Jump to content

நயினாதீவில்... தேசிய வெசாக் நிகழ்வுகள், திட்டமிட்டவாறு நடைபெறும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும்!

நயினாதீவில்... தேசிய வெசாக் நிகழ்வுகள், திட்டமிட்டவாறு நடைபெறும்!

தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நயினாதீவு நாக விகாரையில் இடம்பெறும் என யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதன் போது ஊடகவியலாளர் , நாக விகாரையில் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறுமா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தேசிய வெசாக் நிகழ்வு என்பது தேசிய நிகழ்வு. அதனை நிறுத்துவது தொடர்பில் எமக்கு எந்த அறிவுறுத்தலும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அதனால் நிகழ்வு முன்னர் திட்டமிட்ட வாறு நடைபெறும்.
சுகாதார விதிமுறைகளை பின் பற்றி , மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறும். என தெரிவித்தார்.

தேசிய வெசாக் நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் நயினாதீவு நாக விகாரையில் நடைபெறவுள்ளது. 24ஆம் திகதி சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை எதிர்வரும் மூன்று வார கால பகுதி எச்சரிக்கை மிக்க கால பகுதி எனவும் ,சுற்றுலா பயணங்களை தவிர்க்குமாறும் , பண்டிகை நிகழ்வுகளை நிறுத்துமாறும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1211676

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நயினாதீவு நாக விகாரையில் இடம்பெறும் என யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் மூன்று வார கால பகுதி எச்சரிக்கை மிக்க கால பகுதி எனவும் ,சுற்றுலா பயணங்களை தவிர்க்குமாறும் , பண்டிகை நிகழ்வுகளை நிறுத்துமாறும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழினத்துக்கடி உபதேசம். உனக்கல்லடி சிங்களமே.🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலை நடக்கிற அல்லோலங்களை பாத்தாவது திருந்த மாட்டுதுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவிலை நடக்கிற அல்லோலங்களை பாத்தாவது திருந்த மாட்டுதுகள். 

அது தமிழ் நிகழ்வுகளுக்கு மட்டுமே....

Link to comment
Share on other sites

எப்படி கும்பமேளாவில் கூடி கும்மி அடிச்சு கொரோனவை இந்தியா முழுவதும் பரப்பினர்களோ, அதேபோல் நயினாதீவில் கூடி நடனமாடி இலங்கை முழுவதும் பரப்ப வேண்டும் என எல்லாம் வல்ல புத்த பெருமானை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

அத்தனை பெளத்த பீ(டை)டாதிபதிகளும் ஒன்றாக இதில் வந்து கலந்து கொண்டு ஆளையாள் ஆரத் தழுவி மகிழ்ந்து, கை குலுக்கு பிரித் ஓதி, கிரிபத் சாப்பிட்டு செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

எப்படி கும்பமேளாவில் கூடி கும்மி அடிச்சு கொரோனவை இந்தியா முழுவதும் பரப்பினர்களோ, அதேபோல் நயினாதீவில் கூடி நடனமாடி இலங்கை முழுவதும் பரப்ப வேண்டும் என எல்லாம் வல்ல புத்த பெருமானை வேண்டுகின்றேன்.

ஆமா 

ஆனால் அவர்கள் விட்டு செல்ல போவது எமது மண்ணில் தானே தாண்டவமாடும்? ☹️

 

Link to comment
Share on other sites

41 minutes ago, விசுகு said:

ஆமா 

ஆனால் அவர்கள் விட்டு செல்ல போவது எமது மண்ணில் தானே தாண்டவமாடும்? ☹️

 

 

சில  தமிழ் அரசியல் தலைவர்களும்,  தமிழ் அரசாங்க உயர் அதிகாரிகளும்  அன் நிகழ்வை நடத்துவதற்கு சிங்களவரைவிட மிக முன்முரமாக நிற்கின்றார்கள். மற்றைய அரசியல் தலைவர்களும், சாதாரண மக்களும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் இருந்து விலகி இருக்க வேண்டும்( அன் நிகழ்வு நடைபெறும் நாளில் பூரண பணிபுறக்கணிப்பு, கடையடைப்பு நடத்தப்படவேண்டும்). எனது கூற்றானது அங்கத சுவைக்கு சொல்லப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேதின ஊர்வலம் நடத்தத் தடை. காரணம் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள பயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சில  தமிழ் அரசியல் தலைவர்களும்,  தமிழ் அரசாங்க உயர் அதிகாரிகளும்  அன் நிகழ்வை நடத்துவதற்கு சிங்களவரைவிட மிக முன்முரமாக நிற்கின்றார்கள்

 

அதிலை வாற கிளுகிளுப்பும் கிக்கும் எங்கடை கொண்டாட்டத்தில் வருமே...சொல்லி வேலையில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

 

சில  தமிழ் அரசியல் தலைவர்களும்,  தமிழ் அரசாங்க உயர் அதிகாரிகளும்  அன் நிகழ்வை நடத்துவதற்கு சிங்களவரைவிட மிக முன்முரமாக நிற்கின்றார்கள்

 

அதிலை வாற கிளுகிளுப்பும் கிக்கும் எங்கடை கொண்டாட்டத்தில் வருமே...சொல்லி வேலையில்லை

 

செய்யிறது அடிமை வேலை, அதிலும் ஒரு பெருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் சிங்கள அரச கூலியம் செய்யுறாங்க.

மாவீரர் தின நிகழ்வுக்கு தடை.

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கு தடை

அன்னை பூபதி நினைவுக்குத் தடை.

கோவில் திருவிழாக்களுக்குத் தடை.

ஆனால்..

சிங்கள அரச வெற்றிவிழாவுக்கு அனுமதி.

சிங்கள புத்தாண்டுக்கு அனுமதி

சிங்கள பெளத்த வெசாக் கொண்டாடங்களுக்கு அனுமதி.

----

மொத்தத்தில் புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் சொந்த தமிழினத்தை அழிக்க.. எப்படி தமிழர்களில் ஒரு தரப்பு எதிரிக்கு.. கூலியம் செய்ததோ.. அதையே கொரோனா தடுப்பு வைத்தியம் என்ற போர்வையில் சிலர் செய்கின்றனர்.

அதென்ன.. கொரோனா தமிழர் நிகழ்வுகளில் தொற்றிக்கும்.. சிங்களவர்கள் நிகழ்வுகளில் தொற்றிக்காது என்று இவர்களுக்கு சத்தியம் செய்து கொடுத்ததோ..??!

மக்களை முட்டாளாக்கும் எம் இனக் கூலிகள் பல வடிவங்களில் பல பரிமானங்களில். அதில் படித்த முட்டாள்கள் தான் மிக அதிகமாக உள்ளன. இதற்கு சுழித்தல்.. சாணக்கியம் என்ற அடைமொழிகள் வேறு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.