Jump to content

மனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2021 at 01:44, Justin said:

பொப்கோர்ன் எல்லாம் சாப்பிடுவதில்லை. கான்சர் வராது, ஆனால் நீரிழிவு எல்லா கோர்னிலும் வரும்!

என்னவோ சீமான் எதிர்ப்பாளர்களின் பொப் கார்னை வாயில்  போட கல்லு கடிபட்டது போல் இப்பவும் கூசுதாமே சீமானின் முன்றாவது கட்சி விடயம் .

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2021 at 22:14, கிருபன் said:

பிந்தியதற்கு மன்னியுங்கள் ரஞ்சித். இலகுவான கேள்விகள் என்பதால் மின்னம்பலத்தில் தேடிப் பார்த்தேன். பதில்கள் கிடைக்கவில்லை.☹️ சொந்தமாக எழுத மூளையைக் கசக்கவேண்டி வந்திட்டுது. யாழில் இப்பவெல்லாம் மூளையைக் கசக்கி எழுதும் நிலை இல்லைத்தானே!😉

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டபோது அனைத்துக்கட்சிகளும் குரல்கொடுத்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே தமிழகத்தில் ஈழ உணர்வாளர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து, தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சிறு கட்சிகள் எல்லாவற்றினதும் ஆதரவைத் தக்கவைத்திருக்கவேண்டும். தமிழக அரசியலில் ஒரு கட்சிக்கு, உதாரணமாக நாம் தமிழர் கட்சிக்கு, சார்பானவர்கள் ஈழத்தமிழர் என்ற தோற்றப்பாட்டை தமிழக மக்களின் உள்ளங்களில் வேரூன்றச் செய்வதைத் தவிர்க்கவேண்டும். இது பிற கட்சிகளில் உள்ள ஈழ உணர்வாளர்களை அந்நியப்படுத்தும். எந்த வகையிலும் ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைப் பெற தமிழக கட்சிகளின் ஆதரவோடு இந்திய அரசுக்கோ, சர்வதேச நாடுகளுக்கோ அழுத்தம் கொடுக்கவும், லொபியிங் செய்யவும் உதவாது.

முகநூலில் கட்சிச் சண்டைகளில் ஈடுபடுவர்களை வைத்துக்கொண்டு யார் ஆதரவு, யார் எதிர்ப்பு என முடிவுசெய்வது அபத்தம். ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகள், புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துடனும், குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுடனும் நல்லுறவைப் பேணவேண்டும். தமிழக கட்சி அரசியலில் ஒரு சார்பு நிலை எடுக்கக்கூடாது. 

புலிகள் விடுதலை அமைப்பாகவே இயங்கினார்கள். அரசியல் கட்சி அமைப்பாக இயங்கவில்லை. அதனால்தான் தமிழகத்தில் அனைத்து கட்சிகளுடனும் சுமுகமான உறவுகளைப் பேணினார்கள். புலிகள் இல்லாத 2009க்குப் பின்னர், சீமான் தனது சொந்த கட்சி அரசியலுக்கே புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பயன்படுத்துகின்றார். இப்படியான அரசியல் செய்வதற்கு புலிகள் ஒருபோதும் அனுமதி அளித்திருக்கமாட்டார்கள். 

சீமானை ஆதரிக்கும் புலம்பெயர் தமிழரின் வாதம் புலிகளையும், பிரபாகரனையும் பட்டி தொட்டி எங்கும் சீமான் பரப்பினார் என்பது. 2009 க்கு முன்னர் புலிகள் என்றால் யாரென்றே தெரியாமல் தமிழக மக்கள் இருந்தார்கள் என்று சொல்வதும் நகைப்புக்கிடமானது. போராட்ட இயக்கங்கள் அனைத்தையும் புலிகள் என்றே 1983 இலிருந்து தமிழக மக்கள் அறிந்திருந்தார்கள். 1991 ராஜீவ்காந்தி படுகொலையின் பின்னர், மக்கள் ஆதரவு குறைந்தது. புலிகள் தடை செய்யப்பட்டதால் புலிகளின் இலச்சினையோ, தலைவரின் படமோ அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றை சீமானின் நாம் தமிழர் கட்சி தத்தெடுத்து (கட்சியை தத்தெடுத்தது போன்று) தமது கட்சியை வளர்க்கவே பாவிக்கின்றார்கள். எனினும் அண்மைய தேர்தலில் தலைவரின் படத்தை நடுவில் வைத்தால் தொலைக்காட்சிகள் செய்திகளில் நாம் தமிழர் கட்சிக்கு நேரம் ஒதுக்காது என்பதை தெளிவாகப் புரிந்து வைக்காமலே விட்டார்கள். இது நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர சகல வழிகளையும் பயன்படுத்தும் என்பதைத்தான் காட்டுகின்றது.

