Jump to content

மறைந்துவரும் ஊளைச் சத்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்துவரும் ஊளைச் சத்தம்

fox  
 

டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்

உவமைக்காகவும் கதைகளிலும் அடிக்கடி பேசப்படும் நரிகளைத் தமிழகத்தில் நேரில் காண்பது அரிதாகிவிட்டது. தற்போது தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களிலும் தர்மபுரியை ஒட்டிய வறண்ட பகுதிகளிலும் அரிதாக நரி கண்ணில் படுகிறது.

நாய்ப் பேரினத்தைச் சேர்ந்தவை நரிகள். வட இந்தியாவில் கன்ஹா, பரத்பூர் ஆகிய சரணாலயங்களில் காணப்படும் நரிகளைவிடத் தமிழக நரி சற்றே சிறிதாகக் காணப்படுகின்றன. பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இவை வாழ்கின்றன. கிராமத்தின் வெளிப் பகுதிகள், வேளாண் பகுதிகள், மலைக் குன்றுகளை ஒட்டிய பகுதிகள், திறந்தவெளிக் காடுகள் போன்ற பகுதிகளில் நரி வாழ்கிறது.

 
 
 

கிராமத்தை ஒட்டிய பகுதிகளிலும் வேளாண்மை புரியும் காட்டுப் பகுதிகளிலும் பூமிக்கு அடியில் வளை தோண்டிவாழ்கிறது. தமிழில் வட்டார வழக்கில் பலவகையில் அழைக்கப்பட்டாலும் நரி, கணநரி, குறுநரி ஆகிய பெயர்கள் பதிவாகியுள்ளன.

நரியின் பண்புகள்

30 ஆண்டுகளுக்குமுன் மாலை மங்கத் தொடங்கிய வேளையில், உணவு தேட வருவ தற்கு முன்னும், கதிரவன் எழுவதற்கு முன்னும், கிழக்கு வெளுக்கத் தொடங்கும் வேளையிலும், ஓய்வெடுக்கத் தங்குமிடம் தேடித் திரும்பும் வேளையிலும் நரிகள் ஊளையிட்டதைக் கேட்க முடிந்தது. தலையை உயரே தூக்கி ஊளையிட்டபடி, ஆங்காங்கே மாறிமாறி நின்று ஊளையிடுவதை அந்தக் காலத்தில் கேட்கவும் பார்க்கவும்கூட முடிந்தது.

நரி வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டது. மாலைப் பொழுதில் உணவுக்காக வெளிவந்து அதிகாலைப் பொழுதில் தங்குமிடத்திற்குத் திரும்பிச் சென்று ஓய்வெடுக்கும்.குளிர்காலத்திலும் மேகமூட்டமான காலங்களிலும் மனிதர்கள் நடமாடாத பகுதிகளில் வேட்டையாட வரும். வெப்பமான காலங்களில் நீர் அருந்தவும், நீரில் அமரவும், குளிக்கவும் பகற்பொழுதில் வெளியே வரும் இயல்புடையது.

குட்டிகளும் எல்லையும்

பெண் நரி சற்று குறைந்த உயரம், எடையுடன் காணப்படும். ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் குட்டிகள் ஈனும். பெண் நரி வளையில் 2-4 குட்டிகளை ஈனுகிறது. குட்டிகள் ஓராண்டுக்குள் வளர்ந்து பெரியவையாகிவிடுகின்றன. 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. நீண்ட தூர ஓட்டத்திற்கு ஏற்றவாறு நரிகளின் கால்கள் நீண்டு அமைந்துள்ளன. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் ஓடும்திறனைப் பெற்றிருப்பது, நரி வேட்டையாடுவதற்குப் பெரிதும் உதவுகிறது.

சில பாலூட்டிகளைப் போல தன் வாழிட எல்லையைச் சிறுநீர், மலம் கொண்டு வரை யறுக்கும். அத்துடன் நிலப்பரப்பைச் சுற்றி அடையாளங்களைக் குறிப்பதன் மூலமும் தன் இணையை மற்ற இணைகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளும். குட்டிகள் வளர்ந்து தங்கள் வாழிடத்தை நிறுவும்வரை பெற்றோருடனே வாழ்கின்றன.

16192369172006.JPG

உணவு

கிராமப் பகுதிகளில் வாழும் நரிகள் பெரும்பாலும் எலிகள், சில வேளைகளில் முயல்கள், வயல்வெளி நண்டுகள், பறவை கள், பூச்சிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்கின்றன. சில நேரம் காய்கறி களைக்கூட விட்டு வைப்பதில்லை.

