பை பிரேசில் நாடு உட்பட பல இடங்களில் அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி
 
கொரோனா தடுப்பூசி

அதே நேரம் இந்தியாவில் இதுபோன்ற எந்தப் பாதிப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதே உண்மை. சில நாள்களாகப் பேசுபொருளாக இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனியின் தடுப்பூசி என்பது கொரோனா தடுப்பூசி வகைகளிலேயே வித்தியாசமானது.

ஆம், நான் முன்னர் கூறியதுபோல் இதுவும் வெக்டார் வகை தடுப்பூசி என்றாலும், இந்தத் தடுப்பூசியை ஒருமுறை நம் உடலில் செலுத்திக்கொண்டால் போதும், அடுத்த தவணை தேவையில்லை. ஒரு தவணையில் கிடைக்கும் ஒரே கொரோனா தடுப்பூசி இது மட்டுமே. இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 9 நாள்களில் இருந்து, 28 நாள்களுக்குள் நோய் பாதுகாவல் முழுமை பெறுகிறது. உலகம் முழுவதும் இதுவரை 69 லட்சம் பேருக்கு இந்தத் தடுப்பூசி வெற்றிகரமாக இடப்பட்டுள்ளது. அவர்கள் யாவரும் ஒரே தவணையுடன் உரிய பாதுகாப்பை அடைந்து இருக்கின்றனர்.

 

ஆனால் அதில் 6 பேருக்கு, அதாவது 69 லட்சம் பேரில் 6 பேருக்கு மட்டும் ரத்தம் உறைந்துபோய் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் இறந்ததும், மற்றொருவர் கவலைக்கிடமாக இருப்பதும் அறியப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள 4 பேருக்கு பெரிய பாதிப்புகள் இல்லை என்றே தகவல்கள் சொல்கின்றன.

அதென்ன ரத்தம் உறைதல்?

நம் உடலில் ரத்தக்குழாய்களில் பரிமாற்றம் நடைபெறும் ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் எனப் பல வகை அணுக்கள் உள்ளன. ஒவ்வோர் அணுவுக்கும் வெவ்வேறு பணிகள் உண்டு. இதில் நாம் தட்டணுக்கள் பற்றி அறிய வேண்டியது அவசியம். இதை ஆங்கிலத்தில் பிளேட்லெட்ஸ் (Platelets) எனச் சொல்கிறோம்.

நம் உடலில் ஏதேனும் சிராய்ப்போ, காயமோ ஏற்படுமாயின் அதில் ஏற்படும் ரத்தக்கசிவு சில மணித்துளிகளில் காய்ந்து உலர்ந்து உறைந்து போகிறதல்லவா, இதற்கான காரணம் இந்தத் தட்டணுக்கள்தான். இந்தத் தட்டணுக்கள், தாம் சார்ந்த மனிதனுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து ஏற்படுமானால், ரத்தப்போக்கை நிறுத்தி, அவரது உயிரைப் பிழைக்க வைத்திட உடனே தம்மை ஒன்றுசேர்த்து, ரத்தக்குழாய் சுவர்களில் ஒட்டிப்பிடித்து, தம் சகாக்களை உடன் அழைத்து, அந்த ரத்தக்கசிவை குறைக்கவும், அங்கே ரத்தத்தின் அடர்த்தியை அதிகப்படுத்தி, அதன் ஓட்டத்தை தாமதப்படுத்தவும் செய்கின்றன. இதே விஷயம்தான் இங்கே நம் உடலின் தவறான புரிந்துணர்வால் மாறுபடுகிறது.

அதாவது, இவ்வகையான சில தடுப்பூசிகள் நம் உடலில் நோய்க்கு எதிரான ஆன்டிபாடி செல்களை உருவாக்குகின்றன. ஆனால், நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சில நேரம் அடுத்த செல்களை போன்ற வடிவமைப்பில் இருக்கக்கூடும். அவ்வாறு இருக்கும் ஒற்றை வகை செல்களுக்கு எதிராக நம் உடல் எதிர்வினைகளை பாகுபாடில்லாது காட்டும். இதைப் பொதுவாக Autoimmune Phenomenon எனச் சொல்வோம். அவ்வகை செயல்பாடுதான் இந்தத் தடுப்பூசியால் வெகு சிலருக்குச் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.

 

நம் தட்டணுக்களில் இருக்கும் Platelet 4 Receptors எனப்படும் பகுதிக்குள் இவ்வகை தடுப்பூசி உருவாக்கிய ஆன்டிபாடிகள் வந்து சேர்ந்து நம் தட்டணுக்கள் செயல்பாட்டைத் தவறுதலாகத் தூண்டலாம், அந்தப் பிறழ்வான தூண்டுதல் வெகு சிலருக்கு மட்டும் மிக பயங்கரமாக இருக்கலாம். அந்தத் தூண்டுதல் நான் முன்னர் கூறியதுபோல தட்டணுக்களை ஒன்றுசேரச் செய்து, உடல் பரிமாற்றத்தில் இருக்கும் ரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, மெதுவாக ரத்த உறைதலைத் தூண்டலாம். இதனால் நம் உடல் பாகத்தில் முக்கிய உறுப்புகளில் ரத்தம் சென்று சேர இயலாது அல்லது உறைந்த ரத்தமாக (Thrombosis) சென்றடைந்து அந்தந்த உறுப்பைச் செயலிழக்கச் செய்யும் (Embolus induced infarction).

