Jump to content

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு,  வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின், வருடாந்திர பெருந்திருவிழா  தற்போது  நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம்  நடைபெற்ற தேர்த்திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சுகாதார  நடைமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். மேலும்  50 பக்தர்கள் மாத்திரமே  ஆலயத்தில் ஒரே நேரத்தில்  வழிபாடுகளை மேற்கொள்ள  அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1212964

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனம் கொரோனா பரவும் நேரத்தில் இப்படி கூட்டமாக போனால் பின்விளைவுகள் வரும்தானே.

 

IMG_5338-1024x683.jpgIMG_5339-1024x683.jpgIMG_5341-1024x683.jpgIMG_5342-1024x683.jpgIMG_5343-1024x683.jpg
Link to comment
Share on other sites

காட்டாச்சி நடக்கும்போது மக்களுக்குள்ள ஒரே நம்பிக்கை கடவுள்தான். 

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழினத்தை அழித்து வரும் சிங்கள அரசுக்கு, கொரோனாவினால் வரும் அழிவைக் கருதாது, இப்படியான விழாக்களில் கூடி அழிந்தாலும் இலாபம்தானே.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா

எங்கிருந்தாலும் ஓடி வரவும்.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் பாதிரியாருக்கெதிராக கொதித்தெழுந்தவர்களுக்கு, தாம் செய்வது என்னவென்று புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

மீரா

எங்கிருந்தாலும் ஓடி வரவும்.. 😂

அன்பே சிவம். ஓம் நமச்சிவாய...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

சுவிஸ் பாதிரியாருக்கெதிராக கொதித்தெழுந்தவர்களுக்கு, தாம் செய்வது என்னவென்று புரியவில்லை.

ஆனால் இப்பவும் தேவாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமைகளில் இதே போல ஆராதனை நடக்கிறது உயிர்த்த ஞாயிறு ஆராதனை மட்டும் அல்லாமல் எல்லா இடங்களிலும் மக்கள் மனிதனை விட தெய்வத்தை நம்புகிறார்கள் இருப்பவர்களுக்கு இருக்கு இல்லாதவர்களுக்கு இல்லை இதில் மக்களை கூட்டமாக கூட வேண்டாமென பொது சுகாதார பரிசோதக்ர் அறிவித்தாலும் மக்கள் திருந்துவதாக இல்லை 
சித்திரை விடுமுறைக்கு கடற்கரை, நீர்நிலைகள், இன்னும் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சனம் கூட்டமாகவே இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

அன்பே சிவம். ஓம் நமச்சிவாய...

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், வைத்தியசாலை வாசலில் வைத்து கொறோனா நோயாளிகளை பூசை/மந்திரம் சொல்லும்படி கூறியது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

😂

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் இப்பவும் தேவாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமைகளில் இதே போல ஆராதனை நடக்கிறது உயிர்த்த ஞாயிறு ஆராதனை மட்டும் அல்லாமல் எல்லா இடங்களிலும் மக்கள் மனிதனை விட தெய்வத்தை நம்புகிறார்கள் இருப்பவர்களுக்கு இருக்கு இல்லாதவர்களுக்கு இல்லை இதில் மக்களை கூட்டமாக கூட வேண்டாமென பொது சுகாதார பரிசோதக்ர் அறிவித்தாலும் மக்கள் திருந்துவதாக இல்லை 
சித்திரை விடுமுறைக்கு கடற்கரை, நீர்நிலைகள், இன்னும் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சனம் கூட்டமாகவே இருக்கிறது 

இது முற்றிலும் உண்மை.

🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2021 at 07:24, கிருபன் said:

சனம் கொரோனா பரவும் நேரத்தில் இப்படி கூட்டமாக போனால் பின்விளைவுகள் வரும்தானே.

கொரோனா அல்லது நெரிசல்

கும்பமேளா திருவிழா, சுவிஸ் போதகரின் மத கூட்டம், யாழ்பாண வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள்திருவிழா,  இஸ்ரேலில் மத வழிப்பாட்டு திருவிழா இப்படி மததிருவிழாக்களே பிரச்சனையானது தான். இஸ்ரேலில் மத திருவிழாவில் 44 பேர் கொல்லபட்டனர்.

https://www.bbc.com/news/world-middle-east-56938657

 

Link to comment
Share on other sites

இந்தியாவில் ஏற்பட்ட பெரும்பாலான மரணங்கள் இந்திய வைரஸ் மூலமானவை அல்ல. இன்றைய இந்த நிலைக்கு இந்தியாவில் கோயில் விழாக்களே காரணமாகக் கூறப்படுகிறது.

https://fr.news.yahoo.com/inde-pourquoi-variant-indien-nest-085558252.html

கண்ணுக்குத் தெரியாத கிருமியிலிருந்துகூட மக்களைக் கடவுள் காப்பாற்ற மாட்டாரென்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

கண்ணுக்குத் தெரியாத கிருமியிலிருந்துகூட மக்களைக் கடவுள் காப்பாற்ற மாட்டாரென்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். நான் உருவாக காரணமானவர்கள் என் பெற்றோர்கள். என் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் என்னை பெற்றவர்களை சாடுவேயேனால் அது தவறு.

