Jump to content

வடக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை

வடக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் அர்ப்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரித்துள்ளார்.அத்துடன், கடந்த சில ஆண்டுகளின் பத்தாயிரம் இளைஞர், யுவதிகளை பொலிஸ் ஆட்சேட்ப்பு இணைப்பில் இணைத்துக் கொண்டதாகவும், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் மேலும் 24 ஆயிரம் பேரை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையத்தில் முழுமையான பங்களிப்பினை வழங்க எதிர்காலத்தில் ஒன்றிவது காலத்தின் கட்டாயமாகும் எனவும் தமிழ் மொழியில் இணைத்துக் கொள்பவர்கள், விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த தமது சொந்த மாவட்டங்களிலே கடமைபுரிய வழியேற்படுத்தப்படும் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.சுதந்திரமான, ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஐக்கியத்தையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் சேவைக்கான ஆளணியை அதிகரிப்பது தொடர்பாக யாழில் இன்று இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(15)
 

 

http://www.samakalam.com/வடக்கு-மாகாணத்தில்-பொலிஸ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

கடந்த சில ஆண்டுகளின் பத்தாயிரம் இளைஞர், யுவதிகளை பொலிஸ் ஆட்சேட்ப்பு இணைப்பில் இணைத்துக் கொண்டதாகவும், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் மேலும் 24 ஆயிரம் பேரை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனபேர் செய்தியை படிக்கணும்  ஒரு கருத்தையும் காணல ஒரு வேளை யாரும் படிக்கலையோ செய்தியை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

கனபேர் செய்தியை படிக்கணும்  ஒரு கருத்தையும் காணல ஒரு வேளை யாரும் படிக்கலையோ செய்தியை

பத்தாயிரம் தமிழர்கள் என்று சொல்லவில்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

பத்தாயிரம் தமிழர்கள் என்று சொல்லவில்லையே!

கிட்டத்தட்ட இருக்கும்  களுத்துறை , யாழ்ப்பாணம் , பயிற்ச்சி நடக்கிறது வெளியேற வெளியேற மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு இணைக்கப்படுகிரார்கள் தற்போது இணைய சேர்ந்தவர்களின் குடும்ப பின்னணியை ஆராயப்படுகிறது அதன் பின்னர் பயிற்ச்சிக்காக அழைக்கப்படுவார்கள் எனநினைக்கிறன் எங்கள் ஊரில் 500 ற்கு மேல் சேர்ந்திருக்கும் இதுவரை மற்ற ஊர் , மாவட்டங்கள், மாகாணம்க்களை கணக்கெடுத்து பாருங்கள் கிருபன்  இருக்கலாம்  பலர் சிங்களப்பகுதிகளில் பணியாற்றுகிறார்கள் சரளமாக சிங்களம் பேசுவதற்க்காக 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கனபேர் செய்தியை படிக்கணும்  ஒரு கருத்தையும் காணல ஒரு வேளை யாரும் படிக்கலையோ செய்தியை

முனிவர், இவர்களுக்கு சும்மா குந்திக் கொண்டு இருக்க சம்பளம் கொடுக்க, நீங்கள் அதிக வரி கட்டுகிறீர்கள்.

இந்த புரிதல் இருந்தால், எதுக்கு எடுக்கிறாய் என்று அல்லவா கேட்டு இருப்பீர்கள்?

சந்தோசமாக கட்டுங்கள். 10,000 என்ன, ஒரு லட்ச்சத்தினை எடுக்கட்டும்.

46 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிட்டத்தட்ட இருக்கும்  களுத்துறை , யாழ்ப்பாணம் , பயிற்ச்சி நடக்கிறது வெளியேற வெளியேற மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு இணைக்கப்படுகிரார்கள் தற்போது இணைய சேர்ந்தவர்களின் குடும்ப பின்னணியை ஆராயப்படுகிறது அதன் பின்னர் பயிற்ச்சிக்காக அழைக்கப்படுவார்கள் எனநினைக்கிறன் எங்கள் ஊரில் 500 ற்கு மேல் சேர்ந்திருக்கும் இதுவரை மற்ற ஊர் , மாவட்டங்கள், மாகாணம்க்களை கணக்கெடுத்து பாருங்கள் கிருபன்  இருக்கலாம்  பலர் சிங்களப்பகுதிகளில் பணியாற்றுகிறார்கள் சரளமாக சிங்களம் பேசுவதற்க்காக 

அரசு, திணறுகிறது, இவர்கள் வேலை நிரந்தரம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

முனிவர், இவர்களுக்கு சும்மா குந்திக் கொண்டு இருக்க சம்பளம் கொடுக்க, நீங்கள் அதிக வரி கட்டுகிறீர்கள்.

