Jump to content

எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்


Recommended Posts

இதற்கான சரியான தமிழ் தெரியவில்லை. சூப்பர் உணவுகள் என்று தேடிப் பார்த்ததில் தமிழில் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

unavu1.jpg

ஐரோப்பாவில் goji, Acai, Cranberry, Chia, Linseed, Quinoa என்று சூப்பர் உணவுகளின் பெரிய பட்டியல் நீள்கிறது. இவை அதிகமாக சீனா, தென்னமெரிக்கா போன்ற தூர நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்றன. அண்மைக் காலமாக வியாபார ரீதியிலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களால் இந்த உணவுகளின் விற்பனை பெருகி வருகிறது.

இது நான் அறிந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். கவிதையின் பொருள் உணர்ந்து இரசிப்பதுபோல் உண்ணும் உணவில் என்னவெல்லாம் உண்டு என்று புரிந்து மகிழ்வோடு உண்பது மனரீதியாக உடலுக்கு நன்மையே தரும்.

 

சூப்பர் உணவு என்றால் என்ன ?

ஒவ்வொரு பழங்கள் காய்கறிகள் தானியங்கள் கிழங்குகளிலும் பலவிதமான விற்றமின்கள் தாதுப்புகள் புரதங்கள் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஆனால் சில உணவுகளில் தனித்தன்மையாக ஏதாவதொரு மூலக்கூறு ஆச்சரியமான முறையில் அதிகமாக இருக்கும். அல்லது பலவிதமான கிடைத்தற்கரிய மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும், எமக்குச் சில குறிப்பிட்ட மூலக்கூறுகள் தேவையாக இருக்கும்போது அல்லது குறைவாக இருக்கும்போது சூப்பர் உணவுகளை இனம்கண்டு எமக்குத் தேவையான வகையில் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சில நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை இயற்கையான இந்த உணவுகள் மூலம் உட்கொண்டால் மருந்துகளின் தேவையையும் குறைக்க முடியும்.

பெரும்பாலும் ஒரு உணவில் உள்ள Antioxidant (இதற்கும் தமிழ் தெரியாது) இன் அளவைப் பொறுத்து அது சூப்பர் உணவாகக் கருதப்படுகிறது.

 

Antioxidant என்றால் என்ன ?

ஊடலில் கோடிக்கணக்கான மூலக்கூறுகளுக்கிடையே தொடர்ச்சியாக இரசாயன செயற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறான மாற்றங்களின்போது எதோ காரணங்களுக்காக சில மூலக்கூறுகள் சரியான முறையில் பகுக்கப் படாமல் இலத்திரன் ஒன்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்படியாக விடுவிக்கப்படுகின்றன.

உதாரணமாக, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மூலக்கூறு ஒன்று சுவாசப்பை மூலம் உள்வாங்கப்பட்ட ஒட்சிசன் மூலக்கூறோடு சேர்ந்து நீர் மூலக்கூறாகவும் காபனீரொட்சைட்டாகவும் பிரிந்து உடலுக்குத் தேவையான சக்தியை வெளியிடும். ஏதோ காரணங்களுக்காக இந்த இரண்டும் சரியாகப் பகுக்கப்படாமல் ஒரு இலத்திரனை அதிகமாகப் பெற்றுக் கொண்ட மூலக்கூறொன்று வெளியாகிறது. இதை Free radicals என்று சொல்லப்படுகிறது. புகைத்தல் மாசுபட்ட காற்று போன்றவற்றாலும் இவ்வாறான மூலக்கூறுகள் உடலினுள் செல்லலாம்.

இந்த Free radicals மூலக்கூறுகள் கட்டுப்பாடிழந்து மூர்க்கத்தனமாக அருகிலுள்ள கலங்களைத் தாக்கும். இவ்வாறான தாக்குதலுக்குள்ளான தசை தோல் இதயம் போன்றவற்றிலுள்ள கலங்கள் சேதமாவதுடன் மரபணுக்களும் பாதிப்புள்ளாகும். இதுவே உடல் முதுமையடையவும் காரணமாகக் கூறப்படுகின்றது.

எமது உடல் தேவையற்ற இந்த Free radicals களை அழிக்க வேண்டும்.  அதற்காக எமது உடல் வேறு சில மூலக்கூறுகளைத் தேவையான இடங்களுக்கு அனுப்பிவைக்கிறது. இந்த மூலக்குறுகள் Antioxidant என்று அழழைக்கப் படுகின்றது. இவற்றின் பணி Free radicals  மூலக்கூறுகளை ஈர்த்து அழிப்பதாகும்.

Antioxidant மூலக்கூறுகள் தனித்துவமான அமைப்புடையவை அல்ல. Free radicals களை அழிக்கும் திறனுள்ள அனைத்தும் இந்த Antioxidant இனுள் அடங்கும்.