மேய்ச்சலில் உள்ள ஆட்டு மந்தைகள், கிடை/பட்டியில் உள்ள ஆடுகள், செம்மறி ஆடுகள், குட்டிகள், வளர்ப்புக் கோழிகள், புறாக்கள் போன்றவற்றையும் இரவு நேரத்தில் கவ்வியெடுத்துச் சென்று கொன்று தின்னக்கூடியது. சிறிய, அடிபட்ட பாலூட்டிகளையும் கொன்று தின்னும்.

சங்க இலக்கியத்தில் நரி

சங்க இலக்கியங்களில் நரியின் வாழிடம், வேட்டையாடும் முறை பற்றி வியப்படைய வைக்கும் குறிப்புகள் உள்ளன. ‘நாயும் நரியும்’ என்கிற வழக்கு உரையாடலில் இருந்துள்ளது. சங்க இலக்கியத்தில் கணநரி (Jackal) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அகநானூற்றிலும் புறநானூற்றிலும் கணநரி எனக் கூறப்பட்டுள்ளது. இவை கூட்டமாக வேட்டையாடுவது இந்தப் பெயருக்குக் காரணமாக இருக்கலாம்.

நரி பற்றிய மற்றொரு செய்தியும் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது. இறந்த விலங்குகளின் தசையோ எலும்போ கிடந்தால்கூட உண்டு வாழும் என்றும், இதனால் தோட்டி என்றும் அழைக்கப்படுகிறது. காடுகளில் கழிந்த ஊன் தசைகளையும், வேட்டையாடும் புலி முதலிய விலங்குகள் உண்டதுபோக எஞ்சியதையும் இந்நரிகள் உண்ணும். எனவே, இவற்றுக்கு எப்போதும் உணவுப் பஞ்சம் கிடையாது. ‘நரியிற் கூன் நல்யாண்டும் தீயாண்டும் இல்’ என்கிறது பழமொழி நானூறு (102). நரிக்கு உணவு நிறையக் கிடைக்கிற நல்ல காலமும், உணவு கிடைக்காத பஞ்ச காலமும் கிடையாது என்பதைக் கண்டுணர்ந்து கூறப்பட்டுள்ளது.

பாறுக் கழுகும் நரியும்

காடுகளில் வாழும் நரிகள் புலி, சிறுத்தை ஆகியவை வேட்டையாடித் தின்றது போக எஞ்சிய இரையைப் பெரும்பாலும் இரையாகக் கொள்ளும். இத்தருணங்களில் பிற உயிரினங்களுடனும் குறிப்பாக பாறுக் கழுகுகளுடன் (பிணந்தின்னிக் கழுகு) போட்டியிடுதலும், மோதலும் ஏற்படுவதுண்டு. அத்தருணங்களில் தனக்குரிய இரையை லாகவமாக எடுத்துக்கொள்ளும். எருவைக் கழுகுகளுடன் சேர்ந்து நரிகள் உண்ணும் என்பதை அகநானூறு 275ஆம் பாடலிலும், நற்றினை 352ஆம் பாடலில் சிவந்த தலையுடைய எருவைக் கழுகுடன் (Red-headed Vulture) சண்டையிட்டு இரையை நரி தின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

நரி ஊளையிடுவதைப் பற்றி மணி மேகலையில் “நீண்முக நரியின் தீவிளிக் கூவும்” என்கிற பாடல் தெரிவிக்கிறது. மலையாளத்தில் கணநரியை ஊளன் என்கின்றனர்.

அழியும் நரிகள்

தமிழகத்தில் தற்போது அழிந்துவரும் பாலூட்டிகளில் நரியும் ஒன்று. வேளாண் காடுகளில் பழங்கள், கரும்புகள், மக்காச் சோளம் போன்றவற்றைச் சேதம் செய்வதால், கோழி, ஆடு போன்றவற்றின் குடலினுள் வெடிக்கும் மருந்தை நரிகள் நடமாடும் பகுதிகளில் வைத்துவிடுகிறார்கள். இந்த வாய் வேட்டுவை நரி கவ்வும்பொழுது வெடித்து இறந்துவிடும். பூச்சிக்கொல்லிகளால் சிற்றுயிர்கள், பூச்சிகள், ஊர்வன போன்றவை பெருமளவு அழிந்ததால், நரிகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் வாழிட அழிப்பு, காடுகள் சுருக்கப்பட்டதால் தமிழகத்தில் நரிகள் பெருமளவு அழிந்துவிட்டன.

