Jump to content

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நிழலி said:

இது ஒரு கடைந்தெடுத்த இனவாத நடவடிக்கை. அதள பாதாளத்தில் செல்லும் தங்கள் இமேஜ் இனை தூக்கி நிறுத்தவும் கொழும்பு துறைமுக நகரம் மீதான சீனாவின் அதிகாரம் தொடர்பான எதிர்ப்புகளை சமாளிக்கவும் மகிந்த சகோதரர்களுக்கு இருக்கும் ஒரே வழி இப்படியான இனவாத நடவடிக்கைகள் மூலம் சிங்கள மக்களை திசை திருப்புதம் மட்டுமே.

வஹாபிசம் வளர்வதையும், கிழக்கு முஸ்லிம் பகுதிகளில் மத அடிப்படைவாதம் வளர்வதையும் ஊக்குவித்ததே இவர்கள் தான். சிங்களம் பலியாடை வளத்து விட்டு இன்று பலி கொடுக்கின்றது. காணி அபகரிப்பு, பெளத்த மயமாக்கல். புலிகள் மீள முனைகின்றனர் என்று சொல்லிச் செய்யும் கைதுகள் போன்ற தமிழர்கள் மீதான நிறுவனப்படுத்தப்பட்ட இனவாதச் செயல்கள் ஒரு புறம், ஜனாசா எரிப்பு, புர்கா தடை, போன்ற செயல்கள் மூலம் முஸ்லிம்கள் மீதான நடவடிக்கை மறுபுறம். 
 

ஜெயபாலனின் கேள்வியில் நியாயம் இருக்கின்றது. ஒன்றில் இந்த கம்பஸை அரசே பொறுபேற்று நடாத்தியிருக்க வேண்டும், அல்லது கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைத்து இருக்க வேண்டும். ஆனால் இவை இரண்டில் எதைச் செய்தாலும் கிழக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும். எனவே அதை இராணுவ கல்லூரியுடன் இணைக்கின்றனர். 

இலங்கை அரசினை நடத்துபவர்கள், இனவாதிகளாக இருப்பதால், உங்கள் பார்வையில் தவறில்லை.

இன்னமும், ஒரு முக்கியமான இஸ்லாமிய அமைப்புகளையோ, அரசியல்வாதிகளோ இதுக்கு எதிராக குரல் கொடுத்ததாக தெரியவில்லையே.

மத மாறுவது வேறு. மாத்துவது வேறு. முதலாவது தனிமனித உரிமை. இரண்டாவது தவறு. அவ்வாறு செய்து, வேறு மதத்தவரை கொலை செய்ய வைப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

இந்த கிழக்கு பல்கலைக்கழகம், ஒரு ஜிகாதிகளை உருவாக்கி இருக்கக்கூடிய ஒரு அமைப்பு என்பதே சிங்களவர் மத்தியில் சொல்லப்படுவது.

நான் அதனை ஏற்றுக் கொள்ளாவிடினும், அந்த கட்டிடம், அமைவதுக்கு நிதி வந்தது சவுதியில் இருந்து என்பதும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெறாமல், அரசியல் செல்வாக்கு மூலம், அமைத்துக் கொள்ளப்பட்டது என்பதன் காரணமாக அதனை பல்கலைக்கழகம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. 

இதனை அனுமதித்தால், நாளை ஒரு கொட்டிலை கட்டி, பல்கலைக்கழகம் என்பார்கள், டாக்டர் பட்டமும் கொடுப்பார்கள். 

நோக்கம் தவறானது என்பதால், அதனை அரசு எடுத்ததில் பிழை இல்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பிற்கு சோசல் மீடியா மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. சோசல் மீடியாவை இலங்கை அரசின் அமைச்சரவை எப்போது தடை செய்யப்போகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பிற்கு சோசல் மீடியா மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. சோசல் மீடியாவை இலங்கை அரசின் அமைச்சரவை எப்போது தடை செய்யப்போகின்றது?

இலங்கையின் சமூக பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு சோசல் மீடியா தடையாக இருக்குமானால் அதனை எப்போது வேண்டுமானாலும் தடை செய்யலாம்.

🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும், ஜனநாயக உரிமைக்கும், பணம் வீசி மத மாற்றபடுத்தலுக்கும் வித்தியாசம் உண்டு.

சவூதி வகாபிச மத உருவேற்றிகளும் வந்து மதம் மாற்றவும்  மட்டக்கிளப்பு பல்கலைக்கழகம் அமைக்கவும், கோடிக்கணக்கான  ரூபா பணமும் ஏன் வந்தது.

உள்ளூர் லெப்பைகள் புளுங்கிக்கொண்டிருப்பதை,  விளங்கி, 'நியாயத்தை கதைப்போமா'.

சன்னி, சியா கொலை வெறி பகை, நமது அப்பாவி உடன்பிறப்புக்களிடையே வேணாமே. 