இதோ முக்கியமான சில Antioxidant மூலக்கூறுகள்

  • vitamin C
  • beta-carotene
  • vitamin A
  • selenium
  • vitamin E
  • zinc
  • flavonoids
  • copper

இன்னும் பல.  ஆர்வக் கோளாறில் மேல்குறிப்பிட்டவற்றை அளவுக்கதிகமாக உட்கொள்ளக் கூடாது. சில மூலக்கூறுகள் அளவுக்கதிகமானால் நச்சுத் தன்மையையானவை. வேறுசில புற்றொநோய் போன்றவற்றையும் ஊக்குவிக்கும்.

 

சூப்பர் உணவுகள் எவை ?

Antioxidant உணவுகளை மட்டுமல்லாது வேறு பல உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளும் இதனுள் அடங்கும். இவற்றை வெகு தூரத்தில் தேடாமல் எங்கள் ஊரிலும் சாராரணமாகக் கிடைக்கும் உணவுகளிலும் காணலாம். அவற்றை அறிவியல் ரீதியாக இனம்காண்பதே இத் திரியின் நோக்கம்.

பித்தத்தைப் போக்கும், சூட்டைக் குறைக்கும் புற்றுநோயைத் தீர்க்கும் என்பது போன்ற ஆதாரமில்லாத கருத்துக்களைத் தவிர்த்து உங்களுக்குத் தெரிந்த அறிவியல் ரீதியான தரவுகளை மட்டும் தாருங்கள்.

இவ்வாறான தரவுகளை நீங்கள் தேடிப் போகும்போதுதான் ஒரு உணவிலுள்ள உண்மையான ஆற்றலை அறிந்து கொள்ள முடியும். உணவுக் கூறுகளின் தரவுகள் தெரியாமல் அது குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் என்ற காரணத்தினால் அதனை உட்கொள்ளும்போது அதே உணவிலுள்ள வேறு கூறுகள் வேறு உபாதைகளைத் தரலாம்.

பல தமிழ் இணையத் தளங்களிலும் காணொலிகளிலும் பல போலியான தகவல்கள் பரந்து காணப்படுகின்றன. மருந்தே உணவு என்ற உன்னதமான கருத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பணம் சம்பாதிப்பதற்காகப் பரப்பப்படும் போலித் தகவல்கள் அகற்றப்பட வேண்டுமானால் உணவு பற்றிய அறிவியல் தகவல்களை நாம் நாட வேண்டும்.

இவை பற்றிய மேலதிகத் தெரிந்தவர்கள் தமது கருத்துக்களைப் பரிமாறலாம்.

ஒருசிலவற்றை ஆரம்பித்து வைக்கிறேன்.

***

 

நெல்லிக்காய்

unavu2.jpg

பலரும் தேசிக்காய் அல்லது தோடம்பழத்தில்தான் விற்றமின் சீ அதிகமாக உள்ளது என்று நம்புகின்றனர். மாற்றீடாக வேறு பல உணவுகள் உள்ளன. உதாரணமாக கறிமிளகாயில் தோடம்பழத்தை விட அதிகமாக உள்ளது. ஆனால் சமைக்கும்போது விற்றமின் சீ ஏறத்தாள 60% அழிந்துவிடும்.

100 கிராம் தோடம்பழத்தில் ஏறத்தாள 55 மில்லி கிராம் விற்றமின் உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 700 மில்லி கிராமுக்கு மேல் உள்ளது.

ஓரு நாளைக்கு ஒருவருக்கு 110 மில்லிகிராம் தேவைப்படும். ஏனைய உணவுகளிலிருந்தும் விற்றமின் சீ கிடைப்பதால் பாதி நெல்லிக்காய் ஒரு நாளைக்குப் போதுமானது.

அதிகமான விற்றமின் சீ உடலுக்கு ஆபத்தில்லை. விற்றமின் சீ உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லையாதலால் மிதமிஞ்சியது சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.

2016 இல் இந்தியாவில் உலர்த்திய நெல்லிக்காய் தூளை மிகச் சிறிய அளவில் கோழிகளுக்குக் கொடுத்து ஆராச்சி செய்யப்பட்டது. இதனை உண்ட கோழிகள் சாராதண கோழிகளை விட ஆரோக்கியமானவையாக வளர்ந்தன. அதனைத் தொடர்ந்து அண்மையில் சீனாவில் கோழிகளிலும் பின்னர் எலிகளிலும் பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. (https://fr.wikipedia.org/wiki/Amla)

 

மஞ்சள்

unavu3.jpg

இது எங்களுக்குக் கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற உணவு.

இந்தியாவில் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் பல காரணிகள் காணப்பட்ட போதிலும் அங்கு ஒப்பீட்டளவில் புற்றுநோய் குறைவாகவே காணப்படுகின்றது. ஒருவேளை இதற்கான காரணிகளில் மஞ்சள் பாவனையும் காரணமாகக் இருக்கலாம்.

மஞ்சள் குறிப்பாக 2 வகைகளில் செயலாற்றுகிறது.

