Jump to content

ஒரு நிமிட கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெரி வெரி குட்டி கிறுக்கல்
பிறந்து கிட்டதட்ட 18 மாதங்களுக்கு மேலாகி விட்டது .ஒன்றரை வருடம் என்று சொல்லலாம் .பிறந்தது சிவப்பு புரட்சி வெடித்த மண்ணில் என்ற‌ காரணத்தால்  சிவப்பு சித்தாத்தங்களை ஆறு மாதங்களில் நன்றாகவே மூளைச்சலவை செய்து கொண்டான் .தனது சித்தாந்தை உலகம் பூராவும் பரப்ப வேண்டும் குறுகிய காலத்தில் என்ற நல்லெண்ணத்தில் புரட்சிப்படையை உருவாக்கி பிறந்தமண்ணை தவிர்த்து  வெளிநாடுகளுக்கு பறந்தான்.
எல்லோருக்கும் தனது சித்தாந்தங்களை இன,மொழி,மதம் கடந்து சமதர்மத்துடன் பரப்பி சோசலிச பார்வையுடன் சிவப்பு வெள்ளத்தில் மூழ்கடித்தான்.வென்றது அவனது புரட்சி ..

China variant

UK variant

South Africa variant

Indian variant

போன்ற பல பல தேசிய நாடுகளை உருவாக்கி மறக்காமல் அருகில் வெரியன்ட்  என்ற புரட்சி அடையாளத்தையும் இட்டான்..தொடர்ந்து அவனது புரட்சி படை பல தேசியங்களை உருவாக்கி ஒரு குடைக்கு கீழ் கொண்டு வந்து சூரியன் உதிக்கும் தேசியங்களில் எல்லாம் எனது வெரியன்ட் புரட்சி இருக்கும் என அறிக்கை விட போகின்றான்.
மாகாணங்களிலும் தனது சித்தாத்தங்களை பரப்பி ஏழை எளியவர்களும் அறியும்படி செய்து மாகாண ,பிதேச சபைகளிலும் தனது கொடியை நாட்டுகிறான்.

 

Link to comment
Share on other sites

11 hours ago, putthan said:

.வென்றது அவனது புரட்சி ..

China variant

UK variant

South Africa variant

Indian variant

.

 

இவையின்ர குணாதிசயங்கள் ஆயுள் என்ன பலன் என்பதையும் சொல்லுங்கோ புத்தன் சாமி.

Link to comment
Share on other sites

On 24/4/2021 at 01:35, putthan said:

வெரி வெரி குட்டி கிறுக்கல்
பிறந்து கிட்டதட்ட 18 மாதங்களுக்கு மேலாகி விட்டது .ஒன்றரை வருடம் என்று சொல்லலாம் .பிறந்தது சிவப்பு புரட்சி வெடித்த மண்ணில் என்ற‌ காரணத்தால்  சிவப்பு சித்தாத்தங்களை ஆறு மாதங்களில் நன்றாகவே மூளைச்சலவை செய்து கொண்டான் .தனது சித்தாந்தை உலகம் பூராவும் பரப்ப வேண்டும் குறுகிய காலத்தில் என்ற நல்லெண்ணத்தில் புரட்சிப்படையை உருவாக்கி பிறந்தமண்ணை தவிர்த்து  வெளிநாடுகளுக்கு பறந்தான்.
எல்லோருக்கும் தனது சித்தாந்தங்களை இன,மொழி,மதம் கடந்து சமதர்மத்துடன் பரப்பி சோசலிச பார்வையுடன் சிவப்பு வெள்ளத்தில் மூழ்கடித்தான்.வென்றது அவனது புரட்சி ..

China variant

UK variant

South Africa variant

Indian variant

போன்ற பல பல தேசிய நாடுகளை உருவாக்கி மறக்காமல் அருகில் வெரியன்ட்  என்ற புரட்சி அடையாளத்தையும் இட்டான்..தொடர்ந்து அவனது புரட்சி படை பல தேசியங்களை உருவாக்கி ஒரு குடைக்கு கீழ் கொண்டு வந்து சூரியன் உதிக்கும் தேசியங்களில் எல்லாம் எனது வெரியன்ட் புரட்சி இருக்கும் என அறிக்கை விட போகின்றான்.
மாகாணங்களிலும் தனது சித்தாத்தங்களை பரப்பி ஏழை எளியவர்களும் அறியும்படி செய்து மாகாண ,பிதேச சபைகளிலும் தனது கொடியை நாட்டுகிறான்.