https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/662894-fox-5.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து நரிகள் தங்கள் தாய் மொழியான ஊளையிடுதலை  மறந்து பலதசப்தம்கள் ஆகிவிட்டன . காரணம் ஊளையிட்டால் அழிக்கப்படுவீர் என்று நரியுடன்  சேர்ந்து வாழ்ந்த ....எட்டப்ப நரிகள் சொல்லியதால் அனைத்து நரிகளும் தங்கள் தாய் மொழியை மறந்தன கடைசியில் பிரிட்டிஷ் அரசு மிருகபறவை கணக்கெடுப்பில் தாய் மொழி குழப்பத்தால் நரிகளை நாய்கள் இனத்துடன் சேர்த்து விட்டார்கள் நாய்கள் இனத்தில் குறிப்பிட்ட வகையான நாய்கள் மட்டுமே வளர்க்கலாம் எனும் சட்டம் காரணமாக கடைசியாக சேர்ந்த நரியினம் முற்று முழுதாக அழிக்கப்பட்டது .(இங்குள்ள நரிக்கு ஊளையிட தெரியாது அது மட்டும் உண்மை மிகுதியெல்லாம் கற்பனையே )😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

இங்கிலாந்து நரிகள் தங்கள் தாய் மொழியான ஊளையிடுதலை  மறந்து பலதசப்தம்கள் ஆகிவிட்டன . காரணம் ஊளையிட்டால் அழிக்கப்படுவீர் என்று நரியுடன்  சேர்ந்து வாழ்ந்த ....எட்டப்ப நரிகள் சொல்லியதால் அனைத்து நரிகளும் தங்கள் தாய் மொழியை மறந்தன கடைசியில் பிரிட்டிஷ் அரசு மிருகபறவை கணக்கெடுப்பில் தாய் மொழி குழப்பத்தால் நரிகளை நாய்கள் இனத்துடன் சேர்த்து விட்டார்கள் நாய்கள் இனத்தில் குறிப்பிட்ட வகையான நாய்கள் மட்டுமே வளர்க்கலாம் எனும் சட்டம் காரணமாக கடைசியாக சேர்ந்த நரியினம் முற்று முழுதாக அழிக்கப்பட்டது .(இங்குள்ள நரிக்கு ஊளையிட தெரியாது அது மட்டும் உண்மை மிகுதியெல்லாம் கற்பனையே )😁

பெருமாள், ஆண்டு தோறும், பிரபுக்கள் நரி வேட்டை என்று, குதிரைகள், நாய்களுடன் ஆடம்பரமாக போய், கொன்று துளைத்துக் கொண்டு இருந்தார்கள், நரிகளை. No wonder fox hunting is still prevalent – the ban is designed to fail  British wildlife

15 வருசத்துக்கு முன்னர், விலங்குகள் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பில், நிறுத்தி விட்டார்கள் இந்த ஆதிகால சம்பிரதாயத்தினை.

இப்போது, நரி பெருகி ஊருக்குள் வந்து விட்டது. கென்ட் பகுதியில், வீட்டினுள் புகுந்து, நித்தா கொண்டிருந்த 3 மாதத் குழந்தை ஒன்றை கடித்து விட, நல்ல காலமாக தாய் ஓடி வர, நரி ஓடி விட்டது. (இது குறித்து ஒரு பதிவு முன்னம் போட்டிருக்கிறேன் என்று நினைவு)

லண்டன் ஹரோ பகுதியில் உணவுக்கழிவுகளை போட ஒரு சிறிய பின் கொடுத்து உள்ளார்கள். தினமும், ஒவொரு வீட்டிலும், வரிசையாக, அதனை தட்டி விழுத்தி, தின்று, அடுத்தநாள் காலை கூட்டி அள்ளுற வேலை வைக்கிறது.

இது பெரிய தொந்தரவாக போக, நம்ம, தமிழ் கவுன்சிலர், சுரேஷ் கிருஷ்ணா (லண்டன் பாபா - ரஜனி ரசிகர், ) போனை போட்டு, கதைக்க, அந்தாள், சத்தம் போடாமல், பச்சை பின்னுக்குள் போட்டு விடுங்கோ. என்னத்தை செய்யிறது எண்டுறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

விலங்குகள் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பில், நிறுத்தி விட்டார்கள்

இவை எண்ணத்துக்கு இருக்கினம் என்று இன்னமும் எனக்கு விளக்கமில்லை ....😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.