Jump to content

முதுகுத் தண்டுக்குள் கேமரா; நூலிழைத் துல்லியத்தில் சிகிச்சை! - Dr. S. கருணாகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதுகுத் தண்டுக்குள் கேமரா; நூலிழைத் துல்லியத்தில் சிகிச்சை! - Dr. S. கருணாகரன்

சிகிச்சை

சிகிச்சை

மருத்துவர், நுண் கருவிகளின் துணைகொண்டு, பாதிப்படைந்த நரம்பு/சவ்வைச் சரி செய்கிறார். அப்போது முதுகில் உள்ள திசுக்களோ, எலும்புகளோ, நரம்புகளோ தொடப்படுவதில்லை. இதனால் வழக்கமான அறுவை சிகிச்சையின்போது ஏற்படுகின்ற நரம்புப் பாதிப்புப் பிரச்னை இல்லை.

அவர் ஒரு பிளம்பர். வேலை செய்யும்போது, இறுகி இருந்த பைப் ஒன்றைத் தன் முழு சக்தி கொண்டு இழுக்கிறார். அவ்வளவுதான், இடுப்புக்குக் கீழே ஆசனவாய்ப் பகுதியில் இருந்த உணர்வு முழுதும் செயலிழந்து அப்படியே கீழே சரிந்துபோகிறார். உடனடியாக கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டவரைப் பரிசோதிக்கையில், அவருக்கு 'காடா ஈக்வினா' (Cauda Equina) எனும் முதுகுத்தண்டு நரம்பு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவோர் எமர்ஜென்சி, 6 மணி நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ் - இப்போது மேலுமொரு சிக்கல். அவரையும் காப்பாற்றி, மெடிக்கல் டீமுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க எண்டோஸ்கோப்பி எனப்படும் நுண்துளை கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஜெனரல் அனஸ்தீஸியா கொடுக்க முடியாத இந்தப் பேஷண்டுக்கு லோக்கல் அனஸ்தீஸியா (பாதிக்கப்பட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து) கொடுத்து ஆபரேஷன் செய்யப்பட்டது. அடுத்த 6 மணி நேரத்தில் இக்கட்டான நிலையிலிருந்து மீண்ட நோயாளி இப்போது நலமாக உள்ளார்.

முதுகுத்தண்டு எனும் ஹை வே...

எண்டோஸ்கோப் எனப்படும் நுண்துளை சிகிச்சைகள் இன்று அனைத்து வகை ஆபரேஷன்களையும் சுலபமாக்கிவிட்டன. உடலின் முக்கிய பாகமான முதுகுத் தண்டில் ஏற்படும் பிரச்னைகளைக் களைய 'அட்வான்ஸ்டு எண்டோஸ்கோப்பிக் ஸ்பைன் சென்டரைத்' (Advanced Endoscopic Spine Center) துவக்கியுள்ளது கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி. இதன் சிறப்புகள் பற்றி அறியும் முன், முதலில் முதுகுத் தண்டு பற்றி அறிவோம்...

சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள், ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட சங்கிலிதான் முதுகெலும்பு. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக் அப்சர்பர்’ போன்ற அமைப்பு இது.

இந்த முதுகெலும்புத் தொடருக்கு ஊடாக மிகவும் பாதுகாப்பான நிலையில் ஓடுகின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளைக் கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்பவை இவை. முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இதுதவிர, டிஸ்க் தேய்தல், எலும்பு தேய்தல், நரம்பில் கட்டி, தசை வலுக்குறைவு, இறுக்கமான தசைகள் - இவற்றாலும் வலி ஏற்படுகிறது. சிறுநீரகம், பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகளில் இருக்கும் பிரச்னையின் எதிரொலியாகவும் வலி வர வாய்ப்புண்டு.

சில முதுகு வலி கால்களுக்கும், கழுத்து வலி கைகளுக்கும் பரவும். இடது பக்கம் வலித்தால் இதய நோயாக இருக்க வாய்ப்புண்டு. அப்படியில்லை என்று சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால், அது டிஸ்க் ரிலேட்டட் பிரச்னையாகும்.

ஏன் முதுகுத் தண்டு பாதிக்கப்படுகிறது?

* உடற்பயிற்சியின்மை

* தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பே அமர்ந்திருத்தல்.

* தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணம்.

* அதிக உடல் எடை

* கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல்

* உடல் தசைகள் பலவீனமடைதல்

* முதுகெலும்பு டிஸ்க்குகளில் அதீத அழுத்தம் & தேய்மானம்

* முதுமை

* விபத்துகள்

* எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவு

முதுகுத் தண்டுக்குள் கேமரா; நூலிழைத் துல்லியத்தில் சிகிச்சை! - Dr. S. கருணாகரன்
 
 

என்ன செய்கிறது எண்டோஸ்கோப்பி?