Link to comment
Share on other sites

11 minutes ago, குமாரசாமி said:

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். நான் உருவாக காரணமானவர்கள் என் பெற்றோர்கள். என் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் என்னை பெற்றவர்களை சாடுவேயேனால் அது தவறு.

வைரசை உருவாக்கியவர்கள் இவர்களா ?

inde-public.jpg

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். நான் உருவாக காரணமானவர்கள் என் பெற்றோர்கள். என் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் என்னை பெற்றவர்களை சாடுவேயேனால் அது தவறு.

சரியான கருத்து குமாரசாமி. 

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். இல்லாத கடவுளை வேண்டுவதாலோ, ஒரு பொம்மையை தானே உருவாக்கி  அதற்கு கடவுள் என்று பெயர்வைத்து அதனிடம் வேண்டுவதால் எந்த பயனும் ஏற்படாது. இது மனித வாழ்வில்  எல்லா விடயங்களுக்கும் பொருந்தும். ஒருவன் தான் செய்த தவறுக்கு அடுத்தவனை குற்றம் சாட்டி முழுப்பழியையும் அவன் மீது போடுவதால் அவனது பிரச்சனைகள் தீரப்போவதில்லை. 

 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். நான் உருவாக காரணமானவர்கள் என் பெற்றோர்கள். என் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் என்னை பெற்றவர்களை சாடுவேயேனால் அது தவறு.

நீங்கள் உருவாக காரணம் உங்கள் பெற்றோர்கள் என்றீர்கள். ஆகவே, உங்கள் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் அவர்கள் தானே அதற்கு காரணம்? 

  1. அம்பானி குடும்பம் போல பெரும் பணத்தை உங்களுக்காக உழைத்துவிட்டு உங்களை அவர்கள் உருவாக்கி இருந்தால் உங்கள் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் குறைவாக இருந்திருக்கும்.
  2. உங்களை அதீத புத்திசாதுரியத்துடன் உருவாக்கி இருந்தால் சி. வி. இராமன் போல நோபல் பரிசு பெற்றிருப்பீர்கள்.
  3. ஓக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகத்துக்கு அவர்கள் உங்களை அனுப்பி இருந்தால் கொரோனாவை தீர்த்துக்கட்டியிருப்பீர்கள்.
  4. இப்படியெல்லாம் அவர்கள் செய்யாத காரணத்தால் தானே இப்படி அந்நிய நாட்டில் இருந்து கொண்டு ஊரில் விட்டுவிட்டு வந்த மண்வெட்டியை நினைத்து யாழ் களத்தில் கண்கலங்கும் நிலை உருவானது?
     

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2021 at 04:44, தமிழ் சிறி said:

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு,  வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின், வருடாந்திர பெருந்திருவிழா  தற்போது  நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம்  நடைபெற்ற தேர்த்திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சுகாதார  நடைமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். மேலும்  50 பக்தர்கள் மாத்திரமே  ஆலயத்தில் ஒரே நேரத்தில்  வழிபாடுகளை மேற்கொள்ள  அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1212964

திருவிழா நடக்கும்போது போலீஸ் என்ன செய்து கொண்டு இருந்ததாம் ?

மக்கள் விழா வைத்தால் போவார்கள்தானே திருவிழாவுக்கு அனுமதி யார் கொடுத்தார்கள் வடமராட்சியில் இவ்வளவு பேருக்குத்தான் அனுமதி அதுவும் மாஸ்க் கட்டாயம் என்று சில கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது .

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். நான் உருவாக காரணமானவர்கள் என் பெற்றோர்கள். என் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் என்னை பெற்றவர்களை சாடுவேயேனால் அது தவறு.