  1. கட்டி, புற்றுநோய்க் கலங்கள் உருவாவதற்கு அவசியமானதாகக் கருதப்படும் ஒருவித புரதத்தின் தொகுப்பைத் தடுத்து புற்றுநோய்க் கலங்கள் உடலில் இருந்து விடுபட உதவும் நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது  இதன்மூலம் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து இறக்க நேரிடும். மஞ்சள் புற்றுநோயைக் குணப்படுத்தாவிடினும் அது புற்றுநோய்க் கலங்கள் பரவாமல் கட்டுப்படுத்துகிறது.
  2. பக்கவிளைவுகள் இல்லாமல் சிலவிதமான உட்காயங்களை ஆற்றுகிறது.

உலகம் முழுவதும் பரவலாக நடைபெற்ற ஆயிரக்கணக்கான ஆராச்சிகளில் மஞ்சளின் பயன்பாடு சிறந்த பெறுபேறுகளைத் தந்தாலும் மஞ்சள் பாவித்து ஒரு குறிப்பிட்ட நோயைக் குணமாக்கியதாக நிறுவப்படவில்லை.

மஞ்சளை உடல் இலகுவாக உள்வாங்காது என்பதால் மிளகுடன் சேர்த்து அளவோடு உண்ணலாம். அதிகமாக உட்கொண்டால் தகாத உபாதைகள் வரலாம்.

ஈரல் தொடர்பான நோயுள்ளவர்கள், சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியவர்கள், இரத்தத்தை இலகுவாக்கும் மருந்துகள் பாவிப்பவர்கள் கட்டாயம் மஞ்சளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதனைத் தவிர்க்கும்படி சொல்லப்படுகிறது.

மஞ்சள் கிருமிகளை அழிக்கும் என்ற தவறான கருத்து உலாவுகிறது. அப்படி அழிக்குமாக இருந்தால் மஞ்சளை உண்பவர்களின் வயிற்றில் சமிபாட்டுக்கு உதவும் பக்ரீரியாக்கள் அழிக்கப்பட்டு சமிபாடு குழப்பமடைந்து உடலுக்குச் சரியான ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் பலவிதமான நோய்க்கு உள்ளாக நேரிடும். சமீபத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக பலவிதமான ஆராச்சிகள் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றுகூட மஞ்சளால் கிருமிகளை அழிக்க முடியுமென நிரூபிக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

  • Like 8
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, இணையவன் said:

இது நான் அறிந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். கவிதையின் பொருள் உணர்ந்து இரசிப்பதுபோல் உண்ணும் உணவில் என்னவெல்லாம் உண்டு என்று புரிந்து மகிழ்வோடு உண்பது மனரீதியாக உடலுக்கு நன்மையே தரும்.

இணையவன்.... உணவுப் பொருட்களை தேடிப்  பிடித்து, 
அதன் பயன்களை அறியத் தந்தமைக்கும்,
பொருத்தமான... உவமானத்துடன் விளக்கியமைக்கும் நன்றி.  

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நல்ல பயனுள்ள தகவல். நன்றி இணையவன்

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2021 at 20:54, இணையவன் said:

ஒருசிலவற்றை ஆரம்பித்து வைக்கிறேன்

நான் சமீபத்தில் அறிந்த Acai Berry பற்றி சில தகவல்கள்..

7-E51-D94-B-36-E0-478-D-939-B-576-F169-B

Acai berry-  
Acai berryயிலும் அதிக Antioxidants உள்ளதாக அறியப்பட்டதால் Super  Food வகையில் ஒன்றாக சமீபகாலமாக இதன் பயன் பற்றி அதிகம் பேசப்படுகிறது.. 

Acai berryயின் பிறப்பிடம் அமேசன் காடுகளில் உள்ள Acai பனை மரங்கள்…Acai பனை மற்றும் berries Euterpe genus எனும் இனத்தைச் சேர்ந்தவை.  இவை பெரும்பாலும் அமேசன் சதுப்பு நிலங்களில் வளர்க்கப்படுகின்றன. அத்துடன் அங்குள்ள பழங்குடி பழங்குடியினரின் முக்கிய உணவாகவும் உள்ளது.

552-E5308-5536-48-A2-BB4-F-D1-A28-E101-D

மேலும் ஊட்டச்சத்து மிக்க இந்த பெர்ரிகள், அடர்ந்த சிவப்பு மற்றும் அடர்ந்த ஊதா நிறத்தை உடையவை. இனிப்பு சுவை மிகவும் குறைந்த இந்த பழத்தில் நார்ச்சத்து, புரதசத்து, கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மட்டுமல்லாது வைட்டமின்கள்:- வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி மற்றும் தாதுசத்துக்கள்:- கல்சியம், சோடியம்,பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்தும் உள்ளது

Acai berryயிலும் உள்ள மேற்கூறிய ஊடச்சத்துகளால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதய ஆரோக்கியத்திற்கு, இலகுவான சமீபாட்டு நடைமுறைக்கு, சரும ஆரோக்கியத்திற்கு என இதன் பயன்களை கூறிக்கொண்டு போகலாம்..