இதன் கூடவே, தட்டணுக்களின் இந்தச் செயல்பாட்டால், உடலில் இருக்கும் தட்டணுக்களில் பெரும்பாலானவை ஒருசேர இருக்கையில் உடலில் ஓடிக்கொண்டு இருக்கும் மீதமுள்ள ரத்தத்தில் குறைவாகக் காணப்படலாம் (Immune Thrombocytopenia). இதுபோன்ற தட்டணுக்கள் குறைபாட்டைத்தான் டெங்கு காய்ச்சலிலும் நாம் காண நேர்கிறது. அது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பினால் ஏற்படும் தட்டணுக்கள் செயல் குறைபாடு, எனவே, இந்தத் தட்டணுக்கள் தட்டுப்பாட்டால் நம் உடலில் அவசியமான ரத்தம் உறைதல் தன்மை இழந்து ஆங்காங்கே ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

எனவே, இந்த வெக்டார் அணுகு தடுப்பூசிகளால் வெகு சிலருக்கு ரத்த உறைதல் மற்றும் ( VIPIT - Vaccine Induced Prothrombotic Immune Thrombocytopenia) எனப்படும் நிலையும் Activation of PAF 4 leading to Platelet Aggregation and Thrombosis எனப்படும் நிலையும் வரலாம். அதாவது, தட்டணுக்கள் உட்சுவரில் உள்ள தட்டணுக்கள் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும் செல்களைத் தூண்டும் ஆன்டிபாடிக்களை இவ்வகை ஊசிகள் உருவாக்கலாம் எனப்படுகிறது.

 

இதனால் CVT - Central Venous Thrombosis எனப்படும் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் வரும் உறைபடிதல் பாதிப்பு சிலருக்கும், இன்னும் சிலருக்கு Peripheral Venous Thrombosis எனப்படும் உடல் உறுப்புகளுக்கான ரத்தக்குழாய்கள் உறைபடிதல் பாதிப்பும் ஏற்படட வாய்ப்புகள் உண்டு என்கின்றனர்.

இந்தப் பாதிப்பை அறிகுறிகளைக் கொண்டு எப்படி அறியலாம்?

இவ்வகை வெக்டார் அணுகு தடுப்பூசிகள் போடப்பட்டு 5 நாள்களில் இருந்து 3 வாரங்களுக்குள்தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இந்த ஊசியால் ஆன்டிபாடி எனும் நோய் பாதுகாவல் அணுக்கள் உருவாகும். எனவே, வெக்டார் வகை தடுப்பூசி இடப்பட்ட அனைவரும் இந்த நாள்களில், மூக்கில் ரத்தக்கசிவு, பற்களில் ரத்தக்கசிவு, காரணமற்ற உடல் சிராய்ப்புகள், உடலில் சிவப்பு புள்ளிகள், தீராத கால்வலி, குடைச்சல், தீராத தலைவலி, கண்வலி, பார்வை குறைதல் என ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உடலில் உள்ள மொத்த ரத்த அணுக்கள் அளவு, தட்டணுக்கள் அளவு, தட்டணுக்கள் செயல்திறன் ஆய்வு, Platelet Factor 4 antibodies எனும் சிறப்புப் பரிசோதனை, ரத்தம் கசியும் நேர கணக்கு, ரத்தம் உறைதல் நேர கணக்கு, கால்களுக்கான ரத்த ஓட்டம் அறியும் Peripheral Arteriovenous Doppler போன்று தேவைப்படும் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் பாதிக்கப்பட்ட நபரை உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிவிடலாம்.

டாக்டர் .சஃபி,M. சுலைமான்
 

அதே நேரத்தில் தடுப்பூசியால் வரும் இந்த ரத்தம் உறைதல் பாதிப்புகள் போலவே நிஜமான கோவிட்-19 நோயிலும் நாங்கள் கண்டதுண்டு. தடுப்பூசியால் 4 முதல் 6 சதவிகிதம் இதுபோன்ற VIPIT நோய்கள் வரும் என எண்ணும் நமக்குத் தெரிய வேண்டிய முக்கியமான விஷயம், கொரானா தொற்று, தீவிர (WILD COVID19 DISEASE) நோயாக மாறினால் 19% முதல் 22% வரை இதே பாதிப்பால் நோயாளிகள் இறக்கலாம் என்பதுதான். மேலும், நோய் பாதித்து வரும் இந்த ரத்த உறைதல் விளைவில் இருந்து பல உயிர்களைக் காக்க முடியாமலும் போகிறது என்பதே மருத்துவ உண்மை. எனவே, நோய் பாதித்து வரும் இவ்வகை ரத்தம் உறைதல்தான் மிக ஆபத்தானதுமாகும். எனவே நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வதே சிறந்த தற்காப்பு.

தடுப்பூசிகளால் அரிதாக நடக்கும் ரத்தம் உறைதல் விளைவு... ஏன் ஏற்படுகிறது? #ExpertExplains | why some rare blood clot incidents happen after getting the covid 19 vaccine - Vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.