மேலும், சீமான் தமிழ்த்தேசியத்தை வலதுசாரி இனவெறுப்பு அரசியலை முன்னெடுக்கப் பாவிக்கும் ஒருவர். மதச்சார்பின்மையை ஒழித்து இந்துத்துவத்தை முன்னெடுக்கும் RSS அரசியலை முன்னெடுப்பவர், அவர்களின் முகவராக இருப்பவர். விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பாவித்து புலம்பெயர் தமிழரில் ஒரு சிறுபகுதியினரின் மூளையைக் கழுவி நிதி சேர்ப்பவர். இக்காரணங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

கருணாநிதி தனது ஆட்சியைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் கருணாநிதி சொல்லித்தான் இந்தியா புலிகளை அழிக்க உதவியது என்பது உண்மையில்லை. புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் விட்டுக்கொடுக்காமல் நடந்ததும், டோக்கியோ மாநாட்டை புறக்கணித்ததும், இணைத்தலைமை நாடுகள் புலிகளின் தலைமையை அழிக்க ஒப்புதல் கொடுக்க வைத்தன. இதன் மூலம் இலங்கையில் சமாதானம் ஏற்பட ஒரு பகுதி தமிழ் மக்களை ராஜபக்‌ஷ அரசு இனவழிப்பு செய்ய வழிவிட்டன. அதற்கு ஏதுவாக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட, ஐ.நா. அமைப்புக்களை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து விலக்கிக்கொண்டன.  இவையெல்லாம் தெரிந்தும்,  இந்த முடிவுகளில் எதுவித மாற்றங்களையும் செய்யமுடியாத தமிழக அரசை மக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் என்று சொல்லமுடியுமா? 

சீமான் பொட்டம்மானை ஏக தொனியில் பேசியிருக்கமாட்டார் என்று சீமானை நம்புவர்கள் நம்புவார்கள். ஆனால் தலைவருடன் கூடவே இறுதிவரை போராடிய, தலைவரைப் போலவே தனது குடும்பத்தையே பலிகொடுத்த பொட்டம்மானை அவமரியாதை செய்பவர் எவரும் வெறும் மயிர்தான்..

நான் வலதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளை ஆதரிப்பதில்லை. சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடும் இடதுசாரிச் சிந்தனையுள்ள கட்சிகளையே ஆதரிப்பேன். ஆனால் எந்தக் கட்சியினதும் தொண்டனாகவும் இருப்பதில்லை. ஏனெனில் கட்சிகளின் கொள்கைகள் சில ஒவ்வாமலும் இருக்கும்.

நீங்கள் திராவிட சித்தாந்தத்தையும் திமுக கட்சியையும் ஒன்று என்று குழப்பிக்கொள்கின்றீர்கள். திராவிட சித்தாந்தம் பார்ப்பனியத்திற்கு எதிராக் வந்தது. பார்ப்பனர்கள் அல்லாதோர் அரச வேலைகளில் சேரமுடியாத நிலை முன்னர் இருந்தது. இந்தி திணிப்பின் மூலம், ஆரிய இந்துத்துவத்தை பரப்பும் நோக்கம் கொண்ட வட இந்தியர்களுக்கு எதிராக திராவிட சித்தாந்தம் வந்தது. சீர்திருத்தக்கொள்கைகள், மதச்சார்பினமை போன்றவற்றை முன்னெடுத்தது. இக்கொள்கைகள் அடிமட்ட மக்களின் முன்னேற்றத்தை விரும்பும் எவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

ஆனால் கட்சி அரசியலுக்காக கொள்கை பிறழ்பவர்களையும், ஊழல்மூலம் சொத்து சேர்ப்பவர்களையும், குடும்ப அரசியல் செய்பவர்களயும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஸ்டாலின் போன்றவர்கள் வெறும் அரசியல் தலைவர்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் நிலைக்கவும், தமது சொத்துக்களைப் பெருக்கவும் முனைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  அதே நேரத்தில் மக்களின் நலன்களைக் கருத்தில்கொள்ளாத அரசுகளை மக்கள் தமது வாக்குரிமை மூலம் தூக்கியெறிவார்கள் என்பதையும், மக்கள் புத்திசாலிகள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இப்படி கசக்கி பிழியக்கூடிய மூளையை வைத்துக்கொண்டு, இரவல் மூளைக்கு, மின்னம்பலம் பக்கம் போகாதீங்கோ எண்டு சொன்னது நல்லதா போட்டுதோ, இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் பெருமாள் 2009 இல் சவுக்கு  சங்கர் எழுதியதை கருணாநிதியை திட்டவும், மொட்டைவசைகளை எழுதவும் தூசு தட்டிக் கொண்டுவந்து ஒட்டினார்.