அதே போல, இதனை அதிகளவு உட்கொள்வதும் கூடாது. அத்துடன் வேறு ஏதாவது berry பழங்களிற்கு அலர்ஜி உள்ளவர்களும் இதை சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது.. அத்துடன் இங்கே அவுஸ்திரேலியா supermarkets பழங்களாக கண்டதில்லை, powder அல்லது pulp ஆகவே வாங்கலாம்.

இன்று எனது காலை உணவாக இந்த Acai berry frozen pulp, Strawberry, Blueberry மற்றும் பால் சேர்த்து செய்த milkshake 👇🏼

large.0F9C8330-7EB5-4206-87D6-B47AB38B540E.jpeg.04842f36dcc0a112cb2f2277307fde77.jpeg

https://en.m.wikipedia.org/wiki/Açaí_palm

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 7
Link to comment
Share on other sites

பகிர்விற்கு நன்றி பிரபா.

Acai விலை அதிகமாக இருப்பதால் போலியான உணவுகளும் உலாவுவதாகச் சொல்லப்படுகிறது. இதிலுள்ள Antioxidants தொடர்பான சில மாற்றுக் கருத்துக்களும் உள்ளன. 

Acai, Blueberry போன்றவை எங்கள் ஊர் நாவற்பழ வடிவில் இருப்பதால் அதிலும் அதிக Antioxidants இருக்கலாம் என்று தேடிக் கண்டுபிடித்துவிட்டேன். நாவற்பழம் Super Food வரிசையில் வராவிட்டாலும் இதன் தரவுகள் யாருக்காவது பயனுள்ளதாக இருக்கலாமென்பதால் இணைக்கிறேன். 

navel.jpg

Jambul Fruit - Nutritional value per 100 g 

Thiamine (B1)    (2%) 0.019 mg
Riboflavin (B2)    (1%) 0.009 mg
Niacin (B3)    (2%) 0.245 mg
Vitamin B6    (3%) 0.038 mg
Vitamin C    (14%) 11.85 mg
Trace metals    
Calcium    (1%) 11.65 mg
Iron    (11%) 1.41 mg
Magnesium    (10%) 35 mg
Phosphorus    (2%) 15.6 mg
Potassium    (1%) 55 mg
Sodium    (2%) 26.2 mg

மேலும் தகவல்களுக்கு :
https://www.netmeds.com/health-library/post/jamun-medicinal-uses-therapeutic-benefits-for-skin-diabetes-and-supplements

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அக்காய் பனை (palm) குடும்பமா? அப்படி என்றால் ஊரில் வளர்க்கலாமோ?💡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்பரி வாங்கியதற்கு பதிலாக இனி ஸ்ரோபெரி, புளுபெரி Acai berry தான்  வாங்கி சாப்பிட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2021 at 19:43, இணையவன் said:

. நாவற்பழம் Super Food வரிசையில் வராவிட்டாலும் இதன் தரவுகள் யாருக்காவது பயனுள்ளதாக இருக்கலாமென்பதால் இணைக்கிறேன்.

மிக்க நன்றி அண்ணா!!

நான் Acaiயை போட்டதால் எங்கள் ஊர் நாவற்பழம் பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.🙂

நீங்கள் கூறியது போல Acai அதிகவிலைதான்.. once in a blue moon விலையை குறைக்கும் பொழுது வாங்க நினைப்பதுண்டு.. அதே போல இவற்றின் பயன்களில் மென்மையான சருமம், உடல்நிறை குறைக்க உதவும் போன்ற சிலவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் பொதுவாக மற்றைய பழங்களை விட இனிப்பு சுவை மிக மிக குறைவு.. 

On 26/7/2021 at 20:18, goshan_che said:

இந்த அக்காய் பனை (palm) குடும்பமா? அப்படி என்றால் ஊரில் வளர்க்கலாமோ?💡

இவை பனை குடும்பத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் பெரும்பாலும் அமேசன் காடுகளை அண்டிய பிரதேசங்களில்தான் வளர்க்கப்படுகின்றன.. சதுப்பு நிலங்கள, floodplains ..இப்படியான இடங்கள். அத்துடன் இவை மரத்திலிருந்து ஆய்ந்து ஒன்றிரண்டு நாட்களுக்கு இலகுவில் பழுதாகிவிடுவதால் பழமாக ஏற்றுமதி செய்ய இயலாது என அறியமுடிந்தது.. 

அவுஸ்ரேலியாவில் இன்னமும் இவை வளர்க்கப்படவில்லை.. ஆனால் இவற்றின் விதைகள் online மூலம் வாங்கலாம், ஆனால் இணையவன் அண்ணா கூறியது போல அதன் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை🙂

17 hours ago, விளங்க நினைப்பவன் said:

கட்பரி வாங்கியதற்கு பதிலாக இனி ஸ்ரோபெரி, புளுபெரி Acai berry தான்  வாங்கி சாப்பிட வேண்டும்.