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். இது சத்தியமான உண்மை. இந்த உண்மையயைச் சத்குருவும் சற்றுப் புரியும்படியாகவே சொல்கிறார். வேண்டுமானால் அவர் சொல்வதையும் செவிசாய்க்கவோ அன்றிச் சாடவோ எமக்குப் பூரண உரிமையும் உண்டு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

வைரசை உருவாக்கியவர்கள் இவர்களா ?

inde-public.jpg

இல்லை.... இவர்கள் வைரசை உருவாக்கவில்லை.
வியாபாரிகள் உருவாக்கினார்கள். நம்புவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

சரியான கருத்து குமாரசாமி. 

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். இல்லாத கடவுளை வேண்டுவதாலோ, ஒரு பொம்மையை தானே உருவாக்கி  அதற்கு கடவுள் என்று பெயர்வைத்து அதனிடம் வேண்டுவதால் எந்த பயனும் ஏற்படாது. இது மனித வாழ்வில்  எல்லா விடயங்களுக்கும் பொருந்தும். ஒருவன் தான் செய்த தவறுக்கு அடுத்தவனை குற்றம் சாட்டி முழுப்பழியையும் அவன் மீது போடுவதால் அவனது பிரச்சனைகள் தீரப்போவதில்லை. 

 

என்னையும் ஒரு மனிதனாக நினைத்து எனது கருத்தை மேற்கோள் காட்டி கருத்திட்டமைக்கு நன்றி.

இருப்பினும் உங்கள் கருத்துடன்  உடன்பட என் மனம் மறுக்கின்றது.

கடவுள் வழிபாடு என்பதை விட இயற்கை வழிபாடு என்பதுதான் ஆதிகால மனிதத்தில் இருந்தது.அது இன்றும் இருக்கின்றது.இயற்கையை அவமதிப்பதன் பலன்களை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். உருவ வழிபாடு உங்களை போன்ற நவநாகரீக மக்களால் உருவாக்கப்பட்டது. தேடி வாசியுங்கள் தெரியும் புதினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

நீங்கள் உருவாக காரணம் உங்கள் பெற்றோர்கள் என்றீர்கள். ஆகவே, உங்கள் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் அவர்கள் தானே அதற்கு காரணம்? 

  1. அம்பானி குடும்பம் போல பெரும் பணத்தை உங்களுக்காக உழைத்துவிட்டு உங்களை அவர்கள் உருவாக்கி இருந்தால் உங்கள் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் குறைவாக இருந்திருக்கும்.
  2. உங்களை அதீத புத்திசாதுரியத்துடன் உருவாக்கி இருந்தால் சி. வி. இராமன் போல நோபல் பரிசு பெற்றிருப்பீர்கள்.
  3. ஓக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகத்துக்கு அவர்கள் உங்களை அனுப்பி இருந்தால் கொரோனாவை தீர்த்துக்கட்டியிருப்பீர்கள்.
  4. இப்படியெல்லாம் அவர்கள் செய்யாத காரணத்தால் தானே இப்படி அந்நிய நாட்டில் இருந்து கொண்டு ஊரில் விட்டுவிட்டு வந்த மண்வெட்டியை நினைத்து யாழ் களத்தில் கண்கலங்கும் நிலை உருவானது?

நீங்கள் சொல்லுறது அத்தனையும் சரியானதே. தொடருங்கள் உங்கள் பணியை....

வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். இது சத்தியமான உண்மை. இந்த உண்மையயைச் சத்குருவும் சற்றுப் புரியும்படியாகவே சொல்கிறார். வேண்டுமானால் அவர் சொல்வதையும் செவிசாய்க்கவோ அன்றிச் சாடவோ எமக்குப் பூரண உரிமையும் உண்டு.

பல வைத்தியர்களும் இனி கடவுள் விட்ட வழி என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இயற்கை வழிபாடு

இயற்கை கவனமுடன் பாதுகாக்கபட வேண்டியது.  வழிபாட்டுக்கு உரியது இல்லை.

Link to comment
Share on other sites

12 hours ago, விளங்க நினைப்பவன் said:

இயற்கை கவனமுடன் பாதுகாக்கபட வேண்டியது.  வழிபாட்டுக்கு உரியது இல்லை.

👍 சரியாக சொன்னீர்கள். இந்த உலகில் வழிபாட்டுக்குரியது எதுவும் இல்லை. பாதுகாக்கப்படவேண்டியதும், respect பண்ணப்படவேண்டியதும் தான் உலகில் உண்டு.  Respect பண்ணப்பட வேண்டிய மனிதரிடையே வெறுப்பை விதைப்பவர்கள் தான் கண்டதையும் வழிபட ஊக்குவிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சாருங்கோ தேசிய‌ வெசாக் கொண்டாட்டம்  தீவில் இருக்கோ?ஞான ஒளி பெறுவதிலும் தேசியம்  இருக்கு கண்டியளோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.