ஆனால் 2021 இல் அதே சவுக்கு சங்கர் கீழேயுள்ள கட்டுரையை எழுதியிருக்கின்றார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் முயற்சி செய்தால் முதிர்ச்சி வரும்😃

 

ஜனநாயகத்தை கொண்டாடுவோம்

Periyar.png?resize=1200%2C675&quality=85

தமிழகத்தை மதவாதம் என்கிற பெரும் ஆபத்து சூழ்கிறது என்பதை கடந்த இரண்டாண்டுகளாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.   இது எனது தூக்கத்தை கெடுத்தது.  எனது மண், மதவாத கைக்குள் போவதை என்னால் சகிக்க இயலவில்லை என்பது மட்டுமல்ல.  நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

அதை ஒற்றை ஆளாய்எப்படி தடுப்பது என்ற மலைப்பு இருந்தது..

ஆனால் வாளாவிருப்பது ஒரு Option இல்லை என்பதை மட்டும் உணர்ந்தேன்.

கடந்த நான்கு மாதங்களாக, வெறும் 4 மணி நேரம் மட்டுமே உறங்கினேன். எனது உறக்கம், ஆட்டோவிலோ, காரிலோ பயணிக்கையில் மட்டுமே.

என்னைப் போலவே கவலை கொண்ட பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் உறங்கவில்லை.   இந்த நான்கு மாதங்களும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளோடு மட்டுமல்லாமல் காவலர் முதல் டிஜிபி வரை உள்ள பல்வேறு அதிகாரிகளோடு பேசினேன்.   பலரை நேரில் சென்று சந்தித்தேன்.  பல்வேறு ஊர்களுக்கு பயணித்தேன்.

இவை அனைத்தும் நான் பிறந்த மண், பாசிச சக்திகளின் பிடிக்குள் சிக்கி விடக் கூடாது என்பதற்காக மட்டுமே.  நான் ஒரு தனி நபராக, இதை செய்து விட முடியுமா என்று யோசித்தபோது, முயற்சி எடுக்கலாமே…

ஏன் முயற்சி எடுக்கக் கூடாது என்றே தோன்றியது.  களத்தில் இறங்கினேன்.  யு ட்யூப் சேனல்களில் என் மனதில் பட்டதை பேசினேன்.   சமூக வலைத்தளங்களை முழுமையாக பயன்படுத்தினேன்.  பேசினேன்.  எழுதினேன்.

இனி நான் செய்வதற்கு எதுவுமில்லை.  இதில் எனக்கு புதிதாக பல நண்பர்கள் கிடைத்தார்கள்.  பல புதிய நபர்களை சந்தித்தேன்.

இரு வாரங்களுக்கு முன்னால் ஒரு தேர்தல் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சி சார்பாக போட்டியிடும் ஒரு வேட்பாளர் என் அருகே அமர்ந்திருந்தார்.    வலதுசாரிகளை நான் எப்படி விமர்சிக்கிறேன் என்பது ஊருக்கே தெரியும்.   அதுவும் குறிப்பாக அர்ஜுன் சம்பத்தையெல்லாம் தாறுமாறாக விமர்சித்திருக்கிறேன்.

ஆனால் அந்த இந்து மக்கள் கட்சி வேட்பாளர், “சார் நீங்க சவுக்கு சங்கர்தானே.  உங்க பேட்டியை எல்லாம் பாக்குறேன்.  கரெக்டா பேசறீங்க சார்” என்று சொன்னபோது எனக்கு ஒரு உண்மை புரிந்தது.

மக்கள் மக்களே.  அதுவும் தமிழ் மக்கள் மாக்கள் அல்ல

இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் என் மீது கோபம் கொள்ளாமல் வாஞ்சையோடு பேசுகிறார் என்றால், எனக்கு வேறு என்ன வேண்டும் ?

என்னால் முடிந்ததை செய்து விட்டேன்.

நான் காலையில் வாக்களிக்க சென்றபோது, மக்கள் மகிழ்ச்சியோடு வாக்களித்ததை பார்க்கையில் பார்க்க எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

மீண்டும் சொல்கிறேன்.

தமிழினம் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தறிவு பெற்ற ஒரு இனம்.

அது தன்னை தகவமைத்துக் கொள்ளும்.  இப்பேராசை பிடித்த அரசியல்வாதிகளுக்கு அது தகுந்த பாடத்தை புகட்டி, தன்னை தற்காத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

என் கடமை முடிந்ததாக உணர்கிறேன்.

எனக்கு ஒத்துழைப்பு அளித்து என்னோடு உழைத்த அத்துனை அதிகாரிகளுக்கும், நண்பர்களுக்கும் தமிழினம் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

குறள் 632:

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

இப்படி ஒரு அரசு அமையும் என நம்புகிறேன்.

அன்புடன்

சவுக்கு சங்கர்.

மீண்டும் சந்திப்போம்.

அதுவரை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த கட்டுரையில் சவுக்கு எழுதியதில் ஏதாவது  பிழை உள்ளதா ?

இல்லாத பொல்லாததை  எழுதினாரா ?

நடந்த துரோகத்தனம்களைத்தானே பட்டியல் இட்டார் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.