Jump to content

முகத்துக்கு அல்ல, அகத்துக்கு தேவை 'ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்' - டாக்டர் செல்வ சீத்தாராமன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முகத்துக்கு அல்ல, அகத்துக்கு தேவை 'ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்' - டாக்டர் செல்வ சீத்தாராமன்

ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்

ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்

உடலில் எந்த உபாதை வந்தாலும் மருத்துவரை அணுகும் நாம், தலைமுடி மற்றும் சருமப் பிரச்னைகளுக்கு அழகு நிலையங்கள் நோக்கிச் செல்கிறோம். ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது தேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜியன்கள் செய்வதே சிறந்தது.

'ஏய் சொட்டை, ஹெல்மெட் மண்டை, வழுக்கப்போது பாத்து!' - தலைமுடி கொட்ட ஆரம்பித்தவுடன் நண்பர்கள் இப்படியெல்லாம் கேலி செய்யும்போது சம்பந்தப்பட்ட அந்த நபர் அந்த நொடி ரொம்ப கேஷுவலாக அதை எடுத்துக்கொள்ளலாம், ஏன் அவரே அதுகுறித்து சிரிக்கவும் செய்யலாம். 'வயசு ஆயிருச்சுப்பா, முடி கொட்டுவது சகஜம்' என்று அவர்கள் அதைக் கடந்து செல்வதுபோல் தெரிந்தாலும், பெரும்பாலானோர் உள்ளூர வேதனைப்படுவது உண்மை.

பள்ளி/கல்லூரி நாட்களில் காற்றில் ஆடும் தலைமுடியோடு ஸ்டைலாகத் திரிந்தவர்கள், தங்களின் 30-களில் (இப்போதெல்லாம் 20-களிலேயே) முன் மண்டையிலோ நடு மண்டையிலோ முடியை இழக்கும்போது, அது அவர்களின் தன்னம்பிக்கையையே உலுக்கிவிடுகிறது.

நம் உடல் ஆரோக்கியத்தின் முக்கிய குறியீடு நம் தலைமுடி. முடி கொட்ட ஆரம்பித்தால், உடலில் ஏதோவொரு உபாதையின் அறிகுறியாக அது இருக்கலாம், நுண்சத்துக் குறைபாடு, தூக்கமின்மை, மன அழுத்தம், சீரற்ற வாழ்வியல், மரபியல், குடும்ப ரீதியாக, நோய்தொற்று என்று நிறைய காரணங்கள் இருக்கின்றன. முதலில் இவற்றில் எந்தக் காரணத்தினால் முடி கொட்டுகிறது என்பதை அறிந்து, அதைச் சரி செய்தால், ஆரம்பத்திலேயே தலைமுடி உதிர்தலுக்கு ரெட் சிக்னல் போட்டுவிடலாம். ஆனால்...

தடுக்கமுடியாத தலைமுடி உதிர்வு...

ஆன்ட்ரோஜெனிடிக் அலோபீசியா (Androgenetic Alopecia) எனப்படும் முடி உதிர்தல் ஆண்களில் மிக அதிகமாக ஏற்படக்கூடியது. முன்தலையின் பக்கவாட்டுகளில் முடி உதிர்வது தொடங்கி, நடுப்பகுதியில் முடி குறைந்து பின்னர் மேல் மண்டை முழுவதும் முடி கொட்டும். மேல் மண்டை எனப்படும் கிரௌன் (Crown) பகுதியில் உள்ள தலை முடி ஹார்மோன்களுடன் தொடர்புடையது. ஆண்களின் முக்கிய ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன், இந்த ஹார்மோனில் ஒரு சிறு பகுதி 'டைஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோன் (DHT)' எனும் ஹார்மோனாக மாறுதல் அடையும். இந்த DHT உடலுக்குத் தேவை என்றாலும், தலை முடி உதிர்வதற்கு இதுவே முக்கிய காரணியாக இருக்கிறது.

பெண்களுக்குப் பொதுவாக வகுட்டில் முடி குறைந்து பின்னர் மேல் மண்டையில் அடர்த்தி குறையும், ஆண்கள் போல மொத்தமாக முடி உதிர்வது மிக மிகக் குறைவுதான். எனவே பெண்கள் கொஞ்சம் நிம்மதிப் பட்டுக்கொள்ளலாம்! ஆன்ட்ரோஜெனிடிக் அலோபீசியாவுக்குக் காரணம் மரபியல் என்பதால் அதைத் தள்ளிப்போடலாமே தவிர, தடுத்து நிறுத்த முடியாது.

அனாஜென் - வளரும் பருவம், கெட்டாஜென் - வளர்ச்சி நிற்கும் பருவம், டீலோஜென் - வளர்ச்சி மொத்தமும் நின்று, உதிர இருக்கும் பருவம் என்று 3 பருவங்கள் முடி வளர்தலில் உண்டு. பொதுவாக 80-85% பேருக்கு அனாஜென் பருவத்தில்தான் முடி இருக்கும், வயது ஆக ஆக அல்லது ஆன்ட்ரோஜெனிட்டிக் அலோபீசியா தொடங்கியபிறகு, மூன்றாம் பருவமான டீலோஜென் விரைவாக வந்து தலைமுடி உதிர்கிறது. அப்போது ஃபாலிக்கிள் (Follicle) எனப்படும் தலைமுடியின் வேர் அல்லது வித்து மட்டும் தலைக்குள்ளேயே இருக்கும்.