முதலில் கை கால் தசைகளை அசைக்கச் சொல்லி எங்கே வலி உள்ளது என்பதை அறிகிறோம். பிறகு எக்ஸ்ரே எடுக்கப்படும், மேலும் MRI ஸ்கேன் மூலம் நரம்புகளில் அழுத்தம், மரத்துப்போதல் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்கிறோம், இதுமட்டுமல்லாது நோயாளி என்ன உணர்கிறார் என்பதையும் அறிய வேண்டும். இந்த மூன்றையும் கொண்டு ட்ரீட்மென்ட் தீர்மானிக்கப்படுகிறது.

முதுகில் சிறு துளையிட்டு, அதன் வழியாக எண்டோஸ்கோப்பி கருவி நுழைக்கப்படுகிறது. அதன் உள்முனையில் கேமரா, லைட், நுண் அறுவைக் கருவிகள் இருக்கும். கருவியில் உள்ள லென்ஸ் முதுகெலும்பின் உள் அமைப்பைப் பல மடங்குப் பெரிதுபடுத்திக் காண்பிப்பதால் அடிப்படைக் கோளாறு தெளிவாகத் தெரிகிறது. மருத்துவர், நுண் கருவிகளின் துணைகொண்டு, பாதிப்படைந்த நரம்பு/சவ்வைச் சரி செய்கிறார். அப்போது முதுகில் உள்ள திசுக்களோ, எலும்புகளோ, நரம்புகளோ தொடப்படுவதில்லை. இதனால் வழக்கமான அறுவை சிகிச்சையின்போது ஏற்படுகின்ற நரம்புப் பாதிப்புப் பிரச்னை இல்லை. எலும்புத் தேய்மானம், கூன் விழுதல், பிறவியிலேயே முதுகெலும்பு வளைதல் போன்றவற்றுக்கும் இந்தச் சிகிச்சை நல்ல பலன் தருகிறது.

எண்டோஸ்கோப்பி பயன்கள்:

* ரத்த இழப்பு இல்லை.

* வலியில்லை.

* நோயாளிகள் அதிக காலம் மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை.

* அதிக நாள்களுக்கு ஓய்வு தேவையில்லை

* வழக்கமான பணிகளைச் சில நாட்களில் தொடரலாம்.

* நாட்பட்ட வலிகளுக்கும் தீர்வு.

குளோபல்-ன் 'அட்வான்ஸ்டு எண்டோஸ்கோப்பிக் ஸ்பைன் சென்டர்'

16 வருடங்களுக்கு முன்னரே கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் எண்டோஸ்கோப் சிகிச்சை வழங்க ஆரம்பித்துவிட்டோம். இப்போது மேலும் நவீனமயமாக்கப்பட்ட அட்வான்ஸ்டு எண்டோஸ்கோப்பிக் ஸ்பைன் சென்டர் மூலம் அனுபவம் வாய்ந்த எண்டோஸ்கோப் சர்ஜியன்களின் துணையைப் பெற முடியும்.

குளோபல் ஹெல்த் சிட்டியில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இருப்பதால், நோயாளிக்கு எந்தச் சிகிச்சை தேவை என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள். மேலும் எண்டோஸ்கோப் அறுவை சிகிச்சை செய்வதற்கு தகுந்த பயிற்சி பெற்றிருத்தல் மிக அவசியம், இது இங்கிருக்கும் மருத்துவர்களின் பெரிய பிளஸ்.

மேல், நடு மற்றும் கீழ் முதுகுத் தண்டின் டிஸ்க் பாதிப்புகள் அனைத்தையும் துல்லியமாக எண்டோஸ்கோப் மூலம் சரி செய்கிறோம். ஸ்பைனல் ஸ்டீனோசிஸ் (Spinal Stenosis) பிரச்னை இருந்தால் முதுகுத் தண்டுக்குள் இருக்கும் நரம்புகளின் இடைவெளி இறுக்கமாகிக்கொண்டே இருக்கும். இந்தப் பாதிப்பு இருப்பவர்கள் நடக்கவே முடியாமல் சோர்ந்துவிடுவார்கள். இதையும் மூட்டுத் தேய்மானத்தையும் கூட எண்டோஸ்கோப் துணையுடன் சரி செய்ய முடியும். டிஸ்க் ப்ரொலாப்ஸ், கெனால் ஸ்டீனோசிஸ் சிகிச்சைகள், ஃபேசட் ஜாயின்ட்ஸ் எனப்படும் முதுகுத்தண்டு மூட்டுகளில் ஏற்படும் ஆர்த்தரைட்டிஸ் வலியைச் சரி செய்ய ரேடியோ ஃப்ரீக்வென்ஸி அப்லேஷன் உள்ளிட்ட செயல்முறைகள் இங்கு சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

 

https://www.vikatan.com/news/miscellaneous/advanced-endoscopic-spine-center-launched-at-gleneagles-global-health-city

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.