 

தற்கால நோய் பரவும் நிலைமையின் தீவிரம் கவலை அளிக்கிறது. அழகாய் விபரித்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் தம்மையும் சுற்றியுள்ளவர்களையும் சமூகப் பொறுப்போடு கவனித்துக் கொள்ளுவது அவசியமாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை வருட குட்டி பையன் என்றால் துள்ளி விளையாடத் தானே செய்வான்.

ஒதுங்கியிருந்து விளையாட்டைப் பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் மிகவும் துடுக்கானவனாக இருக்கிறான். அவனது துடிப்பு அடங்கும்வரை நாங்கள் அவதானமாய் இருப்பதுதான்  நல்லது......!  😢

நன்றி புத்ஸ்.....!

Link to comment
Share on other sites

On 24/4/2021 at 10:35, putthan said:

எல்லோருக்கும் தனது சித்தாந்தங்களை இன,மொழி,மதம் கடந்து சமதர்மத்துடன் பரப்பி சோசலிச பார்வையுடன் சிவப்பு வெள்ளத்தில் மூழ்கடித்தான்.வென்றது அவனது புரட்சி ..

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2021 at 22:02, shanthy said:

இவையின்ர குணாதிசயங்கள் ஆயுள் என்ன பலன் என்பதையும் சொல்லுங்கோ புத்தன் சாமி.

மக்கள் இந்த புரட்சிக்கு இயைபாக்கம் பெற்று....அதாவது சுயபாதுகாப்பு பெற்ற பின்பு இந்த புரட்சி தோல்வியடையும்

On 27/4/2021 at 11:42, தோழி said:

தற்கால நோய் பரவும் நிலைமையின் தீவிரம் கவலை அளிக்கிறது. அழகாய் விபரித்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் தம்மையும் சுற்றியுள்ளவர்களையும் சமூகப் பொறுப்போடு கவனித்துக் கொள்ளுவது அவசியமாகின்றது.

நன்றி தோழி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

On 27/4/2021 at 12:06, ஈழப்பிரியன் said:

ஒன்றரை வருட குட்டி பையன் என்றால் துள்ளி விளையாடத் தானே செய்வான்.

ஒதுங்கியிருந்து விளையாட்டைப் பாருங்கோ.

உண்மை தான் ஒன்றரை வயது சொல்லு கேட்கமாட்டான் ஒரே குழப்படி....அங்கே இங்கே என்று துள்ளி குதிச்சு கொண்டு திரிகின்றான் ....சீனா டொய்ஸ் ரொம்ப விரும்பி விளையாடுகிறான்

On 27/4/2021 at 17:17, suvy said:

அவன் மிகவும் துடுக்கானவனாக இருக்கிறான். அவனது துடிப்பு அடங்கும்வரை நாங்கள் அவதானமாய் இருப்பதுதான்  நல்லது......!  😢

நன்றி புத்ஸ்.....!

அடங்க மாட்டான் போல தெரியுது ....கு....டி நல்லா சூடு வைக்க வேணும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2021 at 17:17, suvy said:

அவன் மிகவும் துடுக்கானவனாக இருக்கிறான். அவனது துடிப்பு அடங்கும்வரை நாங்கள் அவதானமாய் இருப்பதுதான்  நல்லது......!  😢

நன்றி புத்ஸ்.....!

அடங்க மாட்டான் போல தெரியுது ....கு....டி நல்லா சூடு வைக்க வேணும்😀

On 27/4/2021 at 20:22, மல்லிகை வாசம் said:

👍

நன்றி மல்லிகை வாசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு குட்டிக் கதை, புத்தன்...!

கொரோனாவைக் கிருஷ்ண பகவானின், கலியுக அவதாரம் எண்டு கதைக்கிறாங்கள் உண்மை தானா?

தர்மம் நலிந்து அதர்மம் வளரும் போது நான் மீண்டும் வருவேன்...!

இப்படிக்கு....கிருஷ்ண பகவான்....!

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2021 at 09:25, புங்கையூரன் said:

நல்ல ஒரு குட்டிக் கதை, புத்தன்...!

கொரோனாவைக் கிருஷ்ண பகவானின், கலியுக அவதாரம் எண்டு கதைக்கிறாங்கள் உண்மை தானா?

தர்மம் நலிந்து அதர்மம் வளரும் போது நான் மீண்டும் வருவேன்...!

இப்படிக்கு....கிருஷ்ண பகவான்....!

 

இப்ப வந்திருப்பது கொரனாவா ? கிருஷ்ணரா?.....கிருஷ்ணர் என்று சொன்னால் சனம் பிறகு கொரானாவுக்கு கோவில் கட்ட வெளிக்கிடும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.