டாக்டர் S. செல்வ சீத்தாராமன்
 
டாக்டர் S. செல்வ சீத்தாராமன்
 

ஹேர் டிரான்ஸ்பிளான்ட் எனும் தீர்வு!

பின்னந் தலையிலிருந்து முடியை எடுத்து தலைமுடி குறைந்த முன் பகுதியில் நட்டு வைக்கும் முறைதான் 'ஹேர் டிரான்ஸ்ப்ளான்டேஷன்'. தலையில் முடியே இல்லாத/மிக மிகக் குறைவாக இருக்கும்பட்சத்தில், உடலின் பிற பகுதிகளில் இருந்தும் முடியை எடுத்து தலையில் வைக்கலாம். Follicular Unit Transplantation (FUT) மற்றும் Follicular Unit Extraction (FUE) என இரண்டு வகையான சிகிச்சைகள் இதில் உண்டு. FUE-ல் தழும்புகள் ஏற்படுவது மிக மிகக் குறைவு என்பதால், இம்முறையே இப்போது பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

PRP (Platelet Rich Plasma) எனப்படும் சிகிச்சையில், நம் ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் தட்டணுக்களை மண்டைக்குள் ஊசி மூலம் ஏற்றி, ஃபாலிக்கிள் பகுதியைத் தூண்டி அதற்கு ஊட்டமளித்து முடியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது. FUE உடன் சேர்த்து PRP கொடுப்பதால் மிகச்சிறந்த பலன்களைப் பெறலாம்!

குளோபல் மருத்துவமனையில் ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்.

உடலில் எந்த உபாதை வந்தாலும் மருத்துவரை அணுகும் நாம், தலைமுடி மற்றும் சருமப் பிரச்னைகளுக்கு அழகு நிலையங்கள் நோக்கிச் செல்கிறோம். தகுந்த படிப்பும் பயிற்சியும் பெற்றவர்களை அணுகினால் தவறல்ல, ஆனால்

ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது அதைத் தேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜியன்கள் செய்வதே சிறந்தது. குளோபல் மருத்துவமனையில் 24x7 செயல்படும் அனைத்து மருத்துவ குழுக்களும் இருப்பதால், ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் உள்ளிட்ட எல்லா சிகிச்சைகளையும் எந்தவொரு பாதிப்புமின்றி எடுத்துக்கொள்ள முடியும். இங்கே சிகிச்சை எடுத்துக்கொள்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கடமையாகும்.

FUE முறையில் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கி, அவற்றைக் குளிர் நிலையில் பதப்படுத்தி, ஊசி போன்ற கருவி மூலம் ஒவ்வொன்றாக நடுவதால், தொற்று ஏற்படும் வாய்ப்பு இதில் மிக மிக அதிகம். கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் சுகாதாரமான முறையில், ஆபரேஷன் தியேட்டரில் மயக்க மருந்து நிபுணரின் உதவியுடன் இந்தச் சிகிச்சை செய்யப்படுவதால் எந்தவொரு தவற்றுக்கும் இடமில்லை!

சிகிச்சை முடிந்தபிறகு...

கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஆகும் இந்தச் சிகிச்சை ஒரே நாளில் செய்து முடிக்கப்படுகிறது. இதில் 85-95% வெற்றி கிடைக்கிறது. 2-3 நாட்களில் தலைப்பகுதி காயங்கள் சரியானவுடன் மெல்லென குளிக்கலாம். அதன்பிறகு 3 மாதங்களில் நம்பமுடியாத வகையில் தலையில் சுத்தமாக முடி இல்லாதவர்களுக்கும்கூட முடி முளைக்க ஆரம்பிக்கும்.

அதிகரிக்கும் தன்னம்பிக்கை!

அவர் திருமண வயதில் உள்ள இளம் பெண். ரோட் ஆக்ஸிடென்டில் தலையின் ஒரு பகுதியில் உள்ள முடியுடன் கூடிய தோல் பகுதி சிராய்ந்து போனது. வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்த அந்தப் பெண்ணுக்கு ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் செய்தோம். இப்போது அவருக்குத் திருமணமாகிவிட்டது. தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்!

சமுதாய, உளவியல் ரீதியான, தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட, ஏன் பல சமயங்களில் மன அழுத்தத்தைத் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது தலைமுடி உதிர்வு. எனவேதான் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சையை அழகு சிகிச்சையாக மட்டும் பார்க்காமல், உளவியல் ரீதியான சிகிச்சையாக பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்!

 

https://www.vikatan.com/news/miscellaneous/hair-transplantation-at-gleneagles-global-health-city

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.