இந்த புரிதல் இருந்தால், எதுக்கு எடுக்கிறாய் என்று அல்லவா கேட்டு இருப்பீர்கள்?

சந்தோசமாக கட்டுங்கள். 10,000 என்ன, ஒரு லட்ச்சத்தினை எடுக்கட்டும்.

 

பல ஏழை தமிழர்கள்  இளைஞர்கள் அவர்கள் குடும்பங்கள் வாழ்கிறது நாதா அதற்க்காகவாது கட்டலாம் நான் மட்டுமா என்ன?  இந்த இளைஞர்களை என்ன செய்யலாம் மிஞ்சி மிஞ்சி  போனால் மத்திய கிழக்கு சென்று வருவார்கள் மிஞ்சுவது ஒரு அல்பமும் ,  ஒரு பைக்குமாக இருக்கும் இங்கிருந்து ஓர் அரச வேலை எடுத்து செல்லட்டுமே இது எனது ஆதங்கம் மட்டுமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் ராஜா பாராட்டப்பட வேண்டிய விடயம்.....தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தமிழ் பிரதேசங்களில் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும்...தமிழ் மொழி அமுல்படுத்தப்பட வேண்டும் ....தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும்........ பதவி உயர்வு வழங்கு பொழுது  தமிழ் பொலிசார் என்ற எண்ணம் அரசு அதிகாரிகளுக்கு வராமல் இருந்தால் நல்லது......

வேலை இல்லா திண்டாட்டம் சிங்கள பகுதியில் இருப்பதால் சிங்கள சகோதரர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்க வாய்ப்பு உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கிற்கு போலீஸ் காணி அதிகாரம் இல்லாத மாகாண சபை. ஒருவேளை ஆயுதம் இல்லாத ....   ?எல்லாம் மாகாண சபைத் தேர்தலை நடத்து என்று அடம்பிடிக்கும் இந்தியாவையும், சர்வதேசத்தையும் சமாதானம் செய்யும் தந்திரம். சிங்களவன் அவ்வளவு எளிதில் தமிழரை சுதந்திரமாக வாழ விட மாட்டான். அப்படியொரு நல்ல சிந்தனை உள்ளவனாக இருந்திருந்தால் இவ்வளவு இழப்புகளும், வலிகளும் இத்தனை காலங்களாக  நாம் அனுபவித்திருக்க வேண்டியதில்லையே. இருப்பவர்களுக்கே சம்பளம் கொடுக்க வழியில்லை. சீன அரசாங்கம் கொடுக்கப்போகுதோ யாரறிவார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2021 at 05:03, putthan said:

நல்ல விடயம் ராஜா பாராட்டப்பட வேண்டிய விடயம்.....தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தமிழ் பிரதேசங்களில் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும்...தமிழ் மொழி அமுல்படுத்தப்பட வேண்டும் ....தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும்........ பதவி உயர்வு வழங்கு பொழுது  தமிழ் பொலிசார் என்ற எண்ணம் அரசு அதிகாரிகளுக்கு வராமல் இருந்தால் நல்லது......

வேலை இல்லா திண்டாட்டம் சிங்கள பகுதியில் இருப்பதால் சிங்கள சகோதரர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்க வாய்ப்பு உண்டு

தற்போது பலர் பதவி உயர்வு பெற்றுக்கொண்டுதான்  இருக்கிறார்கள் ஆனால் அந்த பதவியை தக்க வைத்துக்கொள்ளமுடிவதில்லை சில தனிப்பட்ட விடயங்கள் மற்றவர்களுக்கு சட்டத்துக்கு மாறாக உதவ நினைப்பது காரணம் தமிர்கள் உதவிக்கு ஆள் இருந்தால் தப்பித்துக்கொள்ள நினைப்பது 

ராணுவத்தில் எனது நண்பர் கோப்றல் , பொலிசில் உதவி பொலிஸ் அதிகாரிகளாக இருந்துவருகின்றனர் .

தற்போது மாற்றலாகிக்கொண்டே வருகிறார்கள் சொந்த ஊர்களுக்கு வேலை கிடைத்ததும் பிற மாவட்டம் அல்லது மாகாணம் வேலை செய்வது கட்டாயம் இலங்கையில் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.