Blackberry, Raspberryயை மறந்துவிட்டீர்களே💁🏻‍♀️

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளு - Horse grams 

large.73A1D2CC-52CE-439A-84DE-82955DE2D8B7.jpeg.f48a1d5be970542a16a957f1313ad600.jpeg

இன்று எங்களிடையே பயறு, உழுந்து, குரக்கன், கெளபீ போன்றவை அதிகம் பரீட்சயமானளவிற்கு சாமை, வரகு, கொள்ளு போன்றவற்றின் பயன்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை எனலாம். அதனாலேயோ என்னவோ தெரியவில்லை இவற்றின் உற்பத்தியும் இலங்கையில் குறைவடைகிறதோ என அங்கே போகும் சமயங்களில் நினைப்பதுண்டு..நான் கூட இவற்றில் அதிகளவு அக்கறை எடுக்க தொடங்கியது fitness வகுப்பில் இணைந்த பொழுதுதான்.. 

இந்த தானியங்களின் பயன்களை அறிய தொடங்கினால் பின் இவற்றினை இலகுவில் விடமாட்டோம் என்பதால் இங்கே அதிகம் வரவேற்க்கப்படாத ஆனால் சத்து நிறைந்த கொள்ளு எனும் தானியவகையைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்…

இவை இலங்கை இந்திய போன்ற வெப்பம் கூடிய நாடுகளில் பயிரிடக்கூடியவை என்பதால் இதனால் இரு வழியில் (உற்பத்தி மற்றும் சத்து நிறைந்த உணவு) பயன் பெறலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்…

இந்த சிறிய இயற்கை விதை சில அற்புதமான நன்மைகளை வழங்குகிறது, முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தும் உள்ளது. கொள்ளு, கார்போஹைட்ரேட் மற்றும் புரத உள்ளடக்கத்தில் அதிக அளவில் இருந்தாலும் கூட, இரும்பு, மாலிப்டினம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய  தாதுக்களிலும் நிறைந்துள்ளது. இவை உகந்த ஆற்றல், தசை வலிமை, ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்த சிவப்பணு தொகுப்பு மற்றும் வலுவூட்டப்பட்ட எலும்புகளை உறுதி செய்கின்றன. மேலும், இது உயிரணுக்களின் இயல்பான வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு(Metabolism) உத்தரவாதம் அளிக்கும் பிவைட்டமின்களின் போதுமான அளவு வழங்குகிறது.

100 gm of horse gram contain:
Protein    22 gm
Mineral    3 gm
Fiber    5 gm
Carbohydrates    57 gm
Iron    7 mg
Calcium    287 mg
Phosphorus    311 mg

மேலும் நிறுவப்பட்ட மருத்துவ அறிவியலின் படி, free radicals ஏற்படும் oxidative சேதமானது  பல இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது.
இருப்பினும், மனித உடலுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் antioxidants மூலம் இந்த சேதத்தை குறைக்கும் திறன் உள்ளது,  குறிப்பாக raw horse gramsல் polyphenols, flavonoids மற்றும் புரதங்கள் போன்ற முக்கிய antioxidants நிறைந்துள்ளது. இது கொழுப்பு குறைவாகவும் இருப்பதால், இதயம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

அதேபோல, மற்ற பருப்பு வகைகளைப் போலவே, இதில் குறிப்பாக புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இவை இரண்டும் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பேணவும் உதவுகிறது.

இரத்த சிவப்பணுக்கள் ஓக்ஸியனை உடலிற்கு கொண்டு செல்ல இரும்புசத்து உதவுகிறது, அதே நேரத்தில் வைட்டமின் சி நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இதற்கிடையில், பொஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களின் ஒரு முக்கிய அங்கமாகும் மற்றும் ஆற்றல் உற்பத்தி மற்றும் தசை செயல்பாட்டிற்கு அவசியம்

ஆனாலும் இவ்வளவு பயன்களை தரும் இந்த கொள்ளு பிரச்சனைகளையும் தரக்கூடிய ஒரு தானியம் என்பதால் ஒவ்வொரு நாளும் உணவில் சேர்க்காமல் வாரத்தில் ஒரு நாள்  அல்லது இரண்டு நாட்கள் இதனை பயன்படுத்தினால் அதிக பயன்களை பெறலாம்..

சரி அப்படி என்னதான் இந்த கொள்ளு பிரச்சனையை தரக்கூடும் என பார்க்கலாம்.. 

-இந்த கொள்ளு போன்ற தானியங்களில்  ஃபைடிக் அமிலம் உள்ளது, இது ஒரு ஊட்டச்சத்து எதிர்ப்பு அமிலம் -அதாவது இது உங்கள் உடல் அனைத்து ஊட்டச்சத்து நன்மைகளையும் உறிஞ்சுவதை தடுக்கலாம். ஆனால் இந்த கொள்ளு விதைகளை ஊறவைத்து, முளை கட்டவைத்து அல்லது புளிக்க/நெதிக்க வைத்து சமைத்தால், பைடிக் அமில உள்ளடக்கத்தை 80-90% குறைக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

- கீல்வாதத்தால் பாதிக்கப்படும்போது கொள்ளு மற்றும் பிற பருப்பு வகைகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் யூரிக் அமில அளவு மூட்டுகளைச் சுற்றி ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில் கொள்ளு மற்றும் பருப்பு வகைகள் அமிலத்தன்மையை அதிகரிக்க பங்களிக்கும்.