உருவேத்தி, கொலைகளை செய்து, இன்று இஸ்லாமிய மக்கள் இருப்பையே கேள்விக்குறியாக்கி விட்டார்களே, அதுவா, ஜனநாயக உரிமை.

அரசு, எடுத்த இந்த நடவடிக்கை நியாயமானது. முகத்தினை மறைக்க தேவையில்லை. தலையினை மூடிகட்டுவது மட்டுமே, பண்டைய, இலங்கை இஸ்லாமிய தமிழர் பண்பாடு.

நம்மிடையே கூட சில கிறிஸ்தவ அமைப்புக்கள், இங்கே மதம் மாத்துவதில் வெற்றி பெற்றுள்ளன. அது தவறு என்று, சொன்னால், இல்லை, அது ஜனநாயக உரிமை எனலாமா? 

சுஜமாக மாறுவது வேறு, மாற்றபடுத்தல் வேறு.

கிழக்கே அரபும், தென்புறத்தில், சீனமும், தமிழையும் சிங்களத்தினையும் தூக்கி வீசட்டும் என்ற நிலை வேண்டாமே.

மன்னார் முதலிய வன்னி பகுதியில், சவூதி பணத்தில், இன்று சிறையில் உள்ள ஒருத்தர் போட்ட ஆட்டத்தினையும், வில்பத்து காடழிக்கும் அளவுக்கு போனதையும் பார்த்தோமே.

மறுபுறம், கிழக்கில், அவலத்தில் இருந்த தமிழருக்கு, என்ன வேலைகள் எல்லாம் செய்தோம் என்று, அதே பணத்திமிரில் ஒருவர் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாரே.

எமக்கு, மதவெறி வேண்டாம், அந்த, அன்பான, சாரம் கட்டின, நானாகள், தம்பிகள் லெப்பைகள், டாதாக்கல், தங்கைகள் தான் வேண்டும். 

Ceylon Muslim - First Islamic Digital Media in Sri Lanka - YouTube

Sri Lankan Moors - Wikipedia

Moor Pic | Sailan Muslim - The Online Resource for Sri Lanka Muslims

 

And click the link below.

http://www.dailynews.lk/sites/default/files/news/2020/03/15/z_p07-All.jpg

All Ceylon Muslim League celebrate international Women day

Where is the face mask?

http://fathimawelfarecentre.lk/wp-content/uploads/2016/02/blog-2.jpg

இந்த ஆடை அணியுமாறு அழுத்தத்துக்கு உள்ளாகும் இலங்கை முஸ்லீம் பெண்கள்.

15,673 Sri Lanka Women Photos and Premium High Res Pictures - Getty Images

படங்கள் தகவல்களுடன் நல்ல விளக்கம் 👍
இதே மாதிரியே முஸ்லிம் பெண்கள் மீதான மூடும் உடை அழுத்தம் தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும் நடைபெற்றதாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இலங்கை அரசினை நடத்துபவர்கள், இனவாதிகளாக இருப்பதால், உங்கள் பார்வையில் தவறில்லை

அவருடைய கோணல் பார்வை. இலங்கை அரசினை நடத்துபவர்கள் இனவாதிகளாக இருப்பதால் முஸ்லிம் மத அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கிறார் அவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நாளை இலங்கையில் ஒருவர் புத்தபிக்கு போல் வேடமிட்டு பாரிய வன்முறை தாக்குதலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி மக்கள் மொட்டை அடித்து காவி கட்டிக்கொண்டு பொதுவெளிக்கு வருவதை அரசு தடை செய்யுமா?

புத்த மத்தை சேர்ந்த ஆண்கள் எல்லோரும் மொட்டை அடித்து காவி உடை அணிந்து தான் வீட்டை விட்டுவெளியே வரமுடியும் என்று புத்தமதத்தின் பெயரால் கட்டாயபடுத்தபடவில்லை. புத்தபிக்குகளாக இருப்பவர்கள் மட்டுமே காவி கட்டி மொட்டை அடித்து கொண்டு உள்ளனர். அதே போன்று இந்துக்கள் ஆண்கள் ரிசேட் இல்லாமல் பூநூல் போட்டு கொண்டு தான் வெளியே வர முடியும் என்றோ கிறிஸ்தவ ஆண்கள் பாதிரியார் உடை அணிந்து தான் பொது இடங்களில் வரமுடியம் என்றோ  இல்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் எல்லோரும் புர்க்காவால் மூடி தான் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியும். ஆயிரம் வருடங்கள் பிற்பட்ட முறைக்கு பின்னோக்கி  கொண்டு செல்ல  முஸ்லிம் மதத்தின் பெயரால் கட்டாயபடுத்தபடுகிறார்கள்.இந்த பாரிய வேறுபாட்டை விளங்கி கொள்ளுங்கள். இங்கே நாதமுனி படங்களுடன் விளக்கியுள்ளார் முன்னைய முஸ்லிம் பெண்கள் நிலை - இன்றைய அவர்களின் புர்க்கா நிலை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.