- அதிக அளவில் சாப்பிடும் போது உடல் வெப்பத்தை பெரிதும் அதிகரிக்கும் என்பதால் மிதமாக சாப்பிடவேண்டும். கர்ப்பினி பெண்களும் இதை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.. 

- நீங்கள் ஆயுர்வேத மருந்துக்களை உட்கொண்டால் கொள்ளு போன்ற தானிய வகை அடிப்படையிலான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளாதீர்கள்.

- கொள்ளு ரஃபினோஸ் ஒலிகோசாக்கரைடுகள் எனப்படும் குறிப்பிட்ட வகை கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது, இது செரிமானத்தின் போது வாயுத்தொல்லை ஏற்படுத்தும், குறிப்பாக அதிக அளவில் சாப்பிடும்போது. 

- அரிதான சந்தர்ப்பங்களில், ஒவ்வாமை எதிர்வினைகள் பதிவாகியுள்ளன


உடல் நிறையை பேணுவதற்கும் இந்த கொள்ளு உதவுகிறது என்பதால் நான் தோசை சுடும் பொழுது, கோதுமை மாவோ, வெள்ளை பச்சைஅரிசியோ, ரவையோ சேர்க்காமல் உழுந்துடன், வரகு/சாமை/ராகி அல்லது இந்த கொள்ளு போட்டே செய்வது வழமையாகிவிட்டது…அதே போல முளைகட்டிய தானியங்களை சலாட்டில் சேர்ப்பதும் வழக்கமாகிவிட்டது…

812-F8-B78-BAD4-4-BA9-B793-519-A4-C9-A6-


https://www.healthline.com/nutrition/horse-gram-for-weight-loss#potential-side-effects

https://m.netmeds.com/health-library/post/horse-gram-super-food-way

https://isha.sadhguru.org/us/en/blog/article/horse-gram-benefits-nutrition-recipes

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்று எங்களிடையே பயறு, உழுந்து, குரக்கன், கெளபீ போன்றவை அதிகம் பரீட்சயமானளவிற்கு சாமை, வரகு, கொள்ளு போன்றவற்றின் பயன்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை எனலாம்.

சாமை வரகு கொள்ளு, கெளபீ இப்போது தான் தெரிந்து கொள்கிறேன்
எனக்கு கொண்டகடலை couscous தான் நல்லது 😄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

சாமை வரகு கொள்ளு, கெளபீ இப்போது தான் தெரிந்து கொள்கிறேன்
எனக்கு கொண்டகடலை couscous தான் நல்லது 😄

 

சாமை வரகு கொள்ளு எல்லாம் பண்டைத்தமிழர் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டது.
இதையே இப்போதுதான் தெரிந்து கொள்கிறீர்கள் என்றால்.......:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கொள்ளு - Horse grams 

large.73A1D2CC-52CE-439A-84DE-82955DE2D8B7.jpeg.f48a1d5be970542a16a957f1313ad600.jpeg

இன்று எங்களிடையே பயறு, உழுந்து, குரக்கன், கெளபீ போன்றவை அதிகம் பரீட்சயமானளவிற்கு சாமை, வரகு, கொள்ளு போன்றவற்றின் பயன்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை எனலாம். அதனாலேயோ என்னவோ தெரியவில்லை இவற்றின் உற்பத்தியும் இலங்கையில் குறைவடைகிறதோ என அங்கே போகும் சமயங்களில் நினைப்பதுண்டு..நான் கூட இவற்றில் அதிகளவு அக்கறை எடுக்க தொடங்கியது fitness வகுப்பில் இணைந்த பொழுதுதான்.. 

இந்த தானியங்களின் பயன்களை அறிய தொடங்கினால் பின் இவற்றினை இலகுவில் விடமாட்டோம் என்பதால் இங்கே அதிகம் வரவேற்க்கப்படாத ஆனால் சத்து நிறைந்த கொள்ளு எனும் தானியவகையைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்…

இவை இலங்கை இந்திய போன்ற வெப்பம் கூடிய நாடுகளில் பயிரிடக்கூடியவை என்பதால் இதனால் இரு வழியில் (உற்பத்தி மற்றும் சத்து நிறைந்த உணவு) பயன் பெறலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்…

இந்த சிறிய இயற்கை விதை சில அற்புதமான நன்மைகளை வழங்குகிறது, முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தும் உள்ளது. கொள்ளு, கார்போஹைட்ரேட் மற்றும் புரத உள்ளடக்கத்தில் அதிக அளவில் இருந்தாலும் கூட, இரும்பு, மாலிப்டினம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய  தாதுக்களிலும் நிறைந்துள்ளது. இவை உகந்த ஆற்றல், தசை வலிமை, ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்த சிவப்பணு தொகுப்பு மற்றும் வலுவூட்டப்பட்ட எலும்புகளை உறுதி செய்கின்றன. மேலும், இது உயிரணுக்களின் இயல்பான வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு(Metabolism) உத்தரவாதம் அளிக்கும் பிவைட்டமின்களின் போதுமான அளவு வழங்குகிறது.

100 gm of horse gram contain:
Protein    22 gm
Mineral    3 gm
Fiber    5 gm
Carbohydrates    57 gm
Iron    7 mg
Calcium    287 mg
Phosphorus    311 mg

மேலும் நிறுவப்பட்ட மருத்துவ அறிவியலின் படி, free radicals ஏற்படும் oxidative சேதமானது  பல இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது.
இருப்பினும், மனித உடலுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் antioxidants மூலம் இந்த சேதத்தை குறைக்கும் திறன் உள்ளது,  குறிப்பாக raw horse gramsல் polyphenols, flavonoids மற்றும் புரதங்கள் போன்ற முக்கிய antioxidants நிறைந்துள்ளது. இது கொழுப்பு குறைவாகவும் இருப்பதால், இதயம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

அதேபோல, மற்ற பருப்பு வகைகளைப் போலவே, இதில் குறிப்பாக புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இவை இரண்டும் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பேணவும் உதவுகிறது.

இரத்த சிவப்பணுக்கள் ஓக்ஸியனை உடலிற்கு கொண்டு செல்ல இரும்புசத்து உதவுகிறது, அதே நேரத்தில் வைட்டமின் சி நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இதற்கிடையில், பொஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களின் ஒரு முக்கிய அங்கமாகும் மற்றும் ஆற்றல் உற்பத்தி மற்றும் தசை செயல்பாட்டிற்கு அவசியம்

ஆனாலும் இவ்வளவு பயன்களை தரும் இந்த கொள்ளு பிரச்சனைகளையும் தரக்கூடிய ஒரு தானியம் என்பதால் ஒவ்வொரு நாளும் உணவில் சேர்க்காமல் வாரத்தில் ஒரு நாள்  அல்லது இரண்டு நாட்கள் இதனை பயன்படுத்தினால் அதிக பயன்களை பெறலாம்..

சரி அப்படி என்னதான் இந்த கொள்ளு பிரச்சனையை தரக்கூடும் என பார்க்கலாம்.. 

-இந்த கொள்ளு போன்ற தானியங்களில்  ஃபைடிக் அமிலம் உள்ளது, இது ஒரு ஊட்டச்சத்து எதிர்ப்பு அமிலம் -அதாவது இது உங்கள் உடல் அனைத்து ஊட்டச்சத்து நன்மைகளையும் உறிஞ்சுவதை தடுக்கலாம். ஆனால் இந்த கொள்ளு விதைகளை ஊறவைத்து, முளை கட்டவைத்து அல்லது புளிக்க/நெதிக்க வைத்து சமைத்தால், பைடிக் அமில உள்ளடக்கத்தை 80-90% குறைக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

- கீல்வாதத்தால் பாதிக்கப்படும்போது கொள்ளு மற்றும் பிற பருப்பு வகைகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் யூரிக் அமில அளவு மூட்டுகளைச் சுற்றி ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில் கொள்ளு மற்றும் பருப்பு வகைகள் அமிலத்தன்மையை அதிகரிக்க பங்களிக்கும்.

- அதிக அளவில் சாப்பிடும் போது உடல் வெப்பத்தை பெரிதும் அதிகரிக்கும் என்பதால் மிதமாக சாப்பிடவேண்டும். கர்ப்பினி பெண்களும் இதை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.. 

- நீங்கள் ஆயுர்வேத மருந்துக்களை உட்கொண்டால் கொள்ளு போன்ற தானிய வகை அடிப்படையிலான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளாதீர்கள்.

- கொள்ளு ரஃபினோஸ் ஒலிகோசாக்கரைடுகள் எனப்படும் குறிப்பிட்ட வகை கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது, இது செரிமானத்தின் போது வாயுத்தொல்லை ஏற்படுத்தும், குறிப்பாக அதிக அளவில் சாப்பிடும்போது. 

- அரிதான சந்தர்ப்பங்களில், ஒவ்வாமை எதிர்வினைகள் பதிவாகியுள்ளன


உடல் நிறையை பேணுவதற்கும் இந்த கொள்ளு உதவுகிறது என்பதால் நான் தோசை சுடும் பொழுது, கோதுமை மாவோ, வெள்ளை பச்சைஅரிசியோ, ரவையோ சேர்க்காமல் உழுந்துடன், வரகு/சாமை/ராகி அல்லது இந்த கொள்ளு போட்டே செய்வது வழமையாகிவிட்டது…அதே போல முளைகட்டிய தானியங்களை சலாட்டில் சேர்ப்பதும் வழக்கமாகிவிட்டது…

812-F8-B78-BAD4-4-BA9-B793-519-A4-C9-A6-


https://www.healthline.com/nutrition/horse-gram-for-weight-loss#potential-side-effects

https://m.netmeds.com/health-library/post/horse-gram-super-food-way

https://isha.sadhguru.org/us/en/blog/article/horse-gram-benefits-nutrition-recipes

நானும் சிறு தானியங்களில்  தோசை ,ரொட்டி சுட்டு சாப்பிட்டு இருக்கேன் ...கொள்ளை வறுத்து அரைத்து[அரிசி மா மாதிரி அரைபடாது] அரிசி மாவோடு  சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன் 

ஊரில் இருக்கும் போது சிறு தானியங்களை பற்றி புத்தகத்தில் தான் படித்து உள்ளேன் ...இங்கே வந்து தான் சாப்பிடத் தொடங்கினேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

சாமை வரகு கொள்ளு, கெளபீ இப்போது தான் தெரிந்து கொள்கிறேன்
எனக்கு கொண்டகடலை couscous தான் நல்லது 😄

 

3 hours ago, ரதி said:

நானும் சிறு தானியங்களில்  தோசை ,ரொட்டி சுட்டு சாப்பிட்டு இருக்கேன் ...கொள்ளை வறுத்து அரைத்து[அரிசி மா மாதிரி அரைபடாது] அரிசி மாவோடு  சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன் 

ஊரில் இருக்கும் போது சிறு தானியங்களை பற்றி புத்தகத்தில் தான் படித்து உள்ளேன் ...இங்கே வந்து தான் சாப்பிடத் தொடங்கினேன் 
 

நான் கூட இவற்றை சிறு வயதில் படித்தது மட்டுமே அதுவும் கவனத்தில் இருந்து மறைந்துவிட்டது.. அதே போல சிறுவயதில் குரக்கன், ஒடியல் உழுத்தம்மா புட்டு என்பவற்றை விரும்பி சாப்பிட்டதில்லை, ஆனால் சாப்பிட்டே ஆகவேண்டும்..

பின்பு இவற்றின் பயன்பற்றி விளங்கி அவற்றை தேட தொடங்கியதாலேயே இந்த மாதிரி செய்ய முடிகிறது, தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.. அதே போல இதைப்பற்றி மேலும் பல விஷயங்கள் தெரிந்தவர்களும் அவர்களுக்கு தெரிந்ததை பகிர்ந்துகொண்டால் அதிலிருந்து மற்றவர்களும் பயன் அடைவார்கள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

கெளபீ இப்போது தான் தெரிந்து கொள்கிறேன்

 

58 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் கூட இவற்றை சிறு வயதில் படித்தது மட்டுமே அதுவும் கவனத்தில் இருந்து மறைந்துவிட்டது..

சாமை வரகு தினை என்பதை நேரடியாக நானும் பார்த்ததேயில்லை.

 அது எப்படி நீங்கள் இருவரும் கெளபியை மறந்திருக்கலாம்?😝 

ஆக குறைந்தது ஒவ்வொரு சரஸ்வதி பூசை வரும்போதாவது மனசில் அது நின்றே ஆகுமே..

நானெல்லாம் அப்போ... ரியூசன், பள்ளிக்கூடத்தில் 

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரை..

என்று ஆரம்பித்து 

கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே...

  என்று  முடிக்கும்வரை ..

இதெல்லாம்  எப்போ பாடி முடிப்பாங்க என்ற கவலையில் தேங்காய் சொட்டு, சின்ன சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிச்ச கெளபி மீதுதான் ஒரு கண் இருந்துகிட்டே இருக்கும்,

ஊரில குறைஞ்ச விலையில் அதி உச்ச புரதம் நிறைந்த உணவு கெளபி என்று சொல்வார்கள்..

ஆனால் ஊரில் இருந்த காலத்தில் பார்த்த கெளபி எல்லாம் ஒரே பூச்சி புழு  குடைஞ்சு ஒருபக்கம் ஓட்டையான  ’உயிர்சத்து’ நிறைந்த தரமற்ற  அந்த அவரை வகைதான்.

வெளிநாட்டுகளில் மிகவும் தரமானதுதான் கடைகளில் கிடைக்கிறது, ஏற்றுமதியென்றால் எப்போதுமே உயர்தரம்.

Kacang Merah 500g - Farm Fresh Fruits and Vegetables Malaysia

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, valavan said:

அது எப்படி நீங்கள் இருவரும் கெளபியை மறந்திருக்கலாம்

நான் கூறியது, சாமை, கொள்ளு மற்றும் வரகரிசி போன்றவற்றை.. மற்றபடி நீங்கள் கூறுவதைப்போலத்தான்.. நவராத்திரி நேரங்களில் அவல் உடன் கெளபீ அல்லது கடலை இருக